சுனாமி ஆதாரபூர்வ விளக்கமும், ஆதாரமற்ற கற்பனையும்.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.( for media )


பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்ததால்தான் ஹைத்தி தீவிலும், ஹோண்சு தீவிலும் சுனாமி ஏற்பட்டு இருப்பது ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
ஆதாரம்.
தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள்.
( ஆரிகன் மாகாணத்தில் பூமிக்கு அடியில் புதிதாக உருவாகிக் கொண்டு இருக்கும் எரிமலையைச் சுற்றி உருவாகி இருக்கும் வரப்பு போன்ற வளையங்கள் )

எரிமலைக்குள் பாறைக் குழம்பு சேர்ந்து உயரும் பொழுதும்,அதே போன்று ஒரு எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறி இறங்கும் பொழுதும் எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் பல கிலோமீட்டர் சுற்றளவிற்கு உயர்ந்து இறங்குவதால், எரிமலையை சுற்றி வரப்பு போன்று வளைய வடிவ மேடுகள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறு பாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதே போன்று ஹைத்தி தீவிலும் ஹோண்சு தீவிலும் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சியின் பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வரப்பு போன்ற வளைய வடிவ மேடுகள் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு உருவாகி இருப்பதும் தரை மட்ட மாறு பாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹைத்தி தீவிலும், ஹோண்சு தீவிலும் சுனாமி உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில் தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கண்டத் தட்டுகள் என்று அழைக்கப் படும் பெரிய பாறைத் தட்டுகளின் மேல் இருந்தபடி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுவதாகவும் ஒரு கண்டத் தட்டுக்கு அடியில் அடுத்த கண்டத் தட்டு செல்வதால் சுனாமி ஏற்படுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.

கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.
ஆனால் கண்டங்கள் நிலையாக இருப்பது, கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.
ஆதாரம்
கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில் உலகம் முழுவதும் ஏற்பட்ட 3.58.214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து வரையப் பட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம்.
2circle.jpg
கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில் உலகம் முழுவதும் ஏற்பட்ட 3.58.214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து, அமெரிக்காவின் நாசா ஆய்வு மையத்தை சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் ஒரு வரை படத்தை தயாரித்து வெளியிட்டு இருக்கின்றனர்.
அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தரையின் மேல் இருந்தபடி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் வட அமெரிக்கக் கண்டத்திற்கும், அதே போன்று அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தரையின் மேல் இருந்தபடி, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் தென் அமெரிக்கக் கண்டதிற்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
எனவே கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாதாதன் அடிப்படையில் கண்டங்கள் நிலையாக இருப்பது உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் நிரூபணமாகிறது.
haitialos.jpg ( ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியினால் தரையில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வை புலப் படுத்தும் ஜப்பானின் ஆலோஸ் செயற்கைக் கோள் படம் )
இந்த நிலையில் ஹைத்தி தீவில் 2010 ஆம் ஆண்டு நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவான பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் இருபது கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வரப்பு போன்ற வளைய வடிவ மேடுகள் 35 சென்டி மீட்டர் உயரத்துடன் உருவாகி இருந்தது தரை மட்ட மாறு பாடுகளைப் பதிவு செய்த ஜப்பான் நாட்டின் ஆலோஸ் என்ற செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலை வெடித்ததாலேயே ஹைத்தி தீவில் சுனாமி உருவாகி இருக்கிறது.
h9 ( ஜப்பானில் நில அதிர்ச்சியினால் தரையில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வை புலப் படுத்தும் என்விசாட் செயற்கைக் கோள் பட ஆதாரம் . சிவப்பு நட்சத்திரக் குறி நில அதிர்ச்சி மையத்தைக் குறிக்கிறது.ஒவ்வொரு வளையமும் ஐம்பது சென்டி மீட்டர் உயரத்தைக் குறிக்கிறது)
இதே போன்று ஹோண்சு தீவிலும் கடந்த 2011 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட பொழுதும் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 50 சென்டி மீட்டர் உயரத்திற்கு வரப்பு போன்ற வளைய வடிவ மேடுகள் உருவாகி இருப்பது ஐரோப்பாவின் என்விசாட் செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட தரைமட்ட மாறு பாட்டுப் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே பூமிக்கு அடியில் இருந்த எரிமலை வெடித்ததாலேயே ஹோண்சு தீவில் சுனாமி உருவாகி இருக்கிறது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.