Posts

Showing posts from November, 2013

பவளப் பாறைப் புதை படிவம் வளைய வடிவத்தில் இருப்பது ஏன் ?

Image
வட அமெரிக்கக் கண்டத்தின் மத்தியப் பகுதியில் உள்ள டெக்சாஸ் மற்றும் நியூ மெக்சிகோ மாகாணங்களின் எல்லைப் பகுதியில் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஆழமற்ற கடல் பகுதியில் வளரும் பவளப் பாறைகளின் புதை படிவங்கள் காணப் படுகின்றன. குறிப்பாக அந்தப் பாறைகளின் தொன்மையானது இருநூற்றி அறுபது கோடி ஆண்டுகள் தொன்மையானவை என்று மதிப்பிடப் பட்டுள்ளது.இவ்வாறு கடலுக்கு அடியில் வளரும் பவளப் பாறைகளின் புதை படிவங்கள் கண்டத்தின் மத்தியப் பகுதியில் காணப் படுவதன் மூலம் இருநூற்றி அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்த நிலப் பகுதியானது கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது நிரூபணமாகியுள்ளது. ( டிலாவார் பேசினைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வளைய வடிவில் காணப் படும் பவளப் பாறைகளின் புதை படிவம்-படத்தில் நீல வண்ணத்தில் காட்டப் பட்டுள்ளது.) அதிலும் குறிப்பாக வட அமெரிக்கக் கண்டத்தின் மத்தியப் பகுதியில் காணப் படும் பவளப் பாறைகளின் புதை படிவமானது டெலவர் பேசின் என்று அழைக்கப் படும் ஒரு பள்ளத் தாக்குப் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரு ராட்சத குதிரை லாட வடிவில் க

தூண் பாறைகள் எப்படி உருவாகின?

Image
துருக்கியில் உள்ள காதல் பள்ளத் தாக்கு     பஃபலோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ட்ரேசி கிரெக் என்ற புவியியல் வல்லுநர் ,1990 ஆம் ஆண்டு அவரின் கணவருடன் ஐஸ்லாந்து தீவிற்கு சுற்றுலா சென்ற பொழுது ,அங்கே தரைக்கு அடியில் இருந்து எட்டு அடி உயரத்திற்கு தூண் போன்ற பாறைகள் இருப்பதைக் கண்டதும் அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவேயில்லை. கையில் இருந்த கேமிராவில் பாட்டரி தீரும் வரை படமாக எடுத்துத் தள்ளினார். ஏனென்றால் இதற்கு முன்பு அவர் நீர் மூழ்கிக் கப்பல் மூலம் கடலுக்கு அடியில் ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்த பொழுது கடலுக்கு அடியில் இதே போன்ற பாறைகளைக் கண்டார். தூண் போன்ற வடிவில் இருக்கும் இவ்வகைப் பாறைகள்,கடலடித் தளத்திற்கு அடியில் இருந்து பாறைக் குழம்பு அழுத்தமுடன் மேல் நோக்கி உயரும் பொழுது, கடல் நீரால் உடனடியாகக் குளிர்விக்கப் படுவதால் உருவாகிறது. இது வரை தூண் பாறைகள் பூமியின் மேல் யாரும் கண்டதில்லை. எனவே அந்தத் தூண் பாறைகளை ஐஸ்லாந்து தீவில் கண்டதும் டிரேசி படு உற்சாகத்துடன் அதைப் படமெடுத்தார். பின்னர் 2010 ஆம் ஆண்டு , அந்தத் தூண பாறைகள் பற்றி ஆராய்ச்சி செய்ய நிதிஉதவி கிடைத்ததும் டாக்டர

சுனாமிக்குக் முரண்பாடான விளக்கங்கள் கூறப் படுகின்றன.

Image
gpsnasa.png கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதினோராம் நாள் ஜப்பானின் ஹோண்சு தீவிற்கு கிழக்குப் பகுதியில் பசிபிக் கடலுக்கு அடியில் பயங்கர நில அதிர்ச்சி ஏற்பட்டது அதன் தொடர்ச்சியாக சுனாமி உருவானது. அந்த நில அதிர்ச்சியின் பொழுதும் அதற்கு பிறகு ஏற்பட்ட பல தொடர் நில அதிர்ச்சிகளின் பொழுதும் ஜப்பானில் பல இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டது. kenneth.jpg ( DR.Kenneth Hudnut. usgs) இந்த நிலையில் அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் கென்னத் ஹட் நட் என்ற புவியியல் வல்லுநர், ஹோண்சு தீவின் வட மேற்குப் பகுதியில் நிறுவப் பட்டு இருந்த ஒரு செயற்கைக் கோள் நிலையம் எட்டு அடி கிழக்கு திசை நோக்கி நகர்ந்து இருந்தது என்று கூறி அதன் அடிப்படையில் ஹோண்சு தீவே எட்டு அடி கிழக்கு திசை நோக்கி நகர்ந்து விட்டது என்று அறிக்கை வெளியிட்டார். குறிப்பாக ஜப்பானில் எண்ணூறு நில அதிர்ச்சி ஆய்வு மையங்கள் உள்ளன.அத்துடன் ஆயிரத்தி இருநூறு செயற்கைக் கோள் தொடர்பு நிலையங்கள் நிறுவப் பட்டு இருக்கின்றன. இந்த நிலையில்தான் டாக்டர் கென்னத் ஹட் நட் ஹோண்சு தீவின் வட மேற்கு பகுதியில் இருந்த ஒரு செயற்கைக

சுனாமிக்குக் கூறப் படும் விளக்கங்களில் எது சரி ?

Image
தெற்காசிய சுனாமியானது இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்ததால் ஏற்பட்டது என்றும், ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு நகர்ந்ததால் ஏற்பட்டது என்றும், நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள்  கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் முன்னுக்குப் பின் முரணாக இரண்டு விளக்கங்களைத் தெரிவித்து இருக்கிறார்கள். The devastating mega thrust earthquake occurred as a result of the India and Burma plates coming together. http://earthobservatory.nasa.gov/Newsroom/view.php?id=25921 Forces from deep within the Earth continuously drag the subducting plate (Australia) underneath the overriding plate (Sunda). Most of the time the plates remain relatively stationary, http://earthobservatory.nasa.gov/IOTD/view.php?id=5449 இதே போன்று ஹைத்தி தீவில் சுனாமி ஏற்பட்டதற்கு ஹைத்தி பாறைத் தட்டும் வட அமெரிக்கப் பாறைத் தட்டும் நகர்ந்ததால் ஏற்பட்டது என்று கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூறும் அமெரிக்கப் புவியியல் கழகத்தின் புவியியல் வல்லுனர்கள்,உண்மையில் ஹைத்தி பாறைத் தட்டு எந்தத் திசையை

கண்டத்தின் மத்தியில் ஏன் நில அதிர்ச்சிகள் ஏற்படுகின்றன?

Image
உண்மையில் பிளேட் டெக்டானிக் என்று அழைக்கப் படும் தியரியின் அடிப்படையில் புவியியல் வல்லுனர்களால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு விளக்கம் அளிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். ஏனென்றால் அந்தக் கருத்தின் படி கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றியுள கடல் தளத்துடன் கண்டத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது கண்டத் தட்டுப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது. இந்தக் கருத்தின் படி, ஆஸ்திரேலியாக் கண்டமானது சுற்றிலும் கடல் தளத்தால் சூழப் பட்டு இருக்கிறது. எனவே ஆஸ்திரேலியாக் கண்டத்தில் ஏற்படும் நில அதிர்ச்சிகள் கண்டத் தட்டின் மத்தியப் பகுதியில் ஏற்படும் நில அதிர்ச்சிகள் ( intraplate quakes )  என்று அழைக்கப் படுகிறது. ஆனால் கண்டத் தட்டு தியரியின் படி கண்டத் தட்டின் ஓரப் பகுதியில் ஏற்படும் நில அதிர்ச்சிகளுக்கு மட்டுமே விளக்கம் அளிக்க முடியும்.  எனவே மத்திய அமெரிக்கா,மேற்கு ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் ஏற்படும் நில அதிர்ச்சிகளுக்கு காரணம் கூற இயலாத நிலையில் புவியியல் வல்லுனர்கள் இருக்

அது அப்போ ! இது இப்போ !

Image
வட அமெரிக்கக் கண்டத்தின் தென் மேற்குப் பகுதியில் உள்ள அரிசோனா மாநிலத்தில் நூற்றி நாற்பது சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கல்மரங்கள் ஏராளமாகக் காணப் படுகின்றன. இந்தக் கல் மரங்கள் இருநூற்றி இருபது கோடி ஆண்டுகள் தொன்மையானவைகள் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.இந்தக் கால கட்டதில்தான் டைனோசர்கள், ஆர்கோசாரஸ் என்று அழைக்கப் படும் முதலை போன்ற ஒரு விலங்கினத்தில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்து தோன்றியது. இந்தக் கல் மரப் பாலைவனப் பகுதியில் டைனோசர்கள் உண்ட சைகேட் ஜிங்கோ உள்பட பலவகை மரங்களுடன் அடர்ந்த காடாக இருந்திருக்கிறது.அத்துடன் பைட்டோ சாராஸ் என்று அழைக்கப் படும் முதலை போன்ற ஒரு விலங்கின் எலும்புப் புதை படிவங்களும் இன்னும் பல சதுப்பு நில ஊர்வன வகை விலங்கினங்களின் புதை படிவங்களும் காணப் படுகின்றன. aetosaur.png குறிப்பாக இந்தக் காலத்தில் வாழ்ந்த ஈட்டியோ சாராஸ் என்ற முதலை போன்ற  விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் வட அமெரிக்காவில் மட்டுமல்லாமல், தென் அமெரிக்க,இந்தியா,ஆப்பிரிக்கா,ஐரோப்பா ஆகிய கண்டங்களிலும் காணப் படுவதால் இந்தக் கால கட்டத்தில் எல்லாம் கண்டங்களும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா

பூமி சாய்ந்தது ஏன்?

Image
( ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு துருவப் பகுதிகளில் காடுகள் இருந்திருக்கின்றன.தற்பொழுது பூமி தன் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால் துருவப் பகுதிகளில் ஆண்டுக்கு நான்கு மாதம் தொடர்ந்து பகலும், ஆண்டுக்கு நான்கு மாதம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது, இவ்வாறு தொடர்ந்து பல மாதங்கள் இரவு நீடித்தால் காடுகள் உருவாக சத்தியம் இல்லை.எனவே டைனோசர்கள் காலத்திற்கு பிறகே பூமியின் அச்சில் சாய்வு ஏற்பட்டு இருக்கிறது.துருவப் பகுதிகளில் வெப்ப மண்டலத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு பிளேட் டெக்டானிக் தியரியின் அடிப்படையில் புவியியல் வல்லுனர்களால் விளக்கம் கூற இயலவில்லை.பூமியின் அச்சில் ஏற்பட்ட மாற்றமும் கடல் மட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தையே புதைபடிவ ஆதாரங்கள் புலப் படுத்துகின்றன.) அண்டார்க்டிக் கண்டத்தில் உள்ள கிரிக்பார்டிக்  மலைப் பகுதியில்இருபது  கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த  சீலோபிசிஸ் ( Coelophysis ) என்று அழைக்கப் படுகிற  டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை தொல் விலங்கியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதே போன்று இருபத்தி ஐந