Posts

Showing posts from September, 2009

பத்திரிகைச் செய்தி வெளியீடு.

பத்திரிகைச் செய்தி வெளியீடு. விஞ்ஞானி.க.பொன்முடி.சென்னை. பொருள்:எல்லா நில அதிர்ச்சிகளுக்கும் பூமிக்கு அடியில் இருந்து உயரும் பாறைத் தட்டுகளே காரணம். இந்தியாவும் ஆஸ்திரேலியக் கண்டமும் வடகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பாறைத் தட்டில் அமைந்திருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் கருத்தை ஏற்க இயலாது. பதின் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் ஆஸ்திரேலியக் கண்டமும் ஒன்றாக இருந்ததாகவும், அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் இருந்ததாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் தற்பொழுது இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியக் கண்டம் ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. பாறைத் தட்டுகள் நகர்வதால் அவற்றின் மேல் அமைந்திருக்கும் கண்டங்களும் நகர்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் ஒரே பாறைத் தட்டின் மேல் அமைந்திருப்பதாகக் கூறப் படும் இரண்டு நிலப் பகுதிகள் எப்படி எதிர் எதிர் திசையில் நகர்ந்து சென்றிருக்க முடியும்? நில அதிர்ச்சிக்குப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டங்கள் நகர்ந்து கொண்டிருப்பதே காரணம் என்று ஒரு தவறான விளக்கத்தைக் கூறிக் கொண்டிருக

எல்லா நில அதிர்ச்சிகளுக்கும் பூமிக்கு அடியில் இருந்து உயரும் பாறைத் தட்டுகளே காரணம்-விஞ்ஞானி.க.பொன்முடி.

எல்லா நில அதிர்ச்சிகளுக்கும் பூமிக்கு அடியில் இருந்து உயரும் பாறைத் தட்டுகளே காரணம். -விஞ்ஞானி.க.பொன்முடி.

இந்தியா மட்டும் எப்படி அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து எட்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவு நகர்ந்து வந்திருக்க முடியும்?

இந்தியாவும் ஆஸ்திரேலியாக் கண்டமும் ஒரு பெரிய பாறைத் தட்டின் மேல் இருப்பதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள் இந்த இரண்டு நிலப் பகுதிகளும் அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து நகர்ந்து வந்ததாகக் கூறுகிறார்கள். அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து ஆஸ்திரேலியாக் கண்டம் இரண்டாயிரத்தி ஐந்நூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.ஆனால் இந்தியாவோ எட்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து ஆஸ்திரேலியாக் கண்டம் இரண்டாயிரத்தி ஐந்நூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் நிலையில், இந்தியா மட்டும் எப்படி அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து எட்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு நகர்ந்து வந்திருகக முடியும்? விஞ்ஞானி.க.பொன்முடி.

எரிமலைகளால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.

இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தில் பதினேழாயிரம் தீவுகள் இருக்கின்றன. மேலும் இந்தோனேசியாவில் நூற்று முப்பதுக்கும் அதிகமான எரிமலைகள் இருக்கின்றன. இந்நிலையில், இந்தோனேசியாவில் வெவ்வேறு தீவுகளில் வெவ்வேறு நாட்களில் நில அதிர்ச்சி ஏற்படுகிறது. எனவே எரிமலைகளால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று நான் கருதுகிறேன்.விஞ்ஞானி.க.பொன்முடி.

இந்தோனேசியத் தீவுகளில் மட்டும் ஏன் அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படுகிறது? -விஞ்ஞானி.க.பொன்முடி.

இன்று ( 03.09.2009 ) இந்தோனேசியத் தீவுக் கூட்டத்தில் உள்ள ஜாவா தீவில் ரிக்டர் அளவில் 7.3 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டதில் முப்பத்தி ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்தியாவும் ஆஸ்திரேலியாக் கண்டமும் ஒரு பெரிய பாறைத் தட்டின் மேல் இருப்பதாகவும் இந்தப் பாறைத் தட்டு வட கிழக்குத் திசையில் நகர்ந்து இந்தோனேசியத் தீவுகள் அமைந்திருக்கும் பர்மா நிலத் தட்டிற்குக் கீழே செல்வதால் பாறைத் தட்டுகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதால்தான் இந்தோனேசியாவில் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆனால் நேற்று ஜாவா தீவில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம்? ஏன் நேற்று சுமத்ரா தீவிலோ அல்லது அந்தமான் தீவிலோ நில அதிர்ச்சி ஏற்படவில்லை? இந்தோ-ஆஸ்திரேலிய பாறைத் தட்டு ஜாவா தீவிற்கு கீழே மட்டும் கீழே சென்றதா? இந்தோ-ஆஸ்திரேலிய பாறைத் தட்டு வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு தீவுகளுக்கு கீழே செல்ல இயலுமா? உண்மையில் இந்தோனேசியத் தீவுகளில் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு தீவுகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு காரணம் என்ன? இந்தோனேசியத் தீவுகளில் நூற்றி முப்பது எரிமலைகள் இருக்கின்றன. இந்