பாக்லாந்து தீவுக்கு ஓநாய்கள் எப்படி வந்தன ?
இயற்கை அறிவியலில் கடந்த முன்னூற்றி இருபது ஆண்டு காலமாக விடுவிக்கப் படாமல் இருந்த புதிருக்கு, விடை கண்டு பிடித்து விட்டதாக ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அறிவித்து இருக்கிறார்கள் . பாக்லாந்து தீவானது தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து நானூற்றி அறுபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது. இயற்கை அறிவியல் விஞ்ஞானி சார்லஸ் டார்வின் 1833 ஆம் ஆண்டு பீகிள் கப்பலில் ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்ட பொழுது,பாக்லாந்து தீவில் இறங்கி ஆராய்ச்சி செய்தார். அப்பொழுது அந்தத் தீவில் இருந்த நரி முக ஓநாய்கள் அவரையும் அவருடன் வந்தவர்களையும் கண்டு கொஞ்சமும் பயப்படாமல் நாய்களைப் போல நட்புடன் அருகில் வந்து பார்த்தது. அந்த விலங்குகளைக் கண்ட டார்வின் , எப்படி இந்தத் தனிமைத் தீவுக்கு இந்த விலங்கினம் வந்திருக்கக் கூடும் ? என்று வியப்படைந்தார். டார்வின் அந்தத் தீவுக்கு வந்து சென்ற பிறகு நாற்பதே ஆண்டுகளில்,ரோமத்திற்காக அந்த விலங்கினம் வேட்டையாடப் பட்டதால் முற்றிலும் அழிந்தது. ஆனாலும் டார்வின் சேகரித்த அந்த விலங்கின் எலும்புகள் லண்டன் அருங்காட்சியத்தில்...