Posts

Showing posts with the label புவியியல்

நிலவின் சாய்வான சுற்றுப்பாதையை விளக்குவதற்கு புதிய கொள்கை .

Image
நானூற்று ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,சூரியனைச் சுற்றிச் சுழன்ற ஒரு தூசித் தட்டு மேகமானது, ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,சூரியனும் சூரியனைச் சுற்றிக் கொண்டு இருக்கும் கிரகங்களும், உருவானதாக நம்பப் படுகிறது. இந்தக் கருத்தின் படி,எல்லாக் கிரகங்களும் சூரியனை ஒரே தளத்தில் சுற்றிக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால்,நிலவானது,பூமி சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ஐந்து டிகிரி கோணத்தில் பூமியை வலம் வந்து கொண்டு இருக்கிறது. இதற்கு முன்பு,பூமி உருவான சிறிது காலத்தில்,செவ்வாய் கிரகத்தைப் போன்ற ஒரு கிரகமானது பூமியின் மேல் மோதியதாகவும்,அதனால் பூமியில் இருந்து பிரிந்த பாகமும், மோதிய கோளின் பாகங்களும், உருண்டு திரண்டதால், நிலா உருவாகி இருக்கலாம், என்று நம்பப் பட்டது. இந்தக் கருத்தானது ‘பிரமாண்ட மோதல்’ என்று அழைக்கப் படுகிறது. ஆனால் நிலா மற்றும் பூமியில் காணப் படும் தனிமங்களின் விகிதாச் சாரமானது ஒரே மாதிரி இருப்பது,நிலவில் இருந்து எடுத்து வரப் பட்ட பாறைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் தெரிய வந்தது. எனவே,பூமியின் மேல் மோதிய கிரகமானது,பூமியைப் போன்றே தனிமங்களைக் கொண்...

ஆறாவது பேரழிவு

Image
mex10.jpg mex8.jpg mex4.jpg ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்தது ஏன்? என்பது குறித்து இன்று வரை ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.காரணம் மீண்டும் அது போன்ற ஒரு பேரழிவு வருமா? என்பதே. mex6 புதை படிவ ஆதாரங்களின் மூலம் இது வரை ஐந்து முறை பேரழிவுகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.இதற்கு முன்பு பல முறை பேரழிவுகள் ஏற்பட்டதால்,மறுபடியும் பேரழிவுகள் ஏற்படும் என்பது எதிர்பார்க்கப் படுகிறது.ஆனால் அந்த ஆறாவது பேரழிவு எப்படிப் பட்டதாக இருக்கும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது. http://www.bbc.co.uk/nature/extinction_events http://en.wikipedia.org/wiki/Extinction_event குறிப்பாக பூமியில்  கோடிக் கணக்கான ஆண்டு காலம் வாழ்ந்த விலங்கினங்கள் ,முற்றாக அழிந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.உதாரணமாக மல்டி ட்யூபர்குலேட் என்று அழைக்கப் படும் முயல் போன்ற மூதாதை கொறித்துண்ணி வகை விலங்கினங்கள் பத்து கோடி ஆண்டு காலம் இந்த பூமியில் வாழ்ந்த பிறகு ,முற்றிலும் அழிந்து இருப்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.அதே போன்று பேரழிவுகளுக்குப் பிற...

கடலடிக் குகையில் கற்கால ஓவியங்கள்.

Image
caq13.jpg http://www.iter.org/newsline/105/1449 caq6.png ஹென்றி காஸ் குயர் என்ற நீச்சல் வீரர், 1985 ஆம் ஆண்டு ,தனது ,நண்பர்களுடன் ,மத்திய தரைக் கடலின் வட பகுதிக் கரையோரமாகக் கடலுக்கு அடியில் நீந்திக் கொண்டு இருந்தார். அப்பொழுது நூற்றி இருபது அடி ஆழத்தில் ஒரு குகை தென் பட்டது. ஆர்வத்தின் காரணமாக அந்தக் குகைக்குள் நீந்தியபடியே நுழைந்தார். ஐநூற்றி எழுபத்தி நான்கு அடி வரை நீண்டு சென்ற அந்த குகைப் பாதையின் இறுதியில், நீர் மட்டத்துக்கு மேலாக எழுந்து பார்த்த பொழுது, ஒரு குகைக்குள் இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். caq15.jpg http://realhistoryww.com/world_history/ancient/Misc/Prehistoric_Art/Children_of_Grimaldi.htm caq16.png http://www.visual-arts-cork.com/prehistoric/cosquer-cave-paintings.htm அதன் பிறகு காஸ்குயர் தன் நண்பர்களுடன் அந்தக் குகைக்கு பல முறை சென்று வந்தார்.கடந்த 1991 ஆம் ஆண்டு அந்தக் கடலடிக் குகைக்குச் சென்ற பொழுது குகையின் சுவற்றில் ஒரு மனிதனின் கை அச்சு வடிவம் இருப்பதைக் கண்டார். அதைத் தொடர்ந்து தீவிரமாகத் தேடிய பொழுது, அந்தக் குகையின் சுவற்றில் மீன்கள் உள்பட,குத...

பனிப் பந்துப் பூமி ஒரு தவறான கருத்து.

Image
wsno3.png தற்பொழுது பூமி வெப்ப மடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் உள்ள பனி உருகி நீராகிக் கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகவும் அறிவியல் உலகில் பரவலாக ஒரு நிரூபிக்கப் படாத கருத்து நிலவுகிறது.இந்த நிலையில் அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பும் கூட இதே போன்ற நிகழ்வு நிகழ்ந்ததாக புவியியலாளர்கள் நம்புகின்றனர். குறிப்பாக அறுபது முதல் எழுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி முழுவதும் பனியால் மூடப் பட்டு இருந்ததாக நம்பப் படுகிறது.சூரிய ஒளியில் குறைவு ஏற்பட்டதாலும் ,பூமியில் கரிய மில வாயு குறைவாக இருந்ததாலும் பூமி பனியால் மூடப் பட்டு இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இந்தக் கருத்து பனிப் பந்துப் பூமி என்று  அழைக்கப் படுகிறது. moraine.gif http://academic.emporia.edu/aberjame/student/barker3/marginal%20deposits.gif பனியாறுகளால்  கொண்டு செல்லப் படும் மணற்துகள்கள் படிவதால் உண்டாகும் படிவப் பாறைகள் மொரைன்ங்கள்  என்று அழைக்கப் படுகின்றன.பொதுவாக இது போன்ற பாறைகள் குளிர்பிரதேசங்களில் காணப் படுகின்றன. morain2.jpg morain1.jpg இந்த ந...

தவறான பனியுகக் கருத்தும் பி பி சி யின் காமெடி எச்சரிக்கையும்.

Image
(Dr Wieslaw Maslowski is Research Professor of Oceanography at the Naval Postgraduate School (NPS), ) sno15.jpg https://royalsociety.org/events/2014/sea-ice-reduction-satellite/ பூமியில் சில காலம் துருவப் பகுதிகளில் பனி பெருமளவில் உருவாகி கண்டங்களின் மேல் படர்ந்து வெப்ப நிலை மிகவும் குறைவதாக நம்பப் படுகிறது. இது போன்ற பனிக் காலம் சில லட்சம் ஆண்டுகள் நீடிப்பதாகவும் நம்பப் படுகிறது.இது போன்ற பனிக் காலம் பனியுகம் என்று அழைக்கப் படுகிறது. பூமியில் இது வரை  நான்கு முறை பனியுகம் ஏற்பட்டு இருப்பதாக நம்பப் படுகிறது. கடைசியாக இருபத்தி ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பனியுகம் ஏற்பட்டதாகவும்,இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பெருக்கம் வட கோளப் பகுதியில் பெருகியதால் பனி யானைகள்,மற்றும் பனி காண்டா மிருகங்கள் இனம் முற்றாக அழிந்ததாக நம்பப் படுகிறது. தற்பொழுது துருவப் பகுதிகளில் காணப் படும் பனி அடுக்குகள் அந்தப் பனியுயகத்தின் மிச்சமாகக் கருதப் படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் அந்தப் பனி யானது வெப்ப நிலை உயர்வால் முற்றிலும் உருகி நீராகிக் கடலில் கலந்து விடும் என்ற...