நிலவின் சாய்வான சுற்றுப்பாதையை விளக்குவதற்கு புதிய கொள்கை .
நானூற்று ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,சூரியனைச் சுற்றிச் சுழன்ற ஒரு தூசித் தட்டு மேகமானது, ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,சூரியனும் சூரியனைச் சுற்றிக் கொண்டு இருக்கும் கிரகங்களும், உருவானதாக நம்பப் படுகிறது. இந்தக் கருத்தின் படி,எல்லாக் கிரகங்களும் சூரியனை ஒரே தளத்தில் சுற்றிக் கொண்டு இருக்க வேண்டும். ஆனால்,நிலவானது,பூமி சூரியனை வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ஐந்து டிகிரி கோணத்தில் பூமியை வலம் வந்து கொண்டு இருக்கிறது. இதற்கு முன்பு,பூமி உருவான சிறிது காலத்தில்,செவ்வாய் கிரகத்தைப் போன்ற ஒரு கிரகமானது பூமியின் மேல் மோதியதாகவும்,அதனால் பூமியில் இருந்து பிரிந்த பாகமும், மோதிய கோளின் பாகங்களும், உருண்டு திரண்டதால், நிலா உருவாகி இருக்கலாம், என்று நம்பப் பட்டது. இந்தக் கருத்தானது ‘பிரமாண்ட மோதல்’ என்று அழைக்கப் படுகிறது. ஆனால் நிலா மற்றும் பூமியில் காணப் படும் தனிமங்களின் விகிதாச் சாரமானது ஒரே மாதிரி இருப்பது,நிலவில் இருந்து எடுத்து வரப் பட்ட பாறைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் தெரிய வந்தது. எனவே,பூமியின் மேல் மோதிய கிரகமானது,பூமியைப் போன்றே தனிமங்களைக் கொண்...