எரிமலைச் செயல்பாடுகளே நில அதிர்ச்சிக்குக் காரணம்.விஞ்ஞானி.கணபதி பொன்முடி

( டாக்டர் சேத் ஸ்டெயின் )

டாக்டர் ஆல்பிரட் வெக்னர் மற்றும் டாக்டர் ஹாரி ஹெஸ் ஆகியோரின் விளக்கங்கள் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தாமல் ஏற்றுக் கொள்ளப் பட்டதால் நில அதிர்ச்சி குறித்த கேள்விகளுக்கு விளக்கம் கூற இயலாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
குறிப்பாக கண்டங்களை சுமந்த படி கண்டத் தட்டுகள் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படும் பொழுது கண்டங்களுக்கு இடையில் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால் கண்டங்களின் மத்தியப் பகுதியில் ஏன் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்ற கேள்விக்கு கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தாக்கத்தின் அடிப்படையில் விளக்கம் கூற இயலவில்லை.
இது குறித்து கடந்த 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இல்லினாய்ஸ் நகரில் உள்ள நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சேத் ஸ்டெயினை ஆசிரியராகக் கொண்டு அமெரிக்க புவியியல் கழகம் வெளியிட்ட ‘’ கண்டங்களின் உள்பகுதி நில அதிர்ச்சிகள் பற்றிய அறிவியல் குழப்பங்கள் மற்றும் கொள்கை விவகாரங்கள் ‘’ என்ற தலைப்பில் (Continental Intraplate Earthquakes: Science, Hazard, and Policy Issues ) ஒரு புத்தகம் வெளியிடப் பட்டது.
அந்த புத்தகத்தில் டாக்டர் சேத் ஸ்டெயின் அவர்கள் ‘’ கண்டங்களின் ஓரப் பகுதியில் ஏற்படும் நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது என்று பிளேட் டெக்டானிக் அருமையாக விளக்கம் கூறுகிறது.ஆனால் கண்டங்களின் மத்தியப் பகுதியில் பாறைகள் நொறுங்கி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு விளக்கம் கூற வில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.
‘’ The plate tectonics revolution of the 20th century elegantly explained why most earthquakes occur where they do – at Earth's plate boundaries. It didn't explain, however, the occurrence of intraplate quakes and the deformation processes that give rise to them.’’
இதன் விளைவாக மத்திய அமெரிக்கா,மேற்கு ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஆய்வு செய்யும் புவியியலாளர்களால் அந்த பகுதியில் ஏன் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று காரணம் தெரியவில்லை என்பதுடன் அந்த நில அதிர்ச்சிகள் எந்த அளவுக்கு ஏற்படும் என்றும் அந்த நில அதிர்ச்சிகள் எந்த ளவுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
As a result, geologists studying areas like the central U.S., western Europe, and Australia, don't know what causes these quakes, how often they will happen in the future, and how dangerous they are.
மேலும் அவர் ‘’ நவீன நில அதிர்ச்சி இயலில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வளர்ப்புக் குழந்தை ’’ போன்று கண்டங்களின் மத்தியப் பகுதியில் ஏற்படும் நில அதிர்ச்சிகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Understanding Mysterious Continental Intraplate Earthquakes
Boulder, CO, USA – A new volume published by the Geological Society of America sheds light on mysterious earthquakes in the interiors of continents. These earthquakes, like those that occur in the central U.S., are what the book's editors describe as "an embarrassing stepchild of modern earthquake seismology." Continental Intraplate Earthquakes: Science, Hazard, and Policy Issues provides a comprehensive overview of these rare but very real global hazards.
இவ்வாறு புவியியலாளர்கள் குழம்புவதற்கு அவர்கள் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாக தவறாக நம்புவதே காரணம், உண்மையில் கண்டங்கள் நிலையாக இருப்பது கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு காலத்தில் உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் தயாரித்த வரை பட ஆதாரம் மூலம் தெரிய வந்துள்ளது.
3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் தயாரித்த வரை படம்


குறிப்பாக வட பகுதியில் இருந்ததாகக் கூறப் பட்ட லாரேசியா என்ற வட பெருங் கண்டம் இரண்டாகப் பிரிந்ததால் வட அமெரிக்கக் கண்டம் உருவாகி மேற்கு திசையை நோக்கியும் அதே போன்று ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்கள் இணைந்து யூரேசியக் கண்டமானது கிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இவ்வாறு வட பகுதிக் கண்டம் பிரிந்து எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் அட்லாண்டிக் கடல் உருவானதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
இவ்வாறு கண்டங்கள் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு வரும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தரையாக உருவாகுவதாகவும் அதே போன்று மறுபடியும் பாறைக் குழம்பு அதே இடத்திற்கு வரும் பொழுது ஏற்கனவே மத்தியப் பகுதியில் உருவாகி இருந்த கடல்தரையை பக்க வாட்டுப் பகுதிக்கு நகர்த்தி விட்டு மத்தியப் பகுதியில் புதிய கடல் தரையாக உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.
இதே போன்று தொடர்ந்து நடை பெறுவதால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதால் அந்தக் கடல் தாரிகளின் மேல் இருந்தபடி அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள அமெரிக்க ஐரோப்பிய கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.
இதே போன்று வடபகுதி லாரேசியாக் கண்டத்தின் தென் பகுதியில் இருந்து பிரிந்து தெற்கு திசையை நோக்கி நகர்ந்ததால் கோண்டுவாணா என்ற தென்பெருங் கண்டம் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
இந்த நிலையில் கோண்டுவாணாக் கண்டம் மறுபடியும் பிரிந்ததால் தென் அமெரிக்கா ,ஆப்பிரிக்கா,இந்தியா,மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் உருவாகி வடபகுதியை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
இதில் குறிப்பாக கோண்டுவாணாக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் இருந்து பிரிந்தாதால் உருவான தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது வடக்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதைப் போன்றே தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியிலும் புதிய கடல் தரை உருவாகி வட மேற்கு வடகிழக்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
இதில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் கடல் தரையின் மேல் இருந்தபடி தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
இந்த நிலையில் வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் அருகருகே இருந்தபடி அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி முறையே வடக்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களும் சந்திக்கும் பகுதியில் இருந்து அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு நில அதிர்ச்சிகள் ஏற்படவேண்டும்.
ஆனால் அமெரிக்காவின் நாசா அமைப்பு வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் அவ்வாறு இந்த இரண்டு கண்டங்கள் சந்திக்கும் பகுதியில் இருந்து அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
எனவே வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பது இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில் நிரூபணமாகிறது.
இதே போன்று தென் பகுதிக் கோண்டுவாணாக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் இருந்து இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் வட கிழக்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.
ஆனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையிலும் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.எனவே இந்தியாவும் ஆஸ்திரேலியாக் கண்டங்களும் நிலையாக இருப்பது இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாதாதன் அடிப்படையில் நிரூபணமாகிறது.
எனவே கண்டங்களை சுமந்த படி கண்டத் தட்டுகள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கருதுவது அடிப்படை ஆதாரமற்ற கற்பனை என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.
அதே நேரத்தில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் வடக்கு தெற்காக அமைந்து இருக்கும் எரிமலைத் தொடரில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது நில அதிர்ச்சி வரை படத்தில் பதிவாகி இருக்கிறது.
எனவே எரிமலைச் செயல்பாடுகளே நில அதிர்ச்சிக்குக் காரணம் என்பது நில அதிர்ச்சி வரை படஆதாரம் மூலம் நிரூபணமாகிறது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.