Posts

Showing posts from 2023

இருபது ஆண்டுகால புதை படிவ ஆராய்ச்சி-விஞ்ஞானி.க.பொன்முடி.

வணக்கம்! கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டங்களின் மேல் பரவலாகக் காணப் படுகிறன்றன. நிலத்தின் மேல் வாழக் கூடிய வளர்க்க கூடிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்களானது கடலுக்கு அடியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய வளர்க்க கூடிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்களானது பனிப் பிரதேசமான திருவப் பகுதிகளில் காணப் படுகிறது. கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்குகள் காணப் படுகின்றன. இந்தப் புதிர்களுக்கு காரணம் என்ன என்பதை அறிவதற்காக நான் மேற்கொண்ட ஆய்வில் புதிய விஷயங்களைக் கண்டு பிடித்து இருக்கிறேன். புதை படிவங்கள் குறித்த ஆய்வில் எனக்குத் தெரிய வந்த விபரங்களை இந்தக் கட்டுரையில் காணலாம். இருபது ஆண்டுகால புதை படிவ ஆராய்ச்சி குறித்து...ஒரே பக்கத்தில். தற்பொழுது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு நகரும் பொழுது, கடல் தள பாறைகளுக்கு இடையில் உரசல்

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை'' தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றி இருக்கும் கடல் தளங்களுடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாக அறிவியல் உலகில் ஒரு கருத்து நிலவுகிறது. அந்தக் கருத்தானது கண்டத் தட்டு நகர்ச்சி என்று அழைக்கப் படுகிறது. அதன் படி கண்டங்கள் கடல் தளங்களுடன் நகரும் பொழுது கடல் தள பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும்,அதனால் கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது. அதே போன்று கடலுக்கு அடியில், ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தை சேர்ந்த கடல் தளமானது உரசியபடி நகரும் பொழுது,நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,அத்துடன் அப்பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது. இந்தக் கருத்தின் படி,இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றாக இணைந்த நிலையில்,தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக்காக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும்,அதன் பிறகு ,இந்த இரண்டு கண்டங்களும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் பிரிந்து, வட கிழக்கு

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தைத் தெரிவிக்க வில்லை.

சுமத்ரா தீவில் ஏற்பட்ட தெற்காசிய சுனாமிக்கு நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைத் தெரிவிக்க இயல வில்லை. இதே போன்று ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் USGS என்று அழைகப் படும் அமெரிக்க புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைத் தெரிவிக்க இயல வில்லை. இ எ நிலையில் இந்த இரண்டு தீவுகளிலும் ,அந்த தீவுகளுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் அந்த நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தரை மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது. தற்பொழுது கண்டங்கள் எல்லாம் அதனைச் சுற்றியுள்ள கடல் தளத்துடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக அறிவியல் உலகில் நம்பப் படுகிறது.இந்தக் கருத்தானது கண்டத் தட்டு நகர்ச்சி என்று அழைக்கப் படுகிறது. அவ்வாறு கண்டங்கள் நகரும் பொழுது,கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும் அதனால் கடல் தளத்தின் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது. அதே போன்று ஒரு கண்டத்திற்கு அடியில் குறிப்பாக கடலுக்கு அடியில்,அடுத்த கண்டத்தின் கடல் தளம் உரசியபடி நகர்ந்து ச