Posts

Showing posts from March, 2015

நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் விளக்கம் கூறும் தகுதி புவியியல் வல்லுனர்களுக்கு இல்லை.

Image
கடந்த 12.01.2010 அன்று ,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் கடுமையான நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதில்,இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். http://earthquake.usgs.gov/earthquakes/eqarchives/poster/2010/20100112.php அந்த நில அதிர்ச்சி ஏன் ஏற்பட்டது என்பதற்கு அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றனர். அதாவது ,ஹைத்தி தீவு அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது ஒரு பாறைத் தட்டின் மேல் இருப்பதாகவும்,அந்தப் பாறைத் தட்டானது,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொருத்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்( the Caribbean plate moving eastward with respect to the North America plate),அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் தெரிவிக்கப் பட்

குளோபல் வார்மிங் ஊழல்.

Image
if10.png http://www.telegraph.co.uk/comment/columnists/christopherbooker/7062667/Pachauri-the-real-story-behind-the-Glaciergate-scandal.html ipcc5.jpg http://www.dailymail.co.uk/news/article-1085491/Himalayan-glaciers-disappear-30-years-global-warming.html கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐ நா,வின்,  IPCC என்று அழைக்கப் படும் கால நிலை மாற்றத்துக்கான சர்வ தேச அமைப்பு வெளியிட்ட 3000 பக்க அறிக்கையில் ,பத்தாவது அத்தியாயத்தில் ,இமய மலையில் உள்ள பனிப் படலங்கள் உலகின் மற்ற பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்களைக் காட்டிலும் வேகமாக உருகிக் கொண்டு இருப்பதாகவும்,அதனால் இன்னும் முப்பது ஆண்டுகளில் அதாவது 2035 ஆம் ஆண்டிற்குள் அல்லது அதற்கு முன்பாகவே முற்றிலும் உருகி காணாமல் போய் விடக் கூடிய சாத்தியம் அதிகம் இருக்கிறது என்று தெரிவிக்கப் பட்டு இருந்தது. இந்த அறிவிப்பு வெளியான மூன்று ஆண்டுகளில், இது பற்றி கேள்விப் பட்ட பனியாற்று இயல் நிபுணர்கள் இது சத்தியமே இல்லை என்று கொதித்து எழுந்தார்கள்.இது குறித்து,ஐ நா,வின், IPCC தலைமைப் பொறுப்பு வகிக்கும் டாக்டர் ராஜேந்திரக் குமார் பச்சோரி உடனே மன்னிப்பு கேட்