சுனாமி நினைவு தினக் கட்டுரை.
இதற்கு முன்பு,கடல் மட்ட உயர்வு, மற்றும் நில அதிர்ச்சி/ சுனாமிகளுக்கான காரணம் குறித்து, ஆறு அத்தியாயங்களில் தெரிவித்த விளக்கத்தை,இரண்டே.. இரண்டு, அத்தியாயத்தில் தெரிவித்து இருக்கிறேன். அத்தியாயம் ஒன்று டைனோசர்களின் புதைப் படிவங்கள் மூலம்,பூமி மூழ்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. கேள்விகள். கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதைப் படிவங்களானது,தீவுகளிலும்,தீவுக் கண்டங்களிலும்,கணப் படுவதற்கு காரணம் என்ன? நார்வே நாட்டுக் கடல் பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து, இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில்,டைனோசரின் புதைப் படிவங்கள், கணப் படுவதற்கு காரணம் என்ன? வட துருவப் பகுதியில்,பனிப் படலங்களுக்கு அடியில், டைனோசர்களின் புதைப் படிவங்கள், கணப் படுவதற்கு காரணம் என்ன? பதில்கள். தற்பொழுது, கடலின் ஆழமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது.ஆனால் டைனோசர்களின் காலத்தில்,கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதை விட,இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது. அதனால், டைனோசர்களின் காலத்தில்,கடலின் பரப்பளவானது குறைவாக இருந்திருக்கிறது.அதனால், டைனோசர்களின் காலத்தில் வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்தி...