Posts

Showing posts with the label இந்தியா

கண்டங்கள் தீவுகள் கடலடித் தளத்திற்கு அடியில் இருந்து உயர்ந்திருக்கின்றன

Image
napple.jpg ஐ சக் நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்ததால் அவர் புவிஈர்ப்பு விசையைக் கண்டு பிடித்தார் என்பதை அப்பொழுது நான் நம்ப வில்லை. ஆனால் இப்பொழுது நம்புகிறேன். ஏனென்றால் எனக்கே அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது. ngpage.jpg ஒரு நாள் ஒரு பழைய புத்தகக் கடையில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப் பட்டு இருந்த பழைய நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிக்கைகளில் ஒன்றை எடுத்து அசிரத்தையாகப் புரட்டிய பொழுது பளிச் என்று ஒரு பக்கத்தில் வெளியாகி இருந்த ஒரு படம் என் கவனத்தைக் கவர்ந்தது. அந்தப் படத்தில் ஒரு மலையின் மேல் இருவர் நின்றபடி மண் வெட்டும் கருவியால் தரையைத் தோண்டிக் கொண்டு இருந்தனர். குறிப்பாக அவர்கள் இருவரும் வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் குறிப்பாக கனடா நாட்டுப் பகுதியில் உள்ள ராக்கி மலைப் பகுதியில் நின்று கொண்டு இருப்பதாகவும் அவர்கள் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்து மடிந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்களை அகழ்ந்து எடுத்துக் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது. அத்துடன் அவர்கள் நின்று கொண்டு இருந்த இடமானது ஐம்பது க...

The Indian continent is a stable formation.scientist.G.Ponmudi.

Image
The Indian sub continent was said to be part of a hypothetical continent called as Gondwanaland before Ten million years.and then drifted to the present place by moving sea floor. according to the plate tectonic theory new sea floor was formed continuously by the cooling and solidification of magma which came to the surface from deep earth.therefore the new sea floor said to be pushed the old sea ......floor, which carry the continent and caused the movement of the continent. but in this process new sea floor can form and move only in a single direction. but ten million years ago the Indian sub continent was said to be lie close to the south Africa. therefore ,India can either move away from Africa... in other words India can move towards east or north. but today the Indian sub continent was surrounded by sea floor in all side. this proved that the Indian sub continent was in the same place from the beginning and coming from the south Africa scientist.G.ponmud.

பாறைத் தட்டுகள் உயர்ந்ததால் திருப்பதி மலை உருவானது.விஞ்ஞானி.க.பொன்முடி.

பூமிக்கு அடியில் இருந்து பாறைத் தட்டுகள் உயர்ந்ததால் திருப்பதி மலை உருவானது.விஞ்ஞானி.க.பொன்முடி.

இந்தியா மட்டும் எப்படி அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து எட்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவு நகர்ந்து வந்திருக்க முடியும்?

இந்தியாவும் ஆஸ்திரேலியாக் கண்டமும் ஒரு பெரிய பாறைத் தட்டின் மேல் இருப்பதாகக் கூறும் ஆராய்ச்சியாளர்கள் இந்த இரண்டு நிலப் பகுதிகளும் அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து நகர்ந்து வந்ததாகக் கூறுகிறார்கள். அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து ஆஸ்திரேலியாக் கண்டம் இரண்டாயிரத்தி ஐந்நூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.ஆனால் இந்தியாவோ எட்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து ஆஸ்திரேலியாக் கண்டம் இரண்டாயிரத்தி ஐந்நூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் நிலையில், இந்தியா மட்டும் எப்படி அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து எட்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு நகர்ந்து வந்திருகக முடியும்? விஞ்ஞானி.க.பொன்முடி.

தமிழகத்தில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகள்.

1679 ஜனவரி 28 அன்று சென்னை கோட்டையில் சிறு நில நடுக்கம். 1807 டிசம்பர் 6 அன்று ஆவடி பூந்த மல்லி பகுதியில் சிறு நில நடுக்கம். 1807 டிசம்பர் 10 அன்று சென்னையில் நில நடுக்கம். 1816 செப்டம்பர் 16 அன்று சென்னையில் லேசான நில நடுக்கம். 1822 ஜனவரி 29 அன்று வந்தவாசியில் நில நடுக்கம். 1823 மார்ச் 2 அன்று ஸ்ரீ பெரும்புதூரில் நில அதிர்ச்சி. 1859 ஜனவரி 3 அன்று கடலாடி போரூர் ஆகிய இடங்களில் நில நடுக்கம். 1867 ஜூலை 3 அன்று விழுப்புரம் வளவனூர் பகுதியில் நில நடுக்கம். 1881 டிசம்பர் 31 அன்று அந்தமானில் நில அதிர்ச்சி ஏற்பட்டபொழுது சென்னையிலும் லேசான நில அதிர்ச்சி. 1882 பிப்ரவரி 28 ஊட்டியில் நில நடுக்கம். 1900 பிப்ரவரி 8 அன்று கோவையில் நில அதிர்ச்சி.. 1841 ஜூன் 26 அந்தமானில் ஏற்ப்பட்ட நில அதிர்ச்சியைத் தொடர்ந்து சென்னையிலும் லேசான நில அதிர்ச்சி. 1972 ஜூன் 26 அன்று கோவையில் நில அதிர்ச்சி. 1988 ஜூலை 7 அன்று கேரளத்தில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து தமிழக எல்லைப் பகுதியில் பாதிப்பு. 1993 டிசம்பர் 6 மன்னார் வளைகுடாவில் நில நடுக்கம். 2000 டிசம்பர் 12 அன்று கேரளத்தில் நில நடுக்கம் ஏற்ப...

ராமேஸ்வரத்தில் நில நடுக்கம் ஏன்?விஞ்ஞானி.க.பொன்முடி.

இன்று தமிழகத்தின் தென் கோடிப் பகுதியான ராமேஸ்வரத்தில் நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10.08.2009 அன்று அந்தமான் தீவில் ரிக்டர் அளவில் 7.6 அளவிலான நிலஅதிர்ச்சி ஏற்பட்டது. அப்பொழுது சென்னையிலும் அதிர்ச்சி உணரப் பட்டது. அனால் இன்று அந்தமான் தீவில் நில அதிர்ச்சி எதுவும் ஏற்படாத நிலையில் ராமேஸ்வரத்தில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம் ? இதே போன்று இந்தியாவின் வடகிழக்குப் பகுதியான அசாம் மேகாலாயா மிசோரம் பகுதியில் நேற்று ரிக்டர் அளவில் 4.9 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கும் இந்தியாவின் தென் கோடிப் பகுதியான ராமேஸ்வரத்தில் இன்று ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் தொடர்பு இல்லை. குறிப்பாக இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு அந்தந்த இடங்களில் பூமிக்கு அடியில் உள்ள பாறைகளில் ஏற்படும் மாற்றங்களே காரணம். பூமி தோன்றிய காலத்தில் முழுவதும் பாறைக் குழம்புக் கோளமாக இருந்தது. அதன் பிறகு கோடிக் கணக்கான ஆண்டுகளாக படிப் படியாகக் குளிர்ந்து இறுகியதால் புற ஓடு உருவானது. இந்தப் புற ஓடு அடர்த்தி குறைவானதாக இருப்பதால் அவைகள் பூமி...

எரிமலைகளே நில அதிர்ச்சிக்குக் காரணம்.-விஞ்ஞானி.க.பொன்முடி.

எரிமலைகளே நில அதிர்ச்சிக்குக் காரணம்.-விஞ்ஞானி.க.பொன்முடி. இந்தியாவில் இருந்து எடுக்கப் பட்ட பாலூட்டி விலங்கின் எலும்புகள் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும் கண்டங்கள் நகர்கின்றன என்ற கருத்தை தவறாக்கி விட்டது. இந்திய நிலப் பகுதியானது பதின்மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிரிந்து வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்துடன் மோதியது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்பொழுது இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கிசால்புரி என்ற கிராமத்தில் இருந்து ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆடு மாடு போன்ற குளம்புக் கால் இனத்தைச் சேர்ந்த விலங்கின் பற்களை தொல் விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாய்வு மூலம் எடுத்திருக்கின்றனர். இதற்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தில் மான்டனா என்ற நகரில் இருந்து எடுக்கப் பட்ட ஆறு கோடியே முப்பது லட்சம் ஆண்டுகள் தொன்மையான குளம்புக் கால் விலங்கின் எலும்புகளே தொன்மையானதாக இருந்தது. தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்துக் குளம்புக் கால் விலங்குகளின் ...

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது. இதற்கு ஆதாரமாக இந்தியாவிற்கு தெற்கே ஏழாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் கெர்கூலியன் என்ற எரிமலைத் தீவில் காணப் படும் மண்புழுக்கள் விளங்குகின்றன. மண்ணுக்கு அடியில் வாழும் மண்புழுக்களால் நீந்தவோ பறக்கவோ இயலாது. இந்நிலையில் மற்ற நிலப் பகுதிகளில் இருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தனிமைத் தீவீற்கு மண்புழுக்கள் தரை வழியாகவே சென்றிருக்க இயலும். ஆனால் கெர்கூலியன் தீவோ கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின் மேல் அமைந்திருக்கும் ஒரு எரிமலைத் தீவு ஆகும். இந்நிலையில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் மூழ்கி இருக்கும் அந்தக் கடலடிப் பீட பூமியின் மத்தியப் பகுதியில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்களும் விதை மற்றும் மகரந்தத் துகள்களும் இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இதன் அடிப் படையில் அந...

பாலைவனங்களில் காணப் படும் மணலை உருவார்க்கியது கடல்.

பாலைவனங்களில் காணப் படும் மணலை உருவார்க்கியது கடல். பாலைவனங்களில் கடல் உயிரினங்களின் புதைபடிவங்கள் காணப் படுகின்றன. எனவே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாலைவங்கள் கடல் மட்டத்திற்கு அடியில் இருந்திருக்கின்றன. அப்பொழுது கடல் மட்டத்திற்கு மேலே இருந்த பாறைகளை கடல் நீர் அரித்ததால் மணல் உருவானது. அவைகள் காற்று மழை மற்றும் .ஆறினாலும் கூட கடலுக்கு அடியில் கொண்டுவரப் பட்டன. அதன் பிறகு நிலப் பகுதிகள் கடல் மட்டத்திற்கு மேலே உயர்ந்ததால் இன்று நிலத்தின் மேல் மணல் வெளி காணப் படுகிறது. இதற்கு ஆதாரமாக ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியிலும், வட கிழக்குப் பகுதியில் எகிப்திலும், தென்மேற்குப் பகுதியில் நமீபியாப் பாலைவனப் பகுதியிலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன. விஞ்ஞானி.க.பொன்முடி.

கடலுக்கடியில் ஒரு கண்டம். விஞ்ஞானி.க.பொன்முடி.

கடலுக்கடியில் ஒரு கண்டம். விஞ்ஞானி.க.பொன்முடி இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் கடல் மட்டத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் , ஒரு நிலப் பகுதி மூழ்கியிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். கடல் தரையிலிருந்து பத்தாயிரம் அடி உயர்ந்து இருக்கின்ற அந்த கடலடிப் பிரதேசத்தின் மத்தியப் பகுதியில் , வழிந்தோடிய எரிமலைப் பாறைப் படிவுகளில் மரங்களின் பாகங்களும் விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது. அந்த எரிமலைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதில் அந்தப் பாறைகள் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானவைகள் எனபது தெரியவந்திருக்கிறது. இதன் அடிப் படையில் தற்பொழுது கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் அடியில் மூழ்கி இருக்கும் அந்த நிலப் பகுதி ,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டத்திற்கு மேலே இருந்திருப்பதுடன் ,அதில் காடுகளும் இருந்திருக்கிறது என்று மைக் காபின் என்ற ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார். மேலும் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலப் பகுதி கடலுக்கு அடியில் மூழ்கியிருக்கிறது என்றும் அவர்...

இந்தோனேசியத் தீவுகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்தோனேசியத் தீவுகள் உயர்ந்து கொண்டிருக்கின்றன. - விஞ்ஞானி க.பொன்முடி. இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பறித்த சுனாமியை உருவாக்கிய சுமத்ரா தீவு நிலநடுக்கதிற்குப் பிறகு.அப்பகுதியில் இருந்த சிமிலு என்ற தீவின் வடமேற்குப் பகுதி கடல் மட்டத்திலிருந்து மூன்று அடி உயர்ந்து இருந்தது. இதனால் தீவில் வடமேற்குப் பகுதியில் புதிதாக கடற்கரை உருவாகி இருந்தது.மேலும் தீவைச் சுற்றிலும் கடலுக்கு அடியில் இருந்த கடல் பஞ்சுகள் கடல் மட்டத்திற்கு மேலாக வெளியில் தெரிந்தன. மேலும் 26, டிசம்பர்,2004 ,நில நடுக்கத்திற்குப் பிறகு மூன்று மாதம் கழித்து 28.மார்ச்,2005.அன்று ஏற்பட்ட நில நடுக்கதிற்குப் பிறகும் சிமிலு தீவு நான்கு அடி உயர்ந்து காணப்பட்டது. அத்துடன் தீவைச் ச்ற்றிலும் முன்னூறு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு,கண்ணனுக்கு எட்டிய தூரம் வரை கடலுக்கு அடியில் இருந்த கடல் பஞ்சுகள் வெளியில் தெரிந்தன. தீவு ஏன் திடீரென்று நான்கு அடி உயர்ந்தது? பூமிக்குள் இருக்கும் பாறைக் குழம்பு படிப்படியாகக் குளிர்ந்து கொண்டிருப்பதால் பல்வேறு அடுக்...