ஆல்பிரட் வெக்னரின் விளக்கம் தவறு.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

வட துருவ குளிர் பிரதேசத் தீவுகளில் பல கோடி ஆண்டுகள் தொண்மையுள்ள வெப்ப மண்டலத் தாவரங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் தீவுகள் பூமியில் வெப்ப மண்டலப் பகுதியில் இருந்து குளிர் மண்டலப் பகுதிக்கு நகர்ந்து சென்றதே காரணம் என்று, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை ஆராச்சியாளர் கூறிய விளக்கம் முற்றிலும் தவறு என்பது ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது.
spit

வட துருவப் பகுதியில் இருந்து ஆயிரத்தி முன்னூறு கிலோ மீட்டர் தெற்கில் ஸ்பிட்ஸ்பெர்ஜன் என்ற தீவு அமைந்து இருக்கிறது.குறிப்பாக நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கப் படும் நார்வே நாட்டிற்கு வடக்கே அறுநூறு கிலோமீட்டர் தொலைவில் ஸ்பிட்ஸ்பெர்ஜன் தீவு அமைந்து இருக்கிறது. தற்பொழுது அறுபது சத வீத நிலப் பகுதி பனியால் மூடப் பட்டு இருக்கும் இந்தத் தீவானது ஆர்க்டிக் வட்டம் என்று அழைக்கப் படும் பகுதியில் அமைந்து இருப்பதால் ஆண்டுக்கு ஆறுமாதம் தொடர்ச்சியாக பகலும் தொடர்ச்சியாக ஆறுமாதம் இரவும் நீடிக்கிறது.

இருப்பினும் இந்தத் தீவில் முப்பது கோடி ஆண்டுகள் தொண்மையான பாறைப் படிவுகளில் வெப்ப மண்டலத் தாவரங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.

இதற்கு முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பிட்ஸ்பெர்ஜன் தீவானது நில நடுக் கோட்டுப் பகுதியில் இருந்ததே காரணம் என்றும் அபொழுது ஸ்பிட்ஸ்பெர்ஜன் தீவில் வெப்ப மண்டலக் கால நிலை நிலவியதால் ஸ்பிட்ஸ்பெர்ஜன் தீவில் வெப்ப மண்டல தாவரங்கள் வளர்ந்து என்றும் பிறகு ஸ்பிட்ஸ்பெர்ஜன் தீவானது வடக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது என்று ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை இயல் வல்லுநர் ஒரு விளக்கத்தைக் கூறினார்.

இதன் அடிப்படையில் தீவானது ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாக புவியியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
podis1

இந்த நிலையில் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியிலேயே வெப்ப மண்டலக் கால நிலை நிலவியிருப்பது ஆர்க்டிக் வளையப் பகுதியில் உள்ள அலாஸ்காவின் வட பகுதியில் டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
hj1.jpg

இதே போன்று வட துருவப் பகுதியில் இருந்து எண்ணூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ஆக்சல் ஹை பெர்க் தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வெப்ப மண்டலப் பகுதியில் காணப் படும் செம்மரக் காடுகளின் புதை படிவங்களும் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

அதே போன்று ஆக்சல் ஹை பெர்க் தீவிற்கு அருகில் உள்ள எல்ஸ்மர் தீவில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு முதலை மற்றும் ஆமை போன்ற வெப்ப மண்டலப் பகுதியில் வாழும் விலங்கினங்களின் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.

எனவே வட துருவப் பகுதியில் உள்ள தீவுகளில் வெப்ப மண்டலப் பிரதேசத்தில் காணப் படும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் வெப்பா மண்டலக் கால நிலை நிலவியதே காரணம் என்பது வட துருவப் பகுதிக்கு மிக அருகில் உள்ள தீவுகளில் ஐந்து கோடி ஆண்டுகளுகள் தொண்மையான வெப்ப மண்டலப பிராணிகளின் புதை படிவ ஆதாரங்கள் காணப் படுவதன் அடிப்படையில் நிரூபணமாகிறது.

எனவே துருவப் பகுதித் தீவுகளில் வெப்ப மண்டலத் தாவரங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு தீவுகள் வெப்ப மண்டலப் பகுதியில் இருந்து துருவப் பகுதிக்கு நகர்ந்து சென்றதாகக் கூறப் படும் விளக்கம் தவறு.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.