Posts

Showing posts with the label பனிப் படலங்கள்

புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்தவைகள்.

Image
ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் புவியியல் வல்லுனர்களால்,கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில், விளக்கம் கூற இயல வில்லை. கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின், புதைப் படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும்,தீவுகளிலும், காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும்,அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,கூறப் படும் விளக்கமானது,ஒரு தவறான விளக்கம் என்பது தெரிய வந்துள்ளது. அத்துடன், கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின், புதைப் படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும்,தீவுகளிலும், காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,கடல் மட்டமானது,பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததுடன்,அந்தக் காலத்தில்,கண்டங்களுக்கு இடையில்,காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததுடன்,அதன் வழியாக விலங்கினங்களின் போக்குவரத்து நடை பெற்று இருப்பதே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. அத்துடன்,பூமிக்கு அடியில்,எரிமலை வெடிப்புகள் ஏற்ப...

பூமியானது ஒரு நீர்க் கிரகமாக மாறிக் கொண்டு இருக்கிறது.

Image
நீண்ட நாளாகவே,நில அதிர்ச்சி,சுனாமி மற்றும் கடல் மட்ட உயர்வு குறித்த எனது கண்டு பிடிப்பை ஒரே ஒரு கட்டுரையில் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.தற்பொழுதுதான் அந்த எண்ணம் நிறைவேறி இருக்கிறது. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,வணக்கத்துடன் விஞ்ஞானி க.பொன்முடி எழுதும் மடல்.நான் இணையத்தில் வெளியிடப் பட்ட தகவல்களின் அடிப்படையில்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகி இருப்பதைக் கண்டு பிடித்தேன். எனது கண்டு பிடிப்பை உலக அளவில் கொண்டு செல்ல,ஆங்கில மொழியறிவுடன்,அறிவியலைப் புரிந்து கொள்ளக் கூடிய ,ஒருவரின் உதவியும் ஒத்துழைப்பும் தேவைப் படுகிறது.இந்தப் பணியானது உயர்ந்த நோக்கமும் சிறப்பும் உடையது. அந்த வகையில் தாங்கள் இந்த உயரியப் பணிக்குப் பொருத்தமானவர் என்று நான் நம்புவதால்,தங்களின் மேலான ஒத்துழைப்பை வேண்டுகிறேன். தங்களின் நம்பிக்கையுள்ள, விஞ்ஞானி க.பொன்முடி. ஆய்வு பற்றி... ஒரு நாள் நான் ஒரு பழைய புத்தகக் கடையில்,இருந்த பழைய நேசனல் ஜியாகிரபிக் பத்திரிக்கையை எடுத்துப் புரட்டிய பொழுது,ஒரு படம் என் கவனத்தைக் கவர்ந்...