Posts

Showing posts from April, 2018

பத்திரிக்கை செய்தி வெளியீடு.

பத்திரிக்கை செய்தி வெளியீடு. விடுநர் விஞ்ஞானி க.பொன்முடி, சென்னை பெறுனர் ஆசிரியர், நாளிதழ்,வார இதழ்,தொலைக் காட்சி. சென்னை. வணக்கம்! பொருள்- எரிந்து முடிந்த நட்சத்திரதின் மையத்தில் கிரகம் உருவாகுகிறது என்பதை நான் உலகுக்குத் தெரிவித்த பிறகு,அதே விளக்கத்தை ஆஸ்திரேலியா நாட்டு ஆராய்ச்சியாளர் தெரிவித்தது தொடர்பாக. நான், கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் பூமியின் தோற்றம் மற்றும் இயக்கம் குறித்த தகவல்களின் அடிப்படையில்,ஆய்வு செய்து கொண்டு இருக்கிறேன். எனது ஆய்வில்,எரிந்து முடிந்த நட்சத்திரங்களின் மையத்தில் கிரகங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்தது. அது குறித்த தகவலை, நான், 2007 ஆம் ஆண்டு,விகடன் பிரசுரம் வெளியிட்ட’எனது ‘பூமிப் பந்தின் புதிர்கள்’’புத்தகத்திலும்,2009 ஆம் ஆண்டு மின்னஞ்சல் மூலம் ஒரு விஞ்ஞானிக்கும்,தெரிவித்தேன். 2010 ஆம் ஆண்டு இணையத்திலும் பதிவு செய்தேன்,அந்தப் பதிவானது,கூகிள் பட்டியலிலும் காணக் கிடைக்கிறது. இந்த நிலையில்,கிரகங்களின் தோற்றம் குறித்து நான் கூறிய விளக்கத்தையே,ஆஸ்திரேலிய நாட்டு ஆராய்ச்சியாளர்கள்,ஊடகங்களுக்குத் தங்களின் விளக்கமாகத் தெரிவித்

புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்தவைகள்.

Image
ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் புவியியல் வல்லுனர்களால்,கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில், விளக்கம் கூற இயல வில்லை. கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின், புதைப் படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும்,தீவுகளிலும், காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும்,அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,கூறப் படும் விளக்கமானது,ஒரு தவறான விளக்கம் என்பது தெரிய வந்துள்ளது. அத்துடன், கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின், புதைப் படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும்,தீவுகளிலும், காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,கடல் மட்டமானது,பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததுடன்,அந்தக் காலத்தில்,கண்டங்களுக்கு இடையில்,காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததுடன்,அதன் வழியாக விலங்கினங்களின் போக்குவரத்து நடை பெற்று இருப்பதே காரணம் என்பது தெரிய வந்துள்ளது. அத்துடன்,பூமிக்கு அடியில்,எரிமலை வெடிப்புகள் ஏற்ப

எனது புத்தகத்தின் அத்தியாயங்கள் பற்றிய ஒரு அறிமுகம்.

எந்த ஆதாரத்தை முதலில் கூறுவது எந்த ஆதாரத்தை இரண்டாவதாகக் கூறுவது என்று நீண்ட நாளாகவே ய ோசித்து ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். 000000000000000000000000 முதல் அத்தியாயத்தில்... 000000000000000000000000 தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு ,பூமி வெப்பமடைந்து கொண்டு இருபதாகவும்,அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கமானது ஒரு தவறான விளக்கம் என்பதை எடுத்துக் காட்ட... கடந்த காலத்தில், குறிப்பாக ஒரே கால கட்டத்தில், கடல் மட்ட உயர்வால் பவள உயிரினங்கள் இறந்து புதை படிவமாகி இருப்பதைப் பற்றியும், அதே கால கட்டத்தில்,பனிப் பொழிவால் ஆர்க்டிக் பகுதியில் பனி யானை இனம் அழிந்தது பற்றியும் தெரிவித்து அதன் அடிப்படையில் கடல் மட்ட உயர்வுக்கு பனி உருகுதல் காரணம் என்று கூறப் படும் விளக்கம் தவறு, என்று தெளிவு படுத்தி இருக்கிறேன். 00000000000000000000000000 00 இரண்டாவது அத்தியாயத்தில்... 00000000000000000000000000 00 கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் தீவுகள் பற்றிய ஆராய்ச்சியாளர்களின் கண்டு

பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.ஆய்வறிக்கை.

Image
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ ---- அத்தியாயம் ஒன்று --- ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.ஆய்வறிக்கை. எகிப்து ராணி கிளியோபாட்ரா வாழ்ந்த அலெக்சாண்ட்ரியா நகரம் , தற்பொழுது கடலுக்கு அடியில் இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பதைத் தொல் பொருள் ஆராய்ச ்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.   அதே போன்று , சென்னைக்கு அருகில் உள்ள மாமல்ல புரத்தில் கூட , எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்களால் கட்டப் பட்ட கோவில்கள் , இன்று கடலுக்கு அடியில் இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பதைத் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். இதன் மூலம், கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பது,நிதர்சனமான உண்மை என்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. ஆனாலும் , தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு கூறப் படும் விளக்கமானது , தவறு என்பது , புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாகத் தொழிற் சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகையில் இருக்கும் கரிய மில வாயுக்கள் வளி மண்டலத்தில் கலப்பதால் , பூமியின் வெப்ப நிலை உயர்ந