பூமிக்கு அடியில் எரிமலை வெடிப்புகள் ஏற்படுவதால் நில அதிர்ச்சி, சுனாமி ஏற்படுகிறது.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

தற்பொழுது கண்டங்களை சுமந்த படி கண்டத் தட்டுகள் என்று அழைக்கப் படும் பாறைத் தட்டுகள் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று நம்பப் படுகிறது.
ஆனால் பூமிக்கு அடியில் உள்ள எரிமலைகள் வெடித்துக் குமுறுவதால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக பூமிக்கு அடியில் புதிதாக எரிமலைகள் உருவாகி உயரும் பொழுது எரிமலைக்கு மேலே எரிமலையை சுற்றியுள்ள தரைபகுதியும் சிறிது உயர்ந்து இறங்கும் பொழுது, எரிமலையைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வரப்பு வரைந்ததைப் போன்று சில சென்டி மீட்டர் ஏற்றத் தாழ்வுடன் மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அதே போன்று ஹைத்தி தீவிலும் ஜப்பானின் ஹோண்சு தீவிலும் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் எரிமலைப் பகுதியில் ஏற்படுவதைப் போலவே, பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் ஏற்றத் தாழ்வுடன் மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும், தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்துக் குமுறியதாலேயே ஹைத்தி தீவிலும் ஹோண்சு தீவிலும் சுனாமி உருவாகி இருக்கிறது.
இதே போன்று கடந்த 2004 ஆம் ஆண்டு தெற்காசிய சுனாமியின் பொழுது சுமத்ரா தீவுக்கு அருகில் உள்ள சிமிழு தீவானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி உயர்ந்து காணப் பட்டது.அதே சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு கடுமையான நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
எனவே தெற்காசிய சுனாமியும் ,பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலை வெடித்ததாலேயே உருவாகி இருக்கிறது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.