சுனாமியை உருவாக்கிய புவியடி எரிமலை வெடிப்புகள் விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

பூமிக்கு அடியில் எரிமலை வெடிப்புகள் ஏற்படுவதால் நில அதிர்ச்சி, சுனாமி ஏற்படுகிறது.
தற்பொழுது கண்டங்களை சுமந்த படி கண்டத் தட்டுகள் என்று அழைக்கப் படும் பாறைத் தட்டுகள் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று நம்பப் படுகிறது.
ஆனால் பூமிக்கு அடியில் உள்ள எரிமலைகள் வெடித்துக் குமுறுவதால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக பூமிக்கு அடியில் புதிதாக எரிமலைகள் உருவாகி உயரும் பொழுது எரிமலைக்கு மேலே எரிமலையைச் சுற்றியுள்ள தரைபகுதியும் சிறிது உயர்ந்து இறங்குகிறது.
அப்பொழுது எரிமலையைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வரப்பு வரைந்ததைப் போன்று சில சென்டி மீட்டர் ஏற்றத் தாழ்வுடன் மேடு பள்ள வளையங்கள் உருவாகிறது.
இவ்வாறு எரிமலையைச் சுற்றிலும் உருவாகும் மேடு பள்ள வளையங்கள் சில சென்டி மீட்டர் உயரத்துடன் உருவாகுவதுடன் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு உருவாகுவதால் சாதாரணமாகத் தரையில் இருந்து பார்ப்பதற்கு தெரிவதில்லை.ஆனால் தரை மட்ட மாறுபாடுகளைத் துல்லியமாகப் பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்களில் தெளிவாகப் புலனாகிறது.
குறிப்பாக ஒரு செயற்கைக் கோளானது ஒரு எரிமலைக்கு மேலே பல முறை பறந்து செல்லும் பொழுது, அந்த செயற்கைக் கோளில் இருந்து ரேடியோ கதிர்கள் தரையை நோக்கி அனுப்பப் படுகிறது.அந்த ரேடியோ கதிர்கள் தரையில் உள்ள மேடு பள்ளங்களில் பட்டு எதிரொளிக்கப் பட்டு, மறுபடியும் செயற்கைக் கோளை வந்தடையும் பொழுது, செயற்கைக் கோளில் உள்ள கருவிகளில் தரையின் மேடுபள்ள விவரங்கள் பதிவு செய்யப் படுகின்றன.
அதாவது ஒரு எரிமலை உயர்வதற்கு முன்பு பதிவு செய்யப் பட்ட செயற்கைக் கோள் கதிர் வீச்சு படத்தையும், எரிமலை உயர்ந்து இறங்கிய பிறகு பதிவு செய்யப் பட்ட தரை மட்ட மாறு பாட்டுப் படத்தையும், கணிப் பொறி மூலம் ஒரே படமாக தொகுக்கும் பொழுது இடைப் பட்ட காலத்தில் எரிமலையும் எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் எவ்வளவு உயரம் உயர்ந்து இறங்கியது போன்ற விவரங்கள் படங்களில் பல்வேறு நிறங்களாக பதிவாகின்றன.
இவ்வாறு ரேடியோ கதிர் வீச்சு முறையில் எடுக்கப் பட்ட தரை மட்ட மாறு பாட்டுப் படங்களில், எரிமலையை சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் ஏற்றத் தாழ்வுடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதே முறையில் நில அதிர்ச்சி ஏற்பட்ட இடங்களில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்பும், நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகும் எடுக்கப் பட்ட தரை மட்ட மாறுபாட்டு செயற்கைக் கோள் ரேடியோ கதிர் வீச்சுப் படங்களை கணிப் பொறி மூலம் ஒரே படமாகத் தொகுக்கப் பட்ட பொழுது, எரிமலையை சுற்றி உருவாகியதைப் போலவே நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் ஏற்றத் தாழ்வுடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக ஹைத்தி தீவிலும் ஜப்பானின் ஹோண்சு தீவிலும் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது , நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் எரிமலைப் பகுதியில் ஏற்படுவதைப் போலவே, பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் ஏற்றத் தாழ்வுடன் மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும், தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் ரேடியோ கதிர் வீச்சுப் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்துக் குமுறியதாலேயே, ஹைத்தி தீவிலும் ஹோண்சு தீவிலும் சுனாமி உருவாகி இருக்கிறது.
இதே போன்று கடந்த 2004 ஆம் ஆண்டு தெற்காசிய சுனாமியின் பொழுது சுமத்ரா தீவுக்கு அருகில் உள்ள சிமிழு தீவானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி உயர்ந்து காணப் பட்டது.அதே சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு கடுமையான நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
எனவே தெற்காசிய சுனாமியும், பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலை வெடித்ததாலேயே உருவாகி இருக்கிறது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.