Posts

Showing posts from 2022

பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.

ஒரு பலூனைப் போன்று பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது. நானூறு ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பியர்கள் ஓரளவு திட்டமான உலக வரை படத்தை வரைந்த பொழுது அதில் ,அட்லாண்டிக் பெருங் கடலுக்கு மேற்கில் உள்ள தென் அமெரிக்கக் கண்டத்தின் கிழக்கு கடற் கரை ஒர பகுதியும் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு கிழக்குப் புறம் உள்ள ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்கு கடற் கரை ஒர பகுதியும் ஒன்றில் ஒன்று பொருந்தி இருப்பதைக் கவனித்தனர். இந்த வினோத அமைப்பானது ''மேட்சிங் கோஷ்ட் லைன்'' என்று அழைக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் ஒன்றாக இணையானது இருந்திருக்க வேண்டும் என்று கருதினர். அதன் பிறகு 1912 ஆம் ஆண்டு ,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அல்பிரட் வெக்னர் என்ற ஆராய்ச்சியாளர் ,இந்த இரண்டு கண்டங்களிலும் .இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடற் பகுதியில் வாழ்ந்த,மெசோ சாரஸ் என்று அழைக்கப் படும் மூன்று அடி நீளமுள்ள முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கண்டங்கள் ஒன்றாக இணைந்து இருந்திருக

சுனாமிக்கு காரணம் கண்டு பிடித்து இருக்கிறேன்.

இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு உயிரிழப்பை ஏற்படுத்திய சுனாமிக்கு காரணம் கண்டு பிடித்து இருக்கிறேன். கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனிப் பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது,அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,அதே போன்று ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு நகர்ந்து செல்லும் பொழுது சுனாமி உருவாகுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறிக் கொண்டு இருக்கும் நிலையில், முப்பத்தி ஐந்து ஆண்டு காலத்தில்,உலக அளவில் ஏற்பட்ட லட்சக் கணக்கான நில அதிர்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்... தனித் தனிக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததை எடுத்துக் காட்டி அதன் அடிப்படையில் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதை நிரூபித்து இருக்கிறேன். அதே போன்று, கண்டங்களும் நிலையாக இருப்பதை எடுத்துக் காட்டி இருக்கிறேன். அதே ப

பூமி பற்றிய மூன்றாவது முக்கிய கண்டு பிடிப்பு.

பூமி பற்றிய மூன்றாவது முக்கிய கண்டு பிடிப்பு. முதல் கண்டு பிடிப்பு. பூமி தாட்டையானது. இல்லை, பூமி ஒரு கோளம் - அரிஸ்டாட்டில். இரண்டாவது முக்கிய கண்டு பிடிப்பு. சூரியன் சந்திரன் மற்றும் கிரகங்கள் எல்லாம் பூமியை சுற்றிக் கொண்டு இருக்கின்றன. இல்லை,பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனையே சுற்றிக் கொண்டு இருக்கின்றன.- கோபர் நிக்கஸ் . பூமியின் மேற்பரப்பனாது பல சில்லுகளாக உடைந்து இருக்கிறது- புவியியல் வல்லுநர்கள். இல்லை, பூமியின் மேற்பரப்பானது ஒரே தொடர்ச்சியாக இருக்கிறது. விஞ்ஞானி.க .பொன்முடி. கண்டங்களானது ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்து இருக்கிறது.அதன் பிறகு பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு வந்த பாறைக் குழம்பு குளிர்ந்து இறுக்ப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைக்களை நோக்கி விலகி விரிவடைந்து நகர்ந்ததால் பூமியின் மேல் இருந்த பெருங் கண்டமானது பல்வேறு பகுதிகளாக பிரிந்து கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருக்கிறது. கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர்களின் புதை படிவங்களானது தீவுக் கண்டங்களான ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக்கா ஆகிய கண்டங்களில் காணப் படுவதற்கு இவ்வாறு

சுனாமிகளுக்கு நாசா ஏன் விளக்கம் கூற இயல வில்லை?

சுனாமிகளுக்கு நாசா ஏன் விளக்கம் கூற இயல வில்லை? தெற்காசிய சுனாமிக்கு நாசா ஏன் விளக்கம் கூற இயல வில்லை? ஒரு பிணக் கூராய்வில் கூட அடிப்படை ஆதாரம் தெளிவாக இல்லாத நிலையில் வெறும் யூகத்தில் அடிப்படையில் மரணத்திற்கான காரணம் குறித்து விளக்கம் கூறினாலே அதை ஏற்க இயலாது. இந்த நிலையில் இரண்டு லட்சத்தி முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்த தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்கு, உறுதியான ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில், முன்னுக்குப் பின் முரணாக இரண்டு விளக்கங்களை, நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருப்பது,சான்றாவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த விளக்கங்களை எப்படி அறிவியல் விளக்கமாக ஏற்க முடியும்? தெற்காசிய சுனாமி குறித்து நாசா 01.10.2005 அன்று வெளியிட்ட முதல் அறிக்கையில், இந்தியக் கண்டமானது கடல் தளத்துடன் சில சென்டி மீட்டர் நகர்ந்ததால் ,கடல் தளமானது இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் உரசிய படி தீடீரென்று நகர்ந்து சென்றதால் அந்த நில அதிர்ச்சி ஏற்பட்டதுடன்,அந்த பகுதியில் இருந்த கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவானது என்று,''டாக்டர் பெஞ்சமின் பாங் சோ

பகுதி மூன்று--- தீவுகளுக்கு விலங்கினங்கள் எப்படி சென்றன?

பகுதி மூன்று--- தீவுகளுக்கு விலங்கினங்கள் எப்படி சென்றன? எரிமலைத் தீவுகளுக்கு மண்புழுக்கள் எப்படி சென்றன? லண்டன் விலங்கியல் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் என்ற பேராசிரியர் மண் புழுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட பொழுது, அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றிலும் அமைந்து இருக்கும் பல எரிமலைத் தீவுகளுக்குச் சென்று, அந்தத் தீவுகளில் உலகில் வேறு எங்கும் காண இயலாத பல் அரிய வகை மண் புழு இனவகைகளைக் கண்டு பிடித்தார். அந்த மண் புழுக்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் மைக்ரோ ஸ்காலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள் என்று வகை படுத்தி உள்ளார். மண் புழுக்கள் தோலின் மூலம் சுவாசிக்கும் உயிரினம். காற்றில் உள்ள பிராண வாயு மண் புழுவின் தோலின் வழியாக சென்று மண் புழுவின் இரத்தத்தில் கலக்கும்.அதே போன்று மண் புழுவின் உடலில் இருந்து கரிய மில வாயு தோலின் வழியாக வெளியேறும். இதற்கு மண் புழுவின் தோல் எப்பொழுதும் ஈரப் பசையுடன் இருக்க வேண்டும். எனவேதான் மண் புழுக்கள் அதிக காற்றுள்ள இடத்தையும் வெய்யிலையும் தவிர்த்து விடுகின்றன.மலைக் காலத்திலும் இரவிலுமே மண் புழுக்கள் தரைக்கு மேல