திருத்தம் வெளியிடப் படுகிறது.

கடந்த சில ஆணடுகளுக்கு முன்பு இந்தியப் பெருங் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியில் ‘’ இரண்டு கோடி ஆண்டுகள் தொண்மையான பாறைப் படிவுகளில் ‘’ மரங்களின் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டதின் அடிப்படையில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்ததாக தெரிவித்து இருந்தேன்.
தற்பொழுது அந்த பீட பூமிதான் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியது என்றும் அந்த மரங்களின் புதை படிவங்கள் ஒன்பது கோடி ஆண்டுகள் தொண்மையான பாறைப் படிவுகளில் இருந்ததாகவும் அறிகிறேன்.
Drilling by the Joides Resolution research vessel, which traverses the seas extracting samples from beneath the sea floor, suggests that the continent, about a third the size of present day Australia, sank from sight only 20 million years ago.
"Wood fragments, a seed, spores and pollen recovered in 90 million year-old sediment from the central Kerguelen Plateau indicates that it was above sea level."
எனவே கெர்கூலியன் கடலடிப் பீட பூமியில் உள்ள புதை படிவ ஆதாரங்களின் அடிப்படையில் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது என்பதே சரியான முடிவாகும்.

இருப்பினும் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சியடைந்த குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகஸ்கர் தீவில் காணப் படுவதன் அடிப்படையில் கடல் மட்டம் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருக்கிறது என்று தெரிவித்து இருந்ததில் தவறேதும் இல்லை.

மேலும் கடல் மட்டம் இரண்டு கோடி ஆண்டுகளில் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததால்தான் பூமியின் வெப்ப நிலை குளிர்ந்து அண்டார்க்டிக் கண்டத்தில் பனி உருவானதாக தெரிவித்து இருந்ததிலும் தவறேதும் இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன் விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.