Posts

Showing posts from April, 2012
Image
இது ஊரையும் உலகையும் ஏமாற்றும் செயல் அன்றி வேறல்ல.(media release) ஊ ரையும் உலகையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் அமெரிக்க நாட்டு புவியியல் கழகத்தினர், கண்டங்கள் எல்லாம் கண்டத் தட்டுகள் என்று அழைக்கப் படும் பெரிய பாறைத் தட்டுகளின் மேல் இருந்த படி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு கண்டத் தட்டுகள் நகரும் பொழுது கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் கற்பனையாக ஒரு விளக்கத்தைக் கூறி எல்லோரையும் நம்ப வைக்கின்றனர் அமெரிக்க நாட்டு புவியியல் கழகத்தினர், ஆனால் உண்மையில் கண்டங்கள் நிலையாக இருக்கின்றன. (படம்-1)நாசா தயாரித்து வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம்) (கரீபியன் தீவுகளுக்கும் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதிக்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை) குறிப்பாக கடந்த 1963  ஆம் ஆண்டு முதல் 1998  ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில் உலகெங்கும் ஏற்பட்ட 2,00,855  நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து நாசா அமைப்பினர் ஒரு வரை படத்தை தயாரித்தனர்.(படம-

கண்டத் தட்டு நகர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று கூறுவது தவறு .விஞ்ஞானி.க.பொன்முடி.

Image
ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு மேற்கு பகுதியில் இருக்கும் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிதாக கடல் தரை உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.(படம்-1) அதனால் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் கடல் தரையின் மேல் இருந்தபடி ஆப்பிரிக்கக் கண்டம் கிழக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.இந்த நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் இருக்கும் இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் புதிதாக கடல் தரை உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.(படம்-2) இது போன்ற முட்டாள்தனமான விளக்கங்களைக் கூறுபவர்கள்தான் கண்டத் தட்டு நகர்ந்ததால்தான் சுமத்ரா தீவுப் பகுதியில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று விளக்கம் கூறுகிறார்கள்.இது சாத்தியமா?

சுனாமி ! வரும்.... ஆனால் வராது .

Image
media release (படம்-1)வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் அட்லாண்டிக் கடல் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்கவில்லை. நில அதிர்ச்சி வராது... ஆனால் வரும். வானிலை அறிக்கை போல் நில அதிர்ச்சி மற்றும் சுனாமி குறித்து அவ்வப் பொழுது வெளியிடப் படும் கணிப்புகள் பொய்யாகின்றன. இதனால் மக்களிடையே பெரும் பதற்றமும் பீதியும் ஏற்படுகிறது. ஏன் இவ்வாறு நில அதிர்ச்சியும் சுனாமியும் முன்கூட்டியே கணிக்க இயலாமல் கண்ணா மூச்சி காட்டுகிறது? தற்பொழுது நில அதிர்ச்சி மற்றும் சுனாமி குறித்து முன் கூட்டியே கணிக்க இயலாமல் இருப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் மன்னிக்க கருத்தியல்வாதிகள் கொண்டு இருக்கும் தவறான கருத்தே காரணம். குறிப்பாக கண்டங்கள் எல்லாம் கண்டங்களை விட பெரியதாக இருக்கும் பாறைத் தட்டுகளின் மேல் இருந்த படி மெதுவாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் விளக்கம் கூறப் படுகிறது. (படம்-2)வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரி