Posts

Showing posts from May, 2009

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது. இதற்கு ஆதாரமாக இந்தியாவிற்கு தெற்கே ஏழாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் அமைந்திருக்கும் கெர்கூலியன் என்ற எரிமலைத் தீவில் காணப் படும் மண்புழுக்கள் விளங்குகின்றன. மண்ணுக்கு அடியில் வாழும் மண்புழுக்களால் நீந்தவோ பறக்கவோ இயலாது. இந்நிலையில் மற்ற நிலப் பகுதிகளில் இருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு தனிமைத் தீவீற்கு மண்புழுக்கள் தரை வழியாகவே சென்றிருக்க இயலும். ஆனால் கெர்கூலியன் தீவோ கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின் மேல் அமைந்திருக்கும் ஒரு எரிமலைத் தீவு ஆகும். இந்நிலையில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் மூழ்கி இருக்கும் அந்தக் கடலடிப் பீட பூமியின் மத்தியப் பகுதியில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்களும் விதை மற்றும் மகரந்தத் துகள்களும் இருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இதன் அடிப் படையில் அந

பாலைவனங்களில் காணப் படும் மணலை உருவார்க்கியது கடல்.

பாலைவனங்களில் காணப் படும் மணலை உருவார்க்கியது கடல். பாலைவனங்களில் கடல் உயிரினங்களின் புதைபடிவங்கள் காணப் படுகின்றன. எனவே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாலைவங்கள் கடல் மட்டத்திற்கு அடியில் இருந்திருக்கின்றன. அப்பொழுது கடல் மட்டத்திற்கு மேலே இருந்த பாறைகளை கடல் நீர் அரித்ததால் மணல் உருவானது. அவைகள் காற்று மழை மற்றும் .ஆறினாலும் கூட கடலுக்கு அடியில் கொண்டுவரப் பட்டன. அதன் பிறகு நிலப் பகுதிகள் கடல் மட்டத்திற்கு மேலே உயர்ந்ததால் இன்று நிலத்தின் மேல் மணல் வெளி காணப் படுகிறது. இதற்கு ஆதாரமாக ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியிலும், வட கிழக்குப் பகுதியில் எகிப்திலும், தென்மேற்குப் பகுதியில் நமீபியாப் பாலைவனப் பகுதியிலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன. விஞ்ஞானி.க.பொன்முடி.

ஏன் நிலப் பகுதியை விட கடல் பகுதியின் பரப்பளவு அதிகமாக இருக்கிறது?

ஏன் நிலப் பகுதியை விட கடல் பகுதியின் பரப்பளவு அதிகமாக இருக்கிறது? பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாறைக் குழம்புக் கோளமாக இருந்த நம் பூமி படிப்படியாகக் குளிர்ந்து. இதனால் முதலில் புவி ஓடும் அதன் பிறகு உள் அடுக்குகளும் உருவானது. பாறைக் குழம்பு குளிர்ந்து இருகிய பொழுது அதில் இருந்து நீரும் மற்ற வாயுக்களும் பிரிந்து வெளியேறியது. பாறைக் குழம்பில் இருந்து சூடான நீரும் வாயுக்களும் வெளியேறியதால் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டாக உருவானது. அடர்த்தி அதிகமான திரவத்தில் அடர்த்தி குறைந்த பொருள் மிதக்கும்.எனவே பூமிக்கு அடியில் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் உருவான அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்தது. பூமிக்கு அடியில் உருவான புதிய பாறைத் தட்டுகள் உயர்ந்ததால் மலைகள் உருவாகின.உயராத பகுதிகள் பள்ளத் தாக்குகளாக உருவாகின. நிலப் பகுதிகள் உயர்ந்தன.ஆனால் நிலப் பகுதிகளைப் போன்று நீரால் உயர இயலாது.நீரின் பரவும் தன்மையால்,முதலில் நீர் பக்கவாட்டில் பரவிய பிறகு தான் மேல் நோக்கி உயர முடியும்.எனவேதான் நிலப் பகுதிகளை விட கடல் பகுதி அதிகமாக இருக்கிறது. விஞ்ஞானி.க.பொன்முடி.