Posts

Showing posts from October, 2012

ரேடான் வாயுக் கசிவு மூலம் நில அதிர்ச்சி ஏற்படப் போவதை அறிதல் .விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Image
japan radon.jpg (Satellite images showing changes in the heat of the atmosphere above the epicentre of the March 11 earthquake between March 1 and March 12. The total electron content in the ionosphere increased dramatically before the quake Read more: http://www.dailymail.co.uk/sciencetech/article-1388789/Japan-earthquake-Atmosphere-epicentre-heated-rapidly-days-disaster.html#ixzz2AfcE3t00 Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook ) ரேடான் என்பது நிறமற்ற மணமற்ற கதிரியக்கத் தன்மையுள்ள வாயு.மண்ணில் உள்ள யுரேனியம் மற்றும் தோரியம் போன்ற தனிமங்கள் சிதைவுறும் பொழுது ரேடான் வாயு உற்பத்தியாகி வளி மண்டலத்தில் கலக்கிறது. இந்த வாயு கதிரியக்கத் தன்மையை கொண்டிருப்பதால் கதிரியக்கத்தை அறியும் கருவிகள் மூலம் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் ரேடான் வாயுக் கசிவு சிறிய அளவில் ஏற்பட்டாலும் கூட கண்டு பிடித்து விட முடியும். எரிமலைக்குள் பாறைக் குழம்பு சேரும் பொழுது எரிமலைப் பகுதியில் அதிக அளவில் ரேடான் வாயு வெளிப் பட்டு இருப்பது ஆய்வில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. முக்க

பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததால் இத்தாலி நாட்டில் நில அதிர்ச்சி ஏற்பட்டது. விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள லா அகுய்லா என்ற நகரில் கடுமையான நில அதிர்ச்சி ஏற்பட்டது. அப்பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் எரிமலைகள் உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தரைப் பகுதியும் உயர்ந்து இறங்குவதால் உருவாகும் வரப்பு போன்ற வளைய வடிவ மேடுகள் உருவாகி இருப்பதை தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அத்துடன் இத்தாலியில் நில அதிர்ச்சி ஏற்பட்ட நகரில் எரிமலைகளில் இருந்து வெளிப் படும் ரேடான் வாயு வெளிப் பட்டு இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதால் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே இத்தாலி நாட்டில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது நிரூபணமாகிறது.

இத்தாலி நில அதிர்ச்சி... நீயா ? நானா ?

Image
For media ( இந்தக் கட்டுரை எனது ஆய்வு எல்லைக்குள் இல்லை என்றாலும் எனக்குத் தெரிய வந்த சில விபரங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.) கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆறாம் நாள் இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் லா அகுய்லா நகரில் ஏற்பட்ட நில அதிர்ச்சியால் நூற்றுக் கணக்கானோர் இறந்தனர். அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்பு ‘’பயப்பட ஒன்றுமில்லை’’ என்று தொலைக் காட்சி நிருபருக்கு பேட்டியளித்த பெர்னார்டோ டி பெர்நார்டினிஸ் என்ற விஞ்ஞானிக்கு இத்தாலி நீதி மன்றம் ஆறு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து நான் பல மாதங்களுக்கு முன்பு இணையதளங்களில் படித்தேன்.ஆனால் இந்த விவகாரம் எனது ஆய்வு எல்லைக்குள் வராதாதால் எழுத வில்லை. இருப்பினும் அறிவியல் ஆய்வுகளில் மனித மனம் போட்டி பொறாமைகளில் சிக்கி எப்படியெல்லாம் செயல்பட வைக்கிறது என்பதற்கு பெர்னார்டோ டி பெர்நார்டினிசின் கதை ஒரு முன்னுதாரணம். (கோர்ட்டில் பெர்னார்டோ டி பெர்நார்டினிசின்) அவர் செய்த குற்றம் என்ன? அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே இத்தாலியில் அங்கும் இங்குமாக சிறிய அளவ

சுனாமி ஆதாரபூர்வ விளக்கமும், ஆதாரமற்ற கற்பனையும்.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.( for media )

Image
பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்ததால்தான் ஹைத்தி தீவிலும், ஹோண்சு தீவிலும் சுனாமி ஏற்பட்டு இருப்பது ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது. ஆதாரம். தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள். ( ஆரிகன் மாகாணத்தில் பூமிக்கு அடியில் புதிதாக உருவாகிக் கொண்டு இருக்கும் எரிமலையைச் சுற்றி உருவாகி இருக்கும் வரப்பு போன்ற வளையங்கள் ) எரிமலைக்குள் பாறைக் குழம்பு சேர்ந்து உயரும் பொழுதும்,அதே போன்று ஒரு எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறி இறங்கும் பொழுதும் எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் பல கிலோமீட்டர் சுற்றளவிற்கு உயர்ந்து இறங்குவதால், எரிமலையை சுற்றி வரப்பு போன்று வளைய வடிவ மேடுகள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறு பாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதே போன்று ஹைத்தி தீவிலும் ஹோண்சு தீவிலும் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சியின் பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வரப்பு போன்ற வளைய வடிவ மேடுகள் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு உருவாகி இருப்பதும் தரை மட்ட மாறு பாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோ

புதிர் போடும் புதை படிவங்கள்.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Image
axberg தற்பொழுது பல்லாயிரம் அடி உயரத்திற்கு பனியால் மூடப் பட்டு இருக்கும் துருவப் பகுதிகளில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த காடுகள் இருந்திருப்பதுடன், அவற்றில் முதலை ஆமை போன்ற வெப்ப மண்டலப் பகுதிகளில் வாழும் விலங்கினங்கள் வாழ்ந்திருப்பதும் புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. ஆக்சல் பெர்க் என்று அழைக்கப் படும் தீவானது வடதுருவப் பகுதியில் இருந்து எண்ணூறு கிலோ மீட்டர் தென் திசையில், ஆர்க்டிக் வளையம் என்று அழைக்கப் படும் பகுதியில் அமைந்து இருக்கிறது. வடகோளப் பகுதியில் அறுபத்தி ஆறரை டிகிரி அட்ச ரேகை வரையுள்ள வட்டப் பகுதியானது ஆர்க்டிக் வளையம் என்று அழைக்கப் படுகிறது. சூரியனை வலம் வரும் பூமியின் பூமத்திய ரேகைப் பகுதியானது சூரியனுக்கு பக்கமாக இருப்பதால் சூரிய ஒளியானது பூமத்திய ரேகைப் பகுதியில் நேராக படுகிறது. ஆனால் துருவப் பகுதிகளில் சாய்வாகப் படுகிறது.அதனால் துருவப் பகுதிகளில் வெப்ப நிலை குறைவாக இருக்கிறது.அத்துடன் பூமத்திய ரேகைப் பகுதியில் சூரியன் உச்சி வானத்தில் தோன்றுவதைப் போன்று துருவப் பகுதிகளில் சூரியன் உச்சிப் பகுதிக்கு செல்வதில்லை. etilt.jpg

டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Image
contin.jpg பல்வேறு கண்டங்களில் டைனோசர் போன்ற தொல் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்து பின்னர் பிரிந்து நகர்ந்திருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது. ஆனால் தற்பொழுது கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏறபடாததன் அடிப்படையில் கண்டங்கள் நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் நேரத்தில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில் ,எண்ணெய் எடுப்பதற்காக கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைத் துண்டுகளில், இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் பரவலாக வாழ்ந்து மடிந்த பிளேட்டியோ சாராஸ் என்ற டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஜெர்மன் நாட்டு தொல் விலங்கியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருகின்றனர். எனவே ஆஸ்திரேலியா அண்டார்க்டிக் போன்ற தீவுக் கண்டங்களில் டைனோசரின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு டைனோசர் காலத்தின் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததே காரணம். deepdino1.jpgநார்வே நாட்டுக் அருகில் கடலுக்கு அடியில் இருந்து

சுனாமியை உருவாக்கிய புவியடி எரிமலை வெடிப்புகள் விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

பூமிக்கு அடியில் எரிமலை வெடிப்புகள் ஏற்படுவதால் நில அதிர்ச்சி, சுனாமி ஏற்படுகிறது. தற்பொழுது கண்டங்களை சுமந்த படி கண்டத் தட்டுகள் என்று அழைக்கப் படும் பாறைத் தட்டுகள் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று நம்பப் படுகிறது. ஆனால் பூமிக்கு அடியில் உள்ள எரிமலைகள் வெடித்துக் குமுறுவதால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக பூமிக்கு அடியில் புதிதாக எரிமலைகள் உருவாகி உயரும் பொழுது எரிமலைக்கு மேலே எரிமலையைச் சுற்றியுள்ள தரைபகுதியும் சிறிது உயர்ந்து இறங்குகிறது. அப்பொழுது எரிமலையைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வரப்பு வரைந்ததைப் போன்று சில சென்டி மீட்டர் ஏற்றத் தாழ்வுடன் மேடு பள்ள வளையங்கள் உருவாகிறது. இவ்வாறு எரிமலையைச் சுற்றிலும் உருவாகும் மேடு பள்ள வளையங்கள் சில சென்டி மீட்டர் உயரத்துடன் உருவாகுவதுடன் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு உருவாகுவதால் சாதாரணமாகத் தரையில் இருந்து பார்ப்பதற்கு தெரிவதில்லை.ஆனால் தரை மட்ட மாறுபாடுகளைத் துல்லியமாகப் பதிவு செய்யும் செயற்கைக் க

பூமிக்கு அடியில் எரிமலை வெடிப்புகள் ஏற்படுவதால் நில அதிர்ச்சி, சுனாமி ஏற்படுகிறது.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

தற்பொழுது கண்டங்களை சுமந்த படி கண்டத் தட்டுகள் என்று அழைக்கப் படும் பாறைத் தட்டுகள் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று நம்பப் படுகிறது. ஆனால் பூமிக்கு அடியில் உள்ள எரிமலைகள் வெடித்துக் குமுறுவதால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக பூமிக்கு அடியில் புதிதாக எரிமலைகள் உருவாகி உயரும் பொழுது எரிமலைக்கு மேலே எரிமலையை சுற்றியுள்ள தரைபகுதியும் சிறிது உயர்ந்து இறங்கும் பொழுது, எரிமலையைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வரப்பு வரைந்ததைப் போன்று சில சென்டி மீட்டர் ஏற்றத் தாழ்வுடன் மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அதே போன்று ஹைத்தி தீவிலும் ஜப்பானின் ஹோண்சு தீவிலும் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் எரிமலைப் பகுதியில் ஏற்படுவதைப் போலவே, பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் ஏற்றத் தாழ்வுடன் மேடு பள்ள வளையங்கள் உருவாகி இரு

கண்டத் தட்டு நகர்ச்சி விளக்கம் ஏற்கத் தகுந்தல்ல.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Image
holmes Sir Arthur Holmes ஒரே வகையான விலங்குகள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்கள் பல்வேறு கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு முன்னொரு காலத்தில் ஒன்றாக இருந்த கண்டங்கள் பின்னர் பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற விளக்கத்தை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் 1912 ஆம் ஆண்டு கூறினாலும் 1930 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரையிலும் அவரின் விளக்கம் பெரும்பாலான புவியியல் வல்லுனர்களால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை. ஆனாலும் விலங்கினங்கள் எவ்வாறு பெருங் கடல் பகுதியைக் கடந்து மற்ற கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் பரவின என்பதற்கு உறுதியான விளக்கம் கூறப் படவில்லை.கடலில் மிதக்கும் மரக்கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம் விலங்கினங்கள் மற்ற கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் பரவியிருக்கலாம் என்று கருதப் பட்டது. ஆனால் நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது மலைகள் எப்படி உருவாகின்றன போன்ற கேள்விகள் விடை தெரியாத நிலையில் இருந்தது. இந்த நிலையில் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஆர்தர் ஹோம்ஸ் என்ற புவியியலாளர் 1919  ஆம் ஆண்டு ஒரு கருத்தாக்கத்தை முன்மொழிந்தார்.   ocf3.jpg அதாவது பூமிக்கு அடியில் இர

எரிமலைச் செயல்பாடுகளே நில அதிர்ச்சிக்குக் காரணம்.விஞ்ஞானி.கணபதி பொன்முடி

Image
( டாக்டர் சேத் ஸ்டெயின் ) டாக்டர் ஆல்பிரட் வெக்னர் மற்றும் டாக்டர் ஹாரி ஹெஸ் ஆகியோரின் விளக்கங்கள் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தாமல் ஏற்றுக் கொள்ளப் பட்டதால் நில அதிர்ச்சி குறித்த கேள்விகளுக்கு விளக்கம் கூற இயலாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக கண்டங்களை சுமந்த படி கண்டத் தட்டுகள் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படும் பொழுது கண்டங்களுக்கு இடையில் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று விளக்கம் கூறப் படுகிறது. ஆனால் கண்டங்களின் மத்தியப் பகுதியில் ஏன் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்ற கேள்விக்கு கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தாக்கத்தின் அடிப்படையில் விளக்கம் கூற இயலவில்லை. இது குறித்து கடந்த 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இல்லினாய்ஸ் நகரில் உள்ள நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சேத் ஸ்டெயினை ஆசிரியராகக் கொண்டு அமெரிக்க புவியியல் கழகம் வெளியிட்ட ‘’ கண்டங்களின் உள்பகுதி நில அதிர்ச்சிகள் பற்றிய அறிவியல் குழப்பங்கள் மற்றும் கொள்கை விவகாரங்கள் ‘’ என்ற தலைப்பில் ( Continental Intraplate Earthquakes: Scie

ஒரு கதையின் கதை-விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Image
லிஸ்ட்ரோசாராஸ்lys1.jpg ஜெர்மனியின் மார் பர்க் பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் ஒரு நாள் அந்த பல்கலைக் கழகத்தில் ஆசிரியராக பணி புரியும் கால நிலை இயல் வல்லுநர் டாக்டர் ஆல்பிரட் வெக்னர் தற்செயலாக ஒரு ஆய்வுக் கட்டுரையை படித்தார். அந்த கட்டுரையில் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களில் ஒரே வகையான விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்கள் இருப்பது பற்றி தெரிவிக்கப் பட்டு இருந்தது. அத்துடன் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களை இணைக்கும் வகையில் ஒரு காலத்தில் தற்காலிக நிலப் பாலம் ஒன்று இருந்திருக்கலாம் என்றும் பிறகு காலப் போக்கில் அந்த தற்காலிக நிலப் பாலம் கடலில் மூழ்கி இருக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டு இருந்தது. வெக்னருக்கு அந்த விளக்கம் திருப்திகரமான விளக்கமாகப் பட வில்லை. குறிப்பாக அவர் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களின் ஓரப் பகுதிகள் ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்று ஒன்றுக் கொன்று இணையாக இருப்பதைக் கவனித்தார். எனவே முன் ஒரு காலத்தில் அந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் பிறகு பிரிந்

டாக்டர் ஆல்பிரட் வெக்னரின் விளக்கம் ஏற்கத் தகுந்ததல்ல.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

ஸ்பிட்ஸ் பெர்ஜன் தீவானது வட துருவப் பகுதியில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் ஆர்க்டிக் வளையப் பகுதியில் அமைந்து இருக்கிறது.ஆனால் அந்தத் தீவில் பல கோடி ஆண்டுகள்தொண்மையான வெப்ப மண்டலத் தாவரங்களின் புதை படிவங்கள் காணப் படுகிறது. இதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பிட்ஸ் பெர்ஜன் தீவானது வெப்பமான கால நிலை நிலவும் பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு அந்தத் தீவானது வடக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்றும், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர் என்ற கால நிலை இயல் வல்லுநர் ஒரு விளக்கத்தைக் கூறினார். ஆனால் தற்பொழுது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் வெப்பமான கால நிலை நிலவியிருப்பதாக அப்பகுதியில் உள்ள ஆக்சல் ஹைபெர்க் மற்றும் எல்ஸ்மெர் தீவுகளில் செம்மரக் காடுகளின் புதை படிவங்கள் மற்றும் முதலை, ஆமை போன்ற வெப்ப மண்டலத்தில் வாழும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் பட்டத்தின் அடிப்படையில் புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து இருகின்றனர். எனவே ஆர்க்டிக் பகுதியில் அமைந்து இர

புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்த பூமியின் கடந்த காலம் .விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Image
lost worl mark இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கு இடையில் நிலத் தொடர்பு இருந்திருக்கிறது.அதன் வழியாக விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கின்றன. அத்துடன் பூமியும் தன் சுழல் அச்சில் தற்பொழுது இருப்பதைப் போல் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்திராமல் நேராக இருந்ததால் பூமத்திய ரேகைப் பகுதியில் ஏற்படுவதைப் போன்றே துருவப் பகுதிகளில் பகலும் இரவும் கொண்ட நாட்கள் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு துருவப் பகுதிகளில் கூட வெப்ப மண்டலக் காடுகள் இருந்திருக்கின்றன.அதில் வெப்ப மண்டல பிரதேசத்தில் வாழும் விலங்கினங்களும் வாழ்ந்திருக்கின்றன. இந்த நிலையில் பூமிக்கு அடியில் இருந்த எரிமலைகளில் இருந்து வெளிப்பட்ட நீராவி குளிர்ந்ததால் உருவான நீர், சுடு நீர் ஊற்று மூலம் வெளியேறி கடலில் கலந்ததால் கடல் மட்டம் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்தது. கடல் மட்டம் உயர்ந்ததால் கண்டங்கள் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு