Posts

Showing posts from January, 2015

துருவப் பகுதிகளில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவது ஏன் ? விளக்கம்.

Image
ala10.jpeg http://phenomena.nationalgeographic.com/2013/05/06/dinosaurs-in-the-dark/ ஊர்வன வகை விலங்கினத்தைச் சேர்ந்த டைனோசர்கள்,முட்டைகளை இடுவதன் மூலம் இனப் பெருக்கம் செய்கின்றன.ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொறிவதற்கு முப்பது சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.ஆனால் கடுங் குளிர் நிலவும் அறுபத்தி ஆறரை டிகிரி அட்ச ரேகைப் பகுதியான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,வட அமெரிக்கக் கண்டத்தின் , வட பகுதியில் உள்ள,அலாஸ்காவின் கொல் வில்லி ஆற்றுப் பகுதியில் டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இப்பகுதியில் ஆண்டு சராசரி வெப்ப நிலை மைனஸ் இருபது டிகிரி.எனவே நிச்சயம் உறை பனி வெப்ப நிலையில் டைனோசர்களின் முட்டைகள் பொறிந்து இருக்க சாத்தியம் இல்லை.எனவே டைனோசர்கள் காலத்தில் ஆர்க்டிக் வளையப் பகுதியில் வெப்ப நிலை அதிகமாக இருந்திருப்பது,அலாஸ்கா பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.அதே போன்று யானைக் கூட்டத்தை விட அதிக அளவில் தாவரங்களை உண்ணக் கூடிய டைனோசர்களின் கூட்டதிற்கு உணவளிக்கக் கூடிய அளவுக்கு,ப

ஆறாவது பேரழிவு

Image
mex10.jpg mex8.jpg mex4.jpg ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்தது ஏன்? என்பது குறித்து இன்று வரை ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.காரணம் மீண்டும் அது போன்ற ஒரு பேரழிவு வருமா? என்பதே. mex6 புதை படிவ ஆதாரங்களின் மூலம் இது வரை ஐந்து முறை பேரழிவுகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.இதற்கு முன்பு பல முறை பேரழிவுகள் ஏற்பட்டதால்,மறுபடியும் பேரழிவுகள் ஏற்படும் என்பது எதிர்பார்க்கப் படுகிறது.ஆனால் அந்த ஆறாவது பேரழிவு எப்படிப் பட்டதாக இருக்கும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது. http://www.bbc.co.uk/nature/extinction_events http://en.wikipedia.org/wiki/Extinction_event குறிப்பாக பூமியில்  கோடிக் கணக்கான ஆண்டு காலம் வாழ்ந்த விலங்கினங்கள் ,முற்றாக அழிந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.உதாரணமாக மல்டி ட்யூபர்குலேட் என்று அழைக்கப் படும் முயல் போன்ற மூதாதை கொறித்துண்ணி வகை விலங்கினங்கள் பத்து கோடி ஆண்டு காலம் இந்த பூமியில் வாழ்ந்த பிறகு ,முற்றிலும் அழிந்து இருப்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.அதே போன்று பேரழிவுகளுக்குப் பிறகு ம