Posts

Showing posts from March, 2012

பத்திரிகை செய்தி வெளியீடு.

Image
சென்னை. 30.03.2012 (மேப் விளக்கம்-அட்லாண்டிக் கடல் பகுதியில் வட அமெரிக்கக் கண்டதிற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.மேப் நன்றி நாசா ) வணக்கம் , பொருள்:நில அதிர்ச்சி சுனாமி காரணம் கண்டு பிடித்ததை தெரிவித்தல். பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு ஒரு எரிமலைக்குள் நுழையும் பொழுது எரிமலையின் உயரம் அதிகரிக்கிறது.அப்பொழுது எரிமலையைச் சுற்றி உள்ள தரைப் பகுதியும் உயர்கிறது. அதே போன்று எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறும் பொழுது எரிமலையின் உயரம் குறைகிறது.அப்பொழுது எரிமலையைச் சுற்றி உள்ள தரைப் பகுதியும் இறங்குகிறது. இவ்வாறு ஒரு எரிமலை பல முறை உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் வட்ட வடிவில் உயர்ந்து இறங்குவதால் எரிமலையைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒரு சில அங்குலம் உயரத்துடன் மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன. இவ்வாறு எரிமலையைச

பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலையால் இத்தாலியில் நில அதிர்ச்சி ஏற்பட்டது.விஞ்ஞானி.க.பொன்முடி.

Image
கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் இத்தாலி நாட்டில் உள்ள லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு பூமிக்கு அடியில் இருந்த எரிமலை வெடிப்பு காரணமாக இருந்திருப்பது செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு எரிமலைக்குள் நுழையும் பொழுது எரிமலையின் உயரமும் சுற்றளவும் அதிகரிக்கிறது.அப்பொழுது எரிமலை உயர்வதுடன் எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் வட்ட வடிவில் உயர்கிறது. அதே போன்று எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறும் பொழுது எரிமலை சுருங்குகிறது.அப்பொழுது எரிமலையுடன் எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் வட்ட வடிவில் தாழ்வடைகிறது. இவ்வாறு எரிமலை உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும் வட்ட வடிவில் உயர்ந்து இறங்கும் பொழுது தரை உயர்ந்து இறங்கியதற்கு அடையாளமாக எரிமலையைச் சுற்றிலும் தரையில் மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன. இவ்வாறு எரிமலையைச் சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்களின் உயரமானது ஒரு சில சென்டி மீட்டர் உயரமே இருப்பதால் இந்த வளையங்கள் உருவாகி இருப்பது தரையில் இருந்து பார்ப்பதற்கு தெரி

கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தாக்கம் முற்றிலும் தவறானது.

Image
(கண்டங்களுக்கு இடையில் கண்டங்களை சுற்றிய படி இருக்கும் மத்திய கடலடி மலைத் தொடர்.) ஆ ப்பிரிக்கக் கண்டத்திற்கு மேற்கு பகுதியிலும் கிழக்கு பகுதியிலும் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து சென்றால் ஆபிரிக்கக் கண்டதால் கிழக்கு திசை நோக்கியும் நகர இயலாது.அதே போன்று மேற்கு திசை நோக்கியும் நகர இயலாது.எனவே ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றியுள்ள கடல் பகுதியில் உள்ள கடலடி மலைத் தொடரின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து செல்வதாகக் கூறப் படும் விளக்கம் முற்றிலும் தவறு. அதே போன்று அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றி உள்ள கடல் பகுதியில் புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து செல்லவும் சாத்தியம் இல்லை. (கண்டத் தட்டு நகர்ச்சி விளக்கப் படம் நன்றி நேட்சர். ஏனென்றால் ஒரு கண்டத்தை சுற்றி குறைந்த சுற்றுவட்டப் பகுதியில் உருவாகும் கடல் தரையால் அதிக சுற்றுவட்டப் பகுதியை நிரப்ப இயலாது. அதே போன்று ஒரு கண்டத்தை சுற்றி அதிக சுற்றுவட்டப் பகுதியில் உருவாகும் கடல் தரையால் குறைந்த சுற்றுவட்ட பகுதியை நோக்கி நகர்ந்து செல்ல ச

நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது?

Image
(ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் கடல் தரை விரிவுப் பகுதிஇருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.நேட்சர் இதழில் வெளியிடப் பட்டவிளக்கப் படம்.) நி ல அதிர்ச்சி ஏற்படுவதற்கு பொதுவாக ஒரு கண்டத் தட்டிற்கு அடியில் அடுத்த கண்டத் தட்டு உரசிச் செல்வதால் ஏற்படுகிறது என்று விளக்கம் கூறப் படுகிறது. கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதற்கு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் புதிதாக கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கடல் தரையின் மேல் இருந்த படி கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது. குறிப்பாக அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் வட கோடிப் பகுதியில் இருந்து தென் கோடிப் பகுதி வரை நாற்பதாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு கடலடி மலைத் தொடர் அமைந்து இருக்கிறது.இந்தக் கடலடி மலைத் தொடர் பகுதியில் நாற்பதாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய கடல் தரை உருவாகி மேற்கு மற்றும் கிழக்கு என எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது. இவ்வாறு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிதாக கடல் தரை உருவாகி

இத்தாலி நில அதிர்ச்சிக்கு எரிமலையே காரணம்.ஆய்வில் கண்டு பிடிப்பு .

Image
பூமிக்கு அடியில் இருந்த எரிமலை வெடித்ததால் இத்தாலி நாட்டில் ஏற்பட்ட நில அதிர்ச்சி ஏற்பட்டிருப்பது திட்டவட்ட மாகத் தெரியவந்திருகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் நாள் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் இத்தாலி நாட்டில் கடும் நில அதிர்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் லா அகுய்லா என்ற நகரை மையமாகக் கொண்டு நில அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த நில அதிர்ச்சியானது ஆல்ப்ஸ் மலைப் பிரதேசத்தின் மத்தியப் பகுதியில் ஏற்பட்டது. அத்துடன் சுற்றுவட்ட பகுதியைத் தவிர்த்து மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டது. லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சியின் வீரியம் அதிகமாகவும் சுற்றுவட்டப் பகுதியில் நில அதிர்ச்சியின் வீரியம் குறைவாகவும் இருந்தது. அமெரிக்கப் புவியியல் கழகத்தினர் வெளியிட்ட அறிக்கையில், ஆப்பிரிக்கக் கண்டம் வடக்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது. அதானால் ஆப்பிரிக்கக் கண்டத் தட்டுக்கும் ஐரோப்பாக் கண்டத் தட்டுக்கும் இடையிலான உரசல் நில அதிர்ச்சிக்கு காரணமாகக் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது. குறி

எரிமலை உயர்ந்ததால் நில அதிர்ச்சி ஏற்பட்டு சுனாமி உருவானது.ஆதரங்களுடன் ஒரு ஆய்வறிக்கை.விஞ்ஞானி.க.பொன்முடி.

Tsunami Discovery Report(tamil)