Posts

Showing posts from September, 2013

அத்தியாயம் -மூன்று

Image
கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதற்கு அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில், கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றியுள்ள கடல் தளத்துடன், கண்டத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் தவறாக நம்புகின்றனர். எனவே அந்தக் கருத்தின் அடிப்படையில் நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் விளக்கம் கூற இயலாத நிலையில் நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் இருக்கிறார்கள். indiavsburma.png உதாரணமாக தெற்காசிய சுனாமி குறித்து 10.01.2005 அன்று,நாசாவின் இணைய தளத்தில் ஒரு அறிக்கை வெளியிடப் பட்டது. அந்த அறிக்கையில் ‘’இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் இந்தியக் கண்டத் தட்டு ’’ நகர்ந்து சென்றதால்தான், சுமத்ரா தீவுப் பகுதியில் நில அதிர்ச்சியும்,சுனாமியும் ஏற்பட்டதாக டாக்டர் பெஞ்சமின் பாங் சோ மற்றும் டாக்டர் ரிச்சர்ட் கிராஸ் ஆகியோர் விளக்கம் தெரிவித்து இருந்தனர். australiavsindonesia.png ஆனால் மூன்று மாதத்திற்குப் பின்னர் 27.04.2005 அன்று நாசாவின் இணையதளத்தில் வெளியிடப் பட்ட அறிக்கையில் ’’ இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில் ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு ’’ நகர்ந்து ச

அத்தியாயம் இரண்டு

Image
( இந்தியா ஆசிய கண்டங்களின் மோதியதால் அந்தக் கண்டங்களுக்கு இடையில் இருந்த கடலடித் தரையானது புடைத்துக் கொண்டு மலைகளாக  உயர்ந்ததால்தான் தற்பொழுது மலைகளின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன என்று நம்பப் பட்ட நிலையில்,அந்தக் கண்டங்கள் தீவுக் கண்டங்களாக இருந்ததாக நம்பப் பட்ட காலத்தில் வாழ்ந்த திமிங்கிலத்தின் புதை படிவங்கள், இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது இதன் அடிப்படையில்,நிலத்தின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கங்கள் பொருத்தமற்றது என்று தெரிய வந்தது.) இதே போன்று கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றியுள்ள கடல் தளத்துடன் கண்டத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு கண்டங்களும் கடல் தளமும் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான், நில அதிர்ச்சிகள் ஏற்பட்டுவதாக புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கமும், அடிப்படை ஆதாரமற்ற தவறான கருத்து என்பதும் ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது. atlasep.jpg குறிப்பாக அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இருபுறமும் உள்ள

இதோ! எனது புத்தகத்தின் முதல் அத்தியாயம்.

Image
ஒரு நாள், நான் பழைய புத்தகக் கடை ஒன்றில், விற்பனைக்காக அடுக்கி வைக்கப் பட்டு இருந்த, பழைய நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிக்கைகளில் ஒன்றை எடுத்து அசிரத்தையாகப் புரட்டிய பொழுது, பளிச் என்று ஒரு பக்கத்தில் வெளியாகி இருந்த ஒரு படம் என் கவனத்தைக் கவர்ந்தது. அந்தப் படத்தில் ஒரு மலையின் மேல் இருவர் நின்றபடி மண் வெட்டும் கருவியால் தரையைத் தோண்டிக் கொண்டு இருந்தனர். ngpage.jpg (இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்து இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் போன்று வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் ராக்கி மலைத் தொடர் அமைந்து இருக்கிறது.இந்த மலைத் தொடரின் வடபகுதி .கனடா நாட்டுப் பகுதியில் அமைந்து இருக்கிறது. ராக்கி என்று அழைக்கப் படும் அந்த மலையின்   மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்களை எடுத்துக் கொண்டு இருக்கும் ஆராய்ச்சியாளர்கள்.)       அந்தப் படத்தில் ஒரு மலையின் மேல் இருவர் நின்றபடி மண் வெட்டும் கருவியால் தரையைத் தோண்டிக் கொண்டு இருந்தனர். குறிப்பாக அவர்கள் இருவரும் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்து மடிந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்கள