Posts

Showing posts from October, 2017

எனது ஆய்வுப் புத்தகம்-

chapter-1/6 - கண்டத் தட்டு விளக்கம் தவறு   கண்டத் தட்டு விளக்கம் தவறு என்பது புதைபடிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. தற்பொழுது ,அண்டார்க்டிக்கா,ஆஸ்திரேலி யா, போன்ற தீவுக் கண்டங்களி ல்,கடல் பகுதியைக் கடக்க இயலாத,டைனோசர்களின் புதைப் படிவங்கள் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய கண்டமாக இருந்த பிறகு,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த விளக்கத்தை முதலில் கூறியவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர் ஆவார். ஒரு நாள் அவர்,பணி புரிந்து கொண்டு இருந்த, கல்லூரியில் உள்ள நூலகத்தில் ,ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்தார். அந்தக் கட்டுரையில்,அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும்,அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களில் ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களிருப்பதைக் குறிப்பிட்டு,இதற்கு முன் ஒரு காலத்தில்,அட்லாண்டிக் பெருங் கடல் பகுதியிளொரு தற்காலிக நிலப் பாலம் இருந்ததே காரணம் என்றும்,பின்னர் அந்தத் தற்காலிக நிலப் பாலம் கடலுக்கு அ

எரிமலைத் தீவுகள் ஏன் மூழ்கின?

Image
பசிபிக் பெருங் கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில், குயாட்டுகள் என்று அழைக்கப் படும் ,சம தள மலைகள் காணப் படுகின்றன. இந்த நிலையில்,துளை யிடும் கருவிகள் மூலம்,அந்தக் குயாட்டுகளின் மேல்பகுதியில் துளையிட்டு எடுக்கப் பட்ட படிவுகளில்,ஆழமற்ற கடல் பகுதியில் வளரக் கூடிய,பவளத் திட்டுகள் மற்றும் அலைகளால் அரித்து உருவாக்கப் பட்ட,கோள வடிவக் கற்கள் இருப்பதையும், ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். அதன் அடிப்படையில்,அந்த சமதள மலைகளானது, ஒரு காலத்தில்,குறிப்பாக டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில்,கடல் பரப்பின் மேல், தீவுகளாக இருந்திருப்பதை, ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்து இருக்கின்றனர். ஆனாலும், அந்தத் தீவுகள் மூழ்கியதற்கான காரணம் குறித்து புவியியல் வல்லுனர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. குறிப்பாக, ஆழமான பசிபிக் கடல் பகுதியில் ,பல கிலோ மீட்டர் சுற்றளவில் உருவாகி இருக்கும் பவளத் திட்டுகள் பற்றிய விஞ்ஞானிகளின் புரிதலுக்கு, நீண்ட வரலாறு உண்டு. குறிப்பாக, பவளத் திட்டுகளானது, ஆழம் குறைவான கடல் பகுதியில் வளரக் கூடியது என்பதால்,பவளத் திட்டுகளானது, கடலோரப் பகுதியிலேயே உருவாகும்