Posts

Showing posts from March, 2022

பகுதி மூன்று--- தீவுகளுக்கு விலங்கினங்கள் எப்படி சென்றன?

பகுதி மூன்று--- தீவுகளுக்கு விலங்கினங்கள் எப்படி சென்றன? எரிமலைத் தீவுகளுக்கு மண்புழுக்கள் எப்படி சென்றன? லண்டன் விலங்கியல் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் பிரான்க் எவரஸ் பெட்டார்ட் என்ற பேராசிரியர் மண் புழுக்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட பொழுது, அண்டார்க்டிக் கண்டத்தை சுற்றிலும் அமைந்து இருக்கும் பல எரிமலைத் தீவுகளுக்குச் சென்று, அந்தத் தீவுகளில் உலகில் வேறு எங்கும் காண இயலாத பல் அரிய வகை மண் புழு இனவகைகளைக் கண்டு பிடித்தார். அந்த மண் புழுக்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் மைக்ரோ ஸ்காலக்ஸ் என்ற மண் புழுவின் வம்சாவளிகள் என்று வகை படுத்தி உள்ளார். மண் புழுக்கள் தோலின் மூலம் சுவாசிக்கும் உயிரினம். காற்றில் உள்ள பிராண வாயு மண் புழுவின் தோலின் வழியாக சென்று மண் புழுவின் இரத்தத்தில் கலக்கும்.அதே போன்று மண் புழுவின் உடலில் இருந்து கரிய மில வாயு தோலின் வழியாக வெளியேறும். இதற்கு மண் புழுவின் தோல் எப்பொழுதும் ஈரப் பசையுடன் இருக்க வேண்டும். எனவேதான் மண் புழுக்கள் அதிக காற்றுள்ள இடத்தையும் வெய்யிலையும் தவிர்த்து விடுகின்றன.மலைக் காலத்திலும் இரவிலுமே மண் புழுக்கள் தரைக்கு மேல

சுனாமிக்கு நாசா ஏன் விளக்கம் கூற இயல வில்லை?

சுனாமிக்கு நாசா ஏன் விளக்கம் கூற இயல வில்லை? தெற்காசிய சுனாமிக்கு நாசா ஏன் விளக்கம் கூற இயல வில்லை? ஒரு பிணக் கூராய்வில் கூட அடிப்படை ஆதாரம் தெளிவாக இல்லாத நிலையில் வெறும் யூகத்தில் அடிப்படையில் மரணத்திற்கான காரணம் குறித்து விளக்கம் கூறினாலே அதை ஏற்க இயலாது. இந்த நிலையில் இரண்டு லட்சத்தி முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்த தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்கு, உறுதியான ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில், முன்னுக்குப் பின் முரணாக இரண்டு விளக்கங்களை, நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருப்பது,சான்றாவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. தெற்காசிய சுனாமி குறித்து நாசா 01.10.2005 அன்று வெளியிட்ட முதல் அறிக்கையில், இந்தியக் கண்டமானது கடல் தளத்துடன் சில சென்டி மீட்டர் நகர்ந்ததால் ,கடல் தளமானது இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் உரசிய படி தீடீரென்று நகர்ந்து சென்றதால் அந்த நில அதிர்ச்சி ஏற்பட்டதுடன்,அந்த பகுதியில் இருந்த கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவானது என்று,''டாக்டர் பெஞ்சமின் பாங் சோ'' என்ற ஆராய்ச்சியாளர் ஒரு விளக்கத்தை தெரிவித்து இருக