பாலைவனங்களில் காணப் படும் மணலை உருவார்க்கியது கடல்.

பாலைவனங்களில் காணப் படும் மணலை உருவார்க்கியது கடல்.

பாலைவனங்களில் கடல் உயிரினங்களின் புதைபடிவங்கள் காணப் படுகின்றன.

எனவே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாலைவங்கள் கடல் மட்டத்திற்கு அடியில் இருந்திருக்கின்றன.

அப்பொழுது கடல் மட்டத்திற்கு மேலே இருந்த பாறைகளை கடல் நீர் அரித்ததால் மணல் உருவானது.

அவைகள் காற்று மழை மற்றும் .ஆறினாலும் கூட கடலுக்கு அடியில் கொண்டுவரப் பட்டன.

அதன் பிறகு நிலப் பகுதிகள் கடல் மட்டத்திற்கு மேலே உயர்ந்ததால் இன்று நிலத்தின் மேல் மணல் வெளி காணப் படுகிறது.

இதற்கு ஆதாரமாக ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியிலும், வட கிழக்குப் பகுதியில் எகிப்திலும், தென்மேற்குப் பகுதியில் நமீபியாப் பாலைவனப் பகுதியிலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.

விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.