புவியியல் வல்லுனர்களுக்கு வந்த சோதனை.

கண்டத் தட்டுக் கொள்கையானது, ஒரு தவறான கொள்கை என்பதுடன்,அந்தக் கொள்கையின் அடிப்படையில்,நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் விளக்கம் கூற இயலாத நிலையில் புவியியல் வல்லுனர்கள் இருக்கிறார்கள், என்பதை விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

கடந்த 12.1.2010 , அன்று,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும்,கரீபியன் தீவுப் பகுதியில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில்,ஏற்பட்ட பயங்கரமான நில அதிர்ச்சி மற்றும் சுனாமியில்,இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

அந்த நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும், புவியியல் வல்லுனர்கள்,அடிப்படை ஆதாரமற்ற, ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.

அந்த விளக்கத்தைப் பற்றி அறிவதற்கு முன்பு, ஹைத்தி தீவின் தோற்றம் குறித்து, புவியியல் வல்லுனர்கள் கொண்டிருக்கும் கருத்துக்களை அறிவது அவசியம்.

புவியியல் வல்லுனர்கள் நம்பும் கண்டத் தட்டு நகர்ச்சிக் கருத்தின் படி, வட அமெரிக்கக் கண்டமானது,அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில், தொடர்ச்சியாக உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,கடல் தளத்துடன்,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

அதே போன்று,தென் அமெரிக்கக் கண்டமானது,அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில், தொடர்ச்சியாக உருவாகி, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,கடல் தளத்துடன்,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இந்த நிலையில்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே எப்படி உருவாகி,எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று,புவியியல் வல்லுனர்களுக்கு இடையில்,கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது.

குறிப்பாகச் சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பசிபிக் கடல் பகுதியில் உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு, வந்து சேர்ந்ததாக நம்புகின்றனர்.இந்தக் கருத்தானது ‘பசிபிக் கடல் மாதிரி’ என்று அழைக்கப் படுகிறது.

குறிப்பாகக் கரீபியன் தீவுக் கூட்டமானது,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பசிபிக் கடல் பகுதியில்,அமைந்து இருக்கும்,காலபாகஸ் தீவுக் கூட்டம் அமைந்து இருக்கும் இடத்தில், எரிமலைச் செயல் பாட்டால் உருவாகிய பிறகு,தனிப் பாறைத் தட்டாக உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாக நம்புகின்றனர்.

தற்பொழுது,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை இணைக்கும் பாலமாக, மத்திய அமெரிக்க நிலப் பகுதி இருக்கிறது.

எனவே, கரீபியன் தீவுக் கூட்டமானது,எப்படி மத்திய அமெரிக்க நிலப் பகுதியைக் கடந்து,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்திருக்க முடியும், என்ற கேள்வி எழுகிறது.

‘பசிபிக் கடல் மாதிரியை ’நம்பும் புவியியல் வல்லுனர்களிடம் இதற்கு ஒரு விளக்கம் இருக்கிறது.

அதாவது,எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அமெரிக்கக் கண்டங்களானது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்த பொழுது,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில்,இடை வெளி இருந்ததாகவும்,அப்பொழுது மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது,பூமிக்கு அடியில் அமிழ்ந்து இருந்ததாகவும் நம்புகின்றனர்.

இந்த நிலையில்,கரீபியன் தீவுக் கூட்டமானது,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்த பிறகு,பூமிக்கு அடியில் அமிழ்ந்து இருந்த மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது,பூமிக்கு அடியில் இருந்து உயர்ந்ததாகவும் புவியியல் வல்லுனர்க நம்புகின்றனர்.

இந்தக் கருத்தின் அடிப்படையில், இன்னொரு விளக்கமும் கூறப் படுகிறது.

குறிப்பாகக் கரீபியன் தீவுப் பகுதியின் கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி,ஆண்டிலியன் எரிமலைத் தீவுகள் உருவாகி இருக்கின்றன.

இந்தத் தீவுக் கூட்டம் எப்படி உருவானது, என்பதற்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.

அதாவது,கரீபியன் தீவுக் கூட்டமானது,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும்,அட்லாண்டிக் கடல் தளமானது,கரீபியன் பாறைத் தட்டுக்கு அடியில்,சென்ற பிறகு,பூமிக்கு அடியில் இருக்கும் வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாகி,மேல் நோக்கி உயர்ந்து,கடல் தரையைப் பொத்துக் கொண்டு,கடல் தளத்துக்கு மேலே,எரிமலைத் தீவுகளாக உருவானது,என்று நம்பப் படுகிறது.

ஆனால்,இந்தக் கருத்துக்கு முரணாக சில ஆதாரங்கள் இருக்கின்றன.

கரீபியன் தீவுக் கூட்டமானது, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்து சேர்ந்ததாக நம்பப் படும் நிலையில்,கரீபியன் தீவுக் கூட்டத்தில்,இருக்கும் கியூபா தீவில்,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்புப் புதைப் படிவங்களை தொல்விலங்கியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

இதன் மூலம்,கரீபியன் தீவுக் கூட்டமானது,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே,தற்பொழுது இருக்கும் இடத்திலேயே இருந்திருப்பதுடன்,அமெரிக்கக் கண்டங்களுக்கும் கியூபா தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும்,அதன் வழியாக டைனோசர்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதும், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

முக்கியமாகத் தென் அமெரிக்கக் கண்டமானது,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு நகர்ந்து வந்ததாகவும்,அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நிலத் தொடர்பு ஏற்பட்டதாகவும்,அதன் வழியாக, ‘தி கிரேட் அமெரிக்கன் இன்டெர் சேஞ்’ என்று அழைக்கப் படும், விலங்கினங்களின் போக்கு வரத்து நிகழ்ந்ததாகவும் நம்பப் படுகிறது.

அதே போன்று,ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தென் அமெரிக்கக் கண்டமானது,ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாக நம்பப் படுகிறது.

குறிப்பாக, தென் அமெரிக்கக் கண்டத்தில் நான்கு கோடி ஆண்டுகள் தொன்மையான குரங்கின் பற்கள் கண்டு பிடிக்கப் பட்டதற்கு,அந்தக் குரங்குகளின் மூதாதைகளானது,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து, அட்லாண்டிக் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் இருந்தபடி, பதினான்கு நாட்கள் கடலில், உணவும் நீருமின்றி தத்தளித்தபடி,தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று, புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

இந்த நிலையில்,தென் அமெரிக்கக் கண்டத்தில்,ஆறு கோடி ஆண்டுகள் தொன்மையான, ‘அல்சி டெடோர் பிக்னியா’ என்று பெயர் சூட்டப் பட்ட,ஒரு மூதாதைப் பாலூட்டி வகை,விலங்கினத்தின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.

முக்கியமாக அதன் கால்களானது, மொன்னையாகவும், தரையில் நடப்பதற்கு ஏற்றதாகவும் இருந்தது.

இது போன்ற கால்களை உடைய விலங்கினானது,பாண்டோடோண்ட் என்று அழைக்கப் படுகிறது.

அந்த விலங்கின் இனவகைகளின் புதைப் படிவங்களானது,வட அமெரிக்கக் கண்டத்திலும்,ஆசியக் கண்டத்திலும் கண்டு பிடிக்கப் பட்டிருக்கின்றன.

அதன் அடிப்படையில்,பாண்டோ டோண்ட் விலங்கினங்களானது,ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தில் இருந்து,வட அமெரிக்கக் கண்டம் வழியாகத் தென் அமெரிக்கக் கண்டத்தை நிலத் தொடர்பு வழியாக அடைந்து இருக்கின்றன என்றும் புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

இதே போன்று,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பூமிக்கு அடியில் அமிழ்ந்து இருந்ததாக நம்பப் பட,மத்திய அமெரிக்க நிலப் பகுதியில்,அமைந்து இருக்கும்,நிகரகுவா நாட்டின் மலைப் பகுதியில்,பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதைப் படிவங்களை,இந்தியாவின்,பீர் பால் தாவரவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த தாவரவியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.


எனவே,டைனோசர்களின் காலத்தில் இருந்தே,கரீபியன் தீவுக் கூட்டமும்,தென் அமெரிக்கக் கண்டமும்,தற்பொழுது இருக்கும் இடத்திலேயே இருந்திருப்பதுடன்,கண்டங்களுக்கு இடையில் விலங்கினங்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதும்,புதைப் படிவ ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகிறது.

இந்த நிலையில்,சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி,மேற்கு திசை நோக்கி நகர்ந்து,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்து இருக்கலாம் என்று நம்புகின்றனர்.

இந்தக் கருத்தானது,’அட்லாண்டிக் கடல் மாதிரி’ என்று அழைக்கப் படுகிறது.

ஆனால் பசிபிக் கடல் பகுதியில் காணப் படுவதைப் போன்று அட்லாண்டிக் கடல் பகுதியில்,எரிமலைத் தீவுக் கூட்டம் எதுவும் காணப் பட வில்லை.

எனவே,கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கிய பிறகு அந்த எரிமலைப் பிளம்புகளானது,மறுபடியும் பூமிக்குள் அமிழ்ந்து இருக்கலாம் என்று, ’அட்லாண்டிக் கடல் மாதிரியை’ நம்பும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

ஆனாலும், இந்தக் கருத்தின் படி,கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில் அமைந்து இருக்கும் ஆண்டிலியன் எரிமலைத் தீவுகளுக்கு விளக்கம் கூறப் பட வில்லை.

இந்த நிலையில்,இன்னும் சில புவியியல் வல்லுனர்கள், கரீபியன் தீவுக் கூட்டமானது,தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கலாம் என்றும் ஒரு புதிய கருத்தை முன் மொழிந்து இருக்கின்றனர்.

மொத்தத்தில்,கரீபியன் தீவுக் கூட்டமானது,எங்கே எப்படி உருவாகி,எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியாது என்பதே உண்மை.

இந்த நிலையில்தான்,கரீபியன் தீவுக் கூட்டத்தில் அமைந்து இருக்கும் ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும்,விளக்கம் கூற வேண்டிய கட்டாயம், அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்களுக்கு ஏற்பட்டு விட்டது.

கரீபியன் தீவுக் கூட்டமானது,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறினாலும் சிக்கல் வரும்,அதே போன்று, கரீபியன் தீவுக் கூட்டமானது, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறினாலும் சிக்கல் வரும்.

சிக்கலான நேரத்தில்தான் மூளை நன்றாக வேலை செய்யும்,
உடனே அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்களுக்கு ஒரு அருமையான யோசனை தோன்றியது.அதன் அடிப்படையில் ஹைத்தி தீவு நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் விளக்கத்தைத் தெரிவித்து விட்டார்கள்.

கரீபியன் தீவுக் கூட்டம், எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாகக் கூறினால்தானே சிக்கல் வரும்!

அதனால்,கரீபியன் தீவுக் கூட்டம் உண்மையில் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாகக் கூறாமல்,ஒரு மறை முக விளக்கத்தை, அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

குறிப்பாக ,வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக எல்லாப் புவியியல் வல்லுனர்களும் நம்புகின்றனர்.

எனவே,அதன் அடிப்படையில்,கரீபியன் தீவுக் கூட்டமானது, குறிப்பாக எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறாமல்,கரீபியன் தீவுக் கூட்டமானது,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால்,ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவானதாக, அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.

அதாவது,கரீபியன் தீவுக் கூட்டமானது,எங்கே எப்படி உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலையிலேயே, அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள்,ஹைத்தி தீவு நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் இப்படி ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.

இதன் மூலம்,புவியியல் வல்லுனர்களுக்கு உண்மையில்,கரீபியன் தீவுகள் எப்படி உருவானது என்றும் தெரியாது,அதே போன்று உண்மையில் நில அதிர்சிகளும் சுனாமிகளும் ஏன் ஏற்படுகின்றன என்பதும் தெரியாது என்பது தெளிவாகிறது.

இந்த நிலையில்,பூமிக்கு அடியில்,ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளின் காரணமாகவே,நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும்,உருவாகி இருப்பதை,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் நான் கண்டு பிடித்து இருக்கிறேன்.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.