புதை படிவங்களும் கடல் மட்டமும்.

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, கடற் பசுக்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்களைக் குறிக்கும் இந்த வரை படத்தில்,கடற் பசுக்களின் புதை படிவங்கள் கண்டங்களின் ஓரப் பகுதியிலேயே காணப் படுகின்றன.

மற்ற படி ஹவாய் உள்பட பசிபிக் பெருங் கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் உள்ள தீவுகளில் காணப் பட வில்லை.

இதன் மூலம் கடற் பசுக்கள் ஆழமான கடல் பகுதியை கடக்க இயலாத விலங்குகள் என்பது புலனாகிறது.

எனவே கடல் பசுக்களின் புதை படிவங்கள் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் காணப் படுவதற்கு,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் பெருங் கடலின் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதே காரணம் என்பதும் புலனாகிறது.


Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.