பிரமாண்ட மோதலால் நிலா உருவானதா ?




நிலவில், எதிர்பார்த்ததை விட அதிக அளவில், நீர் இருப்பது, பல்வேறு ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பானது,நிலவின் தோற்றம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறி வந்த விளக்கங்களின் மேல் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டது.
முன் ஒரு காலத்தில்,விண் வெளியில்,இருந்த ஒரு ராட்சத விண் மேகமானது,திடீரென்று தட்டையாகிச் சுருங்கிச் சுழலன்றதாக நம்பப் படுகிறது.
அப்பொழுது,மத்தியப் பகுதியில் இருந்த பருத்த பகுதியானது,சூரியனாகவும்,ஓரப் பகுதியில் இருந்த, தூசி மற்றும் வாயுக்கள், ஆங்காங்கே உருண்டு திரண்டதால்,மற்ற கிரகங்கள் உருவானதாகவும் நம்பப் படுகிறது.
இந்தக் கருத்தின் படி, எல்லாக் கிரகங்களும், சூரியனை ஒரே தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு இல்லாமல் நிலவானது,பூமியை,சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் இருந்து ஐந்து டிகிரி சாய்வான தளத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறது.
‘Every other body in the solar system has different chemistry,’ she said.
Another problem with the original theory is that if the moon condensed from a disk of material rotating around Earth's equator, it should be in orbit over the equator.
அதுமட்டுமின்றி, சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள் மற்றும் அதன் துணைக் கோள்களின் தனிமங்கள் மற்றும் அந்தத் தனிமங்கள் கலந்து இருக்கும் விகிதாச் சாரமானது ஒன்றுக் கொன்று வேறுபட்டு இருக்கிறது.
ஆனால்,நிலவில் இருந்து எடுத்துவரப் பட்ட பாறைகளை ஆய்வு செய்த பொழுது,அதில் இருந்த தனிமங்கள் மற்றும் அந்தத் தனிமங்கள் கலந்து இருந்த விகிதாச் சாரமானது பூமியின் பாறைகளை ஒத்து இருந்தது.
இதனை விளக்குவதற்காக ஒரு கருத்து முன் வைக்கப் பட்டது.

அதாவது, முன் ஒரு காலத்தில்,பூமியின் மேல்,தியா என்று பெயர் சூட்டப் பட்ட,செவ்வாய் கிரக அளவுள்ள,ஒரு கோள் அதி வேகத்தில் மோதியதாகவும்,அப்பொழுது ஏற்பட்ட அதீத வெப்பத்தில்,பூமியின் மேலடுக்குகள் ஆவியாக்கப் பட்டு ,அதன் பகுதிகளானது,பூமியின் சுற்றுப் பாதைக்குத் தள்ளப் பட்டதாக நம்பப் பட்டது.
அதன் பிறகு, பூமி மற்றும் தியா கிரகத்தின் சிதறுண்ட பாகங்களானது, ஒன்றாக இணைந்ததால்,நிலா உருவானதாகவும்,நம்பப் பட்டது.

When young Earth and this rogue body collided, the energy involved was 100 million times larger than the much later event believed to have wiped out the dinosaurs. The early giant collision destroyed the rogue body, likely vaporized the upper layers of Earth's mantle, and ejected large amounts of debris into Earth orbit. Our Moon formed from this debris.
இந்தக் கருத்தானது 'பிரமாண்ட மோதல்' ( Moon giant impact theory ) என்று அழைக்கப் படுகிறது.
இந்த மோதலின் பொழுது,அதீத வெப்பம் உருவானதாகவும்,அப்பொழுது பாறைகள் கூட உருகி இணைந்ததாகவும் கூறப் படுகிறது.
இது போன்ற அதீத வெப்ப நிலையில்,ஹைட்ரஜன்,குளோரின்,பொட்டாசியம்,சோடியம்,போன்ற எளிதில் ஆவியாகக் கூடிய வாயுக்கள் எல்லாம் ஆவியாகி விண்வெளியில் கலந்து விட்டிருக்கும், என்பதால் நிலவில் இது போன்ற,எளிதில் ஆவியாகக் கூடிய, வாயுக்கள் இருக்க சாத்தியம் இல்லை என்று எதிர் பார்க்கப் பட்டது.
The discovery of "significant amounts" of water in moon rock samples collected by NASA's Apollo astronauts is challenging a longstanding theory about how the moon formed, scientists say.
Since the Apollo era, scientists have thought the moon came to be after a Mars-size object smashed into Earth early in the planet's history, generating a ring of debris that slowly coalesced over millions of years.
That process, scientists have said, should have flung away the water-forming element hydrogen into space.
ஆனால் ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்த்ததற்கு மாறாக,தற்பொழுது, நிலவில் நீர் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக நீரானது, ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் வாயுக்கள் இணைவதால் உருவாகுகிறது.
குறிப்பாக நிலவின் மேற்பரப்பில் பரவலாக,ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் இணைவதால் உருவாகும் ஹைட்ராக்சில் அதிக அளவில் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது.
"Because these are some of the oldest rocks from the moon, the water is inferred to have been in the moon when it formed," Zhang said. "That is somewhat difficult to explain with the current popular moon-formation model, in which the moon formed by collecting the hot ejecta as the result of a super-giant impact of a martian-size body with the proto-Earth.
"Under that model, the hot ejecta should have been degassed almost completely, eliminating all water."
எனவே,நிலவில் எப்படி எளிதில் ஆவியாகக் கூடிய ஹைட்ரஜன் வந்தது என்ற கேள்வி எழுந்தது.
இந்தக் கேள்விக்கு ஒரு விளக்கம் கூறப் பட்டது.

அதாவது,நிலவுக்கு சூரியனில் இருந்து ஹைட்ரஜன் வந்து இருக்கலாம் என்றும்,அவ்வாறு வந்த ஹைட்ரஜன் அணுவானது,நிலவின் மேற்பரப்பில் இருக்கும் பாறை மற்றும் மணலில் இருந்த ஆக்சிஜன் அணுக்களுடன் இணைந்ததால் நிலவின் மேற்பரப்பில், ஹைட்ராக்சில் உருவாகி இருக்கிறது என்று கருதப் பட்டது.
அதே போன்று நிலவின் மேற்பரப்பில் இருக்கும் நீரில் ஒரு பகுதியானது விண் வெளியில் இருந்து நிலவின் மேல் விழுந்த,விண்பாறைகள் மூலமாக வந்து இருக்கலாம் என்றும் நம்பப் பட்டது.
ஆனால், நிலவில் இருக்கும் பாறைகள் எப்படி உருவானது என்பது குறித்து ஆய்வு செய்த,நெதர்லாந்து நாட்டில் உள்ள,விர்ஜி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,புவி வேதியியல் வல்லுனரான டாக்டர்,விம் வான் வெஸ்டெரேன்,நிலவில் உள்ள பாறைகளானது, நீருடன் சேர்ந்து உருவானது தெரிவித்து இருக்கிறார்.
அதன் அடிப்படையில்,நிலா உருவான காலத்திலேயே,நிலவில் நீர் இருந்து இருக்கிறது என்றும் தெரிவித்து இருக்கிறார்.
அதாவது, விண் பாறைகள் நிலவைத் தாக்குவதற்கு முன்பே, நிலவின் மேற்பரப்பில் நீர் இருந்திருக்கிறது என்று, டாக்டர்,விம் வான் வெஸ்டெரேன், தெரிவித்து இருக்கிறார்.
“Our study shows that water was there at the time the moon formed, and because that happened soon after the formation of Earth, it shows water was present well before any later addition via comets or asteroids,” says Wim van Westrenen at Vrije University in Amsterdam, the Netherlands, who co-led the team. “We show that the moon, in its initial hot stage, contained a lot of water – at least as much as, and likely more than, the amount we have on Earth today.”
And if that is the case, then theories about water being brought to Earth by comets are wrong.
இந்த நிலையில் தற்பொழுது,நிலவில்,எரிமலைச் செயல் பாட்டினால்,நிலவின் அடிப்பகுதியில் இருந்து,நிலவின் மேற்பரப்புக்கு வந்த,பாறைத் துணுக்குகளுக்கு உள்ளே,அதிக அளவில் நீரின் மூலக் கூறுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.


குறிப்பாக,அந்த எரிமலைப் பாறைத் துணுக்குகளானது,நிலவின் அடிப் பகுதியியிலேயே உருவானவைகள் என்பதால்,அதனுள் இருக்கும் நீரானது,நிலவின் ஆழமான பகுதியில் இருந்த நீராகும்.
அது மட்டுமின்றி இது போன்ற எரிமலைச் செயல் பாட்டின் பொழுது தொண்ணூற்றி ஐந்து சதவீத நீரானது ஆவியாகி விடும்.
https://phys.org/…/2008-07-moon-dampens-moon-formation-theo…
எனவே,நிலவின் மேற்பரப்பில் இருந்த எரிமலைப் பாறைத் துணுக்குகளுக்கு உள்ளே இருந்த நீரானது,நிலவின் ஆழமான பகுதியில் இருந்த நீரின் ஒரு சிறிய பகுதியையே குறிக்கிறது.
இதன் அடிப்படையில்,நிலவில் ஒரு காலத்தில்,தற்பொழுது பூமிக்கு அடியில் இருக்கும் நீரின் அளவில் நீர் இருந்து இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று,நிலவின் துருவப் பகுதிகளிலும் நீரானது பனிக் கட்டி வடிவில் இருப்பதும் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட செயற்கைக் கோள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு நிலவில் எதிர்பார்க்கப் பட்டதை விட அதிக அளவில் நீர் இருப்பதன் அடிப்படையில்,எளிதில் ஆவியாகி விடக் கூடிய ஹைட்ரஜன் வாயுவானது,நிலவுக்கு எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால்,நிலா எப்படி உருவானது என்பதற்கு கூறப் பட்ட பிரமாண்ட மோதல்  கருத்தின்  மேல் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

“I still think the impact scenario is the best formation scenario for the moon, but we need to reconcile the theory of hydrogen,” study leader Hejiu Hui, an engineering researcher at the University of Notre Dame, told SPACE.com.
எனவே,நிலவானது ஏன்,சூரியனை பூமி வலம் வந்து கொண்டு இருக்கும் தளத்தில் வலம் வராமல்,அந்தத் தளத்திற்கு ஐந்து டிகிரி சாய்வான கோணத்தில்,பூமியை வலம் வந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்வியும்,விடை கூறப் பட வேண்டிய நிலையில் இருக்கிறது.
Other theories have been proposed
http://www.bbc.com/news/science-environment-27688511
எனது விளக்கம்.
சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள் மற்றும் அதன் துணைக் கிரகங்கள் அனைத்துமே எரிந்து முடிந்த நட்சத்திரத்தின் உள்ளே உருவாகி,சூரியனால் ஈர்க்கப் பட்டவைகள்.
சூரியனை நோக்கி வந்த சிறிய கிரகங்களை,மற்ற கிரகங்கள் ஈர்த்து இருக்கின்றன.
குறிப்பாக கிரகங்களின் நில நடுக் கோட்டுப் பகுதியானது,பருத்து இருப்பதால்,அதன் துணைக் கிரகங்களானது,நிறை ஈர்ப்பு விசையின் படி,கிரகங்களின் நில நடுக் கோட்டுப் பகுதியை வலம் வந்து கொண்டு இருக்கின்றன.
இந்த நிலையில்,அந்தக் கிரகங்களானது.சூரியனின் நில நடுக் கோட்டுப் பகுதியை வலம் வந்து கொண்டு இருக்கின்ற அதே வேளையில்,விண் வெளியில்,சூரியனானது முன் நோக்கி நகர்ந்து விடுகிறது.
எனவே,சூரியனின் நில நடுக் கோட்டுப் பகுதியை வலம் வந்து கொண்டு இருக்கும் கிரகங்களானது.சூரியனை நோக்கி நகர்கிறது.
இதனால்,சூரியனின் நில நடுக் கோட்டுப் பகுதிக்கு இணையாக வலம் வர வேண்டிய கிரகங்களானது,சூரியனின் நில நடுக் கோட்டுப் பகுதிக்குச் சாய்வான கோணத்தில் வலம் வர வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறது.
அதே போன்று,கிரகங்களின் நில நடுக் கோட்டுப் பகுதியை வலம் வர வேண்டிய,துணைக் கிரகங்களும்,சூரியனை நோக்கி நகரும்,கிரகங்களை நோக்கி நகர்வதால்,கிரகங்களின் நில நடுக் கோட்டுப் பகுதிக்கு இணையாக வலம் வர இயலாமல்,அந்தக் கிரகங்களின் நில நடுக் கோட்டுக்கு சாய்வான தளத்தில்,வலம் வர வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.