இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்தது?

eth11.gifeth11.gif

மடகாஸ்கர் தீவு ரகசியம்.

தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் காலபாகஸ் தீவில் காணப் படும் பதினைந்து வகையான சிட்டுகளின் அலகுகள் ஒவொன்றும் அவைகளின் உணவுப் பழக்கத்திற்கு ஏற்ப மாறுபட்டு இருந்தது.
அதன் அடிப்படையில், அந்த சிட்டுகள் ஒரு பொது மூததையில் இருந்தே பரிணாம மாற்றம் பெற்றிருப்பது தெரிய வந்தது.

இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் தரை வாழ்விலங்கினங்களின் இனவகைகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறுகிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் காணப்படுவதன் மூலம், கடல் மட்டமானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்புஇரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. 
 mtr.pngmtr.png
மடகாஸ்கர் தீவில் லெமூர் என்று அழைக்கப் படும் நரி முகக் குரங்குகள், டென் ரெக் என்று அழைக்கப் படும் பூச்சித் திண்ணி விலங்குகள்,போசா என்று அழைக்கப் படும் இரையுண்ணி விலங்குகள்,மற்றும் எலி போன்ற கொறித்துண்ணி விலங்குகளும் காணப் படுகின்றன.

இவ்வாறு மடகாஸ்கர் தீவில் ஒரு கண்டத்தில் காணப் படுவதைப் போன்றே பல வகையான விலங்கினங்களும் தாவரங்களும் காணப் படுவதால் அந்தத் தீவானது எட்டாவது கண்டம் என்றும் அழைக்கப் படுகிறது.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவுக்கு விலங்கினங்கள் எப்படிச் சென்றன? என்பது குறித்து இன்று வரை விவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

உதாரணமாக மடகாஸ்கர் தீவில் லெமூர் என்று அழைக்கப் படும் நரி முகக் குரங்குகள் காணப் படுகின்றன.லெமூர் குரங்குகள் மற்றும் தேவாங்குகளின் கீழ் தாடையின் முன் பகுதியில் உள்ள பற்கள் நெருக்கமாக அமைந்து சீப்பு போன்ற அமைப்பில் இருக்கும்.

இந்த அமைப்புடைய குரங்கின் எலும்புப் புதை படிவங்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இதன் அடிப்படையில் லெமூர் குரங்கின் மூதாதைகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழ்ந்து இருபது தெரிய வந்துள்ளது.

எனவே லெமூர் குரங்குகள் எப்படி ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவை அடைந்தன? என்ற கேள்வி எழுந்தது.
ஆப்பிரிக்கக் கண்டமும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கின்றன.

எனவே லெமூர்கள் நிச்சயம் கடல் வழியாகத்தான் மடகாஸ்கர் தீவுக்கு வந்திருக்க முடியும் என்று தற்பொழுது நம்பப் படுகிறது.

குறிப்பாக காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் இருந்த படி இரண்டு வார காலம் கடலில் தத்தளித்த படி லெமூர்கள் மடகாஸ்கர் தீவை அடைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

இந்த முறையில் பல குரங்குகள் வர இயலா விட்டாலும் குறைந்த பட்சம் ஒரே ஒரு கர்ப்பிணிக் குரங்காவது அரை மயக்க நிலையில் தீவில் கரை ஒதுக்கி இருக்கலாம் என்றும், அதன் பிறகு பல குட்டிகளை ஈன்ற பிறகு  மடகாஸ்கர் தீவில் லெமூர் இனங்கள் பெருகி இருக்கலாம் என்றும் கருதப் படுகிறது.


இதே போன்று மற்ற விலங்கினங்களும் வெவ்வேறு கால கட்டத்தில் மடகாஸ்கர் தீவில் தற்செயலாகக் கரை ஒதுங்கிய பிறகு பின்னர் அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

ஆனால் மடகாஸ்கர் தீவில் வாழ்ந்த சில விலங்கினங்களுக்கு இந்த விளக்கம் அவ்வளவாகப் பொருத்த வில்லை.

mtr1mtr1
உதாரணமாக மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.

குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது.

அதன் உடலும் நீண்டு குறுகி இருப்பதுடன் கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு வந்திருக்காலாம் என்ற விளக்கம் மிகவும் அசாதாரணமாக இருக்கிறது.

லெமூர் குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால் மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய லெமூர்கள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று கருதப் படுகிறது.
babyhippo1.pngbabyhippo1.png
ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது.ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது.

இந்த நிலையில் புதை படிவங்கள் மூலம் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதில் ஒரு குள்ள வகை நீர் யானை மடகாஸ்கர் தீவில் இருந்த ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
mks17.pngmks17.png

அப்படியே ஆனாலும் கூட மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும் என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது.

அவ்வாறு வந்த பிறகு இரண்டு முறையும் நீர் யானைகள் இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம்.

இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது.
mtr3.jpgmtr3.jpg
இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால் அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது.

அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த பெரிய நீர் யானை தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால் குள்ள வகை நீர் யானையான மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது.
hippo3.pnghippo3.png
hippo3a.pnghippo3a.png

எனவே மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன.

இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது.
hippo3b.pnghippo3b.png


எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும் நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது.
mtr2.pngmtr2.png

இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் பல தீவுகளில் காணப் படுவதன் மூலம் தீவுகளில் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பது உறுதியாகிறது.

முக்கியமாக தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டதுக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் உள்ள மொசாம்பிக் கால்வாய்ப் பகுதியில் ஓடும கடல் நீரோட்டமானது மடகாஸ்கர் தீவில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தை நோக்கி மேற்கு திசையை நோக்கி செல்கிறது.
எனவே எப்படி விலங்கினங்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவுக்கு கடல் நீரோட்டம் மூலம் வந்திருக்க முடியும்? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் ஹாங்காங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜேசன் அலி மற்றும் மார்க் ஹுபர் ஆகியோர் பழங்காலத்தில் கண்டங்கள் இருந்ததாகக் கூறப் படும் இடங்கள் குறித்த கருத்துக்களின் அடிப்படையில்,  கணிப் பொறி மூலம் உருவாக்கிய தூண்டல் மாதிரிகளில் ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் நீரோட்டமானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மடகாஸ்கர் தீவை நோக்கி கிழக்கு திசையில் ஓடியதாகவும், அதனால் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து விலங்குகளின் மடகாஸ்கர் தீவுக்கு மரக் கிளைகள் மூலம் வந்திருக்கலாம் என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.

இதற்கு முன்பு மடகாஸ்கர் தீவுக்கு லெமூர் குரங்குகள் எப்படிச் சென்றன என்பது யூகம் சம்பந்தப் பட்ட விஷயம் என்று கூறிய லெமூர் ஆராய்ச்சியாளரான, டியூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆனி யோடர் டாகடர் ஜேசன் அலியின் கணிப் பொறி மாதிரியானது லெமூர் குரங்குகள் குறித்த விவாதத்துக்கு முடிவு ஏற்பட்டு விட்டதாகக் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்கள் எங்கெங்கே இருந்தன என்று யாராலும் எந்த ஒரு ஆதாரத்தின் அடிப்படையிலும் இன்று வரை உறுதியாகக் கூற இயலவில்லை.
mtr4mtr4
பனிரெண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு எந்த எந்தக் கண்டங்கள் எங்கெங்கே இருந்தன என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட மாதிரிகளை  புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
எனவே உண்மையில் கண்டங்கள் எங்கெங்கே இருந்தன என்று உறுதியாகத் தெரிந்தாலே பழங்காலத்தில் ஓடிய நீரோட்டங்கள் குறித்த கணிப் பொறி மாதிரிகளை ஏற்க இயலும்.

பச்சோந்திகள்

இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்திலும் மடகாஸ்கர் தீவிலும் ஒரே இனவகையைச் சேர்ந்த பச்சோந்திகள் காணப் படுவதற்கும் பழங்காலக் கடல் நீரோட்டங்களின் அடிப்படையிலேயே விளக்கங்கள் கூறப் படுகின்றன.
chameleon.jpgchameleon.jpg

உலகில் நூற்றி அறுபதுக்கும் அதிகமான பச்சோந்தி இனங்கள் உள்ளன.இதில் பாதிக்கும் மேற்பட்ட இன வகைகள் மடகாஸ்கர் தீவில் காணப் படுகின்றன.

மடகாஸ்கர் தீவில் இருந்து 1,804  கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் செஷல்ஸ் தீவிலும் பச்சோந்திகள் காணப் படுகின்றன.செஷல்ஸ் தீவில் புலிப் பச்சோந்தி என்று அழைக்கப் படும் பச்சோந்தி இனம் காணப் படுகிறது.

முதலில் செஷல்ஸ் தீவுப் பச்சோந்தியானது மடகாஸ்கர் தீவில் காணப் படும் காலுமெல்லா என்று அழைக்கப் படும் பச்சோந்தி இனத்தின் வம்சாவளி என்றும் செஷல்ஸ் தீவுக்கு பச்சோந்திகள் மடகாஸ்கர் தீவில் இருந்தே வந்திருக்கும் என்று நம்பப் பட்டது.

இந்த நிலையில் சாண்டியாகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் டவுன் சென்ட் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட மரபணு ஆய்வில்,செஷல்ஸ் தீவுப் பச்சோந்தியானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் ஆர்கயஸ் டைக்கிரிஸ் என்று அழைக்கப் படும் பச்சோந்தி இனத்தில் இருந்து இரண்டு முதல் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்திருப்பது தெரிய வந்துள்ளது.
ted.pngted.png

எனவே ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடல் நீரோட்டம் கணிப் பொறி மாதிரியின் படி மேற்கு திசையை நோக்கி ஓடிய பொழுது கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மூலம் பச்சோந்திகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து தீவுக்கு வந்து சேர்ந்திருக்கலாம் என்று டவுன் சென்ட் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

தற்பொழுது செஷல்ஸ் தீவானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரத்தி அறுநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.ஆனால் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு செஷல்ஸ் தீவுக்கும் ஆப்பிரிக்கக் கண்டதுக்கும் இடையில் உள்ள தூரம் குறைவாக இருந்திருக்கலாம் என்றும் டவுன் சென்ட் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

சைவ முதலை

mtr5mtr5

 1998 ஆம் ஆண்டு மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகள் தொன்மையான முதலையின் புதை படிவங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தது.

மூன்று அடி நீளமுள்ள அந்த முதலையில் முகப் பகுதி நீண்டு இருப்பதற்குப் பதிலாக மிகவும் குட்டையாக இருந்தது.அதன் தாடையில் நீண்ட கூர்மையான பற்கள் இருப்பதற்குப் பதிலாக கிராம்பு போன்ற வடிவில் தாவரங்களை உண்பதற்கு ஏற்றபடி இருந்தது.

அதன் உடலின் மேற் பகுதியிலும் கால்களின் மேற் பகுதியும் எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது.அதன் வாலும் மிகவும் குட்டையாக இருந்ததுடன் வாலும் எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது.

எனவே அந்த வாலைக் கொண்டு அந்த முதலையால் நீந்த இயலாது.அதன் கால்களும் நடப்பதற்கு எதுவாக தரை வாழ் வாழ்க்கைக்கு ஏற்றதாக இருந்தது.

அந்த முதலையால் உடலை பக்க வாட்டில் வளைக்க இயலாத படி ஆமையின் உடலை மூடி இருக்கும் கவசம் போன்ற எலும்புத் தட்டு இருந்தது.

ஏற்கனவே சீமோ சூக்கசின் இனவகைளின் புதை படிவங்கள் ஆப்பிர்க்கக் கண்டத்தில் எகிப்து பகுதிலும், ஆசியக் கண்டத்தில் சீனாவிலும், தென் அமெரிக்கக் கண்டத்தில் உருகுவே நாட்டிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது.

ஆனால் சீமோ சூக்கஸ் எப்படி மடகாஸ்கர் தீவுக்கு வந்தது என்பது குறித்து வல்லுனர்களால் சரியான விளக்கத்தை அளிக்க இயல வில்லை.

mtr6mtr6

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.