கண்டங்கள் நிலையாக இருப்பதற்கு ஆணித் தரமான ஆதாரம்.

iotopo.gif
iotopo.gif
இந்தியக் கண்டமானது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் துருவப் பகுதியில் இருந்ததாகவும் பின்னர் அங்கிருந்து வட கிழக்கு திசையை நோக்கி கடல் தளத்துடன் நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.இவ்வாறு இந்தியக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்து வந்ததற்கு ஆதாரமாக இந்தியாவிற்கு இரு புறமும் கடல் தரையின் உருவாகி இருக்கும் இரண்டு எரிமலைத் தொடர்களைக் குறிப்பிடுகின்றனர்.
iptdir.jpg
iptdir.jpg
 http://www.scienzagiovane.unibo.it/English/tsunami/5-tsunami-2004.html
குறிப்பாக இந்தியாவிற்கு மேற்குப் பகுதியில் உள்ள அரபிக் கடல் பகுதியில் உள்ள எரிமலைத் தீவுகளான லட்சத் தீவுகள் மற்றும் தீகோ கார்சிகாத் தீவுகள் சற்று வளைவான பாதையில் உருவாகி இருக்கின்றன.
இதே போன்று இந்தியாவிற்கு கிழக்குப் பகுதியில் உள்ள வங்காள விரி குடாக் கடல் பகுதியில் கடலுக்கு அடியில் நேர் கோட்டுப் பாதையில் ஒரு எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது.குறிப்பாக இந்தக் கடலடி எரிமலைத் தொடரானது தொண்ணூறு கிழக்கு தீர்க்க ரேகைக்கு இணையாக நேர் கோட்டுப் பாதையில் உருவாகி இருப்பதால் இந்தக் கடலடி எரிமலைத் தொடரானது தொண்ணூறு கிழக்கு கடலடி மேடு என்றும் அழைக்கப் படுகிறது.
hotspotvolcanoformation.jpg
hotspotvolcanoformation.jpg

இவ்வாறு இந்தியாவுக்கு இரு புறமும் உள்ள கடல் தரையின் மேல் இரண்டு எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பதற்கு புவியியல் வல்லுனர்கள் ஒரு விளக்கத்தைக் கூறுகின்றனர்.
அதாவது இந்தியக் கண்டமானது தென் துருவப் பகுதியில் இருந்து கடல் தளத்துடன் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த பொழுது,கடல் தளத்துக்கு அடியில் இருந்த இரண்டு எரிமலைப் பிளம்புகளால் தொடர்ச்சியாகத் துளைக்கப் பட்டதாகவும் அதனால் கடல் தளத்தின் மேல் எரிமலைகள் தொடர்ச்சியாக உருவானதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
hstrack1.gif
hstrack1.gif
http://www.dr-peter-schmidt.de/hs.htm
உண்மையில் இவ்வாறு இந்தியக் கண்டமானது கடல் தளத்துடன் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் கடல் தளத்துக்கு அடியில் இருந்த எரிமலைப் பிளம்புகளால் தொடர்ச்சியாகத் துளைக்கப் பட்ட்டு இந்த இரண்டு எரிமலைத் தொடர்களும் உருவாகி இருந்தால் ,இந்த இரண்டு எரிமலைத் தொடர்களும் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும்.

ஆனால் இந்தியாவுக்கு இரு புறமும் உள்ள கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் இந்த இரண்டு எரிமலைத் தொடர்களும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருகிறது.எனவே இந்தியக் கண்டமும் கடல் தளமும் நேர் கோட்டுப் பாதையில் நகர்ந்து வந்ததா அல்லது வளைவான பாதையில் நகர்ந்து வந்ததா ?என்ற கேள்வி எழுகிறது.
neioc.jpg
neioc.jpg
difdirection
difdirection
இந்த நிலையில் இந்தியாவுக்கு கிழக்கு பகுதியில் உள்ள வங்காள விரிகுடாக் கடலுக்கு அடியில் உருவாகி இருக்கும் தொண்ணூறு கிழக்கு கடலடி மேடு என்று அழைக்கப் படும் எரிமலைத் தொடரானது நேர் கோட்டுப் பாதையில் வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது.

 இதன் படி இந்தியக் கண்டமானது வடக்கு திசையில் இருந்து தெற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக அமைகிறது. 
ஆனால் தொண்ணூறு கிழக்கு கடலடி மேட்டுப் பகுதிக்கு கிழக்குப் பகுதியில் கடல் தளமானது வடமேற்கு திசையில் இருந்து தென் மேற்கு திசையை நோக்கி பிளவு பட்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுவது ஏற்கனவே கூறிய விளக்கத்திற்கு முற்றிலும் முரணாக இருக்கிறது.எனவே உண்மையில் இந்தியக் கண்டமானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது?என்ற கேள்வி எழுகிறது.ஆனால் இந்தியக் கண்டத்திற்கு இரு புறமும் உள்ள கடல் தளத்தின் மேல் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலம் இந்தியக் கண்டமும் கடல் தளமும் நிலையாக இருப்பது ஆணித் தரமான ஆதாரம் மூலம் நிரூபணமாகியுள்ளது. 
எனவே  தெற்காசிய சுனாமியானது இந்தியக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்ததால் உருவானது என்றும் ,ஆஸ்திரேலியக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்ததால் உருவானது என்றும்,புவியியல் வல்லுனர்கள் கூறிய விளக்கம் ஏற்கத் தக்கதல்ல. 
கண்டங்கள் நிலையாக இருப்பதற்கு ஆணித் தரமான ஆதாரம்.இதே போன்று அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளமானது தொடர்ந்து உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் ஆப்பிரிக்கக் கண்டமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
அதே போன்று அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றி புதிய கடல் தளம் உருவாகி வட-தென் பகுதிகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் ஆப்பிரிக்கக் கண்டமானது வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இவ்வாறு அட்லாண்டிக் கடல் தளம் நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் கடல் தளமானது ஒரு புவியடி எரிமலைப் பிளம்பால் தொடர்ச்சியாகத் துளைக்கப் பட்டதால் அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் கானரி எரிமலைத் தொடர்கள் மற்றும் கேமரூன் எரிமலைத் தொடர்கள் உருவானதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.உண்மையில் கடல்தளும் கண்டமும் நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த இரண்டு எரிமலைத் தொடர்களும் ஒன்றுக் கொன்று இணையயாக உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறில்லாமல் இந்த இரண்டு எரிமலைத் தொடர்களும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன.எனவே எப்படி ஒரு கண்டம் ஒரே நேரத்தில் இருவேறு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க இயலும்? என்ற கேள்வி எழுகிறது.நிச்சயம் ஒரு கண்டம் ஒரே நேரத்தில் இரு வேறு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்க சாத்தியம் இல்லை.எனவே கடல் தளத்தின் மேல் ஒன்றுக்கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலம் கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலை வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகி இருக்கின்றன என்பதே உண்மை.
iknow3.jpg
iknow3.jpg
atlavc1
atlavc1
atlavc3
atlavc3
எரிமலைத் தொடர்கள் எப்படி உருவாகியது என்று தெரியவில்லை.
nafullmark2
nafullmark2
இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் உருவாகி இருக்கும் அனாகிம் எரிமலைத் தொடர்,வெல்ஸ் கிரே எரிமலைத் தொடர் மற்றும் ஸ்டிக்கைன் எரிமலைத் தொடர்களும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி  இருக்கின்றன.இந்த எரிமலைத் தொடர்கள் எப்படி உருவாகியது என்ற கேள்விக்குப் புவியியல் வல்லுனர்களிடம் விடை இல்லை .இது குறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருப்பதாக விக்கிப் பீடியா தகவல் தெரிவிக்கிறது.

''  எரிமலைத் தொடர்கள் எப்படி உருவாகியது என்று தெரியவில்லை '' 

The Wells Gray-Clearwater volcanic field began forming approximately 3,500,000 years ago and has grown steadily since then.[8]The tectonic causes of the volcanism that have produced the Wells Gray-Clearwater volcanic field are not yet clear and are therefore a matter of ongoing research. It is approximately 250 km (160 mi) inland from the north-south trending Garibaldi Volcanic Belt and is along-strike from the Nootka Fault on the British Columbia Coast, which has been subducting under theNorth American Plate at the Cascadia subduction zone.[9] The Wells Gray volcanics are mostly alkali olivine basalt, with some lava flows comprising mantle xenoliths.[8] Basalts of the Wells Gray-Clearwater volcanic field have been considered to be the easternmost expression of the Anahim Volcanic Belt.[8] However, its relationship is unknown because the age-location trend does not reach into the Wells Gray-Clearwater area, and the Wells Gray-Clearwater volcanic field is not along trend with the Anahim Volcanic Belt.[8] The Wells Gray volcanics were thought to have formed by crustal thinning and the existence of crustal penetrating structures.[8]

the wells gray evidence.png
the wells gray evidence.png
 http://en.wikipedia.org/wiki/Wells_Gray-Clearwater_volcanic_field
எனவே நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில் புவியியல் வல்லுனர்கள் முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களைத் தெரிவிப்பதில் வியப்பேதும் இல்லை.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.