ஆறாவது பேரழிவு


mex10.jpgmex10.jpg
mex8.jpgmex8.jpg
mex4.jpgmex4.jpg
ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்தது ஏன்? என்பது குறித்து இன்று வரை ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.காரணம் மீண்டும் அது போன்ற ஒரு பேரழிவு வருமா? என்பதே.
mex6mex6

புதை படிவ ஆதாரங்களின் மூலம் இது வரை ஐந்து முறை பேரழிவுகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.இதற்கு முன்பு பல முறை பேரழிவுகள் ஏற்பட்டதால்,மறுபடியும் பேரழிவுகள் ஏற்படும் என்பது எதிர்பார்க்கப் படுகிறது.ஆனால் அந்த ஆறாவது பேரழிவு எப்படிப் பட்டதாக இருக்கும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கிறது.
குறிப்பாக பூமியில்  கோடிக் கணக்கான ஆண்டு காலம் வாழ்ந்த விலங்கினங்கள் ,முற்றாக அழிந்து இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.உதாரணமாக மல்டி ட்யூபர்குலேட் என்று அழைக்கப் படும் முயல் போன்ற மூதாதை கொறித்துண்ணி வகை விலங்கினங்கள் பத்து கோடி ஆண்டு காலம் இந்த பூமியில் வாழ்ந்த பிறகு ,முற்றிலும் அழிந்து இருப்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.அதே போன்று பேரழிவுகளுக்குப் பிறகு முற்றிலும் புதிய இனவகையைச் சேர்ந்த விலங்கினங்கள் பரிணாம வளர்ச்சியில் தோன்றி வாழ்ந்து இருப்பதும்,புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.உதாரணமாக டைனோசர்களின் அழிவுக்குப் பிறகு பாலூட்டி வகை விலங்கினங்கள் பல்கிப் பெருகி இருப்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.  
இவ்வாறு ஒரு காலத்தில் வாழ்ந்த உயிரினங்கள் முற்றாக அழிந்த பிறகு முற்றிலும் புதிய வகை விலங்கினங்கள் தோன்றி வாழ்வதற்குக் கால நிலை மாற்றம் காரணம் என்று கருதப் படுகிறது.

கால நிலை மாற்றம் ஏன் ஏற்பட்டது? என்பதைப் புதைபடிவ ஆதாரங்கள் மூலம் விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

mex4.jpgmex4.jpg

டைனோசர்களின் புதை படிவங்கள் அண்டார்க்டிக்கா ,ஆஸ்திரேலியா போன்ற தீவுக் கண்டங்களிலும்,மடகாஸ்கர்,நியூ சிலாந்து ,கியூபா,போன்ற தீவுகளிலும் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில் இந்த நிலப் பகுதிகள் யாவும் ஒன்றாக இணைந்து ,ஒரே நிலப் பரப்பாகத் தொடர்ச்சியாக இருந்ததாகவும், அதன் பிறகு,தனித் தனிப் பகுதிகளாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியலாளர்கள் நம்புகின்றனர்.
plates.jpgplates.jpg
குறிப்பாக இந்தியா ,ஆஸ்திரேலியா ,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் எல்லாம் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அவ்வாறு கண்டங்கள் கடல் தளங்களுடன் நகரும் பொழுது,அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான், நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகப் புவீயலாளர்கள் நம்புகின்றனர்.
2circles.jpg2circles.jpg
ஆனால் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த ,3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து,நாசாவைச் சேர்ந்த புவியியலாளர்கள் தயாரித்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,இந்தியா,ஆஸ்திரேலியா,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.

இதன் மூலம்,கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளம் தொடர்ச்சியாக இருப்பதும்,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே பத்தாயிரம் அடி ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும்,கியூபா,மடகாஸ்கர் நியூ சிலாந்து போன்ற தீவுகளுக்கும்,தீவுக் கண்டமான அண்டார்க்டிக் கண்டத்துக்கும் டைனோசர்கள் எப்படிச் சென்றன என்ற கேள்வி எழுகிறது.

நிச்சயம் பல டன் எடையுள்ள டைனோசர்களால் கடல் பகுதியைக் கடந்து தீவுகளுக்கும்,தீவுக் கண்டமான அண்டார்க்டிக் கண்டத்துக்கும் சென்று இருக்க இயலாது.

இந்த நிலையில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் ,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில் ,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இதே போன்று இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் ,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியில்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவான எரிமலைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இதன் மூலம் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதுடன்,கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே கடல் மட்டம் உயர்ந்ததால் ,கடலின் பரப்பளவு அதிகரித்ததால்,கால நிலை மாற்றம் ஏற்பட்டு,அதன் விளைவாக டைனோசர் இனம் உள்பட அமோனிட்டிஸ் போன்ற கடல் உயிரினங்களும் தாவர வகைகளும் அழிந்து இருப்பது,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.  

டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்ததாலும்,கடலின் பரப்பளவு குறைவாக இருந்ததாலும்,வளிமண்டலத்தின் வெப்ப நிலை அதிகமாக இருந்தது.அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்குப் பதிலாக பசுமைக் காடுகள் இருந்தன.அதில் டைனோசர்களும் வாழ்ந்து இருப்பதற்கு ஆதாரன்மாகத் துருவப் பகுதிகளில் டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்த பிறகு,பரிணாம வளர்ச்சியில் தோன்றிய பாலூட்டி வகை விலங்கினங்கள், துருவப் பகுதிகளில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருப்பதற்கு ஆதாரமாகத் துருவப் பகுதிகளில் பாலூட்டிகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.  

northpole50mya.jpgnorthpole50mya.jpg
(வட துருவப் பகுதியில், ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாலூட்டிகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.)
iam5.jpgiam5.jpg
(வட துருவப் பகுதியில்,முப்பத்தி ஐந்து லட்சாம் ஆண்டுகளுக்கு முன்பு  வாழ்ந்த ஒட்டகத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது)
iam.jpgiam.jpg
(வட துருவப் பகுதியில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கம்பள மயிர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது)

அதன் பிறகு முப்பத்தி ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ,வட துருவப் பகுதியில் ஒட்டகங்கள் வாழ்ந்திருப்பதும் புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.அதே போன்று பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில்,கம்பளி மயிர் போன்று அடர்த்தியான முடிகளைக் கொண்ட யானைகள் மற்றும் காண்டா மிருகங்கள் வாழ்ந்திருப்பதும் ,புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவு அதிகரித்ததால் இந்த விலங்கினங்கள் அழிந்திருப்பதாக தொல் விலங்கியல் வல்லுனர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எனவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதால் ,கடலின் பரப்பளவு அதிகரித்துக் கொண்டு இருப்பதால்,வளிமண்டலத்தின் வெப்ப நிலை குறைந்து கொண்டு இருப்பதும் அதன் காரணமாகப் பனிப் பொழிவும் அதிகரித்துக் கொண்டு இருப்பதும்,அதன் காராமாகத் தாவர மற்றும் விலங்கினங்கள் அழிந்து கொண்டு இருப்பதும் ,ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டம் படுகிறது.
நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில்,டைனோசரின் புதை படிவம் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பது எடுத்துக் காட்டம் படுகிறது.
தற்பொழுது கடல் மட்டம் நான்கு கிலோ மீட்டராக உள்ளது.எனவே டைனோசர்களின் அழிவுக்குப் பிறகு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் கடல் மட்டம் உயர்ந்து இருக்கிறது.
கடலுக்கு அடியில் நிறைய சுடு நீர் ஊற்றுகள் இருப்பதும் அதிலிருந்து தொடர்ச்சியாக சுடு நீர் வெளிவந்து கொண்டு இருப்பதும் ஆரியப் பட்டு இருக்கிறது.ஜப்பான் நாட்டில் மாச்சு ஹிரோ நகரத்தில் உள்ள சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளிவரும் நீரும்,பூமியின் மிக ஆழமான பகுதியில் இருந்து வெளிப்படும் நீர் என்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததற்கு சுடு நீர் ஊற்று நீர் என்பதும் எடுத்துக் காட்டம் படுகிறது.
பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இருக்கும் பொழுது,அதிலிருந்து வாயுக்களும்,நீராவியும் பிரிகின்றன.இதில் நீராவியானது குளிர்ந்து நீராக உருவாகிறது.ஆரம்பத்தில் வெப்பமான பாறைக் குழம்புக் கோளமாக இருந்த பூமி படிப்படியாகக் குளிர்ந்ததால் பூமியின் மேலோடு உருவானது.இன்றும் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து கொண்டு இருப்பதால் ,அதிலிருந்து நீரும் வாயுக்களும் வெளிப் படுவதும் தொடரும்.எனவே கடலில் நீரும் சேர்ந்து கொண்டு இருக்கும்.இதனால் கடலின் மட்டமும் ,பரபளவும் அதிகரிக்கும்.அதனால் பனிப் பொழிவும் அதிகரிக்கும்.எனவே பூமியின் மேற்பரப்பில் பனிப் படலங்களின் பரவல் அதிகரிக்கும் பொழுது மேலும் பல வகைத் தாவர மற்றும் விலங்கினங்களும் அழியும்.
இந்த நிகழ்வானது தொடர்ந்து நடைபெறக் கூடியது.
எனவே பூமி முழுவதும் கடலாலும்,பனியாலும் மூடப் படும்.அப்பொழுது நிலத்தின் மேல் தாவர மற்றும் விலங்கினங்கள் முற்றாக அழியும் நிலை ஏற்படும்.
மனிதன் தனது உணவுக்கும் மருந்துக்கும்,வசிப்பிடத்தை கட்டுவதற்கும்,தாவரங்கள் மற்றும் விலங்கினங்களையே பெரிதும் சார்ந்திருப்பதால்,பூமியில் மனித குலத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாகி இருக்கிறது. 

snowballearth.jpgsnowballearth.jpg

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.