images and references for my research report








































 இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆழமற்ற கடற் கரைப் பகுதியில் வாழ்ந்த மூன்று அடி நீளமுள்ள,முதலை போன்ற, ''மெசோ சாரஸ்'' என்று அழைக்கப் படும் ஊர்வன வகை விலங்கினத்தின் புதை படிவங்களானது,அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும்,தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது. இதன் அடிப்படையில்,நிச்சயம் இந்த விலங்கால் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து இந்த இரண்டு கண்டங்களுக்கும் பரவி இருக்க இயலாது. எனவே இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, நிச்சயம் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும்.அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர் என்ற ஆராய்ச்சியாளர் ஒரு விளக்கத்தைக் கூறினார். குறிப்பாக அவர்,ஒரே கால நிலையில் வாழக் கூடிய ,வளரக் கூடிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு உலக வரை படத்தை மாற்றி அமைத்தார். அதன் அடிப்டையில்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து,பூமியின் வட துருவப் பகுதியில் இருந்து தென் பகுதி வரை தொடர்ச்சியாக,''பாஞ்சியா ''என்ற ஒரு பெரிய கண்டம் இருந்ததாகவும்,அந்தக் கண்டத்தை சுற்றிலும் ''பாந்தலாசா'' என்ற கடல் பகுதி இருந்ததாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியாப் பெருங் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததாகவும், அதனால் லாரேசியா,கோண்டுவாணா என்ற இரண்டு கண்டங்கள் உருவாகி முறையே வடக்கு மற்றும் தெற்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில்,பூமத்திய ரேகைப் பகுதியில் ''டெதிஸ்'' என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதி லாரேசியக் கண்டமானது மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யூரேசியா ஆகிய கண்டங்கள் உருவாகி முறையே மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்தாகவும்,அதனால் இந்தக் கண்டங்களுக்கு இடையில் வட அட்லாண்டிக் கடல் உருவாகி பெரிதாகிக் கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். இதே போன்று பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் பகுதிக் கோண்டுவாணாக் கண்டமும் பல பகுதிகளாகப் பிரிந்ததாகவும்,அதனால் தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார். இதில் குறிப்பாக தென் அமெரிக்கக் கண்டம் வட மேற்கு திசையை நோக்கியும் ஆப்பிரிக்கக் கண்டமானது வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்தால் ,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில்,தென் அட்லாண்டிக் கடல் உருவாகி பெரிதாகிக் கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். அதே போன்று ஆப்பிரிக்கா ,இந்தியா,ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களும் கோண்டுவாணாக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து வந்ததாகவும் வெக்னர் கூறினார். இதில் ஆப்பிரிக்கக் கண்டமானது மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால் ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாகவும்,அதே போன்று இந்தியக் கண்டமானது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால் இமய மலைத் தொடர் உருவானதாகவும் வெக்னர் கூறினார். ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாகவும் வெக்னர் கூறினார். ஆனால் கண்டங்கள் ஏன் நகர்கின்றன?கண்டங்களை நகர்த்தும் சக்தி எது?போன்ற கேள்விகளுக்கு வெக்னரால் உறுதியாக எந்த ஒரு பதிலையும் கூற இயலவில்லை. இந்த விளக்கமானது,''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது. முக்கியமாகக் கண்டங்களானது கடல் தரையைப் பிளந்து கொண்டு நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் ஏதும் கடல் தரையில் காணப் பட வில்லை. ஆனால்,கண்டங்களை சுற்றிலும் கடலுக்கு அடியில் தொடர்ச்சியாக எரிமலைகள் இருப்பதும்,அந்த எரிமலைப் பகுதிகளில் அடிக்கடி எரிமலைச் சீற்றங்களும்,நில அதிர்ச்சிகளும் ஏற்படுவது தெரிய வந்தது. இதன் அடிப்படையில்,வெக்னரின் விளக்கமானது சிறிது மாற்றி அமைக்கப் பட்டது. அதாவது கண்டங்களுக்கு இடையில் இருக்கும், அந்தக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்த பிறகு,குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி,எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னரின் விளக்கம் சிறிது மாற்றி அமைக்கப் பட்டது. இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது. குறிப்பாக பூமிக்கு அடியில் இருக்கும் வெப்பமான பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு வந்த பிறகு குளிர்ந்து இறுகியதாகவும், அதனால் கணம் அதிகரித்து மறுபடியும் கீழ் நோக்கி வளைந்து பூமிக்குள் சென்றதால், பாஞ்சியாக் கண்டத்திற்கு அடியில் பாறைக் குழம்பானது எதிரெதிர் திசைகளை நோக்கி, சக்கரங்கள் போன்று சுழன்றதாகவும் அதனால் பாஞ்சியாப் பெருங்கண்டமானது பிளவு பட்டுப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படுகிறது. இவ்வாறு ,கண்டங்களானது கடல் தளங்களுடன் பெரிய பாறைத்த தட்டுகளாக நகரும் பொழுது,அவற்றின் ஒர பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும்,அதே போன்று கடலுக்கு அடியில் ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு,திடீரென்று நகர்ந்து செல்லும் பொழுது,அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் படுவதால் சுனாமி உருவாகுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது. 000000000000000000 இந்த நிலையில்,கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது, கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாகக் ''கண்டத் தட்டு நகர்ச்சி'' கொள்கையின் படி,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்றாக இணைந்து அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும் பின்னர் அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் இன்றும் கூட இந்த இரண்டு கண்டங்களும் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கூறப் படுகிறது. தற்பொழுது இந்த இரண்டு கண்டங்களும் ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்து இருக்கிறது. இவ்வாறு பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இருந்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தற்பொழுது இருப்பது போன்று ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு விலகி நகர்ந்து இருந்தால் இந்த இரண்டு கண்டங்களும் இரண்டு தனித் தனிக் கடல் தளத்தின் மேல் இருந்த படி நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும். அவ்வாறு, இந்த இரண்டு கண்டங்களும் இரண்டு தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் உள்ள கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு, இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் உள்ள, கடல் தரைப் பகுதியில்,பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு, தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். இந்த நிலையில்,1965- ஆம் ஆண்டு முதல் 1998 – ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தைந்து ஆண்டு காலத்தில் ஏற்ப்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட ” உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தை நாசா வெளியிட்டது. அந்த ” உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கும் இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகியிருக்க வில்லை. இதன் அடிப் படையில் நாசா அமைப்பு ''கண்டங்களின் எல்லைகளைக் குறிக்கும் ஒரு வரை படத்தையும் வெளியிட்டது. அந்த வரை படத்தில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்று தெரிவிக்கப் பட்டிருகிறது. இதன் அடிப்படையில் கண்டங்கள் எல்லாம் கடல் தரையுடன் சேர்ந்து தனித் தனிப் பாறைத்த தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமானது அடிப்படை ஆதாரம் அற்ற கருது என்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. அத்துடன் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் எல்லாம் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. இந்த நிலையில்,இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பறித்த சுனாமி ஏற்பட்டதற்கு , இந்தியக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்து இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் உரசிச் சென்றதால்தான் அந்த நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது ,என்று நாசா ஆய்வு மையத்தைச் சேர்ந்த, டாக்டர் பெஞ்சமின் பாங் சா மற்றும் டாக்டர் ரிச்சர்ட் கிராஸ் ஆகியோர், 10.01,2005, அன்று நாசா அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் மூன்று மாதம் கழித்து 27.04.2005 , அன்று அதே நாசா அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில்,ஆஸ்திரேலியாக் கண்டமானது கடல் தளத்துடன் நகர்ந்து இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் உரசிச் சென்றதால்தான், அந்த நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று முன்னுக்குப் பின் முரணாக அடிப்படை ஆதாரம் எதுவும் இன்றி,கற்பனையான விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது. சிமிழு தீவு உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்ப்பட்டது. குறிப்பாகக் கடந்த 26.12.2004, அன்று சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்குப் பிறகு,சுமத்ரா தீவிற்கு அருகில் உள்ள சிமிழு என்ற தீவு கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது. அதனால் சிமிழு தீவின் வடமேற்குப் பகுதியில் புதிதாக கடற் கரை உருவாகி இருந்ததுடன் அப்பகுதியில் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் பஞ்சுகள் கடல் மட்டத்திற்கு மேலாக வெளியில் தெரிந்தன. எனவே இந்திய நிலப் பகுதியும் நகர வில்லை.ஆஸ்திரேலிய நிலப் பகுதியும் நகர வில்லை.உண்மையில் உண்மையில்,சிமிழு தீவு கடல் தரையில் இருந்து நான்கு அடி உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் அதனால் கடல் நீர் புறந்தள்ளப் பட்டு சுனாமியும் ஏற்பட்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிகிறது. கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருந்தால் அண்டார்க்டிகா ஆஸ்திரேலியா போன்ற தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில், நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டியோசாராஸ் என்று அழைக்கப் படும் டைனோசரின் புதை படிவங்களை,புவியியல் வல்லுனர்கள் மற்றும் தொல் விலங்கியல் வல்லுநர்களால் கண்டு பிடித்து இருக்கின்றனர். அதே போன்று,இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ,கெர்கூலியன் என்று அழைக்கப் படும் ஒரு கடலடிப் பீட பூமியானது எப்பொழுது உருவானது என்று அறிவதற்காகப் பிரிட்டிஷ் நாட்டுப் புவியியல் வல்லுனர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். குறிப்பாக அவர்கள் கெர்கூலியன் பீட பூமியின் மத்தியப் பகுதியில் உருவாகி இருந்த எரிமலைப் பாறைப் படிவுகளை எடுத்து அதன் தொண்மையை ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்த எரிமலைப் பாறைப் படிவுகளானது ஒன்பது கோடி ஆண்டுகளாக இருப்பது தெரிய வந்தது.அத்துடன் அந்த எரிமலைப் பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் தெரிய வந்தது.எனவே ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதுடன் ,கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பும் இருந்திருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபனாமாகிறது. எனவே அண்டார்க்டிக் போன்ற தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததும் ,கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்துமே காரணம் என்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. 00000000000000000000 எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. அத்துடன் கடல் மட்டம் ஏன் உயர்ந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்வியும் எழுகிறது. கடல் பூமிக்குள் இருந்து வந்திருக்கிறது. தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு,தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் கரியமில வாயுவானது, வளி மண்டலத்தில் கலப்பதால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது உயர்வதாகவும், அதனால் பூமி வெப்ப மடைந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் துருவப் பகுதியில் இருக்கும் பனி அடுக்குகள் உருகி நீராகிக் கடலில் கலப்பதால் கடல் மட்டமானது உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். இந்த விளக்கமானது தவறான விளக்கம் என்பது சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. குறிப்பாக புளோரிடா மாகாணக் கடல் பகுதியில்,சரிவான கண்டத் திட்டுப் பகுதியில்,அறுநூறு அடி ஆழத்தில்,''அக்ரோ போரா பால்மேட்டா'' என்று அழைக்கப் படும் படும்,சூரிய ஒளி புகக் கூடிய ஆழமற்ற குறிப்பாக பதினைந்து அடி ஆழத்தில் வாழக் கூடிய, பவள உயிரினங்களின் திட்டுகள் இருப்பதை அந்த நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர். அந்த உயிரினமானது எப்பொழுது இறந்து படிவங்களாகின என்று ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்த பவளங்களானது,பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கால கட்டமான, ''குவாட்டனாரி கால கட்டத்தில்'' ஏற்பட்ட கடல் மட்ட உயர்வால் இறந்து புதை படிவங்களாகி இருப்பது தெரிய வந்தது. இதே கால கட்டத்தில்,வட துருவ ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில்,அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்களானது ,பனிப் பொழிவால் அழிந்து இருப்பதுடன் அதன் காரணமாக அதனை உண்டு வாழ்ந்த பனி யானை இனமும் அழிந்து இருப்பதாக,கோபன் ஹேகன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்து இருக்கின்றனர். இவ்வாறு ஒரே கால கட்டத்தில், பனிப் பொழிவும்,கடல் மட்ட உயர்வும் ஏற்பட்டு இருப்பதன் அடிப்படையில், கடல் மட்ட உயர்வுக்கு, துருவப் பகுதி பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கமானது ஒரு தவறான விளக்கம் என்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. எனவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம் என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில்,நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்டீவ் ஜாக்கப்சன்,நில அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில்,பூமிக்கு மேலே இருக்கும் கடல் நீரின் அளவை விட, மூன்று மடங்கு அதிக அளவிலான நீர்,பூமிக்கு அடியில் ''ரிங்வூடைட்'' என்ற படிக வடிவில் இருக்கிறது என்றும் அதன் அடிப்படையில் அவர்,கடல் நீரானது பூமிக்கு அடியில் இருந்தே வந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில்,ஜப்பானின் நாட்டைச் சேர்ந்த, டாக்டர் யோஷிதா ,ஜப்பானில் உள்ள மாச்சுஹிரோ நகரில் உள்ள சூடு நீர் ஊற்றுகளில் இருந்து வெளிவந்த நீரை சேகரித்து பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில்,அந்த நீரானது,பூமியின் ஆழமான பகுதியில் இருந்த பாறைக்கு குழம்பில் இருந்து வெளிவந்த நீர் (magmatic water) என்று தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் நிலவில் நீரானது பனிக் கட்டி வடிவில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அந்த நீரானது.நிலவின் ஆழத்தில் இருக்கும் பாறைக்கு குழம்பில் இருந்து பிரிந்த நீர் மேற்பகுதிக்கு வந்து பணிக்கு கட்டியாக மாறி இருப்பதாக நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர். ஆரம்பத்தில் பாறைக் குழம்பு கோளமாக இருந்த பூமியின் மேற்பகுதி குளிர்ந்ததால்,புவித் தரை உருவானது.இந்த நிகழ்வில் பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீர் மற்றும் வாயுக்களால், ஆழமற்ற கடலும் ,மெலிதான வளி மண்டலமும் உருவானது. அதன் பிறகு, புவிப் பரப்புக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்த பொழுது,அதில் இருந்து பிரிந்த நீரானது சூடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறி கடலில் கலந்ததால் ,கடல் ஆழமானது. அதே போன்று பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த வாயுக்கள் புவியின் மேற்பகுதிக்கு வந்ததால்,வளி மண்டலத்தின் அடர்த்தியும் அதிகமானது. இவ்வாறு பூமிக்கு அடியில் இருந்த அடர்த்தி அதிகமான பாறைக்கு குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் பிரிந்ததால் உருவான பாறைத்த தட்டுகளின் அடர்த்தியானது குறைவாக இருந்தது. அடர்த்தி அதிகமான கடல் நீரில் உருவாகும் பனிப் பாறைகளும் அடர்த்தியானது குறைவாக இருப்பதால்,அந்தப் பாறைகளானது கடலின் மேற்பரப்பின் மேல் உயர்கிறது. அதே போன்று பூமிக்கு அடியில் இருக்கும் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் உருவான அடர்த்தி குறைந்த பாறைத்த தட்டுகள் மேல் நோக்கி உயந்ததால்,கண்டங்கள் உருவாகின. கடலின் ஆழமும் அதிகரித்தது. எனவே ஆஸ்திரேலியா, அண்டார்க்டிகா போன்ற தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததும் ,கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்துமே காரணம் என்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இதே போன்று, கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் அடிப்படையில்,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நிலா அதிர்ச்சிகளுக்கும் சுனாமிக்கும்,புவியியல் வல்லுநர்களால் விளக்கம் கூற இயல வில்லை. குறிப்பாகக் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் படி,அட்லான்டிக் கடலின் மத்திய பகுதியில்,வடக்கு தெற்கு திசை நோக்கி நீண்டு இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு பாறைக்கு குழம்பு தொடர்ந்து வந்து குளிர்ந்து இறுக்ப் புதிய கடல் தளமாக உருவாக்கி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால்,அட்லான்டிக் கடல் பகுதி பெரிதாகிக் கொண்டு இருப்பதாகவும்,அட்லான்டிக் கடளுக்கு இரு புறமும் இருக்கும் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர். குறிப்பாக,கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் படி, வட அமெரிக்கக் கண்டமானது, அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. இதே போன்று, தென் அமெரிக்கக் கண்டமானது,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,கடல் தளத்துடன்,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. இந்த விளக்கம் உண்மையென்றால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில்,இந்த இரண்டு கண்டங்களையும் பிரிக்கும் வண்ணம்,பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். ஆனால்,நாசா வெளியிட்ட ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'',அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. இதன் அடிப்படியில்,அந்த எல்லை பகுதியானது, ''வரையறை செய்யப் படாத எல்லை பகுதி'' (undefined boundary)என்று அழைக்கப் படுகிறது. குறிப்பாகக் கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் படி ,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது,குறைவானதாகவும் அதே போன்று,மத்தியப் பகுதியில் இருந்து தொலைவில் செல்லச் செல்ல,ஒவ்வொரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகளின் தொன்மையானது,படிப்படியாக அதிகரிக்க வேண்டும். இந்த நிலையில்,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,பூமியில் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ''பேலியோடிக்டின்'' என்ற கடல் உயிரியின் புதை படிவங்கள் இருப்பதை ''ஆல்வின்'' என்ற நீர் மூழ்கிக் கலன் மூலம் சென்ற ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதன் மூலம் ,கடந்த ஐந்து கோடி ஆண்டு காலமாகவே,அந்த எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து இருக்க வில்லை என்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருக்கும்,மலைத் தொடரின் உச்சிப் பகுதியாகவும்,கடல் மட்டத்துக்கு மேலாக எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் தீவுகளாகவும் இருக்கும்,புனித பீட்டர் பாறைத் தீவு மற்றும் புனித பால் பாறைத் தீவுகளில் இருந்து எடுக்கப் பட்ட,பாறைகளின் தொன்மையை மதிப்பிட்ட பொழுது,அந்தப் பாறைகளின் தொன்மையானது,நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. பூமியில் இது வரை கண்டு பிடிக்கப் பட்ட பாறைகளில் அதிக தொன்மையான பறையின் மதிப்பானது நானூற்றி நாற்பது கோடி ஆண்டுகள் என மதிப்பிடப் பட்டுள்ளது. அதன் அடிப் படையில்,பூமியானது நானூற்றி ஐம்பது முதல் நானூற்றி அறுபது கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த நிலையில், புதிதாகக் கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருக்கும் மலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் தீவில் உள்ள பாறைகளின் தொன்மையானது, நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பதன் மூலம்,பூமி தோன்றிய காலத்தில் இருந்தே கடல் தளமானது நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. அத்துடன் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. எனவே நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் என்ன காரணம் என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில்,தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கொள் படங்கள் மூலம்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. தெற்காசிய சுனாமிக்குப் பிறகு,சுமத்ரா தீவுக்கு அருகில் இருக்கும் சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது,கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து காணப் பட்டது.அதனால் அந்தப் பகுதியில் சிறிய அளவிலான கடற் கரை உருவாகி இருந்தது. அத்துடன் அந்தப் பகுதியில்,அது வரை கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்களானது வெளியில் தெரிந்தன. அதே சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, ஜப்பான் நாட்டின் ஆலோஸ் செயற்கைக் கோள் மூலம், தரை மட்ட மாறுபாடுகள் பதிவு செய்யப் பட்டது.அப்பொழுது,நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வரப்புகளை வெட்டியதை போன்ற மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்தது. இதே போன்ற,தரைப் மட்ட மாறுபாடுகளானது,ஆப்பிரிக்க நாட்டின் கிழக்குப் பகுதியில்,இருக்கும் எரிமலைகளைச் சுற்றிலும் ஏற்பட்டு இருப்பதும் செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் தெரிய வந்து இருக்கிறது. குறிப்பாக.பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது ஒரு எரிமலைக்குள் நுழையும் பொழுது,எரிமலையின் உயரம் அதிகரிக்கும் பொழுது,எரிமலையைச் சுற்றி இருக்கும் நிலப் பகுதிகளும் சில சென்டி மீட்டர் உயர்கிறது. அதே போன்று, எரிமலைக்குள் இருந்து பாறைக்கு குழம்பு வெளியேறும் பொழுது,எரிமலையின் உயரம் குறையும் பொழுது,எரிமலையைச் சுற்றி இருக்கும் நிலப் பகுதியும் சில சென்டி மீட்டர் இறங்குவதால்,எரிமலைகளைச் சுற்றிலும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேடு பள்ள வளையங்கள் உருவாகுவதாக,எரிமலை இயல் வல்லுநர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில்,இத்தாலி நாட்டில் ''லா அகுலா'' என்ற நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது,நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது. அத்துடன்,அப்பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு,பூமிக்கு அடியில் இருந்து, எரிமலைகளில் இருந்து வெளிப் படும், ''ரேடான்'' என்ற வாயு கசிந்து இருப்பதையும், ஜியோவானி என்ற ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்து இருக்கிறார். இதே போன்று,ஜப்பான் நாட்டில்,ஹோன்சூ தீவில் நில அதிர்ச்சியம் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருந்தது. அத்துடன்,அந்த நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்து இருப்பது வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இது குறித்து விளக்கம் அளித்த நாசாவைச் சேர்ந்த டாக்டர்.டிமிட்ரி ஒசொ னோவ், அப்பகுதியில்,பூமிக்கு அடியில் இருந்து, கதிரியக்கத் தன்மை உடைய ''ரேடான்'' வாயு கசிந்து இருக்கலாம்.ரேடான் வாயுவானது கதிரியக்கத்தை தன்மை உடையதால்,காற்றில் உள்ள எலெக்ட்ரான்கள் நீக்கப் பட்டு இருக்கலாம்,இந்த நிகழ்வானது ஒரு ''வெப்ப உமிழ்வு வினை'' என்பதால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது, அசாதாரணமாக உயர்ந்து இருக்கிறது.என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் பூமிக்கு அடியில், எரிமலை வெடிப்பு ஏற்பட்டதாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது ஆதார பூர்வமாக தெளிவாக நிரூபணமாகிறது. இந்த நிலையில்,கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில்,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு,ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில் கண்டு பிடிக்கப் பட்ட ஏழு கோடி ஆண்டுகள் தொன்மையான டைனோசர்களின் புதை படிவங்களும்,புவியியல் வல்லுநர்களால் விளக்கம் கூற இயல வில்லை. குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் இருக்கும்,கரீபியன் எரிமலைத் தீவுக்கு கூட்டத்தில் இருக்கும் ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கூட அமெரிக்கப் புவியியல் வல்லுநர்களால், கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் அடிப்படையில்,விளக்கம் கூற இயல வில்லை. ஏனென்றால்,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் இருக்கும்,கரீபியன் தீவுக்கு கூட்டம் எப்படி எங்கே உருவானது என்ற கேள்விக்கு, அமெரிக்கப் புவியியல் வல்லுனர்களால் விளக்கம் கூற இயல வில்லை. சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,பசிபிக் கடல் பகுதியில்,குறிப்பாகக் காலபாகஸ் தீவுக் கூட்டம் இருக்கும் இடத்தில்,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,எரிமலைச் செயல் பாட்டால் உருவானதாகவும்,அதன் பிறகு கரீபியன் தீவுக் கூட்டமானது,ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,நம்புகின்றனர். இந்த நிலையில்,அமெரிக்கக் கண்டங்களானது,எதிர் திசையில்,தனித் தனியாக மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்ததாகவும்,அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று அமைந்து இருக்கும்,மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது,உருவாகி இருக்க வில்லை என்றும்,அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடைவெளி இருந்ததாகவும்,அந்த இடைவெளிக்குள்,கரீபியன் பாறைத் தட்டானது நுழைந்து விட்டதாகவும்,அதன் பிறகு கடலுக்கு அடியில் இருந்து மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது உயர்ந்ததால்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,நிலத் தொடர்பு ஏற்பட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர். ‘பசிபிக் கடல் மாதிரி’ என்று அழைக்கப் படும்,இந்தக் கருத்தின் படி, கரீபியன் தீவுக் கூட்டமானது, கிழக்கு திசையை நோக்கி, நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. குறிப்பாகக் கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி, வரிசையாக எரிமலைகள் உருவாகி இருக்கின்றன. இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டத்துக்கு கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி எரிமலைகள் உருவாகி இருப்பதற்கு,பசிபிக் கடலின் மாதிரிப் படி ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது,கரீபியன் தீவுக் கூட்டமானது,கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த அட்லாண்டிக் கடல் தளமானது,கரீபியன் பாறைத் தட்டுக்கு அடியில் சென்ற பிறகு,வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாக உருவாகி,மேல் நோக்கி உயர்ந்து,கடல் தளத்தைப் பொத்துக் கொண்டு ,கடல் தளத்துக்கு மேலே எரிமலைகளாக உருவானதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர். குறிப்பாக அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,பாலம் போன்று தொடர்ச்சியாக இருக்கும் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,உருவாகி இருக்க வில்லை என்றும் அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடை வெளி இருந்ததாகவும்,அப்பொழுது கரீபியன் பாறைத் தட்டானது,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,நுழைந்ததால் தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர். ஆனால், தற்பொழுது,மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள,நிகரகுவா நாட்டின் மலைப் பகுதியில்,மிட் கிரட்டேசியஸ் என்று அழைக்கப் படும்,அதாவது ஒன்பது முதல் பனிரெண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,ஆர்னிதோபோட் என்ற இனத்தைச் சேர்ந்த டைனோசரின் எலும்புகளை, கிரிகரி எஸ் ஹோர்னி மற்றும் புருஸ் சிம்மன்சன் ஆகியோர் , 1971 ஆம் ஆண்டில்,கண்டு பிடித்து இருக்கின்றனர். இதன் மூலம்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க கண்டங்களுக்கு இடையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது தொடர்ச்சியாக இருந்திருப்பதுடன்,அதன் வழியாக டைனோசர்களின் போக்குவரத்தும் நடை பெற்று இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. இதே போன்று,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவில் உள்ள ஆர்கனாஸ் மலையின் மேற்குப் பகுதியில்,கிரேட்டேசியஸ் என்று அழைக்கப் படும் கால கட்டத்தைச் சேர்ந்த,அதாவது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,தாவர உண்ணி டைனோசரின் எலும்புகளை, கியூபா நாட்டின் தேசிய இயற்கை அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல்விலங்கியல் வல்லுனர்களான மானுவேல் இல்டுரால்டி வின்சென்ட் மற்றும் ஜுல்மா காஸ்பரினி ஆகியோர் மேற்கொண்ட கண்டு பிடித்து இருக்கின்றனர். இதன் மூலம்,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததால்,அமெரிக்கக் கண்டங்களுக்கும்,கரீபியன் தீவுகளுக்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருப்பதுடன்,அதன் வழியாக டைனோசர்களின் போக்குவரத்தும் நடை பெற்று இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. எனவே, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடைவெளி இருந்ததாகவும்,அதன் வழியாக கரீபியன் பாறைத் தட்டானது நுழைந்து விட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கங்கள் யாவும் அடிப்படை ஆதாரமற்ற கற்பனைக் கருத்து என்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. இந்த நிலையில், வேறு சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து இருக்கலாம் என்றும் ஒரு கருத்தைக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கருத்தானது ,’அட்லாண்டிக் கடல் மாதிரி’ என்று அழைக்கப் படுகிறது. ஆனால் பசிபிக் கடல் பகுதியில் இருக்கும் காலபாகஸ் தீவுக் கூட்டம் போன்று அட்லாண்டிக் கடல் பகுதியில்,குறிப்பிடத் தக்க அளவுக்கு எரிமலைத் தீவுக் கூட்டம் எதுவும் இல்லை. எனவே குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டமானது,அட்லாண்டிக் கடல் பகுதியில் எங்கே உருவானது? என்று, ’அட்லாண்டிக் கடல் மாதிரி’யை நம்பும் புவியியல் வல்லுனர்களால் கூற இயலவில்லை. எனவே, கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கிய .எரிமலைப் பிளம்புகளானது,காலப் போக்கில்,மறைந்து விட்டிருக்கலாம் என்று, கடல் மாதிரி’யை நம்பும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர். ஆனாலும்,கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி வரிசையாக உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது எப்படி உருவானது? என்று,’அட்லாண்டிக் கடல் மாதிரி’யை நம்பும் புவியியல் வல்லுனர்களால், விளக்கம் கூற இயல வில்லை. இந்த நிலையில், இன்னும் சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது, தற்பொழுது இருக்கும் இடத்திலேயே, உருவாகி இருக்கலாம் என்றும் ஒரு புதிய கருத்தை முன் மொழிந்து இருக்கின்றனர். ஆக மொத்தம்,கரீபியன் தீவுக் கூட்டமானது,ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும்,புவியியல் வல்லுனர்களுக்கு,உண்மையில் அந்தத் தீவுக் கூட்டமானது, எங்கே உருவாகி,எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று தெரிய வில்லை என்பதே உண்மை. இந்த நிலையில்,கடந்த 12.1.2010 அன்று,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும், USGS என்று அழைக்கப் ,அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனர்கள்,அமெரிக்கா மற்றும் கரீபியன் பாறைத் தட்டுகள் நகர்ந்ததால்,பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால்தான்,ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டதாக ஒரு தவறான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர். குறிப்பாக, கரீபியன் தீவுக் கூட்டமானது ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக, USGS என்று அழைக்கப் ,அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனர்கள்,நம்புகிறார்கள்,ஆனால் கரீபியன் பாறைத் தட்டானது எங்கே உருவாகி,எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று, USGS மைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியவில்லை. எனவே ,கரீபியன் பாறைத் தட்டானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று நேரிடையாகக் கூறாமல்,வட அமெரிக்கக் கண்டமானது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் கரீபியன் பாறைத் தட்டானது,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில்,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதகவும்,அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக, USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இது எப்படி ஒரு சரியான விளக்கமாக இருக்க முடியும்? உண்மையில், அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில் என்ன நடக்கிறது என்றே , USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியாது என்பதே உண்மை. அந்த உண்மையை மறைப்பதற்காகவே, USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் பாறைத் தட்டானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாகக் கூறாமல் சுற்றி வளைத்து விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர் என்பதே உண்மை. இதன் மூலம், ஹைத்தி தீ வில், ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் என்ன காரணம் என்பது, USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களால் கண்டது தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் விளக்கம் கூற இயலவில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதே போன்று,ஆர்க்டிக் டைனோசர்களின் புதை படிவங்களுக்கு புவியியல் வல்லுநர்களால் விளக்கம் கூற இயல வில்லை. துருவப் பகுதிகளில் டைனோசர்கள் ஏன் அழிந்தன? இதே போன்று,கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில்,ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில்,கண்டு பிடிக்கப் பட்ட, பனிரெண்டு வகையான டைனோசர்களின் எலும்புத் புதைப்படிவங்களுக்கும்,புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுநர்களால் விளக்கம் கூற இயல வில்லை. ஏனென்றால், இந்தக் கருத்தின் படி,வட அமெரிக்கக் கண்டத்தின், வட பகுதியில் இருக்கும், அலாஸ்காவின் வட பகுதியும்,அதே போன்று ஆசியக் கண்டத்தின் வட பகுதியான, சைபீரியாவின் வட பகுதியும்,கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான, ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் வந்து சேர்ந்து விட்டது. இந்த நிலையில், அலாஸ்கா மற்றும் சைபீரியாவில், ''ஏழு கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,புவியியல் மற்றும் விலங்கியல் வல்லுநர்களால் விளக்கம் கூற இயல வில்லை. ஏனென்றால்,பூமியானது,தன் அச்சில் இருப்பது மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளில் நான்கு மாத காலம் தொடர்ச்சியாக பகலும்,அதே போன்று நான்கு மாத காலம் தொடர்ச்சியாக இரவும் நீடிக்கிறது. இவ்வாறு நான்கு மாத காலம் தொடர்ச்சியாக இரவு நீடிக்கும் பொழுது வெப்ப நிலையானது மைனஸ் எண்பது டிகிரிக்கு கீழே செல்கிறது. எனவே டைனோசர்கள் குடிக்க நீர் கூட கிடைக்காமல் அனைத்தும் பனிக் கட்டி ஆகி விடும். அத்துடன் நான்கு மாத காலம் தொடர்ச்சியாக இரவு நீடித்தால், தாவரங்களானது சூரிய ஒளியின்றி,ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது, எனவே யானைக் கூட்டத்தை விட பல மடங்கு தாவரங்களை உண்ணக் கூடிய டைனோசர்களின் கூட்டம் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்தன என்ற கேள்விக்கு ஆராய்ச்சியாளர்களால் இன்று வரை விளக்கம் கூற இயல வில்லை. ஒரு வேளை, டைனோசர்களானது பனி மான்களை போன்று,குளிர்கால இடப் பெயர்ச்சி மேற்கொண்டு இருக்கலாம் அல்லது ,பனிக் கரடிகளைப் போன்று,குளிர் கால நீண்ட தூக்கத்தை மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பப் பட்டது. ஆனால் எரிக்சன் என்ற ஆராய்ச்சியாளர் மேற்கொண்ட ஆய்வில்,டைனோசர்களின் முட்டைகள் பொரிய ''ஆறு மாத காலம்'' தேவைப் படும் என்பது தெரிய வந்துள்ளது. அதன் பிறகும் இள வயது ,டைனோசர்கள் தனியாக இயங்க ''ஒரு ஆண்டு காலம்'' தேவைப் பட்டு இருக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது. எனவே,டைனோசர்களானது ஆர்க்டிக் பகுதியில்,ஆண்டு முழுவதும் தங்கி வாழ்ந்து இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொரிய ,முப்பது முதல் முப்பத்தி நான்கு சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்ப நிலையானது ''பத்து சென்டி கிரேட் டிகிரி'' ஆகும். அத்துடன் ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட ''வாத்து அலகு டைனோசரின்'' எடையானது ஏழு டன்,யானையை விட பல மடங்கு பெரிய டைனோசர்களின் முட்டைகளானது ''அடை காத்தல் '' மூலம் பொரிந்து இருக்காது. எனவே டைனோசர்கள் காலத்தில்,ஆர்க்டிக் பகுதியில் அதிக வெப்ப நிலை அதிகமாக இருந்திருப்பது ,ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட,டைனோசர்களின் முட்டைகள் மற்றும் இள வயது டைனோசர்களின் புதை படிவங்கள்மூலம் உறுதியாகிறது. பூமி குளிர்ந்து கொண்டு இருக்கிறது. பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து பறையாகும் பொழுது அதிலிருந்து பிரியும் நீரே சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது. பூமிக்கு அடியில் பெரும் பகுதியாக பாறைக் குழம்பு இருப்பதுடன்,பூமியானது தொடர்ந்து குளிர்ந்து கொண்டு இருப்பதால் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில் இருந்து நீரும் தொடர்ந்து பிரிந்து சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலந்து கொண்டு இருப்பதும் தொடரும். எனவே கடல் மட்டமானது தொடர்ந்து உயர்ந்து நிலப் பகுதிகளை எல்லாம் மூழ்கடிக்கும்.இதனால் தவற மற்றும் விலங்கினங்களின் வாழ்க்கை முற்றிலுமாக அழியும். கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது, கடலின் பரப்பளவும் குறைவாக இருந்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது அதிகமாக இருந்ததால்,துருவப் பகுதிகளில் கூட அதிக வெப்ப நிலை நிலவி இருந்ததால், துருவப் பகுதிகளில் டைனோசர்கள் கூட்டத்துக்கு உணவளிக்கக் கூடிய அளவுக்கு அடர்த்தியான காடுகள் உருவாகி இருந்தது. இந்த நிலையில்,பூமிக்கு அடியில் இருந்த பாறைக் குழம்பானது தொடர்ந்து குளிர்ந்ததால் அதில் இருந்து பிரிந்த நீரானது கடலில் சேர்ந்ததால் கடலின் உயரமும் பரப்பளவும் அதிகரித்ததால்,வளி மண்டலத்தில் குளிர்ச்சி அதிகரித்தது. அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகியது. அதனால் காடுகள் அழிந்தது. அதனால் அந்தக் காடுகளில் வாழ்ந்த டைனோசர் போன்ற விலங்கினங்களும் அழிந்தன. பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்,இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது மடகாஸ்கர்,சைப்ரஸ்,சிசிலி,மால்டா,கிரிட்டி,ஆகிய தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. உதாரணமாக மடகாஸ்கர் தீவில் ஐம்பதுக்கும் அதிகமான குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது. அதன் உடலும் நீண்டு குறுகி இருப்பதுடன் கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு வந்திருக்காலாம் என்ற விளக்கம் மிகவும் அசாதாரணமாக இருக்கிறது. லெமூர் குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால் மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய லெமூர்கள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது.ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது. இந்த நிலையில் புதை படிவங்கள் மூலம் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் ஒரு குள்ள வகை நீர் யானை மடகாஸ்கர் தீவில் இருந்த ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அப்படியே ஆனாலும் கூட மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும் என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அவ்வாறு வந்த பிறகு இரண்டு முறையும் நீர் யானைகள் இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம். இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது. இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால் அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது. அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த பெரிய நீர் யானை தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால் குள்ள வகை நீர் யானையான மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது. எனவே மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன. இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது. எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும் நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள் ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,ஏழு தீவுகளிலும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது இயற்கைக்கு மாறான விளக்கம். எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது. குறிப்பாக பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி அங்கி இருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.தற்பொழுது கடல் மட்டமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது.இந்த நிலையில்,இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதன் மூலம் நிலா மட்டத்தை விட கடல் மட்டம் வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால் எதிர்காலத்தில் கண்டங்கள் யாவும் கடலால் மூழ்கடிக்கப் படும். நன்றி! விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.