அமெரிக்காவையே முடக்கிய பனிப் பொழிவு ஏன் ஏற்பட்டது?


pr2.jpgpr2.jpg
கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களில் அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களில் கடுமையான பனிப் பொழிவு ஏற்பட்டது.
எதிர்பாராத அந்த நிகழ்வால் அமெரிக்காவே முடங்கிப் போனது.
pv98.pngpv98.png
தற்பொழுது அமெரிக்காவைத் தாக்கிய பனிப் பொழிவுக்கு 'குளோபல் வார்மிங்' கருத்தின் அடிப்படையில் விளக்கம் கூறப் படுகிறது.
pv44.jpgpv44.jpg
pr3.jpgpr3.jpg
குறிப்பாக உலகின் வெப்ப நிலை உயர்ந்ததால், வட துருவப் பகுதிக் கடலின் மேற்பரப்பில் இருந்த பனிப் படலங்கள் உருகி விட்டதாகவும், அதனால் வட துருவப் பகுதியில் ,கடலின் மேற்பரப்பில் இருந்த கடல் நீரானது, சூரிய ஒளியால் ஆவியாகி மேல் நோக்கி உயர்ந்ததாகவும், அதனால் வழக்கமாக துருவப் பகுதியில், வளி மண்டல மேலடுக்கில் வீசும் துருவச் சூறாவளியில் பாதிப்பு ஏற்பட்டதால்,அந்தத் துருவச் சூறாவளியின் பாதை மாறி, வட அமெரிக்கக் கண்டம் முழுவதும் பரவலாகப் பரவிப் பனிப் பொழிவை ஏற்படுத்தியதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
pv107.jpgpv107.jpg
ஆனால் பிரிட்டனின் வானிலை ஆய்வு மையத்தினர்,வெப்ப நிலையைப் பதிவு செய்யும் 30,000 நிலையங்களின் பதிவுகளின் மூலம்,கடந்த 1997 ஆம் ஆண்டு முதல், 2014 ஆம் ஆண்டு வரையிலான,பதினேழு ஆண்டு காலத்தில், உலகின் வெப்ப நிலை உயராமல் இருந்திருப்பதைக் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
pr1.jpgpr1.jpg

எனவே கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதங்களில் அமெரிக்காவில் பரவலாகப் பனிப் பொழிவு ஏற்பட்டதற்கு, குளோபல் வார்மிங்' கருத்தின் அடிப்படையில் கூறப் பட்ட விளக்கம் தவறு.

குறிப்பாகக் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் , வட துருவப் பகுதியில் பனிப் படலங்கள் மறைந்து விடும் என்பது,நாசாவைச் சேர்ந்த  'குளோபல் வார்மிங்'ஆராய்ச்சியாளர்கள் டாக்டர்,விஸ்லாவ் மாஸ்லோவ்ஸ்கி மற்றும் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருப்பதாகக் கடந்த 2007 ஆம் ஆண்டு, பி பி சி செய்தி நிறுவனம் ஒரு தகவலை வெளியிட்டது.
cc13.jpgcc13.jpg

ஆனால்'குளோபல் வார்மிங்' ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்ததற்கு முற்றிலும் மாறாகக் கடந்த 2013 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், வழக்கத்திற்கு மாறாக ஆர்க்டிக் பகுதியில், 533,000 சதுர மைல் பரப்பளவுக்கு, அதாவது 29 சதவீதம் அதிகமாகப் பனிப் படலங்கள் உருவாகி இருந்திருப்பது, நாசாவின் செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
cc12.jpgcc12.jpg

எனவே அமெரிக்காவில் பரவலாகப் பனிப் பொழிவு ஏற்பட்டதற்கு, ஆர்க்டிக் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் உருவான பனிப் படலங்களே காரணம் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.