பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.


கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.


தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கண்டத் தட்டுகள் என்று அழைக்கப் படும் பெரிய பாறைத் தட்டுகளின் மேல் இருந்தபடி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பாறைத் தட்டுகளின் விளிம்புகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் நம்பப் படுகிறது.
இதே போன்று ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் இன்னொரு பாறைத் தட்டு செல்வதால்தான் சுனாமி ஏற்படுகிறது என்றும் நம்பப் படுகிறது.
இந்த நிலையில் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது மூன்று விதமான ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆதாரம் ஒன்று

moon.gif

தற்பொழுது ஒரே வகையான விலங்கினங்களின் புதை படிவங்கள் பல்வேறு கண்டங்களில் காணப் படுவதன் அடிப்படையில் கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்து பின்னர் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
உதாரணமாக இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு குளம் குட்டை போன்ற நீர் நிலைகளின் அருகில் வாழ்ந்து மடிந்த முதலை போன்ற ஒரு தரை வாழ் விலங்கின் புதை படிவங்களை அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்ட தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் இருந்து தொல் விலங்கியல் வல்லுனர்கள் கண்டு பிடித்தனர்.

lago.png
இதன் அடிப்படையில் தரையில் வாழ்ந்த ஒரு விலங்கு நிச்சயம் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தை அடைந்திருக்க இயலாது என்று விளக்கம் கூறி... இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று அழைக்கப் படும் ஒரு பெரிய கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் பின்னர் அந்தப் பெருங் கண்டம் இரண்டாகப் பிரிந்து லாரேசியா மற்றும் கோண்டுவாணா என்ற இரண்டு கண்டங்களாகப் பிரிந்த பிறகு மறுபடியும் அந்த இரண்டு பெருங் கண்டங்களும் பிரிந்ததால் தற்பொழுது உள்ள ஏழு கண்டங்களும் உருவானதாக விளக்கம் கூறப் படுகிறது.

deepdino3.jpg
இந்த நிலையில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைத் துண்டுகளில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாக் கண்டத்தில் பரவலாக வாழ்ந்து மடிந்த பிளேட்டியோ சாராஸ் என்ற டைனோசரின் புதை படிவங்கள் இருப்பது நார்வே நாட்டு ஆராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப் பட்டு ஜெர்மன் நாட்டு தொல் விலங்கியல் வல்லுனர்களால் உறுதி செய்யப் பட்டு இருக்கிறது.
எனவே இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதுடன் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய நிலத் தொடர்பு இருந்திருப்பதும் நிரூபணமாகிறது.
இதே போன்று இந்தியப் பெருங் கடலிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியின் மத்தியப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட ஒன்பது கோடி ஆண்டுகள் தொண்மையான பாறைப் படிவுகளில் மரங்களின் புதை படிவங்கள் விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் பிரிட்டிஷ் நாட்டு விஞ்ஞானிகள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
எனவே ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பது நிரூபணமாகிறது.
எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கு இடையில் நிலத் தொடர்பு இருந்து அதன் வழியாகவே விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்குப் பரவியிருக்கின்றன.
ஆனால் ஒரே வகையான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களில் காணப் படுவதற்கு கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்து பின்னர் பிரிந்து நகர்ந்திருக்கின்றன என்று விளக்கம் கூறப் படும் நிலையில் உண்மையில் கண்டங்கள் நிலையாக இருப்பது நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆதாரம் இரண்டு
moon1.jpg
கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இருந்து பின்னர் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் ஆராய்ச்சியாளர்கள் கண்டங்கள் எப்படி நகர்கின்றன என்பதற்கு ஒரு விளக்கத்தை முன்வைக்கின்றனர்.
ஆதாவது அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகுவதாகவும் இதே போன்று மறுபடியும் மத்தியப் பகுதிக்கு பாறைக் குழம்பு வரும் பொழுது ஏற்கனவே மத்தியப் பகுதியில் உருவாகி இருந்த பழைய கடல் தளப் பாறைகளை இரு புறமும் நகர்த்தி விட்டு மறுபடியும் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளப் பாறைகளாக உருவாகுவதாகவும் விளக்கம் கூறுகின்றனர்.
இது போன்று தொடர்ந்து நடை பெறுவதால் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தட்டு உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் இதனால் அட்லாண்டிக் கடலின் இருபுறமும் உள்ள கண்டங்களும் கடல் தட்டின் மேல் இருந்தபடி கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.

moon2.jpg
குறிப்பாக வடக்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தட்டின் மேல் இருந்தபடி வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
அதே போன்று தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்தின் மேல் இருந்தபடி தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
இவ்வாறு வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் உண்மையில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி தனித் தனியாக முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் பாறைத் தட்டின் மேல் இருந்தபடி நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் பகுதியில் இருந்து அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் அவ்வாறு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது, கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில் உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து, நாசா ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்களால் வரையப் பட்ட, உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே கண்டங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில் கண்டங்கள் நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.
எனவே ஒரே வகையான விலங்கினங்களின் புதை படிவங்கள் பல்வேறு கண்டங்களில் காணப் படுவதற்கு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கு இடையில் நிலத் தொடர்பு இருந்ததே காரணம் என்பதும் கடல் தரையில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசரின் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் மூலம் நிரூபணமாகிறது.
எனவே கண்டங்கள் எல்லாம் கண்டத் தட்டுகளின் மேல் இருந்தபடி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று கூறப் படும் விளக்கம் முற்றிலும் தவறு என்பதும் நிரூபணமாகிறது.

இந்த நிலையில் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ரேடியோ கதிர் வீச்சு முறையில் தரை மட்ட மாறு பாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆதாரம் மூன்று

origo.jpg

அமெரிக்காவில் ஆரிகன் மாகாணத்தில் மூன்று சகோதரிகள் என்று அழைக்கப் படும் மூன்று எரிமலைகள் அமைந்து இருக்கின்றன.
அந்த எரிமலைப் பகுதியை எரிமலை இயல் வல்லுனர்கள் செயற்கைக் கோள் மூலம் கண்காணித்து வந்தனர்.
குறிப்பாக அந்த எரிமலைப் பகுதியின் மேல் பறந்து செல்லும் செயற்கைக் கோளில் இருந்து ரேடியோ கதிர்கள் தரையை நோக்கி அனுப்பப் பட்டது.
அவ்வாறு தரையை நோக்கி அனுப்பப் பட்ட ரேடியோ கதிர்கள் தரையில் உள்ள மேடு பள்ளங்களில் பட்டு திரும்பவும் செயற்கைக் கோளை வந்தடைந்த நேரம் துல்லியமாக பதிவு செயப் பட்டு, தரைக்கும் செயற்கைக் கோளுக்கும் இடையில் உள்ள தூரம் பதிவு செய்யப் பட்டு, தரையின் மேடு பள்ளங்கள் துல்லியமாக வரை படமாகத் தயாரிக்கப் பட்டது.
இதே போன்று தயாரிக்கப் பட்ட செயற்கைக் கோள் பதிவுகளை எரிமலை இயல் வல்லுனர்கள் வழக்கம் போல் ஆய்வு செய்த பொழுது, மூன்றாவது எரிமலைக்குத் தென் பகுதியில் இருபது கிலோ மீட்டர் சுற்றளவிற்கு நிலம் பத்து சென்டி மீட்டர் உயர்ந்து இருப்பது பதிவாகி இருந்தது.
குறிப்பாக அந்த உயர்வானது 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2000 ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான கால கட்டத்தில் உருவாகி இருப்பதும் தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் அந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த எரிமலை இயல் வல்லுனர்கள், அந்த இடத்தில் பூமிக்கு அடியில் ஏழு கிலோ மீட்டர் ஆழத்தில் இருபதாயிரம் நீச்சல் குளத்தை நிரப்பும் அளவிற்கு பாறைக் குழம்பு திரண்டு ஒரு ஏரி போல உருவாகி இருப்பதாகவும், அந்தப் பகுதியில் பாறைக் குழம்பு ஆண்டுக்கு பத்து சென்டி மீட்டர் வீதம் உயர்ந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டில், அந்த மேட்டுப் பகுதியில் 3௦0 க்கும் அதிக எண்ணிக்கையில் சிறிய அளவிலான நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது பதிவு செய்யப் பட்டு இருக்கிறது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் உயர்வதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
afinsar1
இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலைகளை ரேடியோ கதிர் வீச்சு முறையில் செயற்கைக் கோள் மூலம் படம் எடுக்கப் பட்ட பொழுது, எரிமலைகளைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வளைய வடிவில் வரப்பு வெட்டியதைப் போன்று நிலம் சில சென்டி மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு எரிமலைக்குள் நுழையும் பொழுது எரிமலையின் உயரம் அதிகரித்து எரிமலை உயரும் பொழுதும்: அதே போன்று எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியறி எரிமலையின் உயரம் குறையும் பொழுதும், எரிமலையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தரைப் பகுதி உயர்ந்து இறங்குவதால் எரிமலையைச் சுற்றி மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன.

itainsar.jpg
இதே போன்று கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் இருபது கிலோ மீட்டர் சுற்றளவிற்கு 2.8 சென்டி மீட்டர் உயரத்திற்கு வரப்பு வெட்டியதைப் போன்று நிலம் உயர்ந்து வளையங்கள் உருவாகி இருப்பது ரேடியோ கதிர் வீச்சு முறையில் பதிவு செய்யப் பட்ட செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அத்துடன் நில அதிர்ச்சி ஏற்பட்ட லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்பு எரிமலைகளில் இருந்து வெளியேறும் ரேடான் என்ற கதிரியக்கத் தன்மையுள்ள வாயு வெளிப் பட்டு இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
எனவே பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்ததால் இத்தாலியில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது செயற்கைக் கோள் பதிவுகள் மூலமாகவும் ரேடான் வாயுக் கசிவு மூலமாகவும் நிரூபணமாகியுள்ளது.
haitialos.jpg
இதே போன்று கடந்த 2010 ஆம் ஆண்டு ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டு சுனாமி உருவான பொழுதும் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் இருபது கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வரப்பு போன்ற வளைய வடிவ மேடுகள் 35 சென்டி மீட்டர் உயரத்துடன் உருவாகி இருந்தது, தரை மட்ட மாறு பாடுகளைப் பதிவு செய்த ஜப்பான் நாட்டின் ஆலோஸ் என்ற செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதே போன்று கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 50 சென்டி மீட்டர் உயரத்திற்கு வரப்பு போன்ற வளைய வடிவ மேடுகள் உருவாகி இருப்பதும், ஐரோப்பாவின் என்விசாட் செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட தரைமட்ட மாறு பாட்டுப் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.