சுனாமியை உருவாக்கியது எரிமலை - கண்டு பிடிப்பு.

கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.ஆனால் வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தட்டு உருவாகி மேற்கு திசையை  நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்   அதனால் அந்தக் கடல் தட்டின் மேல் இருந்த படி வட அமெரிக்கக் கண்டமானது  மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
அதே போன்று தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தட்டு உருவாகி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தட்டின் மேல் இருந்தபடி தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
குறிப்பாக கண்டங்களைச் சுமந்தபடி கண்டத் தட்டுகள் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு கண்டத்  தட்டுகள் நகரும் பொழுது கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
உதாரணமாக வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் மத்தியில் அமைந்து இருக்கும் கரிபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதற்கு, வட அமெரிக்கக் கண்டத் தட்டு மேற்கு திசை நோக்கி நகர்ந்ததால் ஹைத்தி தீவு உள்ள கரீபியன் தட்டுடன் உரசிக் கொண்டதே  காரணம் என்று USGS என்று அழைக்கப் படும் அமெரிக்கப் புவியியல் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.
இந்த விளக்கம் உண்மையென்றால் ....
உண்மையில் வட அமெரிக்கக் கண்டம் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால்... வட அமெரிக்கக் கண்டமும்  தென் அமெரிக்கக் கண்டமும் சந்திக்கும் பகுதியில் இருந்து அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால் உலகம் முழுவதும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து நாசா அமைப்பினர் தயாரித்த  உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் சந்திக்கும் பகுதியில் இருந்து அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை நில அதிர்ச்சிகள் தொடர்ச்சியாக பதிவாகி இருக்கவில்லை.
எனவே கண்டங்கள் நிலையாக இருப்பது  உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் நிரூபணமாகிறது.
(படம்- அலாஸ்கா பகுதியில் உள்ள பெலிக் எரிமலையைச் சுற்றி உருவான மேடு பள்ள வளையங்கள்)
இந்த நிலையில் எரிமலைகள் குமுறி வெடிக்கும் பொழுதும்; உயர்ந்து இறங்கும் பொழுதும் எரிமலையை சுற்றி பல நூறு கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தரைப் பகுதியும் உயர்ந்து இறங்குவதால் எரிமலையை சுற்றி வரப்பு போன்று உருவாகும் மேடு பள்ள வளையங்கள், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றி உருவாகி இருப்பது செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

(ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் வரப்பு போன்று உருவான மேடு பள்ள வளையங்கள். செயற்கைக் கோள்-கணிப்பொறி படம் )
எனவே பூமிக்கு அடியில் இருந்த எரிமலை வெடித்துக் குமுறியதால்தான் ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருக்கிறது.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Comments

Popular posts from this blog

fossils study

Abcd report

tsunami science