எரிமலைகள் உயர்வதாலேயே நில அதிர்ச்சி ஏற்படுகிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.

ஆய்வுச் சுருக்கம்.
தற்பொழுது நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு கண்டங்கள் எல்லாம் பக்க வாட்டில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு கண்டங்கள் நகரும் பொழுது கண்டங்களின் ஓரப் பகுதிகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று நம்பப் படுகிறது.
ஆனால் உலகெங்கும் ஏற்பட்ட லட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட வரை படத்தை ஆய்வு செய்ததில் கண்டங்கள் நிலைத்த அமைப்புகள் என்பது தெரிய வந்திருக்கிறது.
எனவே உண்மையில் நில அதிர்ச்சி ஏன் ஏற்படுகிறது என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில் பல இடங்களில் நில அதிர்ச்சி ஏற்பட்டபொழுது தரைப் பகுதியானது பல அடி வரை உயர்ந்து இருப்பது குறித்து தகவல்கள் வெளியாகியிருக்கிறது.எனவே பூமிக்கு அடியில் இருக்கும் பாறைகள் மேல் நோக்கி உயர்வதாலேயே நில அதிர்ச்சி ஏற்பட்டிருப்பது புலனாகியது.
மேலும் எரிமலைச் செயல் பாடுகளின் பொழுது எரிமலைகளைச் சுற்றிலும் நீரில் கல்லை
எறிந்தால் உருவாகும் வளையங்களைப் போல் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தரைப்
பகுதியில் வட்ட வடிவில் பள்ளங்களும் அதே போன்று வட்ட வடிவில் மேடுகளும் உருவாகியிருப்பது செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
அதே போன்ற வளையங்கள் நில அதிர்ச்சி ஏற்பட்ட இடங்களிலும், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு உருவாகியிருப்பதும் செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
எனவே பூமிக்கு அடியில் இருந்து எரிமலைகள் மேல் நோக்கி உயர்வதாலேயே நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.