நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏன் ஏற்படுகின்றது.விஞ்ஞானி.க.பொன்முடி.

புதை படிவங்கள் குறித்து அறிந்து கொள்வதில் எனக்கு எப்பொழுதுமே ஆர்வம் அதிகம்.ஒரு நாள் நேசனல் ஜியாகிரபிக் பத்திரிக்கையில் புகைப் படத்துடன் ஒரு செய்திக் கட்டுரை வெளியாகி இருந்தது.

ஒரு மலையின் உச்சிப் பகுதியில் இரண்டு பேர் நின்று கொண்டு கையில் மண்வெட்டியால் தரையை தோண்டிக் கொண்டு இருக்கும் படம்.

அவர்கள் இருவரும் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்து மடிந்த ட்ரைலோபைட் என்ற கடல் பூச்சியின் புதை படிவங்களை எடுத்துக் கொண்டு இருப்பதாகவும், அந்த ஆராய்ச்சியாளர்கள் நின்று கொண்டு இருக்கும் இடம் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருநூற்றி இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடந்ததாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது.


உடனே எனக்கு அந்த மலைப்யானது பகுதி கடலுக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயர்ந்து இருப்பது புரிந்தது.


அடுத்த பக்கத்தைப் புரட்டிய பொழுது இன்னொரு புகைப் படம்.சுற்றிலும் மலைகள் சூழ்ந்த ஒரு உள் நாட்டுப் பகுதியில் உள்ள ஒரு மலையில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் ட்ரைலோபைட் புதை படிவங்களை எடுத்துக் கொண்டு இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது.


அப்பொழுது எனக்கு மலைகள் மட்டுமல்ல மலைகளைச் சுற்றிலும் உள்ள நிலப் பகுதிகளும் கூட கடலுக்கு அடியில் இருந்தே கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்திருப்பது புரிந்தது.
உடனே கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டேன்.


குறிப்பாக இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தரையில் வாழ்ந்த மெசோசாராஸ் என்ற ஊர்வன வகை விலங்கினத்தின் புதை படிவங்கள் தென் அமெரிக்காமற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களிலும் காணப் படுகிறது.


இதன் அடிப்படையில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அல்பிரட் வெக்னர் என்ற ஆராய்ச்சியாளர் தரையில் வாழ்ந்த ஒரு விலங்கு நிச்சயம் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து தென் அமெரிக்காவில் இருந்து ஆப்பிரிக்காவை அடைந்திருக்க இயலாது.



எனவே இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த இரண்டு கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் அதன் பிறகு இந்த இரண்டு கண்டங்களும் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்திருக்க வேண்டும் என்று ஒரு விளக்கத்தைக் கூறினார்.



ஆனால் தற்பொழுது நார்வே நாட்டுக் கடல் பகுதியில் குறிப்பாக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டியோசாராஸ் என்ற டைனோசரின் எலும்புப் புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகின்றனர்.


எனவே விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு பரவியதற்கு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததே காரணம்.


கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததற்கு இன்னும் பல பல ஆதாரங்கள் இருக்கின்றன.


குறிப்பாக தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் இகுவானா என்று அழைக்கப் படும் உடும்பு வகையின் வம்சாவளிகள் பசிபிக் பெருங் கடலின் மதியப் பகுதியில் உள்ள பிஜி தீவிலும் காணப் படுகிறது.


இந்த இரண்டு நிலப் பகுதிகளும் எட்டாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியால் பிரிக்கப் பட்டிருகிறது.பொதுவாக கடலுக்கு நடுவில் அமைந்திருக்கும் தீவுகளில் சிறிய வகை விலங்கினங்கள் காணப் படுவதற்கு கடலில் மிதந்து செல்லும் கடல் தாவரங்கள் மூலம் அருகில் உள்ள நிலப் பகுதிகளில் இருந்து தற்செயலாக வந்திருக்கலாம் என்று கருதப் படுகிறது.


ஆனால் தென் அமெரிக்காவில் இருந்து பிஜி தீவிற்கு எட்டாயிரம் கிலோ மீட்டர் கடலில் மிதந்து வர வேண்டுமென்றால் அதற்கு ஆறுமாத காலம் ஆகும்.அவ்வளவு காலத்திற்கு உடும்பு போன்ற சிறிய விலங்கால் உன்ன உணவும் குடிக்க நீரும் இன்றி கடலில் உயிருடன் இருந்திருக்க சாத்தியமில்லை.



எனவே நிச்சயம் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததாலேயே விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் பரவியிருகின்றன.

இதே போன்று இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த குளோசொப்டெரிஸ் என்று அழைக்கப் படும் பெரணி வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிக் ஆகிய கண்டங்களில் காணப் படுகின்றன.

ஆனால் குளோசொப்டெரிஸ் தாவரத்தின் விதைகள் கனமாக இருக்கிறது. இதன் அடிப்படையில் அந்தத் தாவரம் கடலில் மிதந்தோ அல்லது காற்றில் பறந்தோ மற்ற கண்டங்களுக்குப் பரவியிருக்க இயலாது .


எனவே நிச்சயம் மேற்சொன்ன கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் கண்டதுடன் இணைந்து இருந்ததாகவும் அதன் பிறகு அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்திருக்க வேண்டும் என்றும் விளக்கம் ஒரு கூறப் படுகிறது.

ஆனால் தற்பொழுது அண்டார்க்டிக் கண்டத்திற்கு வடக்கில் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியில் உள்ள பாறைகளில் மரங்களின் கருகிய பாகங்களும் விதை மற்றும் மகரந்தத் துகள்களும் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.

எனவே ஆதிகால தாவரங்களும் பல்வேறு கண்டங்களுக்குப் பரவியதற்கு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததே காரணம்.



முக்கியமாக அந்தக் கடலடிப் பீட பூமியில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதில் அந்தப் பாறைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது.எனவே இரண்டு கோடி ஆண்டுகளில்தான் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்திருக்கிறது.

இதற்கு இன்னொரு ஆதாரமும் இருக்கிறது.குறிப்பாக நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சியடைந்த விலங்கினம் ஆகும்.


ஆனால் அந்த நீர் யானை இனத்தில் இருந்து தோன்றிய குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் மடகாஸ்கர் தீவில் காணப் படுகிறது.

முக்கியமாக எலும்புப் புதை படிவங்கள் மூலம் மடகாஸ்கர் தீவில் வாழ்ந்த குள்ள வகை நீர் யானைகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.


ஆனால் குள்ள நீர் யானைகளால் நீர்பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது.ஆனால் ஆப்பிரிக்கக் கண்டம் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டிருகிறது.



எனவே இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்திருக்கிறது.இவ்வாறு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததற்கு கடலுக்கு அடியில் இருக்கும் பல்ல்லாயிரக் கணக்கான சுடு நீர் ஊற்றுகள் வழியாக பூமிக்கு அடியில் இருந்து சுரக்கும் நீர் கடலில் கலப்பதே காரணம்.


எனவே டைனோசர் போன்ற விலங்கினங்களும் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் தீவுகளில் காணப் படுவதற்கு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததே காரணம்.


மற்றபடி கண்டங்கள் ஒன்றாக இருந்து பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் சரியல்ல.

குறிப்பாக தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா இந்தியா ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் எல்லாம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு தென் துருவக் கண்டமான அண்டார்க்டிக் கண்டதுடன் இணைந்து இருந்ததாகவும்...

அதன் பிறகு அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகக் கூறப் படுகிறது.இன்றும் இந்தக் கண்டங்கள் எல்லாம் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கருதப் படுகிறது.

குறிப்பாக அட்லாண்டிக் கடல் தரையின் மேல் பூமிக்கு அடியில் இருந்து கடல் தரையைப் பொதுக் கொண்டு பொங்கியெழும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகுவதால் அப்பகுதியில்


புதிய கடல் தரை உருவாகிறது என்றும் இதே போன்று மறுபடியும் அப்பகுதியில் பாறைகள் உருவாகும் பொழுது ஏற்கனவே அப்பகுதியில் உருவாகியிருந்த பழைய கடல் தரைப் பாறையைப் பக்க வாட்டில் தள்ளுவதால் மத்தியப் பகுதியில் இருந்து கடல் தரை பிரிந்து விரிவடைந்து கிழக்கு மேற்காக நகர்ந்கிறது...

அதனால் நகரும் பாறைத் தட்டின் மேல் உள்ள தென் அமெரிக்கக் கண்டம் மேற்கு திசையிலும் ஆப்பிரிக்கக் கண்டம் கிழக்கு திசையிலும் நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.



இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் அட்லாண்டிக் கடல் பகுதியில் பூமியின் வட துருவத்தில் இருந்து தென் ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் முனை வரை அதாவது வடக்கு தெற்காக அறுபதாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு

அதாவது தீர்க்க ரேகைக்கு இணையாக புதிய கடல் தளப் பாறைகள் உருவாகி, கிழக்கு மேற்காக விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்

அதனால் அந்தக் கடல் பாறைத் தட்டின் மேல் உள்ள தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களும் கிழக்கு மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

ஒரே வரியில் சொல்ல வேண்டு மென்றால் ''தீர்க்க ரேகைக்கு இணையாக பாறைத் தட்டுகள் உருவாகி விரிவடைந்து கிழக்கு மேற்காக நகர்ந்து கொண்டு இருக்கின்றன'' என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

ஆனால் இதே போன்று தென் அமெரிக்கா ஆப்பிரிக்கா இந்தியா ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள் எல்லாம் தென் துருவக் கண்டமான அண்டார்க்டிக் கண்டதுடன் இணைந்து இருந்ததாகவும், அதன் பிறகு தென் துருவப் பகுதியில் இருந்து பிரிந்து நகர்ந்து வடக்கு திசையில் நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும், இன்றும் கூட இந்தக் கண்டங்கள் வடக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்
ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.



இவ்வாறு கண்டங்கள் தென் துருவ அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து வடக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதற்கு, அண்டார்க்டிக் கண்டதைச் சுற்றியுள்ள கடல் தரைப் பகுதியில் ஏற்கனவே கூறியபடி புதிய கடல் பாறைத் தட்டுகள் உருவாகி விரிவடைந்து வடக்கு மற்றும் தெற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகர்ந்து கொண்டு இருக்கும் பாறைத் தட்டின் மேல் இருப்பதால் இந்தியா ஆஸ்திரேலியா தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களும் வடக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

ஆனால் தென் துருவக் கண்டமான அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் பூமியின் சுற்றளவு குறைவாகவும் அண்டார்க்டிக் கண்டத்திற்கு வடக்கே செல்லச் செல்ல பூமியின் சுற்றளவு அதிகமாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

குறிப்பாக அண்டார்க்டிக் கண்டமானது தென் துருவப் பகுதியில் அறுபது பாகை அட்ச ரேகை வரையிலான சுற்று வட்டப் பகுதிக்குள் அமைந்திருகிறது.

இப்பகுதியில் பூமியின் சுற்றளவு இருபதாயிரத்தி எண்பத்தி எட்டு கிலோ மீட்டர் ஆகும்.


ஆனால் இந்தியாவோ பூமத்திய ரேகைக்கு வடக்கில் அமைந்து இருக்கிறது.


குறிப்பாக பூமத்திய ரேகைப் பகுதியில் பூமியின் சுற்றளவு நாற்பதாயிரத்தி எழுபத்தி ஐந்து கிலோ மீட்டர் ஆகும்.

எனவே குறைவான சுற்றளவுள்ள கடல் பகுதியில் உருவான பாறைத் தட்டுகள் எப்படி அதிக சுற்றளவுள்ள பகுதியை நிரப்ப இயலும்? என்ற கேள்வி எழுகிறது.


முக்கியமாக குறைவான சுற்றளவுள்ள கடல் பகுதியில் உருவான பாறைத் தட்டுகளால் அதிக சுற்றளவில் இருக்கும் பாறைத் தட்டுகளை நகர்த்தக் கூட இயலாது.


அதே போன்று குறைவான பரப்பளவில் உருவாகும் பாறைகளால் அதிக பரப்பளவில் இருக்கும் பாறைகளை நகர்த்தக் கூட இயலாது.

எனவே குறைவான சுற்றுவட்டப் பகுதியான தென் துருவப் பகுதியில் புதிதாக பாறைத் தட்டுகள் புதிதாக உருவாகி அதிக சுற்றளவுள்ள வடக்கு திசையில் நகார்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதும், அதனால் அந்தப் பாறைத் தட்டுகளின் மேல் இருந்தவாறே கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதும் சரியான விளக்கமல்ல.

ஆனால் நிலப் பகுதிகளின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.இதற்கு கடலுக்கு அடியில் இருந்த கண்டங்கள் மேல் நோக்கி உயர்ந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து கொண்டு இருப்பதே காரணம்.


புவித் தரைக்கு அடியில் இருக்கும் பாறை அடுக்குகள் மேல் நோக்கி உஅர்வதால்தான் நில அதிர்ச்சியும் அதே போன்று கடல் தரைக்கு அடியில் இருக்கும் பாறை அடுக்குகள் திடீரென்று மேல் நோக்கி உயர்வதால் சுனாமியும் ஏற்படுகின்றது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.