நிலப் பகுதிகள் உயரும் பொழுது நில அதிர்ச்சி ஏற்படுகிறது.ஆய்வு முடிவு -விஞ்ஞானி.க.பொன்முடி.

ஒரு நாள் தற்செயலாக நான் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் வட அமெரிக்காவில் உள்ள ஒரு மலைப் பகுதியில் இருப்பது குறித்த கட்டுரை ஒன்றை நேசனல் ஜியாகிரபிக் பத்திரிக்கையில் படித்தேன். சட்டென்று எனக்கு அந்த மலையும் மலை சார்ந்த நிலப் பகுதிகளும் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பது இருப்பது புரிந்தது.

ஆனால்....


ருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மடிந்த மெசோ சாராஸ் என்று அழைக்கப் படும் ஒரு தரை வாழ் விலங்கின் எலும்புப் புதை படிவங்கள், அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டிருக்கும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் இருப்பதன் அடிப்படையில்.... நிச்சயம் நிலத்தில் வாழ்ந்த ஒரு விலங்கால் அட்லாண்டிக் கடலைக் கடந்து தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு வந்திருக்க இயலாது, எனவே இந்தக் கண்டங்கள் எல்லாம் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இணைந்து இணைந்து இருந்திருகிறது என்றும் பிறகு பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்கின்றன என்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.


ஆனால் உண்மையில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததே ஒரே வகையான விலங்கினங்களின் எலும்புப் புதை படிவங்கள் பல்வேறு கண்டங்களில் காணப் படுவதற்கு காரணம்.

கடல் மட்டம் தாழ்வாக இருந்ததால் கண்டங்களுக்கு இடையே இருந்த நிலத் தொடர்பு வழியாகவே விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்குப் பரவியிருகின்றன.

குறிப்பாக இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததற்கு மடகாஸ்கர் தீவில் காணப் படும் நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் சிறந்த ஆதாரமாக விளங்குகின்றன.

நீர் யானைகள் ஆறு குளம் குட்டை ஏரி போன்ற நீர் நிலைகளில் வாழ்ந்தாலும் அவைகளால் நீரில் நீநதவோ மிதக்கவோ இயலாது.

குறிப்பாக நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் தோன்றிய விலங்கினம் ஆகும்.


தற்பொழுது நிலத்தில் வாழும் விலங்கினங்களில் யானை மற்றும் காண்டா மிருகத்திற்கு அடுத்த படியாக மூவாயிரம் கிலோ எடையுடன் நீர் யானை மூன்றாவது பெரிய விலங்காக இருக்கிறது.

நீர் யானைகள் அரிதாகவே ஆழமான பகுதிக்கு செல்லும்.தண்ணீருக்கு அடியில் ஐந்து முதல் ஆறு நிமிடம் வரை மூழ்கி தாவரங்களை உண்டாலும் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கால்களால் உந்தி நீர் பரப்பிற்கு மேலே வந்து காற்றை சுவாசிக்கும்

ஆனால் மடகாஸ்கர் தீவானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருப்பதுடன் ஆப்பிரிக்கக் கண்டமும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டிருக்கிறது.

நீரில் மிதக்கக் கூட இயலாத நீர் யானைகள் எப்படி ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவிற்கு வந்திருக்க முடியும்?


குறிப்பாக மடகாஸ்கர் தீவில் லெமூர் என்று அழைக்கப் படும் அரிய வகைக் குரங்குகளும் காணப் படுகின்றன.

லெமூர்களும் ஆபிரிக்கக் கண்டத்தில் தோன்றிய விலங்கினம் ஆகும்.

எனவே லெமூர் குரங்குகளின் மூதாதைகளும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மூலம் மடகாஸ்கர் தீவிற்கு வந்து இருக்கலாம் என்று கண்டங்கள் பக்க வட்டில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

ஆனால் மடகாஸ்கர் தீவில் கணப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்களின் அடிப்படையில் அந்தத் தீவில் வாழ்ந்த குள்ள வகை நீர் யானைகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

எனவே நிச்சயம் நானூறு கிலோ எடையுள்ள குள்ள வகை நீர் யானைகளால் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மூலமாக கடலில் மிதந்த படி குரங்குகளைப் போல மடகாஸ்கர் தீவை வந்தடைந்து இருக்க இயலாது.

எனவே மடகாஸ்கர் தீவில் கணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதையே நிரூபிக்கிறது.

இதே போன்று நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையை எண்ணெய் எடுப்பதற்காக துளையிட்ட பொழுது கிடைத்த பாறைத் துண்டுகளில் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகிறார்கள்.

மேலும் இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் ஒரு கடலடிப் பீட பூமியில் இருந்து எடுக்கப் பட்ட இரண்டு கோடி ஆண்டுகள் தொன்மையுள்ள பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள் விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் அமெரிக்க நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகின்றனர்.

எனவே ஒரே வகை விலங்கினங்களின் எலும்புப் புதை படிவங்கள் பல்வேறு கண்டங்களில் காணப் படுவதற்கு உண்மையில் கடல் மட்டம் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததே காரணம்.

மற்றபடி கண்டங்கள் ஒன்றாக இருந்து பிறகு பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் சரியான விளக்கம் அல்ல.

அதே போன்று கண்டங்களின் மத்தியப் பகுதியில் கூட குறிப்பாக மலைகளின் மேல் கடல் உயிரினங்களின் புதைபடிவங்கள் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகின்றனர்.

எனவே நிலப் பகுதிகள் யாவும் முன்பு கடலுக்கு அடியில் இருந்தே கடல் மட்டத்திற்கு மேலே உயர்ந்து இருக்கின்றன.

இவ்வாறு நிலப் பகுதிகள் மேல் நோக்கி உயரும்பொழுதே நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

அதே போன்று கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததற்கு

கடலுக்கு அடியில் இருக்கும் சுடுநீர் ஊற்றுகள் வழியாக பூமிக்குள் இருந்து வெளி வந்து கொண்டு இருக்கும் நீரே காரணம்.

குறிப்பாக கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுகளில் இருந்து வெளிவந்த நீரில் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில் இருக்கும் ஹீலியம் 3 என்று அழைக்கப் படும் வாயு இருப்பதன் அடிப்படையில், சுடு நீர் ஊற்று நீரானது பாறைக் குழம்பில் இருந்து வெளி வரும் நீர் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருகின்றனர்
என்பதும் குறிப்பிடத் தக்கது.

இவ்வாறு பூமிக்கு அடியில் இருக்கும் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பு வெப்பமான வாயுக்களையும் நீராவியையும் வெளியிட்டு குளிர்ந்து இறுகுவதால் பூமிக்கு அடியில்
அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் உருவாகின்றன.

அடர்த்தி அதிகமான திரவத்தில் அடர்த்தி குறைந்த பொருள் மிதக்கும்.

உதாரணமாக அடர்த்தி அதிகமான தண்ணீரில் உருவாகும் அடர்த்தி குறைவான பனிக் கட்டிகள் மிதக்கின்றன.

அதே போன்று பூமிக்கு அடியில் இருக்கும் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் உருவாகும் அடர்த்தி குறைவான பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயரும் பொழுது பாறைத் தட்டுகளுக்கு இடையே ஏற்படும் உரசலால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

மேலும் பூமியில் நானூறு கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைகள் இருப்பதன் அடிப் படையில் பூமி தோன்றி நானூற்று ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று மதிப்பிடப் பட்டிருகிறது.

ஆனால் கடலின் ஆழம் சராசரியாக நான்கு கிலோமீட்டர் இருக்கும் நிலையில், நிலப் பகுதிகளானது கடல் மட்டத்தில் இருந்து இரண்டாயிரம் அடி உயரத்திலேயே இருக்கிறது ,

எனவே இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது, நிலப் பகுதிகள் மூழ்கிக் கொண்டு இருப்பதையே எடுத்துக் காட்டுகிறது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.