பத்திரிகைச் செய்தி வெளியீடு.

பத்திரிகைச் செய்தி வெளியீடு.

விஞ்ஞானி.க.பொன்முடி.சென்னை.

பொருள்:எல்லா நில அதிர்ச்சிகளுக்கும் பூமிக்கு அடியில் இருந்து உயரும் பாறைத் தட்டுகளே காரணம்.

இந்தியாவும் ஆஸ்திரேலியக் கண்டமும் வடகிழக்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பாறைத் தட்டில் அமைந்திருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறும் கருத்தை ஏற்க இயலாது.

பதின் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் ஆஸ்திரேலியக் கண்டமும் ஒன்றாக இருந்ததாகவும், அண்டார்க்டிக் கண்டத்திற்கு அருகில் இருந்ததாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் தற்பொழுது இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியக் கண்டம் ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

பாறைத் தட்டுகள் நகர்வதால் அவற்றின் மேல் அமைந்திருக்கும் கண்டங்களும் நகர்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் ஒரே பாறைத் தட்டின் மேல் அமைந்திருப்பதாகக் கூறப் படும் இரண்டு நிலப் பகுதிகள் எப்படி எதிர் எதிர் திசையில் நகர்ந்து சென்றிருக்க முடியும்?

நில அதிர்ச்சிக்குப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டங்கள் நகர்ந்து கொண்டிருப்பதே காரணம் என்று ஒரு தவறான விளக்கத்தைக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் பூமிக்கு அடியில் இருந்து பாறைத் தட்டுகள் உயரும் பொழுதே நிலஅதிர்ச்சி ஏற்படுகிறது.

பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில் இருந்து சூடான வாயுக்களும் நீராவியும் வெளியேறுவதால், பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகுவதால் , அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் உருவாகின்றன.

அடர்த்தி அதிகமான திரவத்தில் அடர்த்தி குறைந்த பொருள் மிதக்கும்.

எனவே பூமிக்கு அடியில் உள்ள அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் உருவாகும் அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் மிதப்பதற்காக உயர்கின்றன.

அவ்வாறு உயரும் பொழுது, உயரும் பாறைத் தட்டுகளின் விளிம்புகள் அருகில் உள்ள பாறைத் தட்டுகளின் விளிம்புகளுடன் உரசுவதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

எரிமலையின் வழியாக வாயுக்களும் நீராவியும் எளிதில் வெளியேறுவதால் எரிமலைகளுக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு விரைவில் குளிர்கிறது.

எனவே எரிமலைக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில் அதிக அளவில் புதிய பாறைத் தட்டுகள் உருவாகி உயர்கின்றன.

எனவேதான் எரிமலைக்கு அருகில் அடிக்கடி நில அதிர்ச்சி ஏற்படுகிறது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.