Posts

ஜப்பான் சுனாமிக்கு காரணம் எரிமலை .விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Image
 ஜப்பான் தீவிற்கு அடியில் பசிபிக் கடல் தரை நகர்ந்து சென்றதால்தான் ஜப்பானில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். குறிப்பாக ஜப்பான் தீவுகள் பசிபிக் பெருங் கடலுக்கு வடமேற்கு பகுதியில் அமைந்து இருக்கிறது.இந்த நிலையில் பசிபிக் கடல் தட்டானது பசிபிக் பெருங் கடலின் தென் கிழக்கு பகுதியில் உள்ள தென் அமெரிக்கக் கண்டத்திற்கு கிழக்கு பகுதியில் உள்ள ஒரு கடலடி மேட்டு பகுதியில் பத்து கிலோ மீட்டர் தடிமன் உடையதாக கருதப் படும் கடல் தட்டு உருவாகி எதிரெதிர் திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது. குறிப்பாக தென் அமெரிக்கக் கண்டத்திற்கு கிழக்கு பகுதியில் உள்ள கடலடி மேட்டுப் பகுதியில் பூமிக்கு  அடியில் இருக்கும் பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வரும்பொழுது குளிருந்து இறுகி புதிய கடல் தட்டாக உருவாகிறது என்றும்,இதே போன்று மறுபடியும் அதே இடத்திற்கு புதிதாக பாறைக் குழம்பு வரும் பொழுது ஏற்கனவே அப்பகுதியில் உருவாகி இருந்த பழைய கடல் தட்டை பக்க வாட்டுப் பகுதிக்கு நகர்ந்தி விட்டு மத்திய பகுதியில் புதிய கடல் தட்டாக உ...

மத்திய அமெரிக்காவில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு எரிமலைகளே காரணம்.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Image
வட அமெரிக்க மற்றும் தென் அமெரிக்க ஆகிய இரண்டு கண்டங்களுக்கு இடையில் ஒரு பாலம் போன்று மத்திய அமெரிக்க நிலப் பகுதி அமைந்து இருக்கிறது. அந்த நிலப் பகுதியில் உள்ள கவுதமாலா, ஹோண்டு ராஸ் ,கோஸ்டா ரிகா,மற்றும் பனாமா போன்ற நாடுகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மத்திய அமெரிக்க நிலப் பகுதிக்கு அடியில் கோகோஸ் என்று அழைக்கப் படும் கடல் தட்டு உரசியபடி நகர்ந்து செல்வதே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். குறிப்பாக அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அடியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு மலைத் தொடர் தெற்கு வடக்காக அமைந்து இருக்கிறது.அந்த கடலடி மலைத் தொடரின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தட்டு உருவாகி எதிரெதிர் திசை நோக்கி அதாவது கிழக்கு மற்றும் மேற்கு திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். அதே போன்று மத்திய அமெரிக்க நிலப் பகுதிக்கு தென் மேற்கு திசையில் கோகோஸ் கடல் தட்டு உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.இந்த வகையான விள...

சுனாமி புத்தகம்

Open publication - Free publishing - More report

கண்டங்கள் நிலையாக இருக்கின்றன.igai.a.omd.

சுனாமி புத்தகம் கண்டங்கள் நிலையாக இருக்கின்றன. தற்பொழுது நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு கண்டங்கள் எல்லாம் கண்டத் தட்டுகள் என்று அழைக்கப் படும் பெரிய பாறைத் தட்டுகளின் மேல் இருந்தபடி மெதுவாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகளுக்கு இடையே உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று விளக்கம் கூறப் படுகிறது. ஆனால் கண்டங்கள் நிலையாக இருப்பது ஆதாரபூர்வமாக தெரிய வந்திருக்கிறது. (நாசா வெளியிட்ட நில அதிர்ச்சி வரைபடம்) குறிப்பாக நாசா என்று அழைக்கப் படும் அமெரிக்க நாட்டின் அறிவியல் அமைப்பினர் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான 35 ஆண்டு கால கட்டத்தில் உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து வரைபடம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டனர். அந்த வரைபடத்தில் இரண்டு கண்டத் தட்டுகளின் மேல் இருந்தபடி தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரையில் தொடர்ச்சியாக ந...