மத்திய அமெரிக்காவில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு எரிமலைகளே காரணம்.விஞ்ஞானி.கணபதி பொன்முடி.



வட அமெரிக்க மற்றும் தென் அமெரிக்க ஆகிய இரண்டு கண்டங்களுக்கு இடையில் ஒரு பாலம் போன்று மத்திய அமெரிக்க நிலப் பகுதி அமைந்து இருக்கிறது.
அந்த நிலப் பகுதியில் உள்ள கவுதமாலா, ஹோண்டு ராஸ் ,கோஸ்டா ரிகா,மற்றும் பனாமா போன்ற நாடுகளில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மத்திய அமெரிக்க நிலப் பகுதிக்கு அடியில் கோகோஸ் என்று அழைக்கப் படும் கடல் தட்டு உரசியபடி நகர்ந்து செல்வதே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
குறிப்பாக அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அடியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு மலைத் தொடர் தெற்கு வடக்காக அமைந்து இருக்கிறது.அந்த கடலடி மலைத் தொடரின் மத்தியப் பகுதியில் புதிய கடல் தட்டு உருவாகி எதிரெதிர் திசை நோக்கி அதாவது கிழக்கு மற்றும் மேற்கு திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
அதே போன்று மத்திய அமெரிக்க நிலப் பகுதிக்கு தென் மேற்கு திசையில் கோகோஸ் கடல் தட்டு உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகவும் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.இந்த வகையான விளக்கம் உண்மையில் சாத்தியமில்லாத விளக்கம் ஆகும்.
எப்படியென்றால் மத்திய அமெரிக்க நிலப் பகுதிக்கு தென் மேற்கு திசையில் உள்ள கடல் பகுதியில் புதிய கடல் தட்டு உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து சென்றால் அதன் மறு பகுதியில் உருவாகும் புதிய கடல் தட்டு தென் மேற்கு திசையை நோக்கி விரிவடைந்து நகர்ந்து செல்லும் .இந்த நிலையில் மத்திய அமெரிக்காவிற்கு தென் பகுதியில் அமைந்து இருக்கும் தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்கு பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு புவியியல் வல்லுனர்கள் ஒரு விளக்கத்தையும் கூறுகின்றனர்.
அதாவது தென் அமெரிக்காவிற்கு கிழக்கு பகுதியில் உள்ள கடல் பகுதியில் புதிய கடல் தட்டு உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகவும் அதானால் கிழக்கு திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து சென்று கொண்டு இருக்கும் கடல் தட்டு தென் அமெரிக்கக் கண்டத்திற்கு அடியில் உரசிச் செல்வதால் தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்கு பகுதியில் குறிப்பாக பெரு சிலி போன்ற நாடுகளில் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.
குறிப்பாக தென் அமெரிக்காவிற்கு அடியில் செல்லும் கடல் தட்டு உருவாகும் பகுதிக்கு மறுபுறம் உருவாகும் கடல் தட்டானது மேற்கு திசை நோக்கி அதாவது பசிபிக் கடலின் மத்திய பகுதியியை நோக்கி விரிவடைந்து செல்வதாக விளக்கம் கூறப் படுகிறது.இந்த நிலையில் மத்திய அமெரிக்காவிற்கு தென் பகுதியில் கடல் தட்டு உருவாகி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து சென்றால் மத்திய அமெரிக்காவிற்கு அடியில் செல்லும் கடல் தட்டிற்கு மறுபகுதியில் உருவாகும் கடல் தட்டு வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து மத்திய அமெரிக்காவிற்கு அடியில் செல்லும் பொழுது அதன் மறு பகுதியில் உருவாகும் கடல் தட்டு தென் மேற்கு திசையை நோக்கி நகர்ந்தால் அந்தக் கடல் தட்டு தென் அமெரிக்காவிற்கு கிழக்கு பகுதியில் பகுதியில் மேற்கு திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து சென்று கொண்டு இருக்கும் கடல் தட்டுடன் மோதி நொறுங்கும்.


எனவே மத்திய அமெரிக்காவிற்கும் தென் மேற்கு பகுதியிலும் அதே போன்று தென் அமெரிக்காவிற்கு கிழக்கு பகுதியிலும் புதிய கடல் தட்டு உருவாகி தொடர்ந்து நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாக கூறப் படும் விளக்கம் சாத்தியம் இல்லாத விளக்கம்.
எனவே மத்திய அமெரிக்க நாடுகளிலும் தென் அமெரிக்காவின் பெரு சிலி போன்ற நாடுகளிலும் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கு அந்த பகுதிகளில் இருக்கும் எரிமலைகளே காரணம்.

சுருக்கமாக ....கோகோஸ் கடல் தட்டு பகுதியில் உருவாகி தென் மேற்கு திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து செல்லும் கடல் தட்டானது ,தென் அமெரிக்கக் கண்டத்திற்கு கிழக்கு பகுதியில் உருவாகி மேற்கு திசை நோக்கி விரிவடைந்து நகர்ந்து செல்லும் கடல் தட்டுடன் மோதி நொறுங்கும்.

-விஞ்ஞானி.கணபதி பொன்முடி.

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.