fr1
Frone
பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.விஞ்ஞானி.க.பொன்முடி.
அடிப்படை ஆதாரமற்ற கண்டத் தட்டு நகர்ச்சி கருத்து எப்படி அறிவியல் உலகில் இடம் பிடித்தது?
,1570 ஆம் ஆண்டு டச்சு நாட்டை சேர்ந்த ஆபிரஹாம் ஆர்டெல்லியஸ் என்ற ஆராய்ச்சியாளர் முதன் முதலில் ஓரளவு திட்டமான உலக வரை படத்தை தயாரித்து வெளியிட்டார்.அப்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இருபுறமும் அமைந்து இருக்கும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா அதே போன்று தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களின் ஓரப் பகுதிகளானது ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்று,ஒன்றுக் கொன்று இணையான வடிவத்தில் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.இந்தப் புதிரானது 'மேட்சிங் கோஸ்ட் லைன்' என்று அழைக்கப் படுகிறது.அதன் அடிப்படையில்,முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணையானது இருந்து இருக்க வேண்டும் என்றும் பின்னர் தனித்த தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்றும் ஆர்டெல்லியஸ் விளக்கம் கூறினார்.
இது
குறித்து 1620 ஆம் ஆண்டு,ஆங்கில
தத்துவ ஆசிரியரான பிரான்சிஸ் பேக்கன் இது ஆச்சரிய
மூட்டும் விஷயத்திற்கும் மேலான ஒன்று, ஆனால்
அது என்னவென்பது புதிராக இருக்கிறது என்று
கூறினார். இது குறித்த விவாதங்களானது
படிப் படியாக, பூமியானது விரிவடைந்து
கொண்டு இருக்கிறது என்ற கருத்துக்கும், ,பூமியானது
சுருங்கி கொண்டு இருக்கிறது என்ற
கருத்துக்கும் வித்திட்டது.
அதாவது
ஒரு திராட்சைப் பழமானது உலர்ந்து சுருங்கும்
பொழுது அதன் மேல் தோலில்
சுருக்கங்கள் உருவாகுவதை போன்று பூமியின் மேல்
மலைகளும் பள்ளத் தாக்குகளும் உருவாகுகின்றன
என்று நம்பப் பட்டது.
அதே
போன்று கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு
முன்பு பூமியானது, சிறிய அளவில் இருந்ததாகவும்
அப்பொழுது பூமியின் மேல் கடல் இருந்திருக்க
வில்லை என்றும் பின்னர் பூமி
விரிவடைந்த பொழுது, மேல் ஓடு
பிளவு பட்டு பிரிந்ததால் கண்டங்கள்
உருவானதாகவும், அத்துடன் கண்டங்களுக்கு இடையில் உருவான பிளவுகளில்
கடல் உருவானதாகவும் நம்பப் பட்டது. விஞ்ஞானி
சார்லஸ் டார்வின் மற்றும் நிகோலா டெஸ்லா
போன்றோர்களும் இந்தக் கருத்தில் ஆர்வம்
காட்டினார்கள்.
இந்த
நிலையில்,1861 ஆம் ஆண்டு ஆஸ்திரிய
நாட்டை சேர்ந்த எட்வார்ட் சூயஸ்
என்ற ஆராய்ச்சியாளர், ஆல்ப்ஸ் மலையின் மேல்
கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு
பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் முன்
ஒரு காலத்தில் பூமத்திய ரேகைப் பகுதியில் கடல்
பகுதி இருந்திருக்க வேண்டும் என்றும் அந்தக் கடலுக்கு
டெதிஸ் என்றும் பெயர் சூட்டினார்.
அதன்
பிறகு இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு
முன்பு அழிந்து போன குளோசோப்
டெரிஸ் என்று அழைக்கப் படும்
தாவரத்தின் பாகங்களானது, தென் பகுதிக் கண்டங்களில்
கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில், முன்
ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம்
ஒரே தொடர்ச்சியாக இருந்து இருக்க வேண்டும்
என்றும் அதற்குப் பிறகு கண்டத்திற்கு இடைப்
பட்ட நிலப் பகுதிகள் உடைந்து
கடலுக்குள் மூழ்கி இருக்க வேண்டும்
என்று ஒரு விளக்கத்தை தெரிவித்தார்.அந்தத் தென் பெருங்
கண்டத்திற்கு ''கோண்டுவானா'' என்றும் பெயர் சூட்டினார்.
இந்த நிலையில்,1915 ஆம் ஆண்டு மார்பர்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து கொண்டு இருந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் வெக்னர், ஒரு நாள் கல்லூரி நூலகத்தில் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்தார்.அந்த புத்தகத்தில் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களில் ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது தெரிவிக்க பட்டு இருந்தது.
குறிப்பாக, இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மூன்று அடி நீளமுள்ள ''மெஸோ சாராஸ்'' என்ற முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களானது, அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும், தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது.
அதற்கு முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்களை இணைக்கும் வண்ணம் கடல் மேல் ஒரு தற்காலிக நிலப் பாலம் இருந்திருக்கலாம் என்று பின்னர் அந்த பாலம் கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும் விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது. ஆனால் வெக்னர் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களின் ஒரப் பகுதிகள், ஒன்றில் ஒன்று பொருந்துவதை போன்று, ஒன்றுக்கு கொன்று இணையாக இருப்பது, தற்செயலானதாக இருக்காது.என்று நம்பினார். மாறாக முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் பின்னர் அந்தப் பெருங் கண்டமானது தனித் தனியாகப் பிரிந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்று விளக்கம் கூறினார்.
ஆனால் புவியியலாளர்கள் அவரின் விளக்கத்தை ஏற்க வில்லை.மாறாக இந்தக் கண்டங்களுக்கு இடையில் 'தற்காலிக நிலப் பாலம்'' இருந்து அதன் வழியாக விலங்கினங்களின் போக்கு வரத்து நடை பெற்று இருக்கலாம் என்று நம்பினார்கள்.அதன் பிறகு அந்த தற்காலிக நிலப் பாலம் கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும் கூறினார்கள்.
குறிப்பாக கண்டங்களானது, இலேசான கிரானைட் வகை பாறையால் ஆனது.கண்டங்களின் சராசரி தடிமனானது நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர்.
ஆனால் கடல் தளமானது அதிக கடினமான நீரை உறிஞ்சாத கடப்பாக கல்லால் ஆனது.கடல் தளத்தின் சராசரி தடிமனானது ஏழு கிலோ மீட்டர்.
அதன் அடிப்படையில்,வெக்னர்,கண்டங்களானது இலேசான கிரானைட் பாறையால் ஆகி இருந்தால் அந்த தற்காலிக நிலப் பாலமானது, அதிக கனமான கடல் தரைக்குள் மூழ்கி இருக்க இயலாது.அவ்வாறு இன்றி தற்காலிக நிலப் பலமானது அதிக கனமான கடல் தள பாறையால் ஆகி இருந்தால் அந்த பாலமானது, கடல் மட்டத்துக்கு மேலே உயர்ந்து இருக்க இயலாது, எனவே கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களின் புதை படிவங்களானது பல்வேறு கண்டங்களில் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்த பிறகு, தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம் என்று வெக்னர் வாதிட்டார்.
ஆனாலும் புவியியலாளர்கள் ஒரு வேளை கடல் பகுதிக்கு சுனாமி மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் தத்தளித்த படி விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு தற்செயலாக பரவி இருக்கலாம் என்றும் நம்பினார்கள்.
இந்த நிலையில் ஆக்ரோஷமான கடலால் சூழப் பட்டு இருக்கும் அண்டார்க்டிக் கண்டத்தில் ''லிஸ்டரோ சாரஸ் '' என்று அழைக்கப் படும் மெதுவாக நடக்கும் ஒரு மந்தமான மூதாதை விலங்கின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
ஏற்கனவே அந்த விலங்கின் புதை படிவங்களானது இந்தியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது.
இந்த விலங்குக்கு பற்களுக்குப் பதிலாக யானையை போன்று தந்தங்கள் மட்டுமே உண்டு.அதன் அடிப்படையில் இந்த விலக்கானது தரைக்கு அடியில் இருக்கும் கிழங்கு மற்றும் வேர்களை தோண்டி எடுத்து உண்ணும் வாழ்க்கை முறையை கொண்டிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.இந்த விலங்கினத்தின் புதை படிவங்களானது ஏற்கனவே இந்தியா சீனா ரஸ்யா மங்கோலியா ஆகிய பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதே போன்று 24 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சைனோ நேதஸ் என்ற விலங்கின் .புதை படிவங்களும் அண்டார்க்டிகாக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.இந்த விலங்கின் பல்லானது நாயின் பல்லை போன்று இருப்பதால் சைனோ நேதஸ் என்று அழைக்கப் படுகிறது.இந்த விலங்கினத்தின் புதை படிவங்களும் தென் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
லிஸ்டரோ சாரஸ் போன்ற ஒரு 'மந்தமான விலங்கால்' கடலில் பல நாட்கள் மரக் கிளைகள் மேல் இருந்தபடி கடலில் தத்தளித்தபடி ஆக்ரோஷமான கடல் பகுதியைக் கடந்து அண்டார்க்டிக் கண்டத்தை அடைந்து இருக்கலாம் என்று நம்புவதற்கு கடினமாக இருந்தது.
எனவே புவியியலாளர்கள் வெக்னரின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டனர்.
இந்தப் புதிரானது ''ஐடென்டிகிள் பாசில்ஸ்'' என்று அழைக்கப் படுகிறது.
மேட்சிங் கோஸ்ட் லைனுக்கும், ஐடென்டிகிள் பாசில்ஸ்சுக்கும் காரணம் என்ன என்ற கேள்வி எழுந்தது.
இந்த புதிர்களை விளக்குவதர்காக ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் என்ற ஆராய்ச்சியாளர், முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்து இருக்க வேண்டும் என்றும், பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்ற விளக்கத்தை முன் மொழிந்தார்.
அத்துடன் நில்லாமல், ஒரே வகையான கால நிலையில் வாழக் கூடிய, வளரக் கூடிய விலங்குகள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு, உலக வரை படத்தை வெட்டி ஒட்டி, ஒரு வரை படத்தை தயாரித்தார்.
அதன் அடிப்படையில், இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பூமியின் வட துருவம் தொடங்கி, தென் துருவம் வரைக்கும், ஒரு பெருங் கண்டம் இருந்ததாகவும், அந்தப் பெருங் கண்டத்திற்கு 'பாஞ்சியா' என்றும் பெயர் சூட்டினார்.அந்தப் பெருங் கண்டத்தை சுற்றி 'பாந்தலாசா' என்ற கடல் இருந்ததாகவும் அவர் கூறினார்.
பின்னர் பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பாஞ்சியா கண்டம் இரண்டாகப் பிரிந்து, 'லாரேசியா' என்ற கண்டம் உருவாகி வட பகுதியை நோக்கியும்நகர்ந்ததாகவும் வெக்னர் கூறினார்.
அதே போன்று 'கோண்டுவானா' என்ற கண்டம் உருவாகி, தென் துருவத்தை நோக்கியும் நகர்ந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், பூமத்திய ரேகைப் பகுதியில் 'டெதிஸ்' என்ற கடல் உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
பின்னர் வட பகுதி 'லாரேசியாக் 'கண்டமும் இரண்டாகப் பிரிந்ததாகவும் அதனால் , வட அமெரிக்க கண்டம் உருவாகி மேற்கு திசையை நோக்கியும், அதே போன்று யூரேசியாக் கண்டம் உருவாகி கிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்தாகவும் அதனால் , இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், வட அட்லாண்டிக் கடல் உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
அதே போன்று தென் பகுதிக் கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து, தென் அமெரிக்கக் கண்டம் பிரிந்து, வட மேற்கு திசையில் நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும் வெக்னர் கூறினார்.
அதே போன்று கோண்டுவானாக் கண்டத்தில் இருந்து, ஆப்பிரிக்கக் கண்டம் பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும் வெக்னர் கூறினார்.
இந்த நிலையில் தென் பகுதியில் எஞ்சி இருந்த அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களும்,தனித் தனியாகப் பிரிந்து வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும் வெக்னர் கூறினார்.
இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது.
0000000000000000000000
ஆனால் வெக்னர் கூறிய படி,உலக உருண்டையில் கண்டங்களின் ஒரப் பகுதிகள் சரியாகப் பொருந்த வில்லை.ஆனால் முப்பது சத வீத அளவில், சிறியதாக இருக்கும் உலக உருண்டையின் மேல், கண்டங்களின் ஒரப் பகுதிகள், ஓரளவு சரியாகப் பொருந்துவதை,ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த, தாமஸ் வாரன் காரி என்ற பேராசிரியர் கண்டறிந்தார்.அதன் அடிப்படையில் பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது என்ற விளக்கத்தைக் கூறினார்.ஆனால் அவரின் விளக்கம் ஏற்றுக் கொள்ளப் பட வில்லை.ஆனால் எதிர் காலத்தில் கண்டு பிடிக்கப் படும் புதிய கண்டு பிடிப்புகள் பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதை நிரூபிக்கும் என்று தாமஸ் வாரன் காரி நம்பிக்கை தெரிவித்தார்.
0000000000000000000000
இந்த நிலையில் தற்பொழுது கலிபோர்னியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த நில அதிர்ச்சி இயல் நிபுணர்களான டாக்டர் டேனியல் ப்ராஸ்ட் தலைமையிலான ஆராய்ச்சிக்கு குழுவினர் .பூமிக்குள் நில அதிர்ச்சி அழைக்கப் பரவும் தன்மையை ஆய்வு செய்தனர்.அதன் அடிப்படையில்,பூமியின் மையாக கோளமானது ஆண்டுக்கு ஒரு மில்லி மீட்டர் வேகத்தில் வளர்ந்து கொண்டு இருப்பதாக தெரிவித்து இருக்கின்றனர்.அத்துடன் இந்த வளர்ச்சியானது எல்லா இடத்திலும் ஒரே சீராக இல்லாமல் இந்தோனேசியாத் தீவுக்கு அடியில் சிறிது வேகமாகவும்,பிரேசிலுக்கு அடியில் குறைவான வேகத்திலும் வளர்ந்து கொண்டு இருப்பதாகவும் அந்த ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
0000000000000000000000
குறிப்பாக வெக்னர் கூறிய படி, கடல் தரையைப் பிளந்து கொண்டு, கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை. எனவே கண்டங்கள் எவ்வாறு நகர்ந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்துக் கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற பொழுது ,கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பல்களின் போக்கு வரத்துக்கு பயன் படுத்துவதற்காக ,முதன் முதலில் சோனார் என்ற கருவி பயன் படுத்தப் பட்டு ,கடல் தரையின் மேடு பள்ளங்கள் குறித்த வரை படம் தயாரிக்கப் பட்டது. குறிப்பாக அந்த வரை படத்தை புரூஸ் ஹீசின் மற்றும் மேரி த்ரோப் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் தயாரித்தனர். மேரி த்ராப் பெண் என்பதால் அவர் நீர் மூழ்கிக் கப்பலில் பணி புரிவதற்கு அந்தக் காலத்தில் அனுமதிக்கப் பட வில்லை. வெறும் தரவுகள் மூலமாகவே, த்ராப் அந்த வரை படத்தை தயாரித்தார். அப்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில். வடக்கு தெற்கு திசையில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, எரிமலைத் தொடர் இருப்பதுடன், அதன் இரு புறமும் பிளவுப் பள்ளத் தாக்குகள் இருப்பதையும், வரை படத்தை தயாரித்த மேரி த்ரோப் அறிந்தார். அதன் அடிப்படையில் மேரி த்ராப், வெக்னரின் விளக்கம் சரி என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் புரூஸ் ஹீசின், பூமி விரிவடைந்து கொண்டு இருக்கும் கருத்தின் மேல் நம்பிக்கை கொண்டார்.தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், கண்டங்களைச் சுற்றிலும் எரிமலைத் தொடர்கள் இருப்பதை புரூஸ் ஹீசின் அறிந்தார். இந்த நிலையில் கடல் தரையின் மேல் நில அதிர்ச்சிகள் ஏற்படும் இடங்கள் குறித்த ஒரு வரை படத்தையும் புரூஸ் ஹீசின் நியமித்த ஹோவர்ட் என்ற ஆராய்ச்சியாளர் தயாரித்தார். அந்த நில அதிர்ச்சி வரை படத்தை, ஏற்கனவே தயாரித்த எரிமலைத் தொடர்கள் குறித்த வரை படத்துடன் பொருத்திப் பார்த்த பொழுது, ஆச்சரியமாக ஒன்றின் மேல் ஒன்று அச்சாகப் பொருந்தியது.
இந்த நிலையில் புரூஸ் ஹீசின் தயாரித்த இரண்டு வரைபடங்கள் மூலம், ஒரு புதிய விளக்கம் முன்மொழியப் பட்டது.
அதன் அடிப்படையில்,அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது, மேற்பகுதிக்கு தொடர்ந்து வெளி வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புதிய விளக்கம் கூறப் பட்டது.
இவ்வாறு கண்டங்களுக்கு இடையில், புதிய கடல் தளம் உருவாகி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால், பூமியின் அளவானது பெரிதாக வேண்டுமே என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் புதிதாக உருவாகும் கடல் தளமானது, கண்டங்களுக்கு அடியில் மறுபடியும் சென்று அழிவதாகவும், அதனால் பூமியின் அளவானது ஒரே அளவாக இருப்பதாகவும் விளக்கம் கூறப் பட்டது.
இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது.
இவ்வாறு கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், விளக்கம் கூறப் படுகிறது. அதே போன்று,கடலுக்கு அடியில் ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தின் கடல் தளமானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர்.
அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் பட்ட, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
துருவப் பகுதிகளில் டைனோசர்கள் எப்படி வாழ்ந்தன?
கடுங் குளிர் பிரதேசமான வட துருவ ஆர்க்டிக் வளையப் பகுதியில் பனிரெண்டு இந வகையை சேர்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டன.
அத்துடன் மிகவும் இள வயது டைனோசர்களின் பற்கள் மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இந்தக் கண்டு பிடிப்பானது ஆராய்ச்சியாளர்களை தலை முடியை பிச்சுக் கொள்ள செய்து இருக்கிறது.
ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட,வட அமெரிக்காவின் வாடா பகுதியில் உள்ள, அலாஸ்காவின் வட பகுதியும்,அதே போன்று ஆசையாக கண்டத்தின் வட பகுதியில் அமைந்து இருக்கும் சைபீரியாவின் வட பகுதியும் கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே,ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டதாக நம்பப் படுகிறது.
ஆனால் பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால் துருவங்களில் நான்கு மாத காலம் தொடர்ந்து ஆர்க்டிக் பகுதியில் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.
சாதாரண கோழி முட்டை பொரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் தேவை,எனவே நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய அளவில் இருக்கும், டைனோசர்களின் முட்டைகளானது, பனிப் பிரதேசத்தில் எப்படி பொரிந்தன என்ற கேள்வி எழுகிறது.
நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால், சூரிய ஒளி இன்றி, தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது. எனவே யானைக் கூட்டத்தை விட, பல மடங்கு அதிக தாவரங்களை உண்ணக் கூடிய, டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய, அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வளர்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக டைனோசரானது பாலூட்டி விலங்கினத்தை போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யவோ, அதனை பாதுகாக்க மயிர்த் தோல் தகவமைப்போ இல்லாத ஊர்வன வகை விலங்கினத்தைச் சேர்ந்தது.முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது. சாதாரண கோழி முட்டைகள் பெரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்பம் தேவை. ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பமே பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும். எனவே ஆர்க்டிக் பகுதியில் நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய ''டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன'' என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. சில சிறிய அளவுள்ள டைனோசர்கள் தங்களின் முட்டைகளை அடை காக்கக் கூடியது என்றாலும் கூட, ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள ''எட்மாண்டோ சாரஸ்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.ஏழு டன் எடையுள்ள டைனோசரால் முட்டைகளின் மேல் அமர்ந்து அடை காக்க சாத்தியம் இல்லை . எனவே ஆர்க்டிக் பகுதியில் பெரிய அளவு டைனோசர்கள் முட்டைகள் எப்படி பொரிந்தன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. எனவே சில உயிரியல் வல்லுநர்கள் பனி மான்களை போன்று டைனோசர்கள் ''குளிர் கால இடப் பெயர்ச்சி'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். சில உயிரியல் வல்லுநர்கள் பனிக் கரடிகளைப் போன்று ,டைனோசர்கள், ''குளிர் கால நெடுந்துயில்'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டாக்டர் கிரிகர் எரிக்சன் என்ற ஆராய்ச்சியாளர் டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்கு உள்ளே இருந்த, டைனோசர் குஞ்சுகளின் பற்களில் இருந்த வளையங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அதன் வயதானது ஆறு மாதம் என்று கண்டு பிடித்து இருக்கிறார். அதன் அடிப்படையில் டைனோசர்களின் முட்டைகள் பொரிய, ஆறு மாத காலம் ஆகி இருக்கிறது என்றும், அதன் பிறகும் டைனோசர் குஞ்சுகள் சுயமாக இயங்க, ஓராண்டு காலம் ஆகி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். எனவே ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது, கோடை கால இடப் பெயர்ச்சியோ அல்லது குளிர் கால நெடுந்துயிலோ மேற்கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். மாறாக ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் ஆண்டு முழுவதும் தங்கி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்கின்றன என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். எனவே ஆர்க்டிக் பகுதியில் நான்கு மாத கால தொடர் இரவுக் காலத்தில், டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய, காடுகள் எப்படி சூரிய ஒளியின்றி வளர்ந்தன?டைனோசர்கள் எப்படி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? மைனஸ் எண்பது டிகிரி வெப்ப நிலையில், நீர் கூட உறைந்து பனிக் கட்டி ஆகி விடும் சூழ் நிலையில், டைனோசர்கள் எப்படி தண்ணீரைக் குடித்து வாழ்ந்தன? தாவரங்கள் நீருக்கு என்ன செய்தன ?போன்ற கேள்விகளும் விடை அளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
டைனோசர்கள் எப்படி அழிந்தன?
சில ஆராய்ச்சியாளர்கள்,ஆர்க்டிக் பகுதி டைனோசர்கள் ஒடிந்த கிளைகள் கொப்புகளை உண்டு, எப்படியோ தப்பித் பிழைத்து இருக்கும் என்று நம்பினாலும் இந்த விளக்கமானது ,டைனோசர்களின் அழிவுக்கு கூறப் பட்ட, விண்கல் மோதல் விளக்கத்தைக் கேள்விக் குறியாகி விட்டது. அதாவது ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் மேல், ஒரு ராச்சத விண் கல் மோதியதாகவும், அதனால் எழுந்த புழுதியானது, பூமியெங்கும் பரவி, ஆறு மாத காலம் சூரியனையே மறைத்தாகாவும், அதனால் தாவர இனங்களே அழிந்ததாகவும், அதனால் டைனோசர் போன்று, அதிக அளவில் தாவரங்களை உண்ணக் கூடிய, விலங்கினங்கள் முற்றாக அழிந்ததாகவும், ஒரு விளக்கம் கூறப் பட்டது. இதனால் ஆர்க்டிக் பகுதியில். ஆறுமாத காலம் டைனோசர்கள் கொப்புகளையும் கிளைகளையும் உண்டு வாழ்ந்தால், விண் கல் மோதலின் போதும் அதே போன்று கொப்புகளையும் கிளைகளையும் உண்டு, டைனோசர்கள் உயிர் பிழைத்து இருக்க முடியுமே என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இதனால் ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் எப்படி ஆறு மாத காலம், சூரிய ஓளியின்றி வாழ்ந்தன, அடர்ந்த காடுகள் எப்படி உருவாகின, போன்ற கேள்விகளும் விடையளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
கடல் தளமானது, தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும் நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
எனவே டைனோசர்களின் புதை படிவங்கள் தீவுக் கண்டங்களில் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில் ,நார்வே நாட்டுக் கடல் பகுதியில், எண்ணெய் எடுப்பதற்காகக் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது, கிடைத்த பாறைப் பகுதிகளில், ஐரோப்பாக் கண்டத்தில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பரவலாக வாழ்ந்த, பிளேட்டியோ சாரஸ் என்று அழைக்கப் படும்,தாவர உண்ணி வகை டைனோசரான, பனை மர உயர டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் காலத்தில் மூழ்கிக் கிடக்கும் கெர்கூலியன் என்ற கடலடி பீட பூமியானது, எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக, பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர், அந்த கடலடி எரிமலைப் பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட, எரிமலைப் பாறைப் படிவுகளின் தொன்மையை ஆய்வு செய்த பொழுது, அந்த படிவுகளில் ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் கருகிய பாகங்கள் ,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.
இதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது, ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு தீவாக இருந்திருப்பதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் 6000 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும், ''தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு'' என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து, சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம், டைனோசர் காலத்தில், கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன், கண்டங்களுக்கு இடையில், காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும்,அதன் வழியாக டைனோசர்கள் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும், ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து பூமியின் மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இந்த நிலையில் கண்டங்களின் மேல் பரவலாகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.
இதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் நிரூபணம் ஆகிறது.
இவ்வாறு கண்டங்களும், கடல் மட்டமும், மாறி மாறி உயர்ந்து இருப்பதன் மூலம், பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் நிரூபணம் ஆகிறது.
முக்கியமாக டைனோசர்களின் காலத்தில், பூமியானது சிறியதாக இருந்ததால், துருவப் பகுதிகளில், அதிக அளவில், சூரிய ஒளியும் விழுந்து இருக்கிறது.
தற்பொழுது பூமியின் நடுப்பகுதி புடைத்துக் கொண்டு இருக்கிறது.ஆனால் துருவப் பகுதிகளில் தட்டையாக இருக்கிறது.ஆனால் பூமி உருவாகிய பொழுது, கோளமாக இருந்திருக்கிறது.பூமி விரிவடைந்ததால் ஏற்பட்ட மாற்றம் இது.
0000000000000000000000
பூமி விரிவடைந்து கொண்டு இருப்பதை ஒரு உதாரணம் மூலம் விளக்குக்கிறேன்.
பூமியின் மையமானது ஒரு அடர்த்தியான வெண்ணெய்யால் ஆன கோளம் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.அதனைச் சுற்றிலும் கிரீம் பிஸ்கெட்டில் அல்லது கேக்கில் இருக்கும் கிரீம் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.
மேற்புறமானது பொறுக்கு போன்ற பிஸ்கெட்டால் ஆனது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.இப்பொழுது மையக் கோளம் விரிவடைவடைந்தால் என்ன ஆகும்.அதனை சுற்றி இருக்கும் கிரீம் போன்ற பகுதி விரிவடையும்.அதனால் அதனை சுற்றி இருக்கும் மேற்புற பொறுக்கு போன்ற பிஸ்கெட் பகுதியானது உடைந்து சிதறி பல பகுதிகளாக பிரிந்து,ஒன்றில் இருந்து ஒன்று விலகும்.இதனை கண்டங்களாக கற்பனை செய்து கொள்ளலாம்.அதற்கு அடுத்த அடுக்காக இருக்கும் கிரீமை, கடல் தளமாக கற்பனை செய்து கொள்ளலாம். இப்படித்தான் நமது பூமி விரிவடைந்து கொண்டு இருக்கிறது.குறிப்பாக மேற்பகுதி விரிவடையும் பொழுது, அதில் ஏற்படும் பிளவுகள் மற்றும் இங்கு இடுக்குகள் வழியாக, பூமிக்குள் இருந்து வெளிப் படும் பாறைக் குழம்பால் நிரப்பப் படும் பொழுது, மேல் நோக்கி உயரும் பாறைக் குழம்பால், பாறை அடுக்குகள் உடையும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுகிறது. மேலும் மேலும் பாறைக் குழம்பு உயரும் பொழுது, எரிமலையாக வெடித்து வெளியேறுகிறது. கடலுக்கு அடியில் எரிமலைகள் வெடிக்கும் பொழுது சுனாமி அலைகள் உருவாகுகிறது.
பூமி குளிர்ந்து கொண்டு இருப்பதால் விரிவடைகிறது.குளிரும் பொழுது பாறைக் குழம்பில் இருந்து நீரும் வாயுக்களும் எண்ணையும் வெளியேறுகிறது.வெளியேறிய நீரால் கடல் உருவானது. வெளியேறிய வாயுக்களால் வளி மண்டலம் உருவானது.
00000000000000
oooooooooooooo
அடிப்படை ஆதாரம் இல்லாத கண்டத் தட்டு நகர்ச்சி கருத்து எப்படி உருவாக்கப் பட்டது? இது குறித்து சற்று விரிவாக காணலாம்.
இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மூன்று அடி நீளமுள்ள ''மெஸோ சாராஸ்'' என்ற முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களானது, அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும், தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் வெக்னர், என்ற ஆராய்ச்சியாளர் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து, ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்திருக்க வேண்டும் என்றும் வெக்னர் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
ஆனால் அவரின் மற்ற ஆராய்ச்சியாளர்கள் அப்பொழுது ஏற்றுக் கொள்ள வில்லை.
காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரப் படுக்கைகள் மேல் இருந்தபடி, விலங்கினங்கள் பல நாட்கள், பல வாரங்கள், கடலில் தத்தளித்தபடி, மிதந்து மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்த பிறகு, இனப் பெருக்கம் செய்து, பெருகி இருக்கலாம் என்று நம்பினார்கள்.
இந்த நிலையில், அண்டார்க்டிக் கண்டத்தில், இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, லிஸ்ட்ரோசாராஸ் என்ற விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.ஏற்கனவே அந்த விலங்கின் புதை படிவங்கள், இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் கண்டு பிடிக்கப் பட்டது.ஆனால் லிஸ்ட்ரோ சாராஸ் விலங்கானது, தாவரங்களை உண்டு ஆமையைப் போன்று, மெதுவாக நகரக் கூடிய, ஒரு மந்தமான விலங்கு என்பதுடன், நடக்கும் பொழுது இடுப்பை வளைத்து வளைத்து,அசைத்து அசைத்து மெதுவாக நடக்கும் விலங்கு என்பதும், எலும்புப் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்தது.எனவே அந்த விலங்கால், பல நாட்கள் கடலில் மிதக்கும் மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு, ஆர்ப்பரிக்கும் கடல் பகுதியால் சூழப் பட்டு இருக்கும், அண்டார்க்டிக் கண்டத்தை அடைந்திருக்கும் என்று நம்புவதற்கு கடினமாக இருந்தது.
எனவே புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டங்கள் நகர்வதற்கான சாத்தியங்கள் குறித்து யோசிக்கலாயினர்.
இதே போன்று ,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,''ஸ்வால்பார்ட்'' என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய ''கள்ளி'' வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், தற்பொழுது ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் அந்த தீவானது, முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய, பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு அந்த தீவானது, வடக்கு திசையில் நகர்ந்து, ஆர்க்டிக் பகுதிக்குள் வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்றும், வெக்னர் விளக்கம் கூறினார்.
இந்த நிலையில்,வெக்னர், ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய, வளரக் கூடிய, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள், அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை, வெட்டியும் ஒட்டியும் மாற்றி அமைத்தார். அதன் அடிப்படையில் ,இருபத்தி ஐந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார்.அந்தப் பாஞ்சியா கண்டத்தைச் சுற்றிலும் 'பாந்தலாசா' என்ற ஆழம் குறைந்த கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார்.
முதல் பிரிவு.
அதன் பிறகு,''பதினைந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியா பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், பூமத்திய ரேகைப் பகுதியில், ''டெதிஸ்'' என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
இரண்டாவது பிரிவு.
அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதி லாரேசியாக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார்.
மூன்றாவது பிரிவு.
அதே போன்று,தென் பகுதிக் கண்டங்களும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,வட அமெரிக்கக் கண்டத்துடன் இணைந்ததாகவும் வெக்னர் கூறினார். அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருந்த நிலப் பகுதியானது, புடைத்துக் கொண்டு உயர்ந்ததால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும், அப்பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களின் நகர்ச்சி மற்றும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார். இவ்வாறு தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்கள், முறையே வட மேற்கு மற்றும் வட கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் ''தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி'' உருவாகி, விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். இந்த நிலையில் ,தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக்காக் கண்டத்தில் இருந்து,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள், பிளவு பட்டு பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் வெக்னர் கூறினார். இதில் இந்திய நிலப் பகுதியானது ,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தீவுக் கண்டமாக பூமத்திய ரேகைப் பகுதியில் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் ,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருந்த கடல் பகுதி , புடைத்துக் கொண்டு உயர்ந்ததால், இமய மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். இமய மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, ஆசியா மற்றும் இந்தியக் கண்டங்களின் நகர்ச்சியும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார்.
அத்துடன் இமய மலைத் தொடர் பகுதியில், அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், இந்தியாவின் நகர்ச்சியே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது. இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது.
குறிப்பாக வெக்னர் கூறிய படி, கடல் தரையைப் பிளந்து கொண்டு, கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை. எனவே கண்டங்கள் எவ்வாறு நகர்ந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்துக் கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற பொழுது ,கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பல்களின் போக்கு வரத்துக்கு பயன் படுத்துவதற்காக ,முதன் முதலில் சோனார் என்ற கருவி பயன் படுத்தப் பட்டு ,கடல் தரையின் மேடு பள்ளங்கள் குறித்த வரை படம் தயாரிக்கப் பட்டது. குறிப்பாக அந்த வரை படத்தை புரூஸ் ஹீசின் மற்றும் மேரி த்ரோப் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் தயாரித்தனர். மேரி த்ராப் பெண் என்பதால் அவர் நீர் மூழ்கிக் கப்பலில் பணி புரிவதற்கு அந்தக் காலத்தில் அனுமதிக்கப் பட வில்லை. வெறும் தரவுகள் மூலமாகவே, த்ராப் அந்த வரை படத்தை தயாரித்தார். அப்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில். வடக்கு தெற்கு திசையில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, எரிமலைத் தொடர் இருப்பதுடன், அதன் இரு புறமும் பிளவுப் பள்ளத் தாக்குகள் இருப்பதையும், வரை படத்தை தயாரித்த மேரி த்ரோப் அறிந்தார். அதன் அடிப்படையில் மேரி த்ராப், வெக்னரின் விளக்கம் சரி என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் புரூஸ் ஹீசின், பூமி விரிவடைந்து கொண்டு இருக்கும் கருத்தின் மேல் நம்பிக்கை கொண்டார்.தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், கண்டங்களைச் சுற்றிலும் எரிமலைத் தொடர்கள் இருப்பதை புரூஸ் ஹீசின் அறிந்தார். இந்த நிலையில் கடல் தரையின் மேல் நில அதிர்ச்சிகள் ஏற்படும் இடங்கள் குறித்த ஒரு வரை படத்தையும் புரூஸ் ஹீசின் நியமித்த ஹோவர்ட் என்ற ஆராய்ச்சியாளர் தயாரித்தார். அந்த நில அதிர்ச்சி வரை படத்தை, ஏற்கனவே தயாரித்த எரிமலைத் தொடர்கள் குறித்த வரை படத்துடன் பொருத்திப் பார்த்த பொழுது, ஆச்சரியமாக ஒன்றின் மேல் ஒன்று அச்சாகப் பொருந்தியது.
இந்த நிலையில் புரூஸ் ஹீசின் தயாரித்த இரண்டு வரைபடங்கள் மூலம், ஒரு புதிய விளக்கம் முன்மொழியப் பட்டது. அதன் அடிப்படையில்,அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது, மேற்பகுதிக்கு தொடர்ந்து வெளி வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புதிய விளக்கம் கூறப் பட்டது. இவ்வாறு கண்டங்களுக்கு இடையில், புதிய கடல் தளம் உருவாகி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால், பூமியின் அளவானது பெரிதாக வேண்டுமே என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் புதிதாக உருவாகும் கடல் தளமானது, கண்டங்களுக்கு அடியில் மறுபடியும் சென்று அழிவதாகவும், அதனால் பூமியின் அளவானது ஒரே அளவாக இருப்பதாகவும் விளக்கம் கூறப் பட்டது. இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது. இவ்வாறு கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், விளக்கம் கூறப் படுகிறது. அதே போன்று,கடலுக்கு அடியில் ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தின் கடல் தளமானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது.
துருவப் பகுதிகளில் டைனோசர்கள் எப்படி வாழ்ந்தன?
கடுங் குளிர் பிரதேசமான வட துருவ ஆர்க்டிக் வளைய பகுதியில் பனிரெண்டு இந வகையை சேர்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டன.
அத்துடன் மிகவும் இள வயது டைனோசர்களின் பற்கள் மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இந்தக் கண்டு பிடிப்பானது ஆராய்ச்சியாளர்களை தலை முடியை பிச்சுக் கொள்ள செய்து இருக்கிறது.
பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால் துருவங்களில் நான்கு மாத காலம் தொடர்ந்து ஆர்க்டிக் பகுதியில் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.
ஆனால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்கா,மற்றும் சைபீரியா போன்ற நிலப் பகுதிகள் எல்லாம் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது. சாதாரண கோழி முட்டை பொரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் தேவை,எனவே நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய அளவில் இருக்கும், டைனோசர்களின் முட்டைகளானது, பனிப் பிரதேசத்தில் எப்படி பொரிந்தன என்ற கேள்வி எழுகிறது.
நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால், சூரிய ஒளி இன்றி, தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது. எனவே யானைக் கூட்டத்தை விட, பல மடங்கு அதிக தாவரங்களை உண்ணக் கூடிய, டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய, அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வளர்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக டைனோசரானது பாலூட்டி விலங்கினத்தை போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யவோ, அதனை பாதுகாக்க மயிர்த் தோல் தகவமைப்போ இல்லாத ஊர்வன வகை விலங்கினத்தைச் சேர்ந்தது.முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது. சாதாரண கோழி முட்டைகள் பெரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்பம் தேவை. ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பமே பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும். எனவே ஆர்க்டிக் பகுதியில் நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய ''டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன'' என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. சில சிறிய அளவுள்ள டைனோசர்கள் தங்களின் முட்டைகளை அடை காக்கக் கூடியது என்றாலும் கூட, ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள ''எட்மாண்டோ சாரஸ்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.ஏழு டன் எடையுள்ள டைனோசரால் முட்டைகளின் மேல் அமர்ந்து அடை காக்க சாத்தியம் இல்லை . எனவே ஆர்க்டிக் பகுதியில் பெரிய அளவு டைனோசர்கள் முட்டைகள் எப்படி பொரிந்தன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. எனவே சில உயிரியல் வல்லுநர்கள் பனி மான்களை போன்று டைனோசர்கள் ''குளிர் கால இடப் பெயர்ச்சி'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். சில உயிரியல் வல்லுநர்கள் பனிக் கரடிகளைப் போன்று ,டைனோசர்கள், ''குளிர் கால நெடுந்துயில்'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டாக்டர் கிரிகர் எரிக்சன் என்ற ஆராய்ச்சியாளர் டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்கு உள்ளே இருந்த, டைனோசர் குஞ்சுகளின் பற்களில் இருந்த வளையங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அதன் வயதானது ஆறு மாதம் என்று கண்டு பிடித்து இருக்கிறார். அதன் அடிப்படையில் டைனோசர்களின் முட்டைகள் பொரிய, ஆறு மாத காலம் ஆகி இருக்கிறது என்றும், அதன் பிறகும் டைனோசர் குஞ்சுகள் சுயமாக இயங்க, ஓராண்டு காலம் ஆகி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். எனவே ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது, கோடை கால இடப் பெயர்ச்சியோ அல்லது குளிர் கால நெடுந்துயிலோ மேற்கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். மாறாக ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் ஆண்டு முழுவதும் தங்கி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்கின்றன என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். எனவே ஆர்க்டிக் பகுதியில் நான்கு மாத கால தொடர் இரவுக் காலத்தில், டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய, காடுகள் எப்படி சூரிய ஒளியின்றி வளர்ந்தன?டைனோசர்கள் எப்படி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? மைனஸ் எண்பது டிகிரி வெப்ப நிலையில், நீர் கூட உறைந்து பனிக் கட்டி ஆகி விடும் சூழ் நிலையில், டைனோசர்கள் எப்படி தண்ணீரைக் குடித்து வாழ்ந்தன? தாவரங்கள் நீருக்கு என்ன செய்தன ?போன்ற கேள்விகளும் விடை அளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
டைனோசர்கள் எப்படி அழிந்தன?
சில ஆராய்ச்சியாளர்கள்,ஆர்க்டிக் பகுதி டைனோசர்கள் ஒடிந்த கிளைகள் கொப்புகளை உண்டு, எப்படியோ தப்பித் பிழைத்து இருக்கும் என்று நம்பினாலும் இந்த விளக்கமானது ,டைனோசர்களின் அழிவுக்கு கூறப் பட்ட, விண்கல் மோதல் விளக்கத்தைக் கேள்விக் குறியாகி விட்டது. அதாவது ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியின் மேல், ஒரு ராச்சத விண் கல் மோதியதாகவும், அதனால் எழுந்த புழுதியானது, பூமியெங்கும் பரவி, ஆறு மாத காலம் சூரியனையே மறைத்தாகாவும், அதனால் தாவர இனங்களே அழிந்ததாகவும், அதனால் டைனோசர் போன்று, அதிக அளவில் தாவரங்களை உண்ணக் கூடிய, விலங்கினங்கள் முற்றாக அழிந்ததாகவும், ஒரு விளக்கம் கூறப் பட்டது. இதனால் ஆர்க்டிக் பகுதியில். ஆறுமாத காலம் டைனோசர்கள் கொப்புகளையும் கிளைகளையும் உண்டு வாழ்ந்தால், விண் கல் மோதலின் போதும் அதே போன்று கொப்புகளையும் கிளைகளையும் உண்டு, டைனோசர்கள் உயிர் பிழைத்து இருக்க முடியுமே என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இதனால் ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் எப்படி ஆறு மாத காலம், சூரிய ஓளியின்றி வாழ்ந்தன, அடர்ந்த காடுகள் எப்படி உருவாகின, போன்ற கேள்விகளும் விடையளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது.
கடல் தளமானது, தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும் நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
எனவே டைனோசர்களின் புதை படிவங்கள் தீவுக் கண்டங்களில் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில் ,நார்வே நாட்டுக் கடல் பகுதியில், எண்ணெய் எடுப்பதற்காகக் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது, கிடைத்த பாறைப் பகுதிகளில், ஐரோப்பாக் கண்டத்தில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பரவலாக வாழ்ந்த, பிளேட்டியோ சாரஸ் என்று அழைக்கப் படும்,தாவர உண்ணி வகை டைனோசரான, பனை மர உயர டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதே போன்று இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் காலத்தில் மூழ்கிக் கிடக்கும் கெர்கூலியன் என்ற கடலடி பீட பூமியானது, எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக, பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர், அந்த கடலடி எரிமலைப் பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட, எரிமலைப் பாறைப் படிவுகளின் தொன்மையை ஆய்வு செய்த பொழுது, அந்த படிவுகளில் ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் கருகிய பாகங்கள் ,விதை மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.
இதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது, ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு தீவாக இருந்திருப்பதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று, இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் 6000 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும், ''தொண்ணூறு டிகிரி கிழக்கு மேடு'' என்று அழைக்கப் படும், கடலடி எரிமலைத் தொடரில் இருந்து, சேகரிக்கப் பட்ட பாறைகளில், ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான, தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம், டைனோசர் காலத்தில், கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருப்பதுடன், கண்டங்களுக்கு இடையில், காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும்,அதன் வழியாக டைனோசர்கள் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும், ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து பூமியின் மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.
இந்த நிலையில் கண்டங்களின் மேல் பரவலாகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன. இதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதும் நிரூபணம் ஆகிறது.
இவ்வாறு கண்டங்களும், கடல் மட்டமும், மாறி மாறி உயர்ந்து இருப்பதன் மூலம், பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் நிரூபணம் ஆகிறது.
முக்கியமாக டைனோசர்களின் காலத்தில், பூமியானது சிறியதாக இருந்ததால், துருவப் பகுதிகளில், அதிக அளவில், சூரிய ஒளியும் விழுந்து இருக்கிறது.
தற்பொழுது பூமியின் நடுப்பகுதி புடைத்துக் கொண்டு இருக்கிறது.ஆனால் துருவப் பகுதிகளில் தட்டையாக இருக்கிறது.ஆனால் பூமி உருவாகிய பொழுது, கோளமாக இருந்திருக்கிறது.பூமி விரிவடைந்ததால் ஏற்பட்ட மாற்றம் இது.oooooooooooooooo
ooooooo000000000oooooooooooo
Comments