பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.

அறிமுக உரை.

வணக்கம் நான் விஞ்ஞானி க.பொன்முடி,நான் கடந்த பதினைந்து ஆண்டு காலமாக, நில அதிர்ச்சி சுனாமி ஏன் ஏற்படுகிறது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
எனது ஆராய்ச்சியில்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால்தான் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகி இருப்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
ஆனால் தற்பொழுது நில அதிர்சிகள் குறித்தும் சுனாமிகள் குறித்தும் தவறான கருத்து நிலவுகிறது.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால்,கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றி இருக்கும் கடல் தளங்களுடன் தனித் தனிப் பாறைத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ,அவ்வாறு பாறைத் தட்டுகள் நகரும் பொழுது,அந்தப் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது.
அதே போன்று,ஒரு பாறைத் தட்டுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு,திடீரென்று நழுவிச் செல்லும் பொழுது,சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.
இந்த நிலையில்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால்தான் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகி இருப்பது எப்படி தெரிய வந்தது என்பது குறித்து நான் சற்று விரிவாக விளக்குகிறேன்.
இந்த நிலையில் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால்தான், நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகின என்பது எப்படி தெரிய வந்தது என்பதைப் பற்றி விளக்குகிறேன்.  

குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் சில எரிமலைகள் இருக்கின்றன.
அந்த எரிமலைகள் எல்லாம் அணைந்து போன எரிமலைகள் என்றே நீண்ட காலமாக நம்பப் பட்டது.
இந்த நிலையில்அந்த எரிமலைகள் மேல் பறந்து சென்ற செயற்கைக் கோள்கள் மூலம் அந்த எரிமலைகளின் இயக்கம் கண்காணிக்கப் பட்டது.
குறிப்பாக அந்த செயற்கைக் கோள்களில் இருந்து தரையை நோக்கி ரேடியோ கதிர்கள் வீசப் பட்டது.
அதன் பிறகு,அந்த ரேடியோ கதிர்களானது ,தரையில் இருக்கும் மேடு பள்ளங்களில் பட்டு திரும்பவும் செயற்கைக் கோளை வந்த பொழுது,கருவிகள் மூலம், தரையில் இருந்த மேடு பள்ளங்கள் பதிவு செய்யப் பட்டது.

அந்தப் படங்களை ஒன்றாக இணைத்த பொழுது,அந்த எரிமலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதை எரிமலை இயல் வல்லுனர்கள் கண்டு பிடித்தனர்.
ஏன் இவ்வாறு அந்த எரிமலைகளைச் சுற்றி ,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள, மேடு பள்ள வளையங்கள் உருவாகின என்பதற்கு,எரிமலை இயல் வல்லுனர்கள் ஒரு விளக்கத்தையும் தெரிவித்தனர்.
அதாவது,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது,ஒரு எரிமலைக்குள் நுழையும் பொழுது,அந்த எரிமலையானது சில சென்டி மீட்டர் உயர்கிறது.
அப்பொழுது,அந்த எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ,சில சென்டி மீட்டர் உயர்கிறது.
அதன் பிறகு,அந்த எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறும் பொழுது,அந்த எரிமலையானது சில சென்டி மீட்டர் தாழ்வடைகிறது.
இதனால் அந்த எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும்,பல கிலோ சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் இறங்குகிறது.
இவ்வாறு ,எரிமலைகள் சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்கும் பொழுது,அந்த எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்குவதால்,எரிமலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன ,என்று எரிமலை இயல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்தனர்.

இதே போன்று,நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவான இடங்களிலும்,குறிப்பாக , சுனாமிகளை உருவாக்கிய நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவு ஆகி இருக்கிறது.
குறிப்பாக,இத்தாலி நாட்டில்,லா அகுலா நகரில், கடந்த 2009 ஆம் ஆண்டு நில அதிர்ச்சி ஏற்பட்டது.
அப்பொழுது,அந்த நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும்,, பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவு ஆகி இருக்கிறது.
அத்துடன்,அந்தப் பகுதியில்,நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு,ஒரு வாரத்துக்கு முன்பு,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் என்று அழைக்கப் படும்,கதிரியக்கத் தன்மை உடைய வாயு ,கசிந்து இருப்பதையும்,ஜியூவாணி என்ற ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்தார்.இதே போன்று,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்த இடங்களில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருக்கின்றன.
அதன் அடிப்படையில்,ஜியோவானி ,லா அகூலா நகரில் நில அதிர்ச்சி ஏற்படப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.
அவர் எச்சரித்ததைப் போன்றே ,லா அகூலா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டது.
முக்கியமாக,ரேடான் வாயுவானது, எரிமலைகளில் இருந்து வெளிப் படும் வாயு ஆகும்.
எனவே,பூமிக்கு அடியில் எரிமலை வெடித்தால் லா அகூலா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது ஆதாரப் பூர்வமாக தெரிய வந்தது.

இதே போன்று ,கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம்,ஜப்பானில் உள்ள ஹோன்சு தீவுப் பகுதியில்,ஏற்பட்ட ,நில அதிர்ச்சியால்,சுனாமி உருவானது.
அப்பொழுது,ஹோன்சு தீவில், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் , பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவு ஆகி இருக்கிறது.
அத்துடன்,அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ,ஹோன்சு தீவுக்கு மேலே வளி மண்டல மேலடுக்கில்,வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்து இருப்பது,வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
இது குறித்து விளக்கமளித்த,நாசாவைச் சேர்ந்த,டாக்டர்,டிமிட்ரி ஒசனோவ்,அந்தப் பகுதியில்,பூமிக்கு அடியில் இருந்து,ரேடான் வாயு கசிந்து இருக்கலாம் என்றும்,ரேடான் வாயு கதிரியக்கத் தன்மை உடையதால்,அந்த வாயுவானது காற்றில் இருந்த மூலக் கூறுகளில் இருந்து எலக்ட்ரான்களை நீக்கி இருக்கலாம் என்றும்,இதனால் எலக்ட்ரான் மேகங்கள் உருவாகி இருக்கலாம் என்றும், இந்த வினையானது, ஒரு வெப்பம் உமிழும் வினை என்பதால்,வளி மண்டல மேலடுக்கில்,வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்து இருக்கலாம் என்று, ,டாக்டர் டிமிட்ரி ஒசனோவ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இதன் மூலம்,பூமிக்கு அடியில் எரிமலைகள்
 வெடித்ததாலேயே,ஹோன்சு தீவில் நில அதிர்ச்சிகளும்,சுனாமியும் உருவாகி இருப்பது, ஆதரப் பூர்வமாக உறுதிப் படுத்தப் படுகிறது.  
00000
இந்த நிலையில், நில அதிர்ச்சிகளுக்கும் ,சுனாமிகளும்,புவியியல் வல்லுநர்கள் தவறான விளக்கங்களைத் தெரிவித்து இருப்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக,கண்டங்கள் எல்லாம் கண்டங்களை சுற்றி இருக்கும் கடல் தளங்களுடன்,தனித்த தனிப் பாறைத்த தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.
அதன் அடிப்படையில்,பாறைத்த தட்டுகள் நகர்ந்து அவற்றின் ஒரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் புவியியல் வல்லுநர்கள் நம்புகின்றனர்.

அதே போன்று,ஒரு பாறைத் தட்டுகளுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டு நகர்ந்து செல்லும் பொழுது ,சுனாமி உருவாகுவதாகவும் ,புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இந்தக் கருத்தானது கண்டத் தட்டு நகர்ச்சி என்று அழைக்கப் படுகிறது.
இந்தக் கருத்தை முதன் முதலில் முன் மொழிந்தவர ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கால நிலை ஆராய்ச்சியாளரான டாக்டர் ஆல்பிரட் வெக்னர் ஆவார்.
ஒரு நாள் அவர்,பணி புரிந்து கொண்டு இருந்த, கல்லூரியில் உள்ள நூலகத்தில் ,ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்தார்.
அந்தக் கட்டுரையில்,அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும்,அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களில் ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களிருப்பதைக் குறிப்பிட்டு,இதற்கு முன் ஒரு காலத்தில்,அட்லாண்டிக் பெருங் கடல் பகுதியிளொரு தற்காலிக நிலப் பாலம் இருந்ததே காரணம் என்றும்,பின்னர் அந்தத் தற்காலிக நிலப் பாலம் கடலுக்கு அடியில் மூழ்கி இருக்கலாம் என்று விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
வேக்னருக்கு அந்த விளக்கம் திருப்தி அளிக்க வில்லை.
அவர் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களின் ஓரப் பகுதிகள் ஒன்றுக் கொன்று இணையாக இருப்பதை கவனித்தார்.
அதன் அடிப்படையில்,முன் ஒரு காலத்தில் அந்தக் கண்டங்கள் ஒன்றாக இணைந்து ஒரே நிலப் பரப்பாக இருந்திருக்க வேண்டும் என்றும்,பின்னர்,தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்று நம்பினார்.
ஆனால் அவரின் விளக்கத்தை யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை.
மாறாகக் காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்தபடி,விலங்கினங்கள் பல நாட்கள் கடலில் தத்தளித்த படி,ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம் என்று நம்பினார்கள்.
இந்த நிலையில்,கடுங் குளிர் நிலவும் பப்னிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,ஸ்வால்பார்ட் என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய கள்ளி வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுயருப்பதை வெக்னர் குறிப்பிட்டார்.
அதன் அடிப்படையில்,வெக்னர்,முன் ஒரு காலத்தில்,அந்தத் தீவானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய ,பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும்,அதன் பிறகு,வாடா துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து இருக்க வேண்டும் என்றும் வெக்னர் விளக்கம் கூறினார்.
வேக்னரின் இந்த விளக்கத்தை யாராலும் மறுக்க முடிய வில்லை.
உடனே வெக்னர்,ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய வளரக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை மாற்றி அமைத்தார்.

அதன் அடிப்படையில் ,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார்.
அதன் பிறகு,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,வெக்னர் கூறினார்.
அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதிக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,வெக்னர் கூறினார்.
அதே போன்று,தென் பகுதிக் கண்டமும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார்.
அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார்.
அதே போன்று,இந்திய நிலப் பரப்பும் தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால், இமய மலைத் தொடர் உருவானதாகவும்,வெக்னர் கூறினார்.இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது.

ஆனால்,கடல் தரையைப் பிளந்து கொண்டு,கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான, தடயங்கள் எதுவும்,கடல் தரையில், காணப் படவில்லை.
இந்த நிலையில்,இரண்டாம் உலகப் போரின் பொழுது,அமெரிக்கக் கப்பல் படையில்,பணியாற்றிய புவியியல் பேராசிரியரான,டாக்டர்,ஹாரி ஹெஸ்,நீர் மூழ்கிக் கப்பல் பயணங்களுக்குப் பயன் படுத்துவதற்காக ,கடல் தரையில் இருந்த மேடு பள்ளங்கள் குறித்த வரை படத்தை,சோனார் கருவி மூலம் தயாரித்தார்.
அப்பொழுது,கண்டங்களுக்கு இடையில்,கண்டங்களைச் சுற்றியபடி,பல்லாயிரம் கிலோ மீட்டர்,நீளத்துக்கு,கடலடி எரிமலைத் தொடர்கள் இருப்பதை அறிந்தார்.
அதன் அடிப்படையில்,ஹாரி ஹெஸ் ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
அதாவது, கண்டங்களுக்கு இடையில் இருக்கும்,எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில்,இருந்து வெப்பமான பாறைக் குழம்பானது, மேற்பகுதிக்கு வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளங்களாக உருவாகி,எதிரெதிர் திசைகளை நோக்கி,விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன்,கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,ஹாரி ஹெஸ் கூறினார்.
இந்த விளக்கமானது ‘’கண்டத் தட்டு நகர்ச்சி’’ ( plate tectonic theory ) என்று அழைக்கப் படுகிறது.

ஆனால் இந்தக் கருத்தானது, அடிப்படை ஆதாரமற்ற ஒரு கருத்து ஆகும்.

குறிப்பாகக் கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த,லட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள்,நிகழ்ந்த இடங்களைக் குறித்து,நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் ஒரு வரை படத்தைத் தயாரித்தனர்.

அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையில் தொடர்ச்சியாக நில அதிர்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
குறிப்பாக,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கலானது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஒன்றாக இணைந்து இருந்ததாகவும்,அத்துடன் அண்டார்க்டிக் கண்டதுடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும்,நம்பப் படுகிறது.
அதன் பிறகு,இந்த இரண்டு கண்டங்களும்,அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து,வாடா கிழக்கு திசையை நோக்கி,நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு, வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது.
தற்பொழுது, இந்த இரண்டு கண்டங்களும்,ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் ,அமைந்து இருக்கிறது.
எனவே ,இந்த இரண்டு கண்டங்களும் ,இரண்டு தனித் தனியான கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.
அப்படி இந்த இரண்டு கண்டங்களும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில்,தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால் உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும்,இடையில் தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இதன் மூலம் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரையானது,தொடர்ச்சியாக இருப்பதுடன்,நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
அதே போன்று,கண்டங்களும் நிலையாக இருப்பதும்,அஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
இந்த நிலையில்,கண்டங்களின் எல்லைகளைக் குறிப்பதாகக் கூறி,நாசாவைச் சேர்ந்த புவியியல் வலுனர்கள் ஒரு வரை பாதத்தையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
அந்த வரை படத்திலும்,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையைத் தனித் தனியாகப் பிரித்துக் காட்டாமல்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில்,தெற்காசிய சுனாமி குறித்து, நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,வெளியிட்ட முதல் அறிக்கையில்,இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில்,இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்து சென்றதால்தான்,நில அதிர்ச்சியும்,சுனாமியும் உருவானதாகத் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

ஆனால், அதே நாசா வெளியிட்ட இரண்டாவது அறிக்கையில்,இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில்,ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு நகர்ந்து சென்றதால்தான்,நில அதிர்ச்சியும்,சுனாமியும் உருவானதாக,முன்னுக்குப் பின் முரணாகத் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம் தெற்காசிய சுனாமிக்கு நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,அடிப்படை ஆதாரமற்ற கற்பனை விளக்கத்தைத் தெரிவித்து இருப்பதும் வெட்ட வெளிச்சமாகிறது.  
0000
இதே போன்று, கடந்த 12.1.2010 அன்று ,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும்,சுனாமிக்கும் கூட,அமெரிக்க நாட்டின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அடிப்படை ஆதாரமற்ற கற்பனை விளக்கத்தைத் தெரிவித்து இருப்பதும்,ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, வட அமெரிக்கக் கண்டமானது,வடஅட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இதே போன்று, தென் அமெரிக்கக் கண்டமானது,தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,கடல் தளத்துடன்,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
உண்மையில் வடக்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி வட அமெரிக்கக் கண்டத்துடன் கடல் தளமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருக்கும் நிலையில், தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் புதிய கடல்தளம் உருவாகி தென் அமெரிக்கக் கண்டத்துடன் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல்தரைப் பகுதியில் இருந்து ,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.

ஆனால்,உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் தரைப் பகுதியில் இருந்து ,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
குறிப்பாக, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு கிழக்குப் பகுதியில் உள்ள அட்லாண்டிக் கடல்தளமானது, தனித் தனியாகப் பிரிக்கப் படாமல், ஒரே தொடர்ச்சியாக இருக்கிறது.
அதன் அடிப்படியில்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியை,’’வரையறுக்கப் படாத எல்லைப் பகுதி’’ என்று,புவியியல் வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் அமைந்து இருக்கும், கரீபியன் தீவுக் கூட்டமானது, எப்படி உருவானது? என்ற குழப்பமும் புவியியல் வல்லுனர்களுக்கு வந்து விட்டது.
சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,பசிபிக் கடல் பகுதியில்,குறிப்பாகக் காலபாகஸ் தீவுக் கூட்டம் இருக்கும் இடத்தில்,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,எரிமலைச் செயல் பாட்டால் உருவானதாகவும்,அதன் பிறகு கரீபியன் தீவுக் கூட்டமானது,ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,நம்புகின்றனர்.
இந்த நிலையில்,அமெரிக்கக் கண்டங்களானது,எதிர்த் திசையில்,தனித் தனியாக மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்ததாகவும்,அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று அமைந்து இருக்கும்,மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது,உருவாகி இருக்க வில்லை என்றும்,அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடைவெளி இருந்ததாகவும்,அந்த இடைவெளிக்குள்,கரீபியன் பாறைத் தட்டானது நுழைந்து விட்டதாகவும்,அதன் பிறகு கடலுக்கு அடியில் இருந்து மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது உயர்ந்ததால்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,நிலத் தொடர்பு ஏற்பட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இந்தக் கருத்தானது ‘பசிபிக் கடல் மாதிரி’ என்று அழைக்கப் படுகிறது.
இந்தக் கருத்தின் படி, கரீபியன் தீவுக் கூட்டமானது, கிழக்கு திசையை நோக்கி, நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
குறிப்பாகக் கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி, வரிசையாக எரிமலைகள் உருவாகி இருக்கின்றன.
இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டத்துக்கு கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி எரிமலைகள் உருவாகி இருப்பதற்கு,பசிபிக் கடலின் மாதிரிப் படி ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது,கரீபியன் தீவுக் கூட்டமானது,கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த அட்லாண்டிக் கடல் தளமானது,கரீபியன் பாறைத் தட்டுக்கு அடியில் சென்ற பிறகு,வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாக உருவாகி,மேல் நோக்கி உயர்ந்து,கடல் தளத்தைப் பொத்துக் கொண்டு ,கடல் தளத்துக்கு மேலே எரிமலைகளாக உருவானதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
குறிப்பாக அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,பாலம் போன்று தொடர்ச்சியாக இருக்கும் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,உருவாகி இருக்க வில்லை என்றும் அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு டையில் இடை வெளி இருந்ததாகவும்,அப்பொழுது கரீபியன் பாறைத் தட்டானது,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,நுழைந்ததால் தற்பொழுது இருக்கும் இடைதுக்கு வந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
ஆனால் தற்பொழுது,மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள,நிகரகுவா நாட்டின் மலைப் பகுதியில்,மிட் கிரட்டேசியஸ் என்று அழைக்கப் படும்,அதாவது ஒன்பது முதல் பனிரெண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,ஆர்னிதோபோட் என்ற இனத்தைச் சேர்ந்த டைனோசரின் எலும்புகளை, கிரிகரி எஸ் ஹோர்னி மற்றும் புருஸ் சிம்மன்சன் ஆகியோர் , 1971 ஆம் ஆண்டில்,கண்டு பிடித்து இருக்கின்றனர்.
தற்பொழுது வாசிங்டன் அருங்காட்சியகத்தில் இருக்கும் அந்த டைனோசரின் எலும்பை, ஆய்வு செய்த.யேல் பலகலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியல் பேராசிரியரான, ஜோன் ஆஸ்ட்ரம். அந்த எலும்பானது, ஆர்னிதோபோட்,என்று அழைக்கப் படும் டைனோசரின் எலும்பு என்பதை உறுதிப் படுத்தி இருக்கிறார்.
இதன் மூலம்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க கண்டங்களுக்கு இடையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது தொடர்ச்சியாக இருந்திருப்பதுடன்,அதன் வழியாக டைனோசர்களின் போக்குவரத்தும் நடை பெற்று இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவில் உள்ள ஆர்கனாஸ் மலையின் மேற்குப் பகுதியில்,கிரேட்டேசியஸ் என்று அழைக்கப் படும் கால கட்டத்தைச் சேர்ந்த,அதாவது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,தாவர உண்ணி டைனோசரின் எலும்புகளை, கியூபா நாட்டின் தேசிய இயற்கை அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல்விலங்கியல் வல்லுனர்களான மானுவேல் இல்டுரால்டி வின்சென்ட் மற்றும் ஜுல்மா காஸ்பரினி ஆகியோர் மேற்கொண்ட கண்டு பிடித்து இருக்கின்றனர்.இதன் மூலம்,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது தாழ்வாக இருந்ததால்,அமெரிக்கக் கண்டங்களுக்கும்,கரீபியன் தீவுகளுக்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருப்பதுடன்,அதன் வழியாக டைனோசர்களின் போக்குவரத்தும் நடை பெற்று இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடைவெளி இருந்ததாகவும்,அதன் வழியாக கரீபியன் பாறைத் தட்டானது நுழைந்து விட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கங்கள் யாவும் அடிப்படை ஆதாரமற்ற கற்பனைக் கருத்துக்கள் என்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இந்த நிலையில், வேறு சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டாமானது,அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து இருக்கலாம் என்றும் ஒரு கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.
இந்தக் கருத்தானது ,’அட்லாண்டிக் கடல் மாதிரி’ என்று அழைக்கப் படுகிறது.
ஆனால், பசிபிக் கடல் பகுதியில் இருக்கும் காலபாகஸ் தீவுக் கூட்டம் போன்று அட்லாண்டிக் கடல் பகுதியில்,குறிப்பிடத் தக்க அளவுக்கு எரிமலைத் தீவுக் கூட்டம் எதுவும் இல்லை.
எனவே, குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டமானது,அட்லாண்டிக் கடல் பகுதியில் எங்கே உருவானது? என்று, ’அட்லாண்டிக் கடல் மாதிரி’யை நம்பும் புவியியல் வல்லுனர்களால் கூற இயலவில்லை.
எனவே, கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கிய .எரிமலைப் பிளம்புகளானது,காலப் போக்கில்,மறைந்து விட்டிருக்கலாம் என்று, கடல் மாதிரி’யை நம்பும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
ஆனாலும்,கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி வரிசையாக உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது எப்படி உருவானது? என்று,’அட்லாண்டிக் கடல் மாதிரி’யை நம்பும் புவியியல் வல்லுனர்களால், விளக்கம் கூற இயல வில்லை.
இந்த நிலையில், இன்னும் சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது, தற்பொழுது இருக்கும் இடத்திலேயே, உருவாகி இருக்கலாம் என்றும், ஒரு புதிய கருத்தை முன் மொழிந்து இருக்கின்றனர்.
ஆக மொத்தம்,கரீபியன் தீவுக் கூட்டமானது,ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும்,புவியியல் வல்லுனர்களுக்கு,உண்மையில் அந்தத் தீவுக் கூட்டமானது, எங்கே உருவாகி,எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று தெரிய வில்லை.
இந்த நிலையில்,கடந்த 12.1.2010 அன்று,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும், USGS என்று அழைக்கப் ,அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனர்கள்,அமெரிக்கா மற்றும் கரீபியன் பாறைத் தட்டுகள் நகர்ந்ததால்,பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால்தான்,ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டதாக ஒரு தவறான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.
குறிப்பாக, கரீபியன் தீவுக் கூட்டமானது ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக, USGS என்று அழைக்கப் ,அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனர்கள்,நம்புகிறார்கள்,ஆனால் கரீபியன் பாறைத் தட்டானது எங்கே உருவாகி,எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று, USGS மைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியாதாதால்,கரீபியன் பாறைத் தட்டானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று நேரிடையாகக் கூறாமல்,வட அமெரிக்கக் கண்டமானது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் கரீபியன் பாறைத் தட்டானது,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில்,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதகவும்,அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக, USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
ஆனால்,உண்மையில் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில் என்ன நடக்கிறது என்றே , USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியாது, என்பதே உண்மை.
அந்த உண்மையை மறைப்பதற்காகவே, USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் பாறைத் தட்டானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாகக் கூறாமல் சுற்றி வளைத்து விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர் என்பதே உண்மை.
இதன் மூலம், ஹைத்தி தீவில், ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் என்ன காரணம் என்பது, USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியவில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
உண்மையில், கடல் தளமும், கண்டங்களும் நிலையாக இருப்பது,. கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியானது, தொடர்ச்சியாக இருப்பதன் மூலம்,உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம் மூலம், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இந்த நிலையில், பூமிக்கு அடியில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டதாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

இவ்வாறு, கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில்,என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில்தான், கண்டங்களானது,கடல் தளங்களுடன் தனித் தனிப் பாறைத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள்,அடிப்படை ஆதாரமற்ற ஒரு கற்பனைக் கருத்தை நம்பிக் கொண்டு இருப்பதால்தான்,புவியியல் வல்லுனர்களால்,நில அதிர்ச்சிகளுக்கும்,சுனாமிகளுக்கும்,சரியான விளக்கத்தைக் கூற முடிய வில்லை.
இதே போன்று,கண்டத் தட்டு நகர்சிக் கருத்தை நம்பிக் கொண்டு இருக்கும் ஆராய்ச்சியாளர்களால்,ஆர்க்டிக் பகுதியில்,டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும் சரியான விளக்கத்தைக் கூற முடிய வில்லை. 

0000

ஆர்க்டிக் டைனோசர்கள் ஒரு புதிர். 

அறுபத்தி ஆறரை டிகிரி வடக்கு அட்ச ரேகைப் பகுதிக்குள் இருக்கும்,வட அமெரிக்கக் கண்டத்தின்,வட பகுதியான,அலாஸ்காவின் வட பகுதியான,நார்த் ஸ்லோப் என்று அழைக்கப் படும் பகுதியிலும்,அதே போன்று,ஆசியக் கண்டத்தின்,வட பகுதியான,சைபீரியாவின் வட பகுதியில் இருக்கும் காக்க நாட்டு ஆற்றுப் பகுதியிலும்,பதின் மூன்று இன வகையைச் சேர்ந்த,தாவர மற்றும் ஊண் உண்ணி இனவகையைச் சேர்ந்த, டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள்,இளவயது டைனோசர்களின் பற்கள்,மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்கள், கண்டு பிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து,டைனோசர்களின் வாழ்க்கை முறை குறித்து,ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டு இருக்கின்றனர்.

ஏனென்றால்,தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் ,வெப்ப மண்டலக் கால நிலையில்,காணப் படக் கூடிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்களானது, பனிப் பிரதேசமான ஆர்க்டிக் பகுதியில், காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,அந்த நிலப் பகுதிகள் எல்லாம்,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதியில்,இருந்ததே காரணம் என்றும்,அதன் பிறகு,அந்த நிலப் பகுதிகலானது,மெதுவாக நகர்ந்து,ஆர்க்டிக் பகுதிக்கு வந்து சேர்ந்ததே காரணம் என்று நம்புகின்றனர்.

குறிப்பாக, டைனோசர்கள் ஊர்வன வகையைச் சேர்ந்த விலங்கினம் ஆகும்.

ஊர்வன வகை விலங்கினங்களால்,மற்ற பாலூட்டி வகை விலங்கினங்களைப் போன்று,சுயமாக உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது.

அதன் காரணமாகவே,பாம்பு,முதலை,ஆமை போன்ற ஊர்வன வகைப் பிராநிகலானது,பனிப் பிரதேசத்தைத் தவிர்த்து,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதிகளிலேயே காணப் படுகிறது.

எனவே,ஆர்க்டிக் பகுதியில்,டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவதன் அடிப்படையில்,ஒரு வேளை டைனோசர்கள்,பறவைகள் மற்றும் பாலூட்டிகளைப் போன்று வெப்ப இரத்தப் பிராணிகளாக இருந்திருக்கலாம் என்று நம்புகின்றனர்.

குறிப்பாக, பூமியானது தன அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால்,ஆண்டுக்கு நான்கு மாதங்கள் ,ஆர்க்டிக் பகுதியில்,தொடர்ந்து பகலும்,அதே போன்று ,ஆண்டுக்கு நான்கு மாதங்கள்,தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.

இது போன்று தொடர்ந்து பல மாதங்கள் இரவு நீடித்தால்,தாவர வகைகளால்,சூரிய ஒளியின்றி,ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து உயிர் வாழ்ந்து இருக்க இயலாது.

எனவே,ஆர்க்டிக் பகுதியில்,அடர்ந்த பசுமைக் காடுகள் உருவாகி இருக்க இயலாது.

ஆனால், டைனோசர்கள் யானையை விட நான்கு மடங்கு தாவரங்களை உண்ணக் கூடியது,அதே போன்று டைனோசர்களும்,யானைகளைப் போலவே,கூட்டம் கூட்டமாக வாழக் கூடியது.

எனவே,ஏழு கோடி ஆண்டுக்கு முன்பு, ஆர்க்டிக் பகுதியில், டைனோசர்கள் கூட்டம்,எதைத் தின்று உயிர் வாழ்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்தக் கேள்விக்கு, சில ஆராய்ச்சியாளர்கள்,டைனோசர்களானது,இறந்த தாவரங்களின் பாகங்களை உண்டு உயிர் பிழைத்து இருக்கலாம், என்று நம்புகின்றனர்.

ஆனால், ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொரிய வேண்டும் என்றால்,அதற்கு முப்பது முதல்,முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.

ஆனால்,தற்பொழுது, ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்ப நிலையானது பத்து டிகிரியாக இருக்கிறது.

இந்த நிலையில்,ஆராய்ச்சியாளர்கள்,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆர்க்டிக் பகுதியில்,மூன்று டிகிரியாக இருந்திருக்கிறது, என்று கணித்து இருக்கின்றனர்.

எனவே, ஆர்க்டிக் பகுதியில்,டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன?என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

சில ஆராய்ச்சியாளர்கள்,டைனோசர்களானது,ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது,பனிக் காலத்தில்,தென் பகுதிக்கு இடம் பெயர்ந்து இருக்கலாம்,என்று கருதினார்கள்.

இவ்வாறு, குறைந்த அட்ச ரேகைப் பகுதியில்,முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்த பிறகு,மறுபடியும்,உயர்ந்த அட்ச ரேகைப் பகுதிக்கு,இடம் பெயர்ந்து இருக்கலாம் என்றும் அந்த ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள்.

இந்த நிலையில்,தற்பொழுது,டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து இருக்க சாத்தியம் இல்லை என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர்.குறிப்பாக,டைனோசர்களின் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர எவ்வளவு காலம் ஆகி இருக்கும் என்பது குறித்து ஆரியப் படாமல் இருந்தது.

இந்த நிலையில்,அமெரிக்காவின்,புளோரிடா மாகாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,கிரிகோரி எரிக்சன் மேற்கொண்ட ஆய்வில்,டைனோசர்களின் முட்டைகளானது ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகளைப் போலவே,பொரிவதற்கு, மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் ஆகியிருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது.

இதற்கு முன்பு,டைனோசர்களின் புதை படிவங்கள் ஆர்க்டிக் பகுதியில்,கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில்,டைனோசர்களானது,பறவைகளைப் போன்று வெப்ப இரத்தப் பிராணியாக இருந்திருக்கலாம் என்றும்,பறவைகளைப் போலவே,டைனோசர்களின் முட்டைகளும்,பதினோரு நாட்கள் முதல்,எண்பத்தி ஐந்து நாட்களில் பொரிந்து இருக்கலாம் என்றும் நம்பப் பட்டது.

இந்த நிலையில்,எரிக்சன், ,டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்குள் இருந்த,டைனோசர்களின் கருக்களின் பற்கள் மற்றும் எலும்புகளில் இருந்த வளர்ச்சி வளையங்களைக் கணக்கிட்டதன் அடிப்படையில்,அந்தக் கருக்களானது எத்தனை மாதக் கரு என்பதை அறிந்திருக்கிறார்.

அதன் அடிப்படையில்,அவர்,சிறிய வகை டைனோசர்களின் முட்டைகள் மூன்று மாத அளவிலும்,பெரிய வகை டைனோசர்களின் முட்டைகளானது, ஆறு மாத கால அளவிலும் பொரிந்து இருக்கின்றன, என்று தெரிவித்து இருக்கின்றார். 
குறிப்பாக சிறிய வகை டைனோசர்கள் கூட பருவ வயதை அடைய ஓராண்டு காலம் ஆகும் என்பதால் பெரிய வகை டைனோசர்கள்,பெரிதாக இன்னும் அதிக காலம் ஆகும்.
எனவே,டைனோசர்களானது,தங்களின் முட்டைகளை இட்ட பிறகு,அந்த முட்டைகளானது பொரியும் காலம் வரை, அதாவது ஆறு மாதகாலம்,அதன் முட்டைகளை,மற்ற விலங்கினங்களிடம் இருந்து பாது காக்க வேண்டும்.

அதன் பிறகும்,அதன் குஞ்சுகள் பெரிதாக இன்னும் ஓராண்டு காலம் ஆகும்.
எனவே சில ஆராய்ச்சியாளர்கள் நம்பியதைப் போன்று,டைனோசர்களானது,ஆர்க்டிக் பகுதிக்கும்,குறைந்த அட்ச ரேகைப் பகுதிக்கும்,கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து இருக்க சாத்தியம் இல்லை என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்திருக்கின்றனர்.

இதன் அடிப்படையில்,டைனோசர்கள் ஆர்க்டிக் பகுதியிலேயே ஆண்டு முழுவதும் குடியிருந்து குடும்பமும் நடத்தி இருக்கிறது என்ற முடிவுக்கும் தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கின்றனர்.

எனவே பனிப் பிரதேசத்தில் டைனோசர்களின் முட்டைகள் எப்படிப் பொரிந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

மாயோ சாரஸ் என்று அழைக்கப் படும் டைனோசரின் முட்டைகளானது,பறவைகளின் கூட்டில் இருப்பதைப் போன்று,வரிசையாக அடுக்கப் பட்டு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்,அந்த டைனோசர்,பறவைகளைப் போன்று அடை காத்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள டைனோசர்களின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.

அது போன்ற டைனோசர்கள் முட்டைகளை ஆடை காக்கும் சாத்தியம் இல்லை.

எனவே,டைனோசர்களின் முட்டைகள் ஆர்க்டிக் பகுதியில்,பொரிந்திருக்க வேண்டும் என்றால் அதற்கு ஆர்க்டிக் பகுதியில்,அதிக வெப்ப நிலை இருந்திருக்க வேண்டும்.
எனவே,டைனோசர்களின் காலத்தில்,ஆர்க்டிக் பகுதியில்,பூமத்திய ரேகைப் பகுதியில்,இருப்பதைப் போன்றே அதிக வெப்ப நிலை இருந்திருக்கிறது.

எனவே, பனிப் பிரதேசத்தில்,வெப்ப மண்டலக் கால நிலையில்,காணப் படக் கூடிய தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில்,அந்த நிலப் பகுதிகளானது.அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதியில்,இருந்ததாகவும்,அதன் பிறகு,பனிப் பிரதேசங்களுக்கு நகர்ந்து வந்ததாகவும் கூறப் படும் விளக்கமும் தவறு.

அதே போன்று, பனிப் பிரதேசத்தில் இருந்து டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்ந்து இருக்கலாம் என்ற விளக்கம் தவறு.

உண்மையில்,பனிப் பிரதேசத்தில்,வெப்ப மண்டலக் கால நிலையில்,காணப் படக் கூடிய தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,அந்தத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்வாழ்ந்த காலத்தில்,துருவப் பகுதிகளில்,அதிக வெப்ப நிலை இருந்ததே காரணம் என்பது ஆர்க்டிக் பகுதியில்,கண்டு பிடிக்கப் பட்ட,டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. 

00000 

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு  கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.

தற்பொழுது உயிர் வாழும் பெரிய விலங்குகளில் யானை மற்றும் காண்டா மிருகங்களுக்கு அடுத்த படியாக மூன்றாவது பெரிய விலங்காக நீர் யானைகள் இருக்கின்றன.

சராசரியாக 1300 கிலோ முதல் 1500 கிலோ எடையுள்ள நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் மிதக்கவோ நீந்தவோ இயலாது.

இந்த நிலையில் மத்திய தரைக் கடலில் அமைந்து இருக்கும் சிசிலி,கிரிட்டி,மால்டா மற்றும் சைப்ரஸ் ஆகிய தீவுகளில் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இந்த விலங்கினம் எப்படி அந்தத் தீவுகளுக்குச் சென்றன என்று விஞ்ஞானிகளுக்குத் தெரிய வில்லை.

மத்திய தரைக் கடல் தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனமானது ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்ந்த பெரிய வகை நீர் யானை இனத்தில் இருந்து தோன்றி இருப்பதாக நம்பப் படுகிறது.

கடலில் மிதந்து செல்லும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிய படி, நீர் யானைகள் மத்திய தரைக் கடல் தீவுகளைத் தற்செயலாக அடைந்த பிறகு ,தீவுகளில் குறைந்த அளவே உணவு கிடைத்ததால், புதிய சூழலுக்கு ஏற்பக் குள்ள வகை நீர் யானை இனமாக மாறி விட்டதாக நம்பப் படுகிறது.

இந்தக் கருத்தின் படி, தீவிற்கு சென்ற நீர் யானைகள் பல எண்ணிக்கையில் பெருகி இருக்க வேண்டும் என்றால், அதற்குக் குறைந்த பட்சம் இனப் பெருக்கம் செய்யக் கூடிய அளவுக்கு, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு நீர் யானைகள் சென்று இருக்க வேண்டும்.

அல்லது குறைந்த பட்சம் ஒரு கர்ப்பிணி நீர் யானையாவது அந்தத் தீவுகளை அடைந்து இருக்க வேண்டும்.

ஆனால் நீர் யானையானது பெரிய வகைப் பாலூட்டிகளான யானை மற்றும் திமிங்கிலங்களைப் போன்று கே முறையில் இனப் பெருக்கம் செய்கின்றன.

அதாவது எலி ,முயல் போன்ற சிறிய அளவுள்ள பாலூட்டிகளைப் போன்று, சிறிய அளவுள்ள பல குட்டிகளை ஈணுவதற்குப் பதிலாகப் பெரிய அளவுடன் ஒரே ஒரு குட்டிகளை ஈணுகின்றன.

ஆனால் நீர் யானைகள் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை ஈணுவதும் அறியப் பட்டுள்ளது.

ஆனால் ஒவ்வொரு தீவுக்கும் மரங்களில் தொற்றிய படி தற்செயலாகச் சென்ற நீர் யானைகள், வழக்கத்துக்கு மாறாக ஒவ்வொரு தீவிலும் இரண்டு குட்டிகளைப் போட்டு இனப் பெருக்கம் நடந்து இருக்கும் என்பது அசாத்தியமானது.

எனவே மத்திய தரைக் கடல் தீவுகளான சிசிலி,கிரிட்டி,மால்டா,மற்றும் சைப்ரஸ் ஆகிய தீவுகளில் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாகக் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்திருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது.

இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் ஹிப்போபொடமஸ் லெமரெல்ல்லி, ஹிப்போபொடமஸ் மடகாஸ்கரியன்சிஸ், ஹிப்போபொடமஸ் லாலுமெல்லா என மூன்று இனக் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

நீர்ப்பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாத, குள்ள வகை நீர் யானை இனமானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.

இந்த நிலையில் மடகாஸ்கர் தீவுக்குக் குள்ள வகை நீர் யானைகளானது மூன்று முறை சென்றடைந்திருப்பதாக விலங்கியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

 மத்திய தரைக் கடல் தீவுகளுக்கு நான்கு முறை ,மடகாஸ்கர் தீவுக்கு மூன்று முறை என ஏழு முறை நீர் யானைகள் தற்செயலாக மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு அடைந்திருக்கும் என்பது அசாத்தியமானது.

அதன் பிறகு வழக்கத்துக்கு மாறாக ஏழு முறையும் இரண்டு குட்டிகளைப் போட்டு இனப் பெருக்கம் நடந்து இருக்கும் என்பதும் அசாத்தியமானது.

எனவே மத்திய தரைக் கடல் தீவுகள் உள்பட  மடகாஸ்கர் தீவில் காணப் படும் மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம் , கடல் மட்டமானது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்திருப்பது நிரூபணமாகிறது. 

மடகாஸ்கர் தீவுக்கு சைவ முதலை எப்படி வந்தது?

கடந்த,1998, ஆம் ஆண்டு, மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட, ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகள் தொன்மையான, முதலையின் புதை படிவங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தது.

மூன்று அடி நீளமுள்ள அந்த முதலையில் முகப் பகுதி நீண்டு இருப்பதற்குப் பதிலாக மிகவும் குட்டையாக இருந்தது.அதன் தாடையில் நீண்ட கூர்மையான பற்கள் இருப்பதற்குப் பதிலாக கிராம்பு போன்ற வடிவில் தாவரங்களை உண்பதற்கு ஏற்றபடி இருந்தது.
அதன் உடலின் மேற் பகுதியிலும் கால்களின் மேற் பகுதியும் எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது.அதன் வாலும் மிகவும் குட்டையாக இருந்ததுடன் வாலும் எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது.
எனவே அந்த வாலைக் கொண்டு அந்த முதலையால் நீந்த இயலாது.அதன் கால்களும் நடப்பதற்கு எதுவாக தரை வாழ் வாழ்க்கைக்கு ஏற்றதாக இருந்தது.
அந்த முதலையால் உடலை பக்க வாட்டில் வளைக்க இயலாத படி ஆமையின் உடலை மூடி இருக்கும் கவசம் போன்ற எலும்புத் தட்டு இருந்தது.
ஏற்கனவே சீமோ சூக்கசின் இனவகைளின் புதை படிவங்கள் ஆப்பிர்க்கக் கண்டத்தில் எகிப்து பகுதிலும்ஆசியக் கண்டத்தில் சீனாவிலும்தென் அமெரிக்கக் கண்டத்தில் உருகுவே நாட்டிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது.
ஆனால் சீமோ சூக்கஸ் எப்படி மடகாஸ்கர் தீவுக்கு வந்தது என்பது குறித்து வல்லுனர்களால் சரியான விளக்கத்தை அளிக்க இயல வில்லை.
0000000

ஐரோப்பாக் கண்டத்தின் நத்தைகள் தீவுகளுக்கு எப்படிச் சென்றது ?
ஐரோப்பாக் கண்டத்தில் பேலியா பெர்வர்சா என்று அழைக்கப் படும் இனத்தைச் சேர்ந்த நத்தைகள் காணப் படுகின்றன.இந்த நத்தைகளுக்கு உப்பு நீர் ஒத்தக் கொள்ளாது என்பதுடன் இந்த நத்தைகளால் கடல் நீரில் உயிர் வாழவும் இயலாது.
இந்த நிலையில் 1824 ஆம் ஆண்டு ஜான் கிரே என்ற உயிரியல் வல்லுநர்,தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் ட்ரிடான் ட குன்கா என்ற எரிமலைத் தீவில் சில நத்தைகளைக் கண்டார்.


அந்த நத்தைகள்ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகளைப் போலவே இருந்ததுஆனால் அளவில் கொஞ்சம் பெரியதாக இருந்தது.
ட்ரிடான் ட குன்கா தீவானது ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து எட்டாயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருகிறது. எனவே அவ்வளவு தொலைவு கடல் பகுதியைக் கடந்து பேலியா பெர்வர்சா நத்தைகள்ஐரோப்பாவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு வந்து இருக்க இயலாதுஎன்ற அடிப்படையில்ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் பட்ட நத்தைகள்புதிய இனமாகக் கருதப் பட்டு ,ட்ரிடானியா என்று பெயர் சூட்டப் பட்டது.
இந்த நிலையில் நெதர் லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் ,டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் குழுவினர் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகள் மற்றும் ஐரோப்பாவில் இருந்து ஆயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில்,வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் அசோர் என்ற எரிமலைத் தீவு,அதே போன்று ,அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா எரிமலைத் தீவு ,அதே போன்று அசோர் எரிமலைத் தீவில் இருந்து ஒன்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ட்ரிடான் எரிமலைத் தீவிலும் காணப் படும் நத்தைகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு செய்தனர்.
அந்த ஆய்வில் அசோர் தீவு நத்தைகள் ஐரோப்பாவில் காணப் படும் நத்தைகளின் வழித் தோன்றல்கள் என்பதும்.ஐரோப்பாவில் இருந்து அசோர் தீவுக்கு வந்த நத்தைகள் காலப் போக்கில் இரண்டு புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது.
அதே போன்று ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் படும் எட்டு வகையான நத்தைகளின் மூததையானது ட்ரிடான் ட குன்கா தீவில் இருந்து ஒண்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் அசோர் தீவில் காணப் படும் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது.
இதே போன்று அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா தீவில் காணப் படும் நத்தைகளின் மூததையும் அசோர் தீவு நத்தைகள் என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் ஐரோப்பாவில் காணப் படும் சில பேலியா நத்தைகள் நத்தைகளின் மூததையானது மதீரா தீவின் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது.

ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து அசோர்,ட்ரிடான் ட குன்கா,மற்றும் மதீரா ஆகிய தீவுகளுக்கு நத்தைகள் பரவிய பிறகு புதிய இன வகைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும் அதே போன்று மதீரா தீவில் இருந்து புறப்பட்ட இடமான ஐரோப்பாக் கண்டத்துக்கு வந்த பிறகும் புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது.
ஆனால் நத்தைகள் எப்படி பல்லாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து எரிமலைத் தீவுகளுக்கு சென்றன என்ற கேள்வி எழுந்தது.
பொதுவாகத தீவுகளில் விலங்கினங்கள் காணப் படுவதற்கு,அந்த விலங்குகள் கடலில் மிதந்து வந்த தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் மிதந்த படி தீவுகளில் கரையொதுங்கி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.ஆனால் தரை வாழ் நத்தைகளுக்கு கடல் நீர் ஒத்துக் கொள்ளாது என்பதால் அந்த விளக்கம் நிபுணர்களால் நிராகரிக்கப் பட்டு விட்டது.
விஞ்ஞானி சார்லஸ் டார்வினும் இதே போன்று நத்தைகள் உலகின் பல பகுதிகளுக்கு எப்படி பரவி இருக்கும்என்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடு பட்டார்.அவர் சில நத்தைகளைக் கடல் நீரில் அமிழ்த்தியும் சோதனை செய்தார்.அவர் நத்தைகளால் இரண்டு வார காலத்துக்கு மேல் கடலில் ஊயிர் வாழ இயலாது என்றும் கருதினார்.
அத்துடன் அவர் நத்தைகள் பறவைகளின் காலில் ஒட்டிக் கொண்டு கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று நம்பினார்.
டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் அவர்களும்பேலியா நத்தைகள் பறவைகளின் உடலில் ஒட்டிக் கொண்டு ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து மற்ற தீவுகளுக்கும்,பிறகு தீவில் இருந்து ஐரோப்பாக் கண்டதுக்கும் வந்திருக்கலாம் என்று நம்புகிறார்.
ஆனால் பறவைகள் நத்தைகளை உண்ணக கூடியவை என்றாலும் எப்படியோ சில நத்தைகள் பறவையின் இறக்கையில் ஒட்டிக் கொண்டு தீவுகளுக்கு வந்திருக்கலாம் என்றும் நம்புகிறார்.
ஆனால் அசோர் மற்றும் ட்ரிடான் ட குன்கா ஆகிய இரண்டு தீவுகளும்,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும் கடலடி எரிமலைத் தொடரில் உள்ள எரிமலைகளின் உச்சிப் பகுதி ஆகும்.
தற்பொழுது அந்த கடலடி எரிமலைத் தொடரானது பதினாறாயிரம் அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் இருந்து எட்டாயிரம் அடி உயரத்துக்கு எழுந்து இருக்கின்றன.
ஆனாலும் அந்த எரிமலைத் தொடரானது தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது.
இந்த நிலையில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் ,கடல் மட்டத்தில் இருந்து ஏழாயிரத்தி நானூறு அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம் கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்திருந்தால் ,தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடரானதுகடல் மட்டத்துக்கு மேலாக ஆயிரத்தி நானூறு அடி உயரத்தில் இருந்து இருக்கும்.
எனவே அந்த எரிமலைத் தொடர் வழியாக அசோர் தீவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு நத்தைகள் எளிதாக வந்து சேர்ந்து இருக்க முடியும்.
எனவே கடல் பகுதியை எளிதில் கடக்க இயலாத நத்தைகள் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டம் தாழ்வாக இருந்து இருப்பது உறுதியாகிறது.


இகுவானா உடும்புகள் எப்படி தீவுகளுக்குச் சென்றன?

தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் இகுவானா என்று அழைக்கப் படும் உடும்புகளின் வம்சாவளிகளானது,பல்லாயிரக் கணக்கான கிலோ மீட்டர் தொலைவில்ஒன்றுக் கொன்று தொடர்பே இல்லாத வகையில்,அமைந்து இருக்கும்,தீவுகளில் காணப் படுவது உயிரியல் வல்லுனர்களுக்குப் பெரும் புதிராக இருக்கிறது.
தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கலாபகாஸ் தீவில் வந்திறங்கிய டார்வின்,அந்தத் தீவுகளில்,வாழ்ந்த ஆமைகள்,தீவுக்குத் தீவு வேறுபட்டு இருப்பதைக் கண்டார்.
குறிப்பாகஅதிக செழிப்புடன் ,குறைந்த உயரத்திலேயே தாவர வகைகள் இருந்த தீவில்,வாழ்ந்த ஆமைகளின் கால்களும் கழுத்தும் குட்டையாக இருந்தன,ஆனால்,வறண்ட சூழலுடன்,அதிக உயரத்தில் தாவர வகைகள் இருந்த தீவில் வாழ்ந்த ஆமைகளின் கால்களும்,கழுத்தும் நீண்டு இருந்தன.
அந்த ஆமைகள் எல்லாம் ஒரே பொது மூதாதையின் வழித் தோன்றல்கள் என்றும் தீவுகளின் சூழலுக்கு ஏற்ப தகவமைப்பு கொண்டவைகள் என்பதைப் புரிந்து கொண்ட பொழுதுதான்அவருக்கு விலங்கினங்கள் எல்லாம்ஒரு பொது மூதாதையில் இருந்து பரிணாம வளர்ச்சியில் உருவானவைகள் என்ற முடிவுக்கு வந்தார்.
ஆனாலும்அந்த கலாபகாஸ் தீவில் இன்னொரு ரகசியமும் இருக்கிறது.
கலாபகாஸ் தீவில்,இகுவானா என்று அழைக்கப் படும் உடும்புகளும் காணப் படுகின்றன.
ராட்சத ஆமை மற்றும் இகுவானாக்கள் எல்லாம் தரையில் வாழக் கூடிய விலங்கினங்கள்.
எனவே எப்படி இந்த விலங்கினங்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கலாபகாஸ் தீவுக்கு வந்திருக்க முடியும் என்று டார்வின் வியந்தார்.
கலாபகாஸ் தீவு ஆமையின் மூததையானதுதற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் கெலோனாய்டிஸ் சிலின்சிஸ் என்ற சிறிய அளவு ஆமை என்றுமரபணு ஆய்வாளர்கள் அறிவித்து உள்ளனர்.
கலாபகாஸ் தீவில் காணப் படும் ராட்சத ஆமைகள் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்துகடலில் மிதக்கும் மரக்கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் தத்தளித்தபடிதற்செயலாகக் காலபாகஸ் தீவில் கரை ஒதுங்கி இருக்கலாம்என்று நம்பப் படுகிறது.
இந்த முறையில்இனப் பெருக்கம் செய்யும் அளவுக்கு ஒரு ஜோடி ஆமைகள் அல்லது ஒரே ஒரு கருவுற்ற பெண் ஆமையாவது தென்அமெரிக்கக் கண்டத்தில் இருந்து காலபாகஸ் தீவை அடைந்து இருக்கலாம்என்று நம்பப் படுகிறது.
ராட்சத ஆமைகளின் உடலில் நிறைய கொழுப்பு இருப்பதால் பல மாதங்கள் கடலில் உணவும் நீரும் இன்றி ராட்சத ஆமைகள் பிழைத்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
குறிப்பாகஆமைகளின் உடலில் அதிக அளவில் கொழுப்பும்,நீரும் இருப்பதால்,அந்த ஆமைகளானது,பல நாட்கள் கடலில் உணவும் நீரும் இன்றி உயிர் பிழைத்து இருக்கலாம்என்று நம்பப் படுகிறது.
இதே போன்றுகாலபாகஸ் தீவில் 'நேசோரைசோமிஸ் டார்வினிஎன்று பெயர் சூட்டப் பட்ட காலபாகஸ் தீவு எலிகளும் வாழ்ந்திருக்கின்றன.
தற்பொழுதுஅந்த எலி இனம் அழிந்து விட்டது. நான்கே நான்கு மாதிரிகள் மட்டும் உள்ளன.
ராட்சத ஆமைகளைப் போல் அல்லாது சிறிய அளவுள்ள எலியின் உடலில் கொழுப்பும் நீரும் குறைவாக இருப்பதால் எலிகளால் பல நாட்கள் கடலில் உணவும் நீரும் இன்றி தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து இருக்க இயலாது.
இந்த நிலையில் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து காலபாகஸ் தீவுக்கு வந்த சிறிய அளவுள்ள ஆமைகள் பின்னர் பெரிய ஆமையாக மாறியதா ?அல்லது ,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து காலபாகஸ் தீவுக்கு பெரிய அளவுள்ள ஆமைகள் வந்ததா என்பதுஉறுதி செய்யப் படவில்லை.
மரபணு ஆய்வில்தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கெலோனாய்டிஸ் ஆமைகள் முதன் முதலில் எஸ்பானலோ தீவிலும் செயின்ட் கிறிஸ்டோபல் தீவிலும் குடியேறிய பிறகுமற்ற தீவுகளுக்கு குடியேறி இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆமைகளின் கடல் பயணத்துக்குக் கடல் நீரோட்டங்கள் காரணமாக இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
மரபணு ஆய்வில் ,தென் அமெரிக்கக் கண்டத்தின் கெலோனாய்டிஸ் ஆமைகள், ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் 'ஹிங்கிபேக்ஆமையின் நெருங்கிய சொந்தமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
தென் அமெரிக்கக் கண்டத்துக்கும் கெலோனாய்டிஸ் ஆமைகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்த படிஅட்லாண்டிக் பெருங் கடலில் பல மாதங்கள் தத்தளித்த படி மிதந்து சென்றுதென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
இதே போன்றுகாலபாகஸ் தீவில்இகுவானா என்று அழைக்கப் படும்,உடும்புகளும் காணப் படுகிறது.
கலாபகாஸ் தீவில் காணப் படும் இகுவானாக்களின்மூததையானதுதற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும்பச்சை நிற இகுவானக்கள் ஆகும்.
குறிப்பாகஊர்வன வகை விலங்கினங்களால்,பாலூட்டி வகை விலங்கினங்களைப் போன்றுசுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது.
எனவேஊர்வன வகை விலங்கினங்களின் உடல் வெப்ப நிலையானது,சூழ்நிலையின் வெப்ப நிலையிலேயே இருக்கும்.
இந்த விலங்குகளால் தங்களின் உடல் வெப்பத்தை சீராக வைத்து இருக்கவும் இயலாது.
தாவரங்களை உண்ணும் இந்த விலங்குகளின்உணவு செரிப்பதற்கே சூரியனின் வெப்பம் தேவை.
கலாபகாஸ் தீவில் இரண்டு இனவகையைச் சேர்ந்தஇகுவானாக்கள் காணப் படுகின்றன.ஒன்று தரையில் உள்ள கள்ளிகளை உண்டு வாழ்கிறது.
இன்னொன்று கடலுக்குள் மூழ்கிச் சென்று,கடல் தரையில் உள்ள பாசிகளை உண்டு வாழ்கிறது.
கடலுக்குள் செல்லும்கடல் இகுவானாக்களுக்குஉடலில் சேரும் அதிகப் படியான உப்பை வெளியேற்றுவதற்கு விசேஷ சுரப்பிகள் மூக்குக்கு அருகில் இருக்கின்றன.
கடல் இகுவானாக்களும்தரை இகுவானாக்களும்ஒரே பொது மூதாதையில் இருந்துபரிணாம வளர்ச்சி அடைந்தவைகள் ஆகும்.
கடல் இகுவானாக்கள்கடலுக்குள் சென்று அங்கிருக்கும் பாசிகளை உண்பதற்கு முன்பு,மதிய நேரம் வரை பாறைகளில் இருந்தபடி,உடல் வெப்பத்தை அதிகப் படுத்திக் கொள்கின்றன.
அதன் பிறகு,கடலுக்குள் சென்று,பாசிகளை உண்ட பிறகு,கரைக்கு வந்ததும்,மறுபடியும்,பாறைகளில் ஏறி,வெய்யிலில் காய்ந்து உடல் வெப்பத்தை ஏற்றிக் கொள்கின்றன.

0000
தற்பொழுது பவளத் திட்டுகள் என்றாலே,கடலில் கழிவுகள் கலப்பதன் காரணமாகப் பவளத் திட்டுகள் அழிவது குறித்த விஷயமே நினைவுக்கு வரும்.

அனால் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு,பவளத் திட்டுகள் என்பது விஞ்ஞானிகளிடையே ஒரு தீர்க்கப் படாத புதிராகவும் மர்மமாகவும் இருந்ததுடன்,காரசாரமான விவாதப் பொருளாகவும் இருந்தது.

ஆம்,பவளத் திட்டுகளானது குண்டூசித் தலை அளவுள்ள சிறிய உயிரினங்களால் உருவாக்கப் படுகிறது.

பவளங்கள் என்று அழைக்கப் படும் அந்த உயிரினமானது ஒரு சிறிய தொட்டி போன்ற உடலின் மேற்பகுதி வாயைச் சுற்றிலும், அசையும் இதழ்களைக் கொண்டிருக்கிறது.

அந்த இதழ்கள் அசையும் பொழுது, கடல் நீரானது தொட்டி போன்ற பகுதிக்குள் செல்லும் பொழுது, அதில் இருக்கும் நுண்ணுயிரிகளானது பிடித்துண்ணப் படுகிறது.

குறிப்பாகப் பவளங்கள், சூரிய ஒளியின் உதவியுடன், ஒளிச் சேர்க்கை செய்து, வாழும் பாசிகளை உண்டு வாழ்வதால்,பவளங்களானது சூரிய ஒளி பரவக் கூடிய ஆழம் குறைவான கடல் பகுதியிலேயே வாழ்கின்றன.அதிலும் குறிப்பாக சூரிய ஒளி பரவக் கூடிய இருநூறு அடி ஆழத்தில் பவளங்கள் வாழ்கின்றன.

அத்துடன் பவளங்களானது தங்களின் மெலிதான உடலைப் பாதுகாத்துக் கொள்வதற்காக,கால்சியம் கார்பனேட் என்று அழைக்கப் படும் , சுண்ணாம்புப் பொருளைச் சுரக்கக் கூடியது.

எனவே பவளங்கள் இறக்கும் பொழுது,அந்தப் பவளத்தால் சுரக்கப் பட்ட சுண்ணாம்புப் பொருட்களானது,படிவதால் பவளத் திட்டுகள் உருவாகி,வளர்கின்றன.

அந்தப் பவளத் திட்டுகள் மேல் புதிய பவளங்கள் வாழ்கின்றன.

எனவே கடல் மட்டம் உயரும் பொழுது, அதற்கேற்ப பவளத் திட்டுகளும் வளர்ந்தால்தான் பவளங்கள் உயிருடன் இருக்க முடியும்.

எனவே பவளங்களானது பொதுவாக ஆழமற்ற கடற் கரையோரப் பகுதிகளிலேயே காணப் படுகின்றன.
http://scienceblogs.com/primatediaries/2009/08/26/rivalry-among-the-reefs-charle/
குறிப்பாக இந்தியாவில் மன்னார் வளை குடாப் பகுதியில் பவளத் திட்டுகள் காணப் படுகின்றன.

இதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டத்தின் வடகிழக்குப் பகுதி நெடுகிலும், கடற் கரையை ஒட்டிய படி, இரண்டாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்குப் பவளத் திட்டுகள் உருவாகி இருக்கின்றன.

இந்தத் திட்டுகளானது கப்பல்கள் செல்லத் தடையாக இருப்பதால் தடை அரண் பவளத் திட்டுகள் (The Great Barrier Reef) என்றும் அழைக்கப் படுகின்றன.

இந்த நிலையில் பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்குப் பவளத் திட்டுகள் உருவாகி இருக்கின்றன.

இவ்வாறு வளைய வடிவில் உருவாகி இருக்கும் சில பவளத் திட்டுகளின் மத்தியப் பகுதியானது, கடல் நீரால் நிரம்பி இருக்கின்றன.

முதன் முதலில் பசிபிக் பெருங் கடல் பகுதியில் பயணம் செய்த ஐரோப்பியர்களுக்கு, பசிபிக் பெருங் கடலில் உருவாகி இருந்த பவளத் திட்டுகள், விளங்கிக் கொள்ள முடியாத புதிராக இருந்தது.

எப்படி ஆழமற்ற கடல் பகுதியில் வாழக் கூடிய பவளங்கள், பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் வளர்ந்தன?என்று ஐரோப்பியர்கள் வியந்தனர்.

இது குறித்து ஆராய்வதற்காக ,பசிபிக் பெருங் கடலில் பயணம் செய்து பல தீவுகளைக் கண்டு பிடித்து, அதனை பிரிட்டிஸ் அரசுக்கு சொந்தமாக்கும் முயற்சியில் ஈடு பட்டு இருந்த, கேப்டன் ஜேம்ஸ் குக்கின் கப்பலில் பயணம் செய்த, இயற்கை ஆராய்ச்சியாளர்கள்,அந்தப் பவளத் திட்டுகளை வரை படமாகத் தயாரித்தனர்.

அதனைக் கண்ட ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள்,எப்படி ஆழ்கடல் பகுதியில்,அந்தப் பவளத் திட்டுகள் உருவாகி இருக்க முடியும்? என்ற கேள்விக்கு விளக்கம் தெரியாமல் தலையைப் பிய்துக் கொண்டனர்.

ஆனாலும் இயற்கை ஆராய்ச்சியாளரும், விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் நண்பருமான,சார்லஸ் லையால் என்பவர்,அந்தப் பவளத் திட்டுகளானது, கடலுக்கு அடியில் இருக்கும் ஒரு எரிமலையின் வாய்ப் பகுதியில் உருவாகி இருக்கலாம் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இருபத்தி இரண்டே வயது நிரம்பிய இயற்க்கை ஆராய்ச்சியாளரான சார்லஸ் டார்வினுக்கு ,பீகிள் என்ற ஆராய்ச்சிக் கப்பலில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

அந்தக் கப்பலில் பயணம் செய்த டார்வின் தென் அமெரிக்கக் கண்டத்தின் கடல் பகுதியில் பயணம் செய்த பொழுது,கப்பலில் இருந்த பசிபிக் கடல் பகுதியில் காணப் படும் பவளத் திட்டுகளின் வரை படத்தைப் பார்வையிட்டுக் கொண்டு இருந்த பொழுது,திடீரென்று ஒரு யோசனை தோன்றியது.

வட்ட வடிவில் இருந்த அந்தப் பவளத் திட்டுகளானது,ஒரு மூழ்கிக் கொண்டு இருக்கும் எரிமலையைச் சுற்றி உருவான பவளத் திட்டுகள் என்று, டார்வினுக்குத் தோன்றியது.

அதாவது கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்த ஒரு எரிமலையைச் சுற்றிலும் இருந்த ஆழமற்ற கடல் பகுதியில் பவளங்கள் வளர்ந்து கொண்டு இருந்த நிலையில்,அந்த எரிமலையானது மெல்ல மெல்ல மூழ்கத் தொடங்கியதால்,பவளத் திட்டுகள் தொடர்ந்து வளர்ந்ததால்,வட்ட வடிவில் பவளத் திட்டுகள் உருவாகி இருக்கின்றன என்று டார்வின் நினைத்தார்.

உடனே அதனைத் தனது பயணக் குறிப்பில் பதிவு செய்து கொண்டார்.
 

 அதன் பிறகு டார்வின் விலங்கினங்களின் புதை படிவங்களின் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதன் பிறகு பசிபிக் பெருங் கடல் பகுதியைக் கப்பல் வந்தடைந்ததும் டார்வின் ஒரு சில பவளத் திட்டு தீவுகளைப் பார்வையிட்டார்.

அப்பொழுது டார்வினுக்குத் தான் நினைந்தது சரியே! என்று தோன்றியது.

இருப்பினும் இது குறித்து மற்ற ஆராய்ச்சியாளர்கள் என்ன நினைப்பார்களோ என்றும் சிறிது சந்தேகமாகவே இருந்தார்.

அதன் பிறகு பயணம் முடிந்து, டார்வின் ஐரோப்பா திரும்பியதும் தனது வீட்டுக்கு வந்த நண்பரும் ஆராய்ச்சியாளருமான, சார்லஸ் லயலிடன்,பசிபிக் பவளத் திட்டுகள் பற்றிய, தனது 'மூழ்கும் எரிமலை' விளக்கத்தைத் தெரிவித்தும்,லையல்... ஹுரே... என்று வெறிக் கூச்சலுடன் கத்தி...நடனமும் ஆடினார்.

அப்பொழுதே தனது ''கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலையின் வாயில் உருவாகி இருக்கும் பவளத் திட்டுகள்''விளக்கத்தையும் கைவிட்டார்.

அத்துடன் டார்வினை,அவரின் விளக்கத்தைப் புவியியல் கழகத்தில்
வாசித்துக் காட்டவும் ஏற்பாடு செய்தார்.

மேலும் இந்த விளக்கமானது, உன்னை ஒரு விஞ்ஞானியாக உலகுக்கு காட்டும் என்றும் பாராட்டுரை வழங்கினார்.

புவியியல் கழகத்தில் டார்வின் தனது விளக்கத்தைத் தெரிவித்ததும் பலர் அப்பொழுதே அந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பாடப் புத்தகத்திலும் டார்வினின் விளக்கம் இடம் பெற்றது.

ஆனாலும் சிலர் அந்த விளக்கத்தில் திருப்தியின்றி இருந்தார்கள்.இன்னும் சிலர் சந்தேகத்துடனும் இருந்தார்கள்.

ஆனால் டார்வின் அதற்குப் பிறகு, தனது பரிணாமப் புத்தகத்தை எழுதும் முயற்சியில் இறங்கினார். 


அந்தக் காலத்தில் இயற்கை விஞ்ஞானம் என்றாலே ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, டாக்டர் லூயிஸ் அகாசி என்பவரே எல்லோரின் நினைவுக்கும் வருவார்.

விலங்கியல் மற்றும் தொல் விலங்கியல் வல்லுனரான லூயிஸ் அகாசி ,கடல் உயிரினங்கள் பற்றி ஆராய்ச்சி செய்து, பல கட்டுரைகளையும் புத்தகங்களையும் வெளியிட்டு இருந்தார்.

நல்ல எழுத்து நடையுடன் வசீகரமாகப் பேசவும் கூடியவர் என்பதால் அவரின் புகழ் ஐரோப்பா மட்டுமின்றி அமெரிக்காவிலும் பரவி இருந்தது.

குறிப்பாக எமர்சன்,தியோடர் ரூஸ் வெல்ட்.வில்லியம் ஜேம்ஸ் ,தோரூ ஆகியோர் லூயிஸ் அகாசியின் ரசிகர்களாக இருந்தனர்.

குறிப்பாக லூயிஸ் அகாசி இயற்கை குறித்த தனது கட்டுரைகளில், இயற்கையின் பிரமாண்டத்தைக் குறிப்பிட்டு,இதனை கடவுள்தான் படைத்தது இருக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் டார்வின் தனது ,'இனங்களின் தோற்றம்' என்ற தனது பரிணாம புத்தகத்தை வெளியிட்டார்.

அந்தப் புத்தகத்தில் , உயரினங்களானது, லட்சக் கணக்கான ஆண்டு கால கட்டத்தில் சிறிது சிறிதாக மாற்றம் அடைந்து, காலப் போக்கில் புதிய உயிரினமாக மாறுவது குறித்துப் பல ஆதாரங்களுடன் விளக்கி இருந்தார்.

இதற்கு இயற்கைச் சூழலே காரணம் என்றும் விளக்கம் தெரிவித்து இருந்தார்.

டார்வினின் இந்த விளக்கம் உடனே ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் வேகமாகப் பரவியது.

எனவே லூயிசுக்கு டார்வினின் விளக்கத்தை மறுக்க  வேண்டும், அல்லது தனது 'கடவுள் படைப்பு' விளக்கத்தைக் கைவிட வேண்டும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.

ஆனால் டார்வினின் புகழ் பெருகியதில், லூயிசால் வெளியில் தலையைக் கூட காட்ட முடியாமல் போனது.

அத்துடன் அவரின் புகழும் சரியத் தொடங்கியது.

மேலும் லூயிஸின் கீழே புரிந்த பேராசிரியரான, ஆஸ் கிரேவும் டார்வினின் புகழ் பாடத் தொடங்கி விட்டது,லூயிஸை வெகுவாகப் பாதித்து விட்டது.

லூயிஸின் புகழ் டார்வினால் சிறுமைப் படுத்தப் பட்டதை, லூயிஸின் மகனான அலக்சாண்டர் அகாசியையும் வெகுவாகப் பாதித்தது.

அலெக்சும் ஒரு இயற்க்கை ஆராய்ச்சியாளராக விளங்கினர்.

எனவே அவர் தனது தந்தையின் நிந்தனையையும் பொருட் படுத்தாமல்,டார்வினின் பரிணாம விளக்கத்தை ஏற்றுக் கொண்டார்.

ஆனாலும் அவருக்கு டார்வினின் பசிபிக் கடல் பவளத் திட்டுகளின் தோற்றம் குறித்த 'மூழ்கும் எரிமலை' விளக்கத்தில் சந்தேகம் இருந்தது.

அந்தப் பவளத் திட்டுகள் பற்றி ஆராய்ச்சி செய்து, டார்வினின் விளக்கத்தைச் சிதறடித்து விட முடியும் என்று நம்பினார்.

இந்த நிலையில் அடுத்தடுத்து நேர்ந்த தந்தையின் மரணமும்,மனைவியின் மரணமும் அலெக்சை இன்னும் வெகுவாகப் பாதித்தது.

அப்பொழுது அலெக்சின் நண்பரும், கடல் ஆராய்ச்சியாளருமான, ஜான் முர்ரே என்பவர்,கடல் ஆராய்ச்சிப் பயணம் மேற்கொள்ள அலெக்சை அழைத்தார்.

அலெக்சும் உடனே தயங்காமல் ஒத்துக் கொண்டார்.

ஆனாலும் பயணத்துக்கு தவறான காலத்தை தேர்வு செய்ததால்,அவர்களால் நினைத்த அளவுக்குப் பவளத் திட்டுகள் பற்றி விரிவாக அராய்ச்சி செய்ய முடியாமல் போனது.

எனவே மறுபடியும் ஆராய்ச்சி பயணம் மேற்கொண்டார் . அப்பொழுது பசிபிக் பெருங் கடல் பகுதியில் இருந்த, பல பவளத் திட்டுகளை ஆய்வு செய்தார்.

அதில் சில பவளத் திட்டுகள், டார்வினின் எரிமலை விளக்கத்திற்கு பொருந்தாமல் இருந்தது.

குறிப்பாக சில பவளத் திட்டுகளானது, நேர் கோட்டுப் பாதையில் பல கிலோ மீட்டர் நீளத்திற்கு நீண்டு இருந்தது.

அப்பொழுது முர்ரே ஒரு விளக்கத்தைத் தெரிவித்தார்.

அதாவது கடலில் வாழும் மிதவை உயிரினங்கள், லட்சக் கணக்கில் இறக்கும் பொழுது, அதன் உடலில் இருக்கும் சுண்ணாம்புப் பொருட்கள்,கடலில் இருக்கும் கார்பாலிக் அமிலத்தில் கரையும் முன்னே,ஒரு பகுதியானது, கடல் தரையில் படிவதால் கடல் தரையில் இருந்து சுண்ணாம்புத் திட்டுகள் உருவாகி வளரலாம் என்றும் அதன் மேல் பவளங்கள் வளர்ந்து பவளத் திட்டுகள் உருவாகலாம் என்றும் தெரிவித்தார்.

குறிப்பாக கடலுக்கு அடியில் இருக்கும் திட்டுகளின் மேல்,கடல் உயிரிகளின் சுண்ணாம்புப் பொருட்கள் படியும் பொழுது,சுண்ணாம்புத் திட்டுகள் வளர்ந்து, அதன் மேல் பவளங்கள் வளர்ந்து, பவளத் திட்டுகள் உருவாகலாம் என்றும் தெரிவித்தார்.

அலெக்சுக்கு அந்த விளக்கத்தில் நம்பிக்கை ஏற்பட்டது.

பவளத் திட்டுகள் பற்றிய ஆராய்ச்சியில், அலெக்ஸ் முப்பது ஆண்டுகள் செலவிட்டு,300,000 மைல் கடலில் பயணம் செய்து ,பவளத் திட்டுகளை ஆய்வு செய்தார்.

ஆராய்ச்சிப் பயணம் முடிந்து திரும்ப ஐரோப்பாவை அடைந்ததும்,உடனே டார்வினுக்கு, கடல் தரையில் வளரும் சுண்ணாம்புத் திட்டுகள் மேல், பவளங்கள் வளர்ந்து, பவளத் திட்டுகள் உருவாகலாம் என்று தெரிவித்து இருந்தார்.

அந்தக் கடிதத்துக்கு 1881 ஆம் ஆண்டு, பதில் எழுதிய டார்வின்,பவளத் திட்டுகளின் மேல் 600 அடி ஆழத்துக்கு துளையிடும் பொழுது, அதற்கு அடியில் எரிமலைப் பாறைகள் இருந்தால், எனது விளக்கம் சரி,என்றும்,அவ்வாறின்றி பவளத் திட்டுகளுக்கு அடியில், சுண்ணாாம்புத் திட்டுகள் இருந்தால்,உங்களின் விளக்கம் சரி,என்றும் பதில் தெரிவித்து இருந்தார். 
ஆனால் அந்தக் காலத்தில் துளையிடும் கருவிகளை உருவாக்கும் அளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்து இருக்க வில்லை.

எனவே பவளத் திட்டுகளின் தோற்றம் குறித்த விளக்கங்கள், உறுதிப் படுத்தப் படாத நிலையிலேயே இருந்தது. 

அதன் பிறகு அலெக்ஸ் தூங்கும் நிலையிலேயே மாரடைப்பால் உயிரிழந்தார்.

காலங்களும் மாறின.

அதன் பிறகு 1882 ஆம் ஆண்டு,துளையிடும் கருவிகள் உருவாக்கப் பட்ட பிறகு,பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருந்த ஒரு பவளத் திட்டில் 698 அடி ஆழம் வரைக்கும் துளையிடப் பட்டது.

ஆனாலும் பவளத் திட்டுகளே தென்பட்டது.

அதன் பிறகு 1898 ஆம் ஆண்டு, ஒரு பவளத் திட்டில் ,1114 அடி வரை துளையிடப் பட்டது.அப்பொழுதும் பவளத் திட்டுகளே தென்பட்டது.

இந்த நிலையில், நவீன துளையிடும் கருவிகள் மூலம்,ஒரு பவளப் பாறைத் திட்டில்,4154 அடி வரை துளையிடப் பட்ட பொழுது பவளத் திட்டுகளுக்கு அடியில், எரிமலைப் பாறை தென்பட்டது.

அதாவது அடிப்பகுதியில் இருந்த பவளத் திட்டுகளானது நாலாயிரம் அடி ஆழத்தில் இருந்தது.அந்தப் பவளத் திட்டுகளின் தொன்மையை கால மதிப்பீடு செய்த பொழுது,அந்தப் பவளத் திட்டுகளின் தொன்மையானது.மூன்று கோடி ஆண்டுகளாக இருப்பது தெரிய வந்துள்ளது.

( இதன் மூலம் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது ,நாலாயிரம் அடி வரை தாழ்வாக இருந்த பொழுது, ஆழம் குறைவான கடல் பகுதியில் இருந்த, அந்தத் திட்டின் மேல் ,பவளங்கள் வளர்ந்து இருப்பது ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டப் படுகிறது.)

அதன் அடிப்படையில் டார்வின் கூறிய, மூழ்கும் எரிமலையின் மேல் வளரும் பவளத் திட்டுகள் விளக்கமே, சரியான விளக்கம், என்று உறுதிப் படுத்தப் பட்டது. 
http://web.stanford.edu/group/microdocs/darwinvolcano.html

இந்த நிலையில், இன்னும் சில கேள்விகள் எழுகின்றன.

தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு பூமியின் வெப்ப நிலை உயர்வதால், துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று நம்பப் படுகிறது.

தற்பொழுது பூமியில் இருக்கும் பனி மொத்தமும் உருகினால் கூட, அதிக பட்சமாகக் கடல் மட்டமானது, இருநூற்றி நாற்பது அடி வரையே உயரும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

ஆனாலும் பூமியின் கடந்த காலத்தில், கடல் மட்டமானது,நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதாகப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள்கூறுகின்றனர்.

இவ்வாறு கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்ததற்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.

அதாவது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் பனியுகம் நிலவியிருந்ததகவும்,அப்பொழுது வட அமெரிக்க்கக் கண்டத்தின் பெரும் பகுதியானது,பல கிலோ மீட்டர் உயரத்திற்குப் பனிப் படலங்களால் மூடப் பட்டு இருந்ததாகவும்,அப்பொழுது கடல் மட்டமானது, நானூறு அடி வரை தாழ்வாக இருந்ததாகவும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

அதன் பிறகு பனி உருகிக் கடலில் கலந்ததால், கடல் மட்டமானது 'நானூறு அடி' வரை உயர்ந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

இந்தக் கருத்து கேள்விக்கு உரியது என்றாலும் கூட,இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான கேள்வி எழுகிறது.

அதாவது பவளத் திட்டுகளின் மேல், அறுநூறு முதல் ஆயிரம் அடி வரை துளையிட்ட பொழுதும் கூட,ஆயிரம் அடி ஆழத்தில், பவளத் திட்டின் பகுதிகளே இருந்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அப்படியென்றால் லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டமானது, ஆயிரம் அடி வரை தாழ்வாக இருந்திருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது.

இதே போன்று பவளத் திட்டுகளின் மேல் நாலாயிரம் அடி வரை துளையிட்ட பொழுது கூட ,பவளத் திட்டுகளே இருந்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.இதன் மூலம் கடல் மட்டமானது நாலாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் புலனாகிறது.

எனவே ஆயிரம் அடி வரை கடல் மட்டம் தாழ்வாக இருந்ததற்கு காரணம் என்ன? என்ற கேள்வி எழுகிறது.

எனது விளக்கம்.

பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது,அதில் இருந்து பிரியும் நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதாலேயே, கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருகிறது.

அதனாலேயே லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டமானது,பல 
 ஆயிரம் அடி வரை, தாழ்வாக இருந்திருக்கிறது.



 0000000

ஆழ்கடல் ரகசியம்...


தற்பொழுது, கடலின் சராசரி ஆழமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கும் நிலயில்,டைனோசர்கள் காலத்தில்,கடலின் ஆழமானது, இரண்டு கிலோ மீட்டராக இருந்திருப்பது குறித்து, புதைப் படிவ ஆதாரங்களின் அடிப்படையில், ஏற்கனவே தெரிவித்து இருந்தேன்.

அதன் பிறகு,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டாக உருவான பொழுது,பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீரானது,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலந்ததால், கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது குறித்தும், புதைப் படிவ ஆதாரங்களின் அடிப்படையி, ஏற்கனவே தெரிவித்து இருந்தேன்.

எனது கண்டு பிடிப்புக்கு, மேலும் ஒரு புதிய ஆதாரத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.

கடந்த 1976 ஆம் ஆண்டு,ரட்ஜர்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனரான, டாக்டர் பீட்டர் ரானா,தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர்,ஒரு நீர் மூழ்கிக் கலனின் மூலம்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு மைல் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,ஆய்வு செய்தனர்.

அந்த ஆழத்தை அடைய அவர்களுக்கு இரண்டு மணி நேரமானது.

எரிமலைகளும் சுடு நீர் ஊற்றுக்களும் நிறைந்த, அந்த கடலடி எரிமலைத் தொடரின் கிழக்குப் பகுதியில்,விளக்குகளின் ஒளி வெள்ளத்தில்,காமிராக்கள் மூலம் வினோத கடல் உயிரினங்களைப் படம் பிடித்து, வெற்றிகரமாகப் பயணத்தை முடித்துக் கொண்டு,அந்த ஆராய்ச்சிக் குழுவினர்,ஆய்வுக் கூடத்துக்கு திரும்பினார்கள்.

அதன் பிறகு, டாக்டர் பீட்டர் ரானா, அந்தப் படச் சுருள்களை டெவலப் செய்து பார்த்த பொழுது,கடல் தரையில்,தேன் கூடு போன்ற வடிவில் இருந்த படிவுகள் இருந்ததைக் கண்டார்.

ஏதோ ஒரு கடல் உயிரினத்தின் புதைப் படிவங்களா அல்லது எதோ ஒரு கடல் உயிரினத்தின் கூடா,அல்லது கடல் தாவரத்தின் புதைப் படிவங்களா என்று குழம்பினார்.

எனவே, அந்தப் படிவுகள் குறித்து அறிவதற்காக,நிபுணர்களின் உதவியை நாடினர்.

ஆனால், ஒருவராலும் அந்தப் படிவு குறித்த விளக்கத்தைத் தெரிவிக்க இயல வில்லை.

எனவே,அந்தப் படிவமானது, எதோ ஒரு கடல் உயிரினத்தால் உருவாக்கப் பட்டு இருக்கலாம் என்ற விளக்கத்துடன்,ஒரு அறிவியல் பத்திரிகையில் கட்டுரை வெளியிட்டார்.

அதனைப் படித்த,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த,தொல் விலங்கியல் வல்லுனரான,டாக்டர் அடால்ப் சிலாக்கர்,உடனடியாக டாக்டர் பீட்டர் ரானாவைத் தொடர்பு கொண்டு,அதே போன்ற படிவுகளானது,ஐரோப்பாவில் ஆஸ்திரியா மற்றும் வியன்னா பகுதியில், ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையான, கடற் கரையோரப் பாறைகளில்,இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது குறித்து தெரிவித்தார்.

பேலியோ டிக்டைன் என்று அழைக்கப் படும் அந்தப் படிவமானது ‘பேலியோ டிக்டைன் நோடசம்’ என்று பெயர் சூட்டப் பட்ட, ஒரு கடல் உயிரினத்தால் உருவாக்கப் பட்ட கூடு என்றும் அடால்ப் சிலாக்கர் தெரிவித்தார்.

ஆனாலும், இது வரை அந்த உயிரினத்தை யாரும் கண்டு பிடிக்க வில்லை என்றும்,அந்த உயிரினத்தின் மூதாதையானது முதன் முதலில்,ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்ததாகவும் அதன் பிறகு,காலப் போக்கில்,ஆழ்கடல் பகுதிக்கு வாழத் தலைப் பட்டதாகவும்,அடால்ப் சிலாக்கர் தெரிவித்தார்.

##############

இதே போன்ற படிவுகள்,வட அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் சுண்ணாம்புப் படிவுகளில் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அதே போன்று கலா பாகாஸ் தீவுக்கு அருகில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியிலும், பேலியோ டிக்டைன் படிவுகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
ஜப்பானுக்கு அருகில் இருக்கும் கடல் தரை அகழிப் பகுதியிலும், பேலியோ டிக்டைன் படிவுகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

லியனார்டோ டாவின்சியின் குறிப்புகளிலும் பேலியோ டிக்டைன் படிவின் வரை படம் காணப் படுகிறது.

##############

ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து விட்டதாகக் கருதப் பட்ட, படிவமானது பேலியோ டிக்டைன் நோடசம் உயிரினத்தின் படிவுகளானது, தற்பொழுது புதிய கடல் தளப் பகுதி உருவாகுவதாகப் புவியியல் வல்லுனர்கள் கூறும் அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,இன்றும் அந்த உயிரினம் இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்றும், எனவே இது குறித்த ஆராய்ச்சியில் தானும் கலந்து கொள்ள விரும்புவதாகவும்,பீட்டர் ரானாவுக்கு,டாக்டர் அடால்ப் சிலாக்கர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து,கடந்த 1990,1991,1993,2001,2003 ஆகிய ஆண்டுகளில்,டாக்டர் பீட்டர் ரானா,பேலியோ டிக்டைன் நோடசம் உயிரினத்தைக் கண்டு பிடிக்க,நவீனக் கருவிகள் பொருத்தப் பட்ட நீர் மூழ்கிக் கலன் மூலம் அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, மேலும் பல பேலியோ டிக்டைன் படிவுகளைக் கண்டு பிடித்தார்.

டாக்டர் பீட்டர் ரானாவுடன், டாக்டர் அடால்ப் சிலாக்கரும்,நீர் மூழ்கிக் கலனில் பயணம் செய்தார்.

ஆனாலும், இறுதி வரை அவர்களால், பேலியோ டிக்டைன் பதிவுகளை உருவாக்கிய, பேலியோ டிக்டைன் நோடசம் உயிரினத்தைக் கண்டு பிடிக்க முடிய வில்லை.

குறிப்பாகக் கடல் நீருக்குள் புதைப் படிவப் பாறைகள் உருவாக இயலாது.

ஏனென்றால் சேரும் சகதியும் மண்ணும் கடல் நீரினாலும்,கடல் அலையினாலும் கலைக்கப் பட்டு விடும்.

அதே போன்று மற்ற கடல் உயிரினங்களாலும் கடல் உயிரினத்தின் சுவடுகள் கலைக்கப் பட்டு விடும்.

குறிப்பாகக் கடல் உயிரினங்களானது, திடீரென்று கடலுக்கு அடியில் இருந்து நிலப் பகுதிகள் உயரும் பொழுது,ஏற்படும் நிலச் சரிவின் காரணமாகச் சேறு சகதியில் சிக்கிப் புதையுண்ட பிறகு.சூரிய ஒளியில் காய்ந்து,காலப் போக்கில், இறு

எனவே,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடல் உயிரினத்தின் கூடுகளின் பாறைப் படிவுகள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,அந்தக் கடலடி எரிமலைத் தொடரானது,கடல் மட்டமானது தாழ்வாக இருந்த காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து திடீரென்று உயர்ந்து இருப்பது எடுத்துக் காட்டப் படுகிறது.

அதன் பிறகு, வெய்யில் காய்ந்து சேறும் சகதியும் பாறையாக உருவான பிறகு,கடல் மட்ட உயர்வால்,மறுபடியும் அந்தக் கடலடி எரிமலைத் தொடரானது,கடலுக்குள் மூழ்கி இருப்பதும் பேலியோ டிக்டைன் படிவுகள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது.

முக்கியமாக ,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில் தொடர்ந்து பூமிக்கு அடியில் இருந்து இளகிய பாறைக் குழம்பானது வெளிப் பட்டுக் குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் இருக்கும் கண்டங்களும் அந்தக் கடல் தளங்களுடன் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் கூறினாலும் கூட,தற்பொழுது அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த பேலியோ டிக்டைன் நோடசம் உயிரினத்தின் படிவுகள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,கடந்த ஐந்து கோடி ஆண்டுகளாக அட்லாண்டிக் கடல் தளமானது நிலையாக இருப்பது நிரூபணமாகிறது.

இதே போன்று, அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும், புனித பீட்டர் மற்றும் புனித பால் தீவுகளின் பாறைகளின் தொண்மையானது,நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பதையும் புவியியல் வல்லுனர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

இதன் மூலம், கடந்த நானூற்றி ஐம்பது கோடி ஆண்டு காலமாக அதாவது பூமி தோன்றிய காலம் முதல்,அட்லாண்டிக் கடல் தளமானது நிலையாக இருப்பதும்,அதே போன்று கடல் தளங்களுடன் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

எனவே,கடல் தளம் மற்றும் கண்டங்களின் பிரிவுகளால் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் அட்லாண்டிக் கடல் உருவானதாகப் புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கமானது அடிப்படை

அத்துடன் நில கடல் தளம் நகர்ந்து கண்டங்களுக்கு அடியில் செல்வதால்தான் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்படுவதாகப் புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கமும் அடிப்படை ஆதாரமற்ற கற்பனை ஆகும்.
00000000

தற்பொழுது,கடலின் சராசரி ஆழமானது,நான்கு கிலோ மீட்டர்.
இந்த நிலையில்,புதைப் படிவ ஆதாரங்களின் அடிப்படையில்,நான்,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது,இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதுடன்,அப்பொழுது,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில்,காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததால்,அதன் வழியாக,குள்ள வகை நீர் யானைகள், மண் புழுக்கள்,நத்தைகள் போன்ற உயிரினங்கள் ,கண்டங்களுக்கு இடையிலும் தீவுகளுக்கு இடையிலும் இடம் பெயர்ந்து இருக்கின்றன,என்று விளக்கம் தெரிவித்து இருந்தேன்.

தற்பொழுது, எனது கண்டு பிடிப்புக்கு, மேலும் ஒரு புதிய ஆதாரத்தை இங்கு வெளியிடுகிறேன்.

கடந்த 2015 ஆம் ஆண்டு,ஆராய்ச்சியாளர்கள்,ஜப்பான் கடற் கரைப் பகுதியில்,கடல் தரையை இரண்டரைக் கிலோ மீட்டர் ஆழத்தில் துளையிட்ட பொழுது,அந்த ஆழத்திலும்,நுண்ணுயிரிகள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.

அந்த நுண்ணுயிரிகளின் மரபணுக்களை ஆய்வு செய்தனர்.

அப்பொழுது,அந்த நுண்ணுயிரிகளானது,கடல் தரையில் காணப் படும் நுண்ணுயிரிகளின் மரபணுவில் இருந்து வேறு பட்டு இருந்ததுடன்,சாதாரணமாகக் காட்டுத் தரையில் , காணப் படும், நுண்ணுயிரிகளின் மரபணு அமைப்பை ஒத்திருந்தது.

இதன் அடிப்படையில்,விஞ்ஞானிகள்,அந்த நுண்ணுயிரிகளானது,'' இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு'', நிலத்தில் இருந்து,கடல் தரையை அடைந்திருக்கின்றன என்று தெரிவித்து இருக்கின்றனர்.
00000

கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்குக் காரணம் என்ன ?
தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு ,பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கம் தவறு என்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாகத் தொழிற் சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகையில் இருக்கும் கரிய மில வாயுக்கள் வளி மண்டலத்தில் கலப்பதால், பூமியின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே, கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று நம்பப் படுகிறது.

இந்த நிலையில், புதை படிவ ஆதாரங்கள் மூலம், கடந்த காலத்தில், ஒரே கால கட்டத்தில், கடல் மட்ட உயர்வும், பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.இதன் மூலம் கடல் மட்ட உயர்வுக்கு கூறப் படும் குளோபல் வார்மிங் விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவளங்கள் சாதாரணமாக பதினைந்து அடி ஆழத்தில் வாழக் கூடியது.கடல் மட்டம் உயர்ந்தால் இந்தப் பவளப் பாறைத் திட்டுகளும் அதற்கேற்ப வளரக் கூடியது.குறிப்பாக அக்ரோ போரா பால்மேட்டா பவளங்களானது இறக்கும் பொழுது அதனால் சுரக்கப் பட்ட சுண்ணாம்புப் பொருட்கள் பவளப் பாறைத் திட்டில் படிந்து விடும் இதனால் அந்தப் பவளப் பாறைத் திட்டு வளரும்.குறிப்பாக அக்ரோபோரா பால்மேட்டா பவளத் திட்டானது ஆண்டுக்கு ஐந்து முதல் பத்து சென்டி மீட்டர் வரை வளரக் கூடியது.

இந்த நிலையில் கடல் மட்டமானது ஆண்டுக்கு பத்து சென்டி மீட்டருக்கும் அதிக வேகத்தில் உயர்ந்தால் அக்ரோ போரா பாலமேட்ட பவளத் திட்டில் உள்ள எல்லா பவளங்களும் இறந்து விடும்.இந்த நிலையில் அந்தப் பவளத் திட்டில் ஆழமான பகுதியில் வளரக் கூடிய மற்ற பவளங்கள் வளரத் தொடங்கும்.

இந்த நிலையில் கரீபியக் கடல் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவளங்களின் திட்டுகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,கடந்த 26,500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,20,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமானது 120 மீட்டர் ( நானூறு அடி ) வரை தாழ்வாக இருந்து,உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதே போன்று ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு அருகில் உள்ள தி கிரேட் பாரியார் ரீப் என்று அழைக்கப் படும் பவளப் பாறைத் திட்டுப் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த பவளப் பாறைத் திட்டுகளை ஆய்வு செய்த ,ரைஸ் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த,பேராசிரியர்,ஆண்ட்ரு ட்ராக்ஸ்லர்,இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்திருப்பதாகவும்,அதன் பிறகு கடல் மட்டம் நானூறு அடி உயர்ந்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் ,கோபன் கேகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,வட துருவப் பகுதியில்,பனி யானைகள் இறந்தற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

குறிப்பாக அவர்கள்,வட துருவப் பகுதியில்,பனித் தரைக்கு அடியில் புதைந்து கிடந்த தாவரங்களின் மகரந்தங்கள்,விலங்கினங்களின் கழிவுகள் மற்றும் அந்த விலங்குகளின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவுப் பொருட்களைச் சேகரித்து ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில்,கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் இருந்ததாகவும்,அதன் பிறகு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவு அதிகரித்ததால்,பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும்,அதன் பிறகு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேலும் பனிப் பொழிவு அதிகரித்தால்,பூக்கும் தாவரங்கள் அருகி ,புற்கள் மட்டுமே இருந்ததாகவும்,அதனால் சத்துக் குறைவால் பனி யானைகள் அழிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இவ்வாறு கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதுடன் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பதன் மூலம்,பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

தற்பொழுது துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உள்பட மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட,கடல் மட்டமானது அதிக பட்சமாக இருநூற்றி நாற்பது அடிவரையே உயரும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

ஆனால் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் பவளத் திட்டு ஆய்வில்,கடல் மட்டமானது நானூறு அடிவரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.இவ்வாறு கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு தற்பொழுது வேறு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.

அதாவது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தின் பெரும் பகுதியும் பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,குறிப்பாக சிக்காக்கோ நகரானது மூன்று கிலோ மீட்டர் உயரத்துக்கு பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,அதனால் கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்ததாகவும் ,ரைஸ் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ,பேராசிரியர்,ஆண்ட்ரூ டிராக்ஸ்லர் தெரிவித்து இருக்கிறார்.

அதன் பிறகு பூமி வெப்பமடைந்ததால் நிலத்தின் மேல் இருந்த பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலந்ததால் கடல் மட்டமானது நானூறு அடி வரை உயர்ந்ததாக நம்பப் படுகிறது.

இந்த விளக்கம் தவறு,எப்படி என்றால் பூமியின் வெப்ப நிலை உயர்ந்து,அதனால் நிலத்தின் மேல் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் பொழுது,வெப்ப நிலை உயர்வால் கடல் நீரும் ஆவியாகத் தொடங்கும்,அதனால் கடலில் இருக்கும் நீர் ஆவியாகி மேல் நோக்கிச் சென்று நிலத்தின் மேல் மழையாகப் பொழிந்து ஆறுகளில் கலந்து இறுதியில் கடலிலேயே கலந்து விடும்.எனவே பூமியின் வெப்ப நிலை உயர்வதால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாது.

உதாரணமாக தற்பொழுது பூமியின் வெப்ப நிலை உயர்ந்தால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் அதே வேளையில் ,வெப்ப நிலை உயர்வால் கடலில் இருக்கும் நீர் ஆவியாவதும் அதிகரிக்கும்.எனவே கடல் நீர் ஆவியாகாமல் இருந்தாலே கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாமல் இருக்கும்.ஆனால் பூமியின் வெப்ப நிலை உயரும் பொழுது கடல் நீர் ஆவியாமல் இருக்கச் சாத்தியம் இல்லை.எனவே பூமியின் வெப்ப நிலை உயர்ந்ததால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது என்று கூறப் படும் விளக்கம் தவறு.

அதே போன்று பூமி குளிர்ந்ததால் நிலத்தின் மேல் பனிப் படலங்கள் உருவானதாகவும்,அதனால் கடல் மட்டம் தாழ்வடைந்ததாகவும் கூறப் படும் விளக்கமும் தவறு.ஏனென்றால் பூமியின் வெப்ப நிலை குறையும் பொழுது,கடல் நீர் ஆவியாகி மேல் நோக்கிச் செல்வதும் குறைந்து விடும்.எனவே ஏற்கனவே நிலத்தின் மேல் இருந்த மேகம் மட்டுமே பனியாக நிலத்தின் மேல் படியும்.எனவே பூமியின் வெப்ப நிலை குறைவதாலும் கூட ,கடல் மட்டத்தில் தாழ்வு ஏற்படச் சாத்தியம் இல்லை.

எனவே கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்வி எழுகிறது.அத்துடன் கடல் மட்டம் ஏன் உயர்ந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் உள்ள மாச்சு கிரோ நகரில்,உள்ள சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக் வெளியேறிக் கொண்டு இருந்த நீரைச் சேகரித்துப் பகுப் பாய்வு செய்த,டாக்டர் யோசிதா என்ற ஆராய்ச்சியாளர்,அந்த நீரானது பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர் என்பதைக் கண்டு பிடித்துள்ளார்.

இதே போன்று கடலுக்கு அடியில் ஏராளமான சுடு நீர் ஊற்றுக்கள் இருப்பது அறியப் பட்டுள்ளது.எனவே கோடிக் கணக்கான ஆண்டு காலமாகப் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர்,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக,வெளி வந்து கடலில் கலந்ததலேயே கடல் மட்டம் உயர்ந்து இருக்கிறது.

சமீபத்தில் கூட நார்த் வெஸ்டர்ன் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஜாக்கப்சன் என்ற ஆராய்ச்சியாளர்,நில அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் ,பூமிக்கு மேலே இருப்பதைக் காட்டிலும்,பூமிக்கு அடியில்,மூன்று மடங்கு அதிகமான நீர் இருப்பது தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்து இருக்கிறார்.
அதன் அடிப்படையில் பூமிக்கு மேலே இருக்கும் நீர் ,பூமிக்கு அடியில் இருந்து வந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எனவே பூமிக்கு அடியில் இருந்து வந்த நீராலேயே கடல் உருவாகி இருக்கிறது.

உண்மையில் பூமி வெப்ப நிலை உயர்ந்து, துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருக் நீராகிக் கடலில் கலந்து, கடல் மட்டம் உயர்ந்தால் நல்லதுதான், ஏனென்றால் துருவப் பகுதகளில் இருக்கும் பனிப் படலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட, அதிக பட்சம் இருநூற்றி நாற்பது அடி வரைதான் கடல் மட்டம் உயரும்.
அனால் உண்மையில் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம், பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது ,பாறைக் குழம்பில் இருந்து பிரியும் நீர், சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலப்பதே காரணம்.
பூமியின் பெரும்பகுதியும் பாறைக் குழம்பால் ஆகி இருப்பதுடன், பூமியும் குளிர்ந்து கொண்டு இருப்பதால்,பூமிக்கு அடியில் இருந்து சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பாறைக் குழம்பு நீரானது தொடர்ந்து வெளியேறும்.எனவே கடல் மட்டமும் தொடர்ந்து உயரும்.அதனால் நிலப் பகுதிகள் யாவும் கடலால் மூழ்கடிக்கப் படும்.அதனால் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் யாவும் அழியும்.  






Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.