பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.ஆய்வறிக்கை.


௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
---- அத்தியாயம் ஒன்று ---
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦


பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.ஆய்வறிக்கை.

எகிப்து ராணி கிளியோபாட்ரா வாழ்ந்த அலெக்சாண்ட்ரியா நகரம், தற்பொழுது கடலுக்கு அடியில் இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பதைத் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள். 

அதே போன்று, சென்னைக்கு அருகில் உள்ள மாமல்ல புரத்தில் கூட, எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்களால் கட்டப் பட்ட கோவில்கள், இன்று கடலுக்கு அடியில் இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பதைத் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கிறார்கள்.

இதன் மூலம், கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பது,நிதர்சனமான உண்மை என்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

ஆனாலும்,தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு கூறப் படும் விளக்கமானது, தவறு என்பது, புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாகத் தொழிற் சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகையில் இருக்கும் கரிய மில வாயுக்கள் வளி மண்டலத்தில் கலப்பதால், பூமியின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே, கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது, என்று தற்பொழுது, நம்பப் படுகிறது.
இந்த நிலையில், பனிப் பொழிவு ஏற்பட்ட கால கட்டத்திலேயே, கடல் மட்டமும் உயர்ந்து இருப்பது, புதைப் படிவ ஆதாரங்கள் மூலம், தெரிய வந்துள்ளது.
எனவே,கடல் மட்ட உயர்வுக்குப் பனி உருகுவதே காரணம் என்ற விளக்கம் தவறு என்பது தெரிய வந்துள்ளது.
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
குறிப்பாக,அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவளங்கள் சாதாரணமாகப் பதினைந்து அடி ஆழத்தில் வாழக் கூடியது.கடல் மட்டம் உயர்ந்தால் இந்தப் பவளப் பாறைத் திட்டுகளும் அதற்கேற்ப வளரக் கூடியது.
குறிப்பாக அக்ரோபோரா பால்மேட்டா பவளங்களானது, இறக்கும் பொழுது அதனால் சுரக்கப் பட்ட சுண்ணாம்புப் பொருட்கள் பவளப் பாறைத் திட்டில் படிந்து விடும். இதனால் அந்தப் பவளப் பாறைத் திட்டு உருவாகி வளரும்.குறிப்பாக அக்ரோபோரா பால்மேட்டா பவளத் திட்டானது, ஆண்டுக்கு ஐந்து முதல் பத்து சென்டி மீட்டர் வரை வளரக் கூடியது.

இந்த நிலையில், கடல் மட்டமானது ஆண்டுக்கு பத்து சென்டி மீட்டருக்கும் அதிக வேகத்தில் உயர்ந்தால், அக்ரோபோரா பால்மேட்டா பவளத் திட்டில் உள்ள எல்லா பவளங்களும் இறந்து விடும்.இந்த நிலையில் அந்தப் பவளத் திட்டின் மேல்  ஆழமான பகுதியில் வளரக் கூடிய மற்ற பவளங்கள் வளரத் தொடங்கும்.

இந்த நிலையில், கரீபியக் கடல் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவளங்களின் திட்டுகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,கடந்த 26,500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,20,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமானது 120 மீட்டர் ( நானூறு அடி ) வரை தாழ்வாக இருந்து, உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் ,கோபன் கேகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,வட துருவப் பகுதியில்,பனி யானைகள் இறந்தற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

குறிப்பாக அவர்கள்,வட துருவப் பகுதியில்,பனித் தரைக்கு அடியில் புதைந்து கிடந்த தாவரங்களின் மகரந்தங்கள்,விலங்கினங்களின் கழிவுகள் மற்றும் அந்த விலங்குகளின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவுப் பொருட்களைச் சேகரித்து ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில்,கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் இருந்ததாகவும்,அதன் பிறகு 20,000 ஆண்டுகளுக்கு முன்பு, பனிப் பொழிவு அதிகரித்ததால்,பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும்,அதன் பிறகு 10,000 ஆண்டுகளுக்கு முன்பு, மேலும் பனிப் பொழிவு அதிகரித்தால்,பூக்கும் தாவரங்கள் அருகி ,புற்கள் மட்டுமே இருந்ததாகவும்,அதனால் சத்துக் குறைவால் பனி யானைகள் அழிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இவ்வாறு, கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதுடன் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பதன் மூலம்,பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.


௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦


இதே போன்று, ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு அருகில் உள்ள தி கிரேட் பாரியார் ரீப் என்று அழைக்கப் படும் பவளப் பாறைத் திட்டுப் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த பவளப் பாறைத் திட்டுகளை ஆய்வு செய்த ,ரைஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,பேராசிரியர்,ஆண்ட்ரு ட்ராக்ஸ்லர்,இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்திருப்பதாகவும்,அதன் பிறகு கடல் மட்டம் நானூறு அடி உயர்ந்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

அதன் பிறகு, பூமி வெப்பமடைந்ததால் நிலத்தின் மேல் இருந்த பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலந்ததால் கடல் மட்டமானது, நானூறு அடி வரை உயர்ந்ததாக நம்பப் படுகிறது.

இந்த விளக்கம் தவறு,எப்படி என்றால் பூமியின் வெப்ப நிலை உயர்ந்து,அதனால் நிலத்தின் மேல் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் பொழுது,வெப்ப நிலை உயர்வால் கடல் நீரும் ஆவியாகத் தொடங்கும்,அதனால் கடலில் இருக்கும் நீர் ஆவியாகி மேல் நோக்கிச் சென்று நிலத்தின் மேல் மழையாகப் பொழிந்து ஆறுகளில் கலந்து இறுதியில் கடலிலேயே கலந்து விடும்.எனவே பூமியின் வெப்ப நிலை உயர்வதால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாது.

உதாரணமாக தற்பொழுது பூமியின் வெப்ப நிலை உயர்ந்தால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் அதே வேளையில் ,வெப்ப நிலை உயர்வால் கடலில் இருக்கும் நீர் ஆவியாவதும் அதிகரிக்கும்.
எனவே கடல் நீர் ஆவியாகாமல் இருந்தாலே கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாமல் இருக்கும்.ஆனால் பூமியின் வெப்ப நிலை உயரும் பொழுது கடல் நீர் ஆவியாமல் இருக்கச் சாத்தியம் இல்லை.எனவே பூமியின் வெப்ப நிலை உயர்ந்ததால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது என்று கூறப் படும் விளக்கம் தவறு.

அதே போன்று பூமி குளிர்ந்ததால் நிலத்தின் மேல் பனிப் படலங்கள் உருவானதாகவும்,அதனால் கடல் மட்டம் தாழ்வடைந்ததாகவும் கூறப் படும் விளக்கமும் தவறு.
ஏனென்றால், பூமியின் வெப்ப நிலை குறையும் பொழுது,கடல் நீர் ஆவியாகி மேல் நோக்கிச் செல்வதும் குறைந்து விடும்.எனவே ஏற்கனவே நிலத்தின் மேல் இருந்த மேகம் மட்டுமே பனியாக நிலத்தின் மேல் படியும்.எனவே பூமியின் வெப்ப நிலை குறைவதாலும் கூட ,கடல் மட்டத்தில் தாழ்வு ஏற்படச் சாத்தியம் இல்லை.

எனவே, கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு காரணம் என்ன? என்ற கேள்வி எழுகிறது.அத்துடன் கடல் மட்டம் ஏன் உயர்ந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்வியும் எழுகிறது.

குறிப்பாகக் கடல் மட்ட உயர்வுக்கு,உலகில் அதிக அளவில் பனிக் கட்டிகளைக் கொண்டிருக்கும்,அண்டார்க்டிக் கண்டத்தின் பனி உருகுவதே, முக்கியமான காரணம் என்று நம்பப் பட்டது.
இந்த நிலையில்,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு அண்டார்க்டிக் கண்டத்தின் பனி உருகல் காரணம் அல்ல என்று நாசாவைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஜேய் ஜேவாளி தெரிவித்து  இருக்கிறார்.
குறிப்பாக,நாசாவைச் சேர்ந்த, பனி இயல் வல்லுனரான,டாக்டர் ஜேய் ஜேவாளி தலைமையிலான ஆய்வுக் குழுவினர்,ஐரோப்பிய செயற்கைக் கோள்கள் மற்றும் நாசாவின் லேசர் செயற்கைக் கோள்கள் மூலமாக,சேகரிக்கப் பட்ட தரவுகளை ஆய்வு செய்தனர்.
குறிப்பாகக் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை,அண்டார்க்டிக்காக் கண்டத்தில்,200 பில்லியன் டன் பனி உருவாகி இருப்பதாகவும் , டாக்டர். ஜேய் ஜேவாளி தெரிவித்து இருக்கிறார். 

ஆனால், சர்வதேச கால நிலை மாற்றதிற்கான அமைப்பைச் சேர்ந்தவர்கள், அண்டார்க்டிக்காக் கண்டத்தில், ஆண்டுக்கு 65 பில்லியன் டன் பனி, உருகுவதாகத் தெரிவித்து இருந்தனர்.

எனவே, அண்டார்க்டிக்காக் கண்டத்தில் ஆண்டுக்கு 135 பில்லியன் டன் பனி அதிகப்படியாக உருவாகுவதாக ,டாக்டர். ஜேய் ஜேவாளி , தெரிவித்து இருக்கிறார். 

இவ்வாறு, அண்டார்க்டிக்காக் கண்டத்தில், பனிப் படலங்கள் உருகுவதைக் காட்டிலும், அதிக அளவில் பனிப் படலங்கள் உருவாகுவதால்,கடல் மட்ட உயர்வுக்கு, அண்டார்க்டிக்காக் கண்டம் காரணம் அல்ல, என்று டாக்டர். ஜேய் ஜேவாளி தெரிவித்து இருக்கிறார்.

எனவே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு வேறு எதோ ஒரு  காரணம் என்று டாக்டர். ஜேய் ஜேவாளி தெரிவித்து இருக்கிறார்.

00000000000000000
டோகர் லேண்ட்
பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய டோகர் லேண்ட்.

இதே போன்று பிரிட்டிஷ் தீவுக்கும் ஐரோப்பாக் கண்டத்துக்கும் இடைப் பட்ட வட கடல் பகுதியில் 400 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் டோகர் லேண்ட் என்று அழைக்கப் படும் 45,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள, நிலத்தின் பெரும்பகுதியானது, 18,000 ஆண்டுகளுக்கு மூழ்கத் தொடங்கியதாகவும், இறுதியாக 5500 ஆண்டுகளுக்கு முன்பு முழுவதுமாக மூழ்கி விட்டதாகவும், அந்தப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட தொல் பொருட்களின் தொண்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,வேல்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த புவித் தொல் பொருள் ஆராய்ச்சியாளரான டாக்டர் மார்டின் பேட்ஸ் தெரிவித்துள்ளார்.

எனவே, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டமும் உயர்ந்து நிலத்தை மூழ்கடித்து இருக்கிறது.இருக்கிறது.
அதே போன்று, துருவப் பகுதிகளில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவும் ஏற்பட்டு பனி யானைகளை அழித்து இருக்கிறது.

எனவே, கடல் மட்ட உயர்வும் பனிப் பொழிவும் ஒரே கால கட்டத்தில் ஏற்பட்டு இருப்பதால், வட துருவப் பகுதியில் பனிப் படலங்கள் உருவானதற்குக் கடல் மட்டம் உயர்ந்ததால், கடலின் பரப்பளவு அதிகரித்ததால், வளி மண்டலத்தின் வெப்ப நிலை குறைந்து, குளிர்ச்சி ஏற்பட்டதே காரணம் என்பதும் நிரூபணமாகிறது.

எனவே, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் படலங்கள் உருகிக் கடலில் கலந்ததாகவும் அதனால் கடல் மட்டம் உயர்ந்ததாகக் கூறப் படும் விளக்கம் தவறு.

ஐம்பதாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய நிலம்.
இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்து இருக்கும் புளோரிடா மாகாணத்தின் கடல் பகுதியில் மூழ்கிக் கிடக்கும், பவள உயிரினங்களின் புதை படிவங்கள் மூலமாகவும், கடல் மட்ட உயர்வும், பனிப் பொழிவும், ஒரே கால கட்டத்தில், நடைபெற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆழமற்ற கடல் பகுதியில் வாழும் பவள உயிரிகள், கடல் மட்டம் உயர்ந்தால்,
சூரிய ஒளியின்றி இறந்து விடும்.

இந்த நிலையில் கடலுக்கு அடியில் காணப் படும் பவள உயிரினங்களின் புதை படிவங்களைக் கார்பன் காலக் கணிப்பு முறையில் சோதனை செய்வதன் மூலம், அந்தப் பவள உயிரிகள் எப்பொழுது இறந்தன? என்பதை அறிய இயலும்.

அதன் அடிப்படையில் ,அந்த இடத்தில் கடல் மட்டம் எப்பொழுது உயர்ந்தது? என்பதை அறிய இயலும்.

இந்த முறையில்,வட அமெரிக்கக் கண்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்து இருக்கும் புளோரிடாக் கடல் பகுதியில், கடலுக்கு அடியில் சரிவாகச் செல்லும் பாறைத் தளத்தில்,நூறு முதல் ஐம்பது மீட்டர் ஆழத்தில்,ஐம்பதாயிரம் முதல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்ட உயர்வால் இறந்த, பவள உயிரிகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.

அதன் அடிப்படையில்,புளோரிடா பகுதியில் கடந்த ஐம்பதாயிரம் முதல் முன்பு தொடங்கி,பத்தாயிரம் ஆண்டு காலதுக்கு முன்பு வரையில், கடல் மட்டம் நூற்றி இருபது  மீட்டர் வரை, தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

உண்மையில் கடலுக்கு அடியில் இருக்கும் சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளி வந்து கொண்டு இருக்கும் நீர், கடலில் கலந்ததாலேயே  கடல் உருவாகி இருக்கின்றன.

அத்துடன் சுடு நீர் ஊற்று நீர், இன்றும் கடலில் கலந்து கொண்டு இருப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது.

இவ்வாறு கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருப்பதால், கடலின் பரப்பளவும் அதிகரித்துக் கொண்டு இருப்பதால் பூமியின் வெப்ப நிலை குறைந்து துருவப் பகுதிகளில் பனிப் படலங்கள் உருவாகி இருக்கின்றன.

அதன் காரணமாக தாவர மற்றும் விலங்கினங்களும் அழிந்திருக்கின்றன.

இதே போன்று பூமியின் உயிரின வரலாற்றில் ஐந்து பெரும் அழிவுகள் ஏற்பட்டு இருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அந்தப் பேரழிவுகளுக்கும் கடல் மட்ட உயர்வும் கால நிலை மாற்றமுமே காரணம் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகிறது.

பனிரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய குகை.
ஹென்றி காஸ் குயர் என்ற நீச்சல் வீரர், 1985 ஆம் ஆண்டு ,தனது ,நண்பர்களுடன் ,மத்தியத் தரைக் கடலின், வட பகுதிக் கரையோரமாகக் கடலுக்கு அடியில் நீந்திக் கொண்டு இருந்தார்.

அப்பொழுது நூற்றி இருபது அடி ஆழத்தில் ஒரு குகை தென் பட்டது.

ஆர்வத்தின் காரணமாக அந்தக் குகைக்குள் நீந்திய படியே நுழைந்தார்.

ஐநூற்றி எழுபத்தி நான்கு அடி வரை நீண்டு சென்ற அந்தக் குகைப் பாதையின் இறுதியில் வெளிச்சம் தெரிந்தது. நீர் மட்டத்துக்கு மேலாக எழுந்து பார்த்த பொழுது, ஒரு குகைக்குள் இருப்பதை அவர் உணர்ந்தார்.

அதன் பிறகு காஸ்குயர் தன் நண்பர்களுடன் அந்தக் குகைக்கு பல முறை சென்று வந்தார்.கடந்த 1991 ஆம் ஆண்டு அந்தக் கடலடிக் குகைக்குச் சென்ற பொழுது குகையின் சுவற்றில், ஒரு மனிதனின் கை அச்சு வடிவம் பதிக்கப் பட்டு இருப்பதைக் கண்டார்.

அதைத் தொடர்ந்து தீவிரமாகத் தேடிய பொழுது, அந்தக் குகையின் சுவற்றில் மீன்கள் உள்பட,குதிரை,மான்,காட்டெருமை, போன்ற விலங்கினங்களின் ஓவியங்கள் வரையப் பட்டு இருப்பதைக் கண்டார்.உடன் தொல் பொருள் துறை யினருக்குத் தகவல் தெரிவித்தார்.

அதன் பிறகு அந்தக் குகையைத் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் ஜீன் கிளாட்டிஸ் தலைமயிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

அந்தக் கடலடிக் குகையில் சில கற்கருவிகளும், கரித் துண்டுகளும் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.


அத்துடன் அந்தக் குகையின் சுவற்றில் ஐம்பதுக்கும் அதிகமான மனிதக் கை அச்சுக்களும் பதிக்கப் பட்டு இருந்தது.

அந்தக் கை அச்சுக்கள், சுவற்றின் மேல் கையை வைத்த நிலையில், செஞ்சாந்து போன்ற களிமண் குழம்பை வாயிலிருந்து ஊதுவதால் உருவாக்கப் பட்டு இருந்தது.

குகைச் சுவரில் இருந்த அந்த கை அச்சு வடிவங்கள், இருபத்தி ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, வேட்டைக் கலாச்சார மனிதர்களால் உருவாக்கப் பட்டது என்பது கார்பன் காலக் கணிப்பு ஆய்வில் தெரிய வந்தது.
caq.jpg 
ஆனால் குகையின் சுவற்றில் வரையப் பட்டு இருந்த, குதிரை காட்டெருமை மான்களின் ஓவியங்கள், பத்தொன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, கற்கால மனிதர்களால் வரையப் பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதன் மூலம் அந்தக் குகையில், இரண்டு வெவ்வேறு கால கட்டத்தில், கற்கால மனிதர்கள் வாழ்ந்திருப்பது தெரிய வந்தது.

அந்தக் குகையானது மிகவும் ஈரப் பதமாக இருந்தது. அதனால் அந்தக் குகையில் இருந்த ஒரு கரித்துண்டு பஞ்சு போன்று மென்மையாகி இருந்தது.

ஈரப் பதத்தால் குகையின் சுவற்றில் வரையப் பட்டு இருந்த ஓவியங்களின் மேல் கையை வைத்தாலே அழிந்து விடும் நிலையில் இருந்தது.எனவே தற்பொழுது அந்தக் குகைக்குள் பொது மக்கள் அனுமதிக்கப் படுவதில்லை.

அத்துடன் குகையின் வாசல் கடற்படையினரால் பாதுக்காப்பாக மூடப் பட்டு பாதுக்காக்கப் படுகிறது.கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதால் அந்தக் குகை ஓவியங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

உண்மையில் இந்தக் குகையானது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மலைப் பகுதியில் மேல் இருந்த குகையாக இருந்திருக்கிறது.

பத்தொன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் நானூறு அடிவரை தாழ்வாக இருந்ததால், கடற்கரையானது அந்தக் குகையில் வாசலில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்திருக்கும் என்று தொல் பொருள் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜீன் கிளாட்டிஸ், அவர் எழுதிய நூலில் தெரிவித்து இருக்கிறார்.
இவ்வாறு, கடல் மட்ட உயர்வும், பனிப் பொழிவும் ஒரே காலத்தில் நடை பெற்று இருப்பதன் மூலம், பனி உருகி நீராகிக் கடலில் கலப்பதால்தான் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கம் தவறு என்பது, ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

0000000000000000

எனவே, கடல் மட்டம் உயர்ந்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்வி எழுகிறது.அத்துடன் கடல் மட்டம் ஏன் உயர்ந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்வியும் எழுகிறது.
தற்பொழுது, துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உள்பட மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட,கடல் மட்டமானது அதிக பட்சமாக இருநூற்றி நாற்பது அடிவரையே உயரும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

ஆனால், கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் பவளத் திட்டு ஆய்வில்,கடல் மட்டமானது நானூறு அடிவரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இவ்வாறு, கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு தற்பொழுது வேறு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.

அதாவது, இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தின் பெரும் பகுதியும் பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,குறிப்பாக சிக்காக்கோ நகரானது மூன்று கிலோ மீட்டர் உயரத்துக்கு பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,அந்த அதிகப் படியான பனியானது கடலில் இருந்து வந்த நீரால் உருவானதாகவும்,அதனால் கடல் மட்டமானது, நானூறு அடி வரை தாழ்வாக இருந்ததாகவும் ,ரைஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ,பேராசிரியர்,ஆண்ட்ரூ டிராக்ஸ்லர் தெரிவித்து இருக்கிறார்.

அதன் பிறகு, பூமி வெப்பமடைந்ததால் நிலத்தின் மேல் இருந்த பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலந்ததால் கடல் மட்டமானது நானூறு அடி வரை உயர்ந்ததாக நம்பப் படுகிறது.
இவ்வாறு கடல் மட்டமானது, அதிக ஆழத்துடன் இருந்ததற்கு,அதிகப் படியான கடல் நீர் ஆவியானதே காரணம் என்றும், அதற்குப் பூமியின் சுற்றுப் பாதையில் ஏற்பட்ட மாற்றமே காரணம், என்றும் டிராக்ஸ்லர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
அதாவது,முன் ஒரு காலத்தில்,பூமியானது,சூரியனை சற்று நெருக்கமாக வலம் வந்ததாகவும்,அப்பொழுது பூமியின் வெப்ப நிலையானது அதிகரித்ததாகவும்,அதனால் கடல் நீரானது அதிக அளவில் ஆவியானதாகவும்,அதனால், கடல் மட்டமானது அறுநூறு அடி வரை தாழ்வானதாகவும், டிராக்ஸ்லர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
அதன் பிறகு,பழைய படி,பூமியானது,சூரியனை விட்டு விலகிச் சென்று.பெரிய சுற்றுப் பாதையில் வலம் வந்ததாகவும்,அதனால் நிலத்தின் மேல் இருந்த பனியானது உருகி நீராகிக் கடலில் கலந்ததால், கடல் மட்டமானது அறுநூறு அடி வரை உயர்ந்ததாகவும்,ட்ராக்ஸ்லர் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால்,கடல் மட்டமானது அறுநூறு அடி வரை தாழ்வாக இருந்ததற்கு, டிராக்ஸ்லர் கூறிய விளக்கமானது தவறு.
ஏனென்றால்,பூமியானது,சூரியனை நெருங்கிச் சென்று சிறிய சுற்றுப் பாதையில் வலம் வந்தால்,கடலில் இருக்கும் நீரானது, ஆவியாகத் தொடங்கும் பொழுது,நிலத்தின் மேல் இருக்கும் பனியும், உருகி நீராகிக் கடலில் கலக்கும்.எனவே கடல் மட்டமானது அப்படியேதான் இருக்கும்.
அதே போன்று, பூமியானது,சூரியனை விட்டு விலகிச் சென்று.பெரிய சுற்றுப் பாதையில் வலம் வரும் பொழுது,நிலத்தின் மேல் இருக்கும் நீரானது பனியாகப் படியும் பொழுது,கடல் நீரும் ஆவியாகுவது நின்று விடும்.எனவே, கடல் மட்டதில் மாற்றம் ஏற்படாது.
எனவே,கடல் மட்டமானது அறுநூறு அடி வரை தாழ்வாக இருந்ததற்கு, டிராக்ஸ்லர் கூறிய விளக்கமானது தவறு.

எனவே, கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்வி எழுகிறது.அத்துடன் கடல் மட்டம் ஏன் உயர்ந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த நிலையில், ஜப்பான் நாட்டில் உள்ள மாச்சு கிரோ நகரில்,உள்ள சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக் வெளியேறிக் கொண்டு இருந்த நீரைச் சேகரித்துப் பகுப் பாய்வு செய்த,டாக்டர் யோசிதா என்ற ஆராய்ச்சியாளர்,அந்த நீரானது பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர் என்பதைக் கண்டு பிடித்துள்ளார்.

இதே போன்று, கடலுக்கு அடியில் ஏராளமான சுடு நீர் ஊற்றுக்கள் இருப்பது அறியப் பட்டுள்ளது.எனவே கோடிக் கணக்கான ஆண்டு காலமாகப் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர்,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக,வெளி வந்து கடலில் கலந்ததலேயே கடல் மட்டம் உயர்ந்து இருக்கிறது.

0000000000000000000000
கடல் பூமிக்குள் இருந்து வந்திருக்கிறது.

கடந்த 2014 ஆண்டு, கடலில் இருக்கும் நீரை விட ,மூன்று மடங்கு அதிகமான நீர், பூமிக்கு அடியில், குறிப்பாக அறுநூற்றி அறுபது கிலோ மீட்டர் ஆழத்தில், ரிங்க்வூடைட் என்று அழைக்கப் படும் பாறையில் கலந்து இருப்பதாக, அமெரிக்காவின், நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, ஸ்டீவ் ஜாக்கப்சென் என்ற புவியியல் வல்லுநர் தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர், நில அதிர்ச்சிகளை ஆய்வு செய்யும் கருவிகள் மூலமாக, பூமிக்குள் ஏற்படும் அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில், பூமிக்கு அடியில், நீர் பெருமளவில் இருப்பது தெரிய வந்ததாகவும், தெரிவித்து இருக்கிறார்.

இதன் மூலம் பூமிக்கு மேல் இருக்கும் கடலானது , பூமிக்கு அடியில் இருந்தே மேற்பகுதிக்கு வந்திருக்க வேண்டும், என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

இதற்கு முன்பு கடலானது, விண்வெளியில் இருந்து, பூமியில் மேல் விழுந்த லட்சக் கணக்கான பனிப் பாறைகாளால் உருவானது என்று நம்பப் பட்டது.

எனவே பூமிக்கு அடியில் இருந்து வந்த நீராலேயே கடல் உருவாகி இருக்கிறது.

நிலவின் மேற்பரப்பில் கண்டு பிடிக்கப் பட்ட பனிப் படலங்கள் எப்படி உருவாகின?

சமீபத்தில் நிலவின் மேற்பரப்பில் நீர் பனிக் கட்டி வடிவில் இருப்பதை இந்திய விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர்.
அந்த நீர் எப்படி உருவனதென்றால்...நிலவின் ஆழமான பகுதியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையான பொழுது அதில் இருந்து பிரிந்த நீரானது,நிலவின் மேற்பரப்புக்கு வந்து குளிர்ந்ததால் பனியாக உருவாகி இருக்கிறது.
இது போன்று பாறைக் குழம்பில் இருந்து உருவாகும் நீரானது பாறைக் குழம்பு நீர் என்றும், மாக்மாட்டிக் வாட்டர் என்றும், அழைக்கப் படுகிறது.
நம் பூமியும், ஆரம்பத்தில் கொதிக்கும் பாறைக் குழம்புக் கோளமாக இருந்திருக்கிறது.அதன் பிறகு மெதுவாகக் குளிர்ந்ததால்,பூமியின் மேலோடு உருவானது.அதன் பிறகு பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது படிப் படியாகக் குளிர்ந்ததால்,பல்வேறு அடுக்குகளில் பாறைத் தட்டுகள் உருவாகின.பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில், பதினாலு சதவீதம் நீர் இருக்கிறது.
இந்த நிலையில்,பாறைக் குழம்பானது,குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டாகும் பொழுது,பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக, பூமிக்கு மேலே திரண்டதால் கடல் உருவானது.
இன்றும் கூட, பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது, குளிர்ந்து கொண்டு இருப்பதால், அதில் இருந்து உருவாகும் நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதால்,கடல் மட்டமானது தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது, குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது, அதன் கன அளவானது அதிகரிக்கிறது.அதனால் புவிப் பரப்பின் மேல், கண்டங்கள் புடைத்துக் கொண்டு உருவாகின.
இவ்வாறு கண்டங்களானது, கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்தபொழுது, ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிப் புதையுண்ட கடல் உயிரினங்களே, தற்பொழுது கண்டங்களின் மேலும் மலைகளின் மேலும் புதை படிவங்களாகக் காணப் படுகிறது.
இந்த நிலையில் ,எரிமலைகள் மூலம் வெளிப்படும் வாயுக்களால், பூமியும் மெதுவாகக் குளிர்ந்து கொண்டு இருக்கிறது.

எனவே பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில் , நீர் உற்பத்தி ஆகுவதும் தொடரும்.எனவே பூமிக்கு அடியில் உற்பத்தி ஆகும் நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலப் பதும் தொடரும்.

எனவே கடல் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து கொண்டுதான் இருக்கும்.
இதனால் நிலப் பகுதிகள் யாவும், கடலில் மூழ்கும்,அத்துடன் தரையில் வாழும் தாவரங்கள்,மற்றும் விலங்கினங்கள் யாவும் அழியும்.

உண்மையில் பூமி வெப்ப நிலை உயர்ந்து, துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருக் நீராகிக் கடலில் கலந்து, கடல் மட்டம் உயர்ந்தால் நல்லதுதான், ஏனென்றால் துருவப் பகுதகளில் இருக்கும் பனிப் படலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட, அதிக பட்சம் இருநூற்றி நாற்பது அடி வரைதான் கடல் மட்டம் உயரும்.

அனால், உண்மையில் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம், பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது ,பாறைக் குழம்பில் இருந்து பிரியும் நீர், சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலப்பதே காரணம்.

பூமியின் பெரும்பகுதியும் பாறைக் குழம்பால் ஆகி இருப்பதுடன், பூமியும் குளிர்ந்து கொண்டு இருப்பதால்,பூமிக்கு அடியில் இருந்து சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பாறைக் குழம்பு நீரானது தொடர்ந்து வெளியேறும்.எனவே கடல் மட்டமும் தொடர்ந்து உயரும்.அதனால் நிலப் பகுதிகள் யாவும் கடலால் மூழ்கடிக்கப் படும்.

அதனால் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் யாவும் அழியும்.
ஆம்,நமது பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
அத்தியாயம் இரண்டு
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.

நீர் யானை இனமானது,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம் ஆகும்.

நீர் யானைகளால், நீர்ப் பரப்பின் மேல், நீந்தவோ மிதக்கவோ இயலாது.

குள்ள வகை நீர் யானை இனமானது,ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும், பெரிய வகை நீர் யானை இனத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தது.

இந்த நிலையில்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து, நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும், மடகாஸ்கர் தீவில் ,பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, மூன்று இன வகையைச் சேர்ந்த, குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது, கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

முக்கியமாக,ஆப்பிரிக்கக் கண்டமும்,மடகாஸ்கர் தீவும்,இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கிறது.

எனவே,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து குள்ள வகை நீர் யானைகள், எப்படி,மடகாஸ்கர் தீவுக்கு வந்தன, என்பது புதிராக இருக்கிறது.

ஒரு வேளை,காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட,மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு ,நீர் யானைகள் ,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து தற்செயலாக மடகாஸ்கர் தீவை அடைந்து இருக்கலாம் என்பதற்கும் வாய்ப்பில்லை.


ஏனென்றால்,மடகாஸ்கர் தீவில்,மூன்று இன வகையைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.இந்த மூன்று வகை குள்ள வகை நீர் யானைகலானது,ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த மூன்று இன வகையைச் சேர்ந்த ,பெரிய அளவு நீர் யானைகளில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த விளங்கினமாகும்.

எனவே,மடகாஸ்கர் தீவுக்கு,''மூன்று முறை ,நீர் யானைகள் ,தற்செயலாகக் கடல் வழியாக, வந்திருக்க வேண்டும்'' என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், இந்த விளக்கமானது, அசாதாரணமான விளக்கம் ஆகும்.

அதாவது,காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட,மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு ,ஒரே ஒரு கர்ப்பிணி நீர் யானையானது,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து தற்செயலாக மடகாஸ்கர் தீவை அடைந்த பிறகு,இரண்டு குட்டிகளை ஈன்ற பிறகு,அந்தக் குட்டிகள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து, மடகாஸ்கர் தீவில்,அந்த இனம் பெருகி இருக்கலாம் என்றும் நம்பப் படுகிறது.

ஆனால்,நீர் யானைகளானது, வழக்கமாக ஒரே ஒரு குட்டிகளையே ஈனக் கூடியது.

மிகவும் அரிதாக நீர் யானைகள் இரண்டு குட்டிகளை ஈனக் கூடியது.
                            

எனவே,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து மூன்று இன வகையைச் சேர்ந்த நீர் யானைகளானது, மூன்று முறை தற்செயலாக,மடகாஸ்கர் தீவை அடைந்த பிறகு,மூன்று முறையும், வழக்கத்துக்கு மாறாக,இரண்டு குட்டிகளை ஈன்றதால்,மடகாஸ்கர் தீவில், மூன்று இனவகையைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகளின் எலும்புகள் காணப் படுகிறது, என்ற விளக்கமானது, இயற்கைக்கு முரணான விளக்கம் ஆகும்.

இதே போன்று,மத்திய தரைக் கடலில் அமைந்து இருக்கும்,சிசிலி,மால்டா,கிரிட்டி,மற்றும் சைப்ரஸ் ஆகிய தீவுகளிலும்,நான்கு வகையான ,குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்து இருப்பது,அந்தத் தீவுகளில்,கண்டு பிடிக்கப் பட்ட,எலும்புப் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, அந்தக் குள்ள வகை நீர் யானைகளானது,ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்ந்த பெரிய வகை நீர் யானை இனத்தில் இருந்து ,பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினங்கள் ஆகும்.

எனவே, மடகாஸ்கர் தீவுக்கு மூன்று முறை,மத்திய தரைக் கடல் தீவுகளுக்கு நான்கு முறை,என ஏழு முறையும் ,தற்செயலாக மரக் கிளைகளில் தொற்றிக் கொண்டு, நீர் யானையானது,தீவுகளை ,அடைந்து இருக்க இயலாது.

அதன் பிறகு,ஏழு முறையும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை ஈன்று,அந்தத் தீவுகளில்,குள்ள வகை நீர் யானை இனம் பெருகி இருக்க வாய்ப்பில்லை.

எனவே,மடகாஸ்கர் தீவு மற்றும் மத்திய தரைக் கடல் தீவுகளில்,காணப் படும், குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதைப் படிவங்கள் ,மூலம்,இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது,இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும்,அதனால்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக,விலங்குகள் இடம் பெயர்ந்து இருப்பதும் எடுத்துக் காட்டப் படுகிறது.

மடகாஸ்கர் தீவுக்கு சைவ முதலை எப்படி வந்தது?


கடந்த,1998, ஆம் ஆண்டு, மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட, ஆறு கோடியே அறுபது லட்சம் ஆண்டுகள் தொன்மையான, முதலையின் புதை படிவங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தது.

மூன்று அடி நீளமுள்ள அந்த முதலையில் முகப் பகுதி நீண்டு இருப்பதற்குப் பதிலாக மிகவும் குட்டையாக இருந்தது.அதன் தாடையில் நீண்ட கூர்மையான பற்கள் இருப்பதற்குப் பதிலாக கிராம்பு போன்ற வடிவில் தாவரங்களை உண்பதற்கு ஏற்றபடி இருந்தது.

அதன் உடலின் மேற் பகுதியிலும் கால்களின் மேற் பகுதியும் எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது.அதன் வாலும் மிகவும் குட்டையாக இருந்ததுடன் வாலும் எலும்புத் தட்டால் மூடப் பட்டு இருந்தது.
எனவே அந்த வாலைக் கொண்டு அந்த முதலையால் நீந்த இயலாது.அதன் கால்களும் நடப்பதற்கு எதுவாக தரை வாழ் வாழ்க்கைக்கு ஏற்றதாக இருந்தது.
அந்த முதலையால் உடலை பக்க வாட்டில் வளைக்க இயலாத படி ஆமையின் உடலை மூடி இருக்கும் கவசம் போன்ற எலும்புத் தட்டு இருந்தது.
ஏற்கனவே சீமோ சூக்கசின் இனவகைளின் புதை படிவங்கள் ஆப்பிர்க்கக் கண்டத்தில் எகிப்து பகுதிலும், ஆசியக் கண்டத்தில் சீனாவிலும், தென் அமெரிக்கக் கண்டத்தில் உருகுவே நாட்டிலும் கண்டு பிடிக்கப் பட்டு இருந்தது.
ஆனால் சீமோ சூக்கஸ் எப்படி மடகாஸ்கர் தீவுக்கு வந்தது என்பது குறித்து வல்லுனர்களால் சரியான விளக்கத்தை அளிக்க இயல வில்லை.

ஐரோப்பாக் கண்டத்தின் நத்தைகள் தீவுகளுக்கு எப்படிச் சென்றது ?

ஐரோப்பாக் கண்டத்தில் பேலியா பெர்வர்சா என்று அழைக்கப் படும் இனத்தைச் சேர்ந்த நத்தைகள் காணப் படுகின்றன.இந்த நத்தைகளுக்கு உப்பு நீர் ஒத்தக் கொள்ளாது என்பதுடன் இந்த நத்தைகளால் கடல் நீரில் உயிர் வாழவும் இயலாது.
இந்த நிலையில் 1824 ஆம் ஆண்டு ஜான் கிரே என்ற உயிரியல் வல்லுநர்,தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் ட்ரிடான் ட குன்கா என்ற எரிமலைத் தீவில் சில நத்தைகளைக் கண்டார்.


அந்த நத்தைகள், ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகளைப் போலவே இருந்தது, ஆனால் அளவில் கொஞ்சம் பெரியதாக இருந்தது.
ட்ரிடான் ட குன்கா தீவானது ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து எட்டாயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருகிறது. எனவே அவ்வளவு தொலைவு கடல் பகுதியைக் கடந்து பேலியா பெர்வர்சா நத்தைகள், ஐரோப்பாவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு வந்து இருக்க இயலாது, என்ற அடிப்படையில், ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் பட்ட நத்தைகள், புதிய இனமாகக் கருதப் பட்டு ,ட்ரிடானியா என்று பெயர் சூட்டப் பட்டது.
இந்த நிலையில் நெதர் லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் ,டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் குழுவினர் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகள் மற்றும் ஐரோப்பாவில் இருந்து ஆயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில்,வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் அசோர் என்ற எரிமலைத் தீவு,அதே போன்று ,அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா எரிமலைத் தீவு ,அதே போன்று அசோர் எரிமலைத் தீவில் இருந்து ஒன்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ட்ரிடான் எரிமலைத் தீவிலும் காணப் படும் நத்தைகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு செய்தனர்.
அந்த ஆய்வில் அசோர் தீவு நத்தைகள் ஐரோப்பாவில் காணப் படும் நத்தைகளின் வழித் தோன்றல்கள் என்பதும்.ஐரோப்பாவில் இருந்து அசோர் தீவுக்கு வந்த நத்தைகள் காலப் போக்கில் இரண்டு புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது.
அதே போன்று ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் படும் எட்டு வகையான நத்தைகளின் மூததையானது ட்ரிடான் ட குன்கா தீவில் இருந்து ஒண்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் அசோர் தீவில் காணப் படும் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது.
இதே போன்று அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா தீவில் காணப் படும் நத்தைகளின் மூததையும் அசோர் தீவு நத்தைகள் என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் ஐரோப்பாவில் காணப் படும் சில பேலியா நத்தைகள் நத்தைகளின் மூததையானது மதீரா தீவின் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது.

ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து அசோர்,ட்ரிடான் ட குன்கா,மற்றும் மதீரா ஆகிய தீவுகளுக்கு நத்தைகள் பரவிய பிறகு புதிய இன வகைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும் அதே போன்று மதீரா தீவில் இருந்து புறப்பட்ட இடமான ஐரோப்பாக் கண்டத்துக்கு வந்த பிறகும் புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது.
ஆனால் நத்தைகள் எப்படி பல்லாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து எரிமலைத் தீவுகளுக்கு சென்றன ? என்ற கேள்வி எழுந்தது.
பொதுவாகத தீவுகளில் விலங்கினங்கள் காணப் படுவதற்கு,அந்த விலங்குகள் கடலில் மிதந்து வந்த தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் மிதந்த படி தீவுகளில் கரையொதுங்கி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.ஆனால் தரை வாழ் நத்தைகளுக்கு கடல் நீர் ஒத்துக் கொள்ளாது என்பதால் அந்த விளக்கம் நிபுணர்களால் நிராகரிக்கப் பட்டு விட்டது.
விஞ்ஞானி சார்லஸ் டார்வினும் இதே போன்று நத்தைகள் உலகின் பல பகுதிகளுக்கு எப்படி பரவி இருக்கும்? என்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடு பட்டார்.அவர் சில நத்தைகளைக் கடல் நீரில் அமிழ்த்தியும் சோதனை செய்தார்.அவர் நத்தைகளால் இரண்டு வார காலத்துக்கு மேல் கடலில் ஊயிர் வாழ இயலாது என்றும் கருதினார்.
அத்துடன் அவர் நத்தைகள் பறவைகளின் காலில் ஒட்டிக் கொண்டு கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று நம்பினார்.
டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் அவர்களும், பேலியா நத்தைகள் பறவைகளின் உடலில் ஒட்டிக் கொண்டு ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து மற்ற தீவுகளுக்கும்,பிறகு தீவில் இருந்து ஐரோப்பாக் கண்டதுக்கும் வந்திருக்கலாம் என்று நம்புகிறார்.
ஆனால் பறவைகள் நத்தைகளை உண்ணக கூடியவை என்றாலும் எப்படியோ சில நத்தைகள் பறவையின் இறக்கையில் ஒட்டிக் கொண்டு தீவுகளுக்கு வந்திருக்கலாம் என்றும் நம்புகிறார்.
ஆனால் அசோர் மற்றும் ட்ரிடான் ட குன்கா ஆகிய இரண்டு தீவுகளும்,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும் கடலடி எரிமலைத் தொடரில் உள்ள எரிமலைகளின் உச்சிப் பகுதி ஆகும்.
தற்பொழுது அந்த கடலடி எரிமலைத் தொடரானது பதினாறாயிரம் அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் இருந்து எட்டாயிரம் அடி உயரத்துக்கு எழுந்து இருக்கின்றன.
ஆனாலும் அந்த எரிமலைத் தொடரானது தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது.
இந்த நிலையில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் ,கடல் மட்டத்தில் இருந்து ஏழாயிரத்தி நானூறு அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம் கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்திருந்தால் ,தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடரானது, கடல் மட்டத்துக்கு மேலாக ஆயிரத்தி நானூறு அடி உயரத்தில் இருந்து இருக்கும்.
எனவே அந்த எரிமலைத் தொடர் வழியாக அசோர் தீவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு நத்தைகள் எளிதாக வந்து சேர்ந்து இருக்க முடியும்.

எனவே கடல் பகுதியை எளிதில் கடக்க இயலாத நத்தைகள் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டம் தாழ்வாக இருந்து இருப்பது உறுதியாகிறது.


இகுவானா உடும்புகள் எப்படி தீவுகளுக்குச் சென்றன?

தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் இகுவானா என்று அழைக்கப் படும் உடும்புகளின் வம்சாவளிகளானது,பல்லாயிரக் கணக்கான கிலோ மீட்டர் தொலைவில், ஒன்றுக் கொன்று தொடர்பே இல்லாத வகையில்,அமைந்து இருக்கும்,தீவுகளில் காணப் படுவது உயிரியல் வல்லுனர்களுக்குப் பெரும் புதிராக இருக்கிறது.

தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கலாபகாஸ் தீவில் வந்திறங்கிய டார்வின்,அந்தத் தீவுகளில்,வாழ்ந்த ஆமைகள்,தீவுக்குத் தீவு வேறுபட்டு இருப்பதைக் கண்டார்.

குறிப்பாக, அதிக செழிப்புடன் ,குறைந்த உயரத்திலேயே தாவர வகைகள் இருந்த தீவில்,வாழ்ந்த ஆமைகளின் கால்களும் கழுத்தும் குட்டையாக இருந்தன,ஆனால்,வறண்ட சூழலுடன்,அதிக உயரத்தில் தாவர வகைகள் இருந்த தீவில் வாழ்ந்த ஆமைகளின் கால்களும்,கழுத்தும் நீண்டு இருந்தன.

அந்த ஆமைகள் எல்லாம் ஒரே பொது மூதாதையின் வழித் தோன்றல்கள் என்றும் தீவுகளின் சூழலுக்கு ஏற்ப தகவமைப்பு கொண்டவைகள் என்பதைப் புரிந்து கொண்ட பொழுதுதான், அவருக்கு விலங்கினங்கள் எல்லாம், ஒரு பொது மூதாதையில் இருந்து பரிணாம வளர்ச்சியில் உருவானவைகள் என்ற முடிவுக்கு வந்தார்.

ஆனாலும், அந்த கலாபகாஸ் தீவில் இன்னொரு ரகசியமும் இருக்கிறது.

கலாபகாஸ் தீவில்,இகுவானா என்று அழைக்கப் படும் உடும்புகளும் காணப் படுகின்றன.

ராட்சத ஆமை மற்றும் இகுவானாக்கள் எல்லாம் தரையில் வாழக் கூடிய விலங்கினங்கள்.

எனவே எப்படி இந்த விலங்கினங்கள் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் கலாபகாஸ் தீவுக்கு வந்திருக்க முடியும் என்று டார்வின் வியந்தார்.

கலாபகாஸ் தீவு ஆமையின் மூததையானது, தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும் கெலோனாய்டிஸ் சிலின்சிஸ் என்ற சிறிய அளவு ஆமை என்று, மரபணு ஆய்வாளர்கள் அறிவித்து உள்ளனர்.

கலாபகாஸ் தீவில் காணப் படும் ராட்சத ஆமைகள் தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து, கடலில் மிதக்கும் மரக்கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் தத்தளித்தபடி, தற்செயலாகக் காலபாகஸ் தீவில் கரை ஒதுங்கி இருக்கலாம், என்று நம்பப் படுகிறது.

இந்த முறையில், இனப் பெருக்கம் செய்யும் அளவுக்கு ஒரு ஜோடி ஆமைகள் அல்லது ஒரே ஒரு கருவுற்ற பெண் ஆமையாவது தென்அமெரிக்கக் கண்டத்தில் இருந்து காலபாகஸ் தீவை அடைந்து இருக்கலாம், என்று நம்பப் படுகிறது.

ராட்சத ஆமைகளின் உடலில் நிறைய கொழுப்பு இருப்பதால் பல மாதங்கள் கடலில் உணவும் நீரும் இன்றி ராட்சத ஆமைகள் பிழைத்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

குறிப்பாக, ஆமைகளின் உடலில் அதிக அளவில் கொழுப்பும்,நீரும் இருப்பதால்,அந்த ஆமைகளானது,பல நாட்கள் கடலில் உணவும் நீரும் இன்றி உயிர் பிழைத்து இருக்கலாம், என்று நம்பப் படுகிறது.

இதே போன்று, காலபாகஸ் தீவில் 'நேசோரைசோமிஸ் டார்வினி' என்று பெயர் சூட்டப் பட்ட காலபாகஸ் தீவு எலிகளும் வாழ்ந்திருக்கின்றன.

தற்பொழுது, அந்த எலி இனம் அழிந்து விட்டது. நான்கே நான்கு மாதிரிகள் மட்டும் உள்ளன.

ராட்சத ஆமைகளைப் போல் அல்லாது சிறிய அளவுள்ள எலியின் உடலில் கொழுப்பும் நீரும் குறைவாக இருப்பதால் எலிகளால் பல நாட்கள் கடலில் உணவும் நீரும் இன்றி தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து இருக்க இயலாது.

இந்த நிலையில் , தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து காலபாகஸ் தீவுக்கு வந்த சிறிய அளவுள்ள ஆமைகள் பின்னர் பெரிய ஆமையாக மாறியதா ?அல்லது ,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து காலபாகஸ் தீவுக்கு பெரிய அளவுள்ள ஆமைகள் வந்ததா ? என்பது, உறுதி செய்யப் படவில்லை.

மரபணு ஆய்வில், தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து கெலோனாய்டிஸ் ஆமைகள் முதன் முதலில் எஸ்பானலோ தீவிலும் செயின்ட் கிறிஸ்டோபல் தீவிலும் குடியேறிய பிறகு, மற்ற தீவுகளுக்கு குடியேறி இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆமைகளின் கடல் பயணத்துக்குக் கடல் நீரோட்டங்கள் காரணமாக இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

மரபணு ஆய்வில் ,தென் அமெரிக்கக் கண்டத்தின் கெலோனாய்டிஸ் ஆமைகள், ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் 'ஹிங்கிபேக்' ஆமையின் நெருங்கிய சொந்தமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

தென் அமெரிக்கக் கண்டத்துக்கும் கெலோனாய்டிஸ் ஆமைகள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்கள் மேல் இருந்த படி, அட்லாண்டிக் பெருங் கடலில் பல மாதங்கள் தத்தளித்த படி மிதந்து சென்று, தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

இதே போன்று, காலபாகஸ் தீவில், இகுவானா என்று அழைக்கப் படும்,உடும்புகளும் காணப் படுகிறது.

கலாபகாஸ் தீவில் காணப் படும் இகுவானாக்களின், மூததையானது, தற்பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப் படும், பச்சை நிற இகுவானக்கள் ஆகும்.

குறிப்பாக, ஊர்வன வகை விலங்கினங்களால்,பாலூட்டி வகை விலங்கினங்களைப் போன்று, சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது.

எனவே, ஊர்வன வகை விலங்கினங்களின் உடல் வெப்ப நிலையானது,சூழ்நிலையின் வெப்ப நிலையிலேயே இருக்கும்.

இந்த விலங்குகளால் தங்களின் உடல் வெப்பத்தை சீராக வைத்து இருக்கவும் இயலாது.

தாவரங்களை உண்ணும் இந்த விலங்குகளின், உணவு செரிப்பதற்கே சூரியனின் வெப்பம் தேவை.

கலாபகாஸ் தீவில் இரண்டு இனவகையைச் சேர்ந்த, இகுவானாக்கள் காணப் படுகின்றன.ஒன்று தரையில் உள்ள கள்ளிகளை உண்டு வாழ்கிறது.

இன்னொன்று கடலுக்குள் மூழ்கிச் சென்று,கடல் தரையில் உள்ள பாசிகளை உண்டு வாழ்கிறது.

கடலுக்குள் செல்லும், கடல் இகுவானாக்களுக்கு, உடலில் சேரும் அதிகப் படியான உப்பை வெளியேற்றுவதற்கு விசேஷ சுரப்பிகள் மூக்குக்கு அருகில் இருக்கின்றன.

கடல் இகுவானாக்களும், தரை இகுவானாக்களும், ஒரே பொது மூதாதையில் இருந்து, பரிணாம வளர்ச்சி அடைந்தவைகள் ஆகும்.

கடல் இகுவானாக்கள், கடலுக்குள் சென்று அங்கிருக்கும் பாசிகளை உண்பதற்கு முன்பு,மதிய நேரம் வரை பாறைகளில் இருந்தபடி,உடல் வெப்பத்தை அதிகப் படுத்திக் கொள்கின்றன.

அதன் பிறகு,கடலுக்குள் சென்று,பாசிகளை உண்ட பிறகு,கரைக்கு வந்ததும்,மறுபடியும்,பாறைகளில் ஏறி,வெய்யிலில் காய்ந்து உடல் வெப்பத்தை ஏற்றிக் கொள்கின்றன.

சில சமயம் பல இகுவானாக்கள் நெருக்கமாக சேர்ந்து உடலைக் கதகதப்பாக வைத்துக் கொள்கின்றன.

அதே போன்று இரவில்,மணலில் குழி பறித்து குழிக்குள் பதுங்கியும்,இகுவானாக்கள் ,தங்கள் உடல் வெப்பத்தைப் பாது காத்துக் கொள்கின்றன.

உடல் வெப்பம் குறைந்தால், இந்த விலங்குகள் குளிரில் விரைத்து இறந்து விடும்.
குளிர் காலத்தில் இகுவானாக்களின் உடல் வெப்ப நிலை குறையும் பொழுது,இகுவானாக்களால் வேகமாக செயல் பட இயலாது.

இது போன்ற சமயங்களில், இகுவானாக்கள் மற்ற விலங்குகளுக்கு எளிதில் இரையாகின்றன.

இகுவானா மழை-

கடந்த 2008 ஆம் ஆண்டு,ஜனவரி மாதம், வட அமெரிக்காவில்,புளோரிடா மாகாணத்தில்,குளிரில் விரைத்த இகுவானாக்களால்,மரக் கிளைகளைப் பற்றிக் கொள்ள இயலாமல் போனதால்,மரங்களில் இருந்த இகுவானாக்கள் பொத்து பொத்து என்று சாலைகளில் விழுந்தன.

அதன் பிறகு மதிய நேரத்தில் வெப்ப நிலை உயர்ந்த பொழுது சில இகுவானாக்கள் மட்டுமே மயக்கம் தெளிந்து மறுபடியும் மரங்களில் ஏறின.

அதற்குள்,பல இகுவானாக்கள்,அந்த வழியாக வந்த வானங்களின் சக்கரங்களுக்குப் பலியாகின.இந்த நிகழ்வை,ஒரு உள்ளூர் தொலைக் காட்சி,'இகுவானா மழை' என்று தலைப்பில் ஒளி பரப்பு செய்தது.
இந்த நிலையில்,தென் அமெரிக்காவில் இருந்து,இகுவானாக்கள் எப்படி,இரவு பகலாக ,கடலில் மிதந்து சென்ற மரக் கிளைகள் மூலம், பல நாட்கள் பயணம் செய்து, கலாபகாஸ் தீவை அடைந்து இருக்க முடியும்?

இந்த நிலையில்,கலாபாகஸ் தீவின் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்ட பொழுது,அந்த எரிமலைகளானது,ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்,கடல் மட்டத்துக்கு மேலாக தீவுகளாக உயர்ந்து இருப்பது தெரிய வந்தது.

ஆனால் ,மரபணு ஆய்வில்,கலாபாகஸ் தீவுக் கடல் இகுவானாக்களானது,அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே,கலாபாகஸ் தீவின் தரை வாழ் இகுவனாக்களில் இருந்து பிரிந்து பரிணாம மாற்றம் அடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே,கலாபாகஸ் தீவு இகுவானாக்களானது,தற்பொழுது இருக்கும் ,கலாபாகஸ் தீவுக் கூட்டத்திற்கு வருவதற்கு, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,வேறு சில தீவுகளில் வசித்து இருக்கலாம் என்றும்,அதன் பிறகு அந்தத் தீவுகள்,கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும்,நம்பப்
பட்டது.

இந்த நிலையில்,கடந்த 1990,ஆம் ஆண்டு,ஆரிகன் மற்றும் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கலாபகாஸ் தீவுக்கும் தென் அமெரிக்கக் கண்டதுக்கும், இடையில்,கடலுக்கு அடியில்,ஐயாயிரம் அடி ஆழத்தில்,மூழ்கிக் கிடக்கும் எரிமலைகளின் மேற்பகுதியானது,சம தளமாக இருப்பதை அறிந்தனர்.

அத்துடன், அந்த சமதளப் பரப்பின்மேல்,அலைகளின் அரிப்பால் உருவான கோள வடிவக் கற்களையும் கண்டு பிடித்தனர்.

அதன் அடிப்படையில்,அந்த கடலடி சம தள மலைகளானது,ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கடலுக்கு மேலாக,தீவுகளாக இருந்திருக்கின்றன என்றும்,அந்தத் தீவுகளில்,கலாபகாஸ் தீவு விலங்கினங்களின் ,பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும்,விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.

அதாவது,தற்பொழுது கலாபகாஸ் தீவில்,வாழும் விலங்கினங்களின் மூததைகளானது, தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து,தற்பொழுது உள்ள கலாபகாஸ் தீவுக்கு வருவதற்கு,அந்தக் கடலடித் தீவுகள் வழியாகவே வந்திருக்கின்றன என்று,தற்பொழுது தெரிய வந்துள்ளது.
எனவே, கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள்,பல தனிமைத் தீவுகளில் காணப் படுவதற்கு,பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததுடன்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில்
தரை வழித் தொடர்பு இருந்ததுமே காரணம் என்பது,கலாபகாஸ் தீவில் காணப் படும்,இகுவானா உடும்புகள் மூலம்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

பொதுவாகக் கண்டங்களில் காணப் படும், விலங்கினங்கள் ,தீவுகளில் காணப் படுவதற்கு,காட்டாற்று வெள்ளத்தால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் மேல் தொற்றிக் கொண்டு, பல நாட்கள் கடலில் தத்தளித்தபடி,தீவுகளை அடைந்து இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.

ஆனால்,பசிபிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் பிஜி தீவோ,தென் அமெரிக்கக் கண்டத்தில் இருந்து எட்டாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருப்பதால்,இகுவானா உடும்புகளானது,கடல் பகுதியைக் கடக்க குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் தேவைப் பட்டு இருக்கும் என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது.

ஆனால், நிச்சயம் அந்த சிறிய விலங்குகளால், ஆறு மாத காலம், உண்ண உணவும்,குடிக்க நீரும் இன்றி உயிர் பிழைத்து இருக்க இயலாது.

முக்கியமாக ,பசிபிக் கடல் நடுவே,,எட்டு மாத காலம், இரவுக் கால குளிரிலும், மழையிலும், ஊர்வன இனத்தைச் சேர்ந்த இகுவானா உடும்புகளால்,உடல் வெப்பத்தை,பாதுகாத்து இருக்கவும் இயலாது.

இந்த நிலையில்,மிசிசிப்பி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, பிரிசி நூனான் என்ற உயிரியல் வல்லுநர், வேறு ஒரு விளக்கத்தை தெரிவித்து இருக்கிறார்.

அதாவது,பிஜி தீவு இகுவானாக்களின் மூதாதையானது,ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக நம்பப் படும் கோண்டுவானாக் கண்டத்தில் வாழ்ந்ததாகவும்,அதன் பிறகு அந்தக் கோண்டுவானாக் கண்டம் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்த பொழுது, பிஜி மற்றும் டோங்கா தீவுகளுக்கு,இகுவானா உடும்புகள் வந்து விட்டதாகவும்
பிரிசி நூனான் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால், நான் மேற்கொண்ட ஆய்வில்,கண்டங்கள் எல்லாம் நிலையாக இருப்பதுடன்,பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,கடல் மட்டமானது ,பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன், கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

எனவே, தென் அமெரிக்க இகுவானா உடும்புகளின் வம்சாவளிகள்,பசிபிக் பெருங் கடலில் அமைந்து இருக்கும், கலாபகாஸ்,பிஜி டோங்கா ஆகிய தீவுகளிலும்,அதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலில் அமைந்து இருக்கும், கரீபியன் தீவுகளிலும் ,இந்தியப் பெருங் கடலில் அமைந்து இருக்கும், மடகாஸ்கர் தீவிலும் (Chalarodon madagascariensis) காணப் படுவதன் மூலம், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது ,பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில், தரை வழித் தொடர்பு இருந்திருப்பது, உறுதிப் படுத்துகிறது.


௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
அத்தியாயம் மூன்று
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

வெக்னரின் நகரும் கண்டங்கள் விளக்கம் தவறு.
தற்பொழுது, கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதைப் படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு, முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பெருங் கண்டமாக இருந்ததாகவும்,அதன் பிறகு அந்தப் பெருங் கண்டமானது, பல சிறிய கண்டங்களாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், கூறப் படுகிறது.

அதே போன்று,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய வளரக் கூடிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதைப் படிவங்களானது,காணப் புவதற்கு,முன் ஒரு காலத்தில் அந்தத் தீவானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்த பிறகு,துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து வந்ததே காரணம் என்றும்,விளக்கம் கூறப் படுகிறது.
இந்த விளக்கத்தைக் கூறிய,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர்,ஒத்த கால நிலையில் வாழக் கூடிய வளரக் கூடிய,விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை மாற்றி அமைத்துப் பார்த்ததன் அடிப்படையில்,மேற் கூறிய விளக்கத்தைக் கூறினார்.
குறிப்பாக வெக்னர்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பூமியில் பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட  ஒரு பெருங் கண்டம் இருந்ததாகவும்,அந்தப் பெருங் கண்டத்தைச் சுற்றிலும் பாந்தலாசா என்ற கடல் பகுதி இருந்ததாகவும்,கூறினார்.
அதன் பிறகு, பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பெருங் கண்டமானது,பிளவு பட்டு இரண்டாகப் பிரிந்து, வடக்கு தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததால்,வடபகுதியில் லாரேசியா என்ற கண்டமும் தென் பகுதியில் கோண்டுவாணா என்ற கண்டமும் உருவானதாக வெக்னர் கூறினார்.
அதன் பிறகு, லாரேசியக் கண்டமும் இரண்டாகப் பிரிந்து, கிழக்கு மேற்காக நகர்ந்ததால்,யுரேசியக் கண்டமும் வட அமெரிக்கக் கண்டமும் உருவானதாக வெக்னர் கூறினார்.
இவ்வாறு,வட அமெரிக்கக் கண்டமும், யுரேசியக் கண்டமும் பிரிந்ததால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் வட அட்லாண்டிக் பெருங் கடல் உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
அதே போன்று,கோண்டுவாணாக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் இருந்து பிரிந்து, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்த தென் அமெரிக்கக் கண்டமானது,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் வெக்னர் கூறினார்.
அதே போன்று, பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கோண்டுவாணாக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்த ஆப்பிரிக்கக் கண்டமானது, மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால், ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
இவ்வாறு,தென் அமெரிக்கக் கண்டமும் ஆப்பிரிக்கக் கண்டமும் பிரிந்ததால், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் தெற்கு அட்லாண்டிக் பெருங் கடல் உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
அதே போன்று,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்றாக இணைந்த நிலையில், அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு தாகவும்,அதன் பிறகு அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாகவும் வெக்னர் கூறினார்.
இதில் குறிப்பாக இந்திய நிலப் பகுதியானது,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,இமய மலைத் தொடர் உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
வெக்னரின் விளக்கத்தின் படி,வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியான அலாஸ்காவின் வட பகுதியும்,ஆசியக் கண்டத்தின் வட பகுதியான சைபீரியாவின் வட பகுதியும்,கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது.
எனவே ஆர்க்டிக் பகுதியில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய வளரக் கூடிய விலங்குகள் மற்றும் தாவரங்களின் புதைப் படிவங்கள் காணப் பட்டால், அதன் தொன்மையானது,பத்து கோடி ஆண்டுகளுக்கும் மேற்பட்டதாக இருக்க வேண்டும்.
ஆனால்,ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள், குறிப்பாக அலாஸ்காவின் வட பகுதியிலும்,சைபீரியாவின் வட பகுதியிலும்,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
எனவே,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் எப்படி வாழ்ந்தன என்ற கேள்விக்கு விடை காண இயலாமல் ஆராய்ச்சியாளர்கள் குழம்பிக் கொண்டு இருக்கின்றனர்.
ஏனென்றால் டைனோசர்களானது, பாலூட்டிகளைப் போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாத ஊர்வன வகை விலங்கினத்தைச் சேர்ந்தது.
தற்பொழுது, ஆர்க்டிக் பகுதியில் பாலூட்டி வகை விலங்கினத்தைச் சேர்ந்த முயல்,மான்,நரி,கரடி போன்ற விலங்கினங்களே காணப் படுகிறது.மாறாக ஊர்வன வகை விலங்கினத்தைச் சேர்ந்த முதலை ஆமை மற்றும் பாம்புகள் ஆர்க்டிக் பகுதியில் வசிப்பதில்லை.
முக்கியமாக, டைனோசர்களானது, ஊர்வன வகை விலங்கினத்தைச் சேர்ந்தது என்பதால், முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது.ஆனால் ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொரிய, முப்பது முதல் முப்பத்தி நான்கு சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.
எனவே, பனிப் பிரதேசத்தில் டைனோசர்கள் எப்படி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன என்ற விடை தெரியாக் கேள்வி எழுந்திருக்கிறது.
சில சிறிய அளவுள்ள டைனோசர்களின் முட்டைகளானது,அடை காக்கப் பட்டதற்கு அடையாளமாக வட்ட வடிவில் அடுக்கி வைக்கப் பட்டு இருப்பது புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆனாலும், ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள வாத்தலகு டைனோசர்களின் புதைப் படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.அது போன்ற ராட்சத டைனோசர்களால் முட்டைகள் மேல் அமர்ந்து அடை காத்து இருக்க சாத்தியம் இல்லை.
சில ஆராய்ச்சியாளர்கள், டைனோசர்களானது,பனி மான்களைப் போன்று குளிர் கால இடப் பெயர்ச்சி செய்து இருக்கலாம் என்றும்,பனிக் கரடிகளைப் போன்று குளிர் கால அரிதுயிலை மேற்கொண்டு இருக்கலாம் என்றும் நம்பினார்கள்.
இந்த நிலையில்,டைனோசர்களின் முட்டைகள் எவ்வளவு காலத்தில் பொரிந்தன என்பது குறித்து, அமெரிக்காவின்,புளோரிடா மாகாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,கிரிகோரி எரிக்சன் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
குறிப்பாக அவர்,டைனோசர்களின் முட்டைகளுக்குள் இருந்த கருக்களின் பற்களில் இருந்த ஆண்டு வளையங்களை நுண்ணோக்கி மூலம் கணக்கிட்டார்.அப்பொழுது அந்த டைனோசர்களின் பற்களானது ஆறு மாத கால வளர்ச்சியுடன் இருப்பதை அறிந்தார்.அதன் அடிப்படையில் அவர் டைனோசர்களின் முட்டைகள் பொரிய ஆறு மாத காலம் அல்லது அதற்கும் மேலாக ஆகி இருக்கும் என்று கிரிகோரி எரிக்சன் தெரிவித்து இருக்கிறார்.
எனவே, டைனோசர்களின் முட்டைகளை மற்ற விலங்குகளிடம் இருந்து பாது காக்க டைனோசர்களானது ஒரே இடத்தில் ஆறு மாத காலத்திற்கும் மேலாக இருந்திருக்க வேண்டும் என்று டாக்டர் கிரிகோரி எரிக்சன் தெரிவித்து இருக்கிறார்.
அத்துடன் முட்டைகளில் இருந்து வெளி வந்த பிறகும் டைனோசர்களின் குட்டிகள் வளர, ஒரு ஆண்டுக்கும் மேலாக பெரிய டைனோசர்களின் பாது காப்பு தேவைப் பட்டு இருக்கும் என்றும், அதனால் ஆர்க்டிக் பகுதியில் வாசித்த டைனோசர்களானது, ஆண்டு முழுவதும் ஒரே இடத்தில் வசித்து இருக்கின்றன என்றும், டாக்டர் கிரிகோரி எரிக்சன் தெரிவித்து இருக்கிறார்.
எனவே, சில ஆராய்ச்சியாளர்கள் நம்பியதைப் போன்று டைனோசர்களானது, பனி மான்களைப் போன்று குளிர் கால இடப் பெயர்ச்சியோ அல்லது பனிக் கரடிகளைப் போன்று குளிர் கால அரிதுயிலையோ மேற்கொண்டு இருக்க வில்லை என்பது கிரிகரின் ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.
முக்கியமாக டைனோசர் கூட்டமானது யானைக் கூட்டத்தை விடப் பல மடங்கு அதிகமான தாவரங்களை உண்ணக் கூடியது.
ஆனால்,பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளில் ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து பகலும்,அதே போன்று ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.
அது போன்று, ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால்,சூரிய ஒளியின்றி, தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து உயிர் வாழ்ந்து இருக்க இயலாது.
எனவே, ஆர்க்டிக் பகுதியில் யானைக் கூட்டத்தை விடப் பல மடங்கு அதிகமான தாவரங்களை உண்ணக் கூடிய, டைனோசர்களின் கூட்டத்துக்கு உணவளிக்கக் கூடிய, அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி உருவாகின, என்ற கேள்வியும் விடை தெரியாக் கேள்வியாக இருக்கிறது.
எனவே,ஆர்க்டிக் பகுதியில் அமைந்து இருக்கும் தீவில் வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய தாவரங்களின் புதைப் படிவங்கள் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில் அந்த நிலப் பகுதியானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும் அதன் பிறகு துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து வந்ததே காரணம் என்றும் வெக்னர் கூறிய விளக்கமானது, ஒரு தவறான விளக்கம் என்பது ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட ஏழு கோடி ஆண்டுகள் தொன்மையான டைனோசர்களின் புதைப் படிவங்கள் மூலம், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
அதே போன்று, கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதைப் படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு, முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பெருங் கண்டமாக இருந்ததாகவும்,அதன் பிறகு அந்தப் பெருங் கண்டமானது, பல சிறிய கண்டங்களாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், கூறப் படும் விளக்கமும் ஒரு தவறான விளக்கம் என்பதும் உறுதியாகிறது.
எனவே,கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதைப் படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில்,நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காகக் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் படிவுகளில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பிளேட்டியோ சாராஸ் என்ற டைனோசரின் எலும்பு புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இதே போன்று, இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கெர்கூலியன் கடல்டிப் பீட பூமியின் மத்தியப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை,மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
மேலும், இந்தியப் பெருங் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் நைன்ட்டி ஈஸ்ட் ரிட்ஜ் என்று அழைக்கப் படும், ஒரு கடலடி எரிமலைத் தொடர் பகுதியிலும், ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வளர்ந்த தாவரங்களின் பாகங்கள்,குறிப்பாக கியூட்டிக்கிள் எனப் படும் இலைகளின் புறத் தோலின் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதே போன்று,வட அமெரிக்காவில்,குறிப்பாகக் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரக் கடற் பகுதியில்,கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் எரிமலைகளில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகளை,மாண்டாரி பே ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.அப்பொழுது அந்தப் பாறையானது,காற்றுடன் வேதி வினையில் ஈடு பட்டு இருப்பதைக் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
அதன் அடிப்படையில்,அந்த எரிமலையானது,ஒரு காலத்தில்,தீவாக இருந்திருப்பதாகவும் அந்த ஆராய்ச்சியாளர்கள்  விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இதே போன்று,கரீபியன் கடல் பகுதியில்,கடல் மட்டத்தில் இருந்து பல்லாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும்,கடலடி மலைகளின் மேல்,ஆழம் குறைவான பகுதியில் காணப் படும் பாசிகள்,சிப்பிகள் மற்றும்    பவளங்களின் புதை படிவங்கள் இருப்பதையும்,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த  மெஸ்கிடிஸ் என்ற ஆராய்ச்சியாளர் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதன் மூலம் , ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதுடன், கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்திருப்பதும் ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகிறது.
அத்துடன், கடல் மட்டமானது,இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதும், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

தற்பொழுது, கடலின் சராசரி ஆழமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது.ஆனால் டைனோசர்களின் காலத்தில்,கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதை விட,இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.
அதனால், டைனோசர்களின் காலத்தில்,கடலின் பரப்பளவானது குறைவாக இருந்திருக்கிறது.அதனால், டைனோசர்களின் காலத்தில் வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது.
அதனால், டைனோசர்களின் காலத்தில்,துருவப் பகுதிகளில்,அதிக வெப்ப நிலை இருந்திருக்கிறது,
அதனால், டைனோசர்களின் காலத்தில்,துருவப் பகுதிகளில்,பனிப் படலங்களுக்குப் பதிலாகப் பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன.அதில் டைனோசர்கள் வாழ்ந்து இருக்கின்றன.
கடல் மட்டமானது, இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பொழுது,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும்,இடையில் தரை வழித் தொடர்பு இருந்திருக்கிறது.
அதன் வழியாக டைனோசர்களானது தீவுகளுக்கும் தீவுக் கண்டங்களுக்கும் இடம் பெயர்ந்து இருக்கின்றன.
அதன் பிறகு,கடல் மட்டமானது,இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததால்,கடலின் பரப்பளவும் அதிகரித்து இருக்கிறது.கடலின் பரப்பளவானது அதிகரித்ததால், வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது,குறைந்ததால்,துருவப் பகுதிகளில், பனிப் படலங்கள் உருவாகின.
இவ்வாறு ஏற்பட்ட,கால நிலை மாற்றத்தால்,டைனோசர் இனம் அழிந்தது.
     
                                                                                         
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
அத்தியாயம் நான்கு  
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
கண்டத் தட்டு நகர்சிக் கொள்கை தவறு.
கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது, எரிமலைத் தொடர்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களின் புதைப் படிவங்களானது கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு, முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்த பிறகு, தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாக வெக்னர் விளக்கம் கூறினாலும்,கடல் தரையைப் பிளந்து கொண்டு கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் காணப் பட வில்லை.
எனவே கண்டங்கள் எல்லாம் எப்படி நகர்ந்தன என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில்,இரண்டாம் உலகப் போர் தொடங்கியது.
அப்பொழுது, அமெரிக்கக் கப்பல் படையைச் சேர்ந்த புவியியல் பேராசிரியரான டாக்டர் ஹாரி ஹெஸ்,நீர் மூழ்கிக் கப்பல்களின் போக்கு வரத்துக்குப் பயன் பாட்டுக்காக ,கடல் தரையில் உள்ள மேடு பள்ளங்கள் குறித்த வரை படத்தை,சோனார் கருவி மூலம் தயாரித்தார்.
அப்பொழுது கண்டங்களைச் சுற்றிலும் கடலுக்கு அடியில்,பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு,எரிமலைத் தொடர்கள் இருப்பதை அறிந்தார்.
அத்துடன் அந்த எரிமலைத் தொடர் பகுதியில், அடிக்கடிஎரிமலைச் சீற்றங்களும், நில அதிர்ச்சிகளும் ஏற்படுவதை அறிந்தார்.
அதன் அடிப்படையில்,அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற் பகுதிக்கு வந்த பிறகு,குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளப் பாறையாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்வதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன், கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
இந்தக் கருத்தானது ‘கண்டத் தட்டு நகர்சிக் கொள்கை’ என்று அழைக்கப் படுகிறது.
இந்த விளக்கம் உண்மையென்றால் ,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது, குறைவான தாகவும்,அதே நேரத்தில்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் இருந்து,தொலைவில் இருக்கும் பாறைகளின் தொன்மையானது, அதிகமானதாகவும் இருக்க வேண்டும்.

ஆனால் தற்பொழுது அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் புனித பீட்டர் மற்றும் புனித பால் பாறைத் தீவுகளின் தொன்மையானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் என்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

பொதுவாக, எரிமலைத் தீவுகளானது, கூம்பு வடிவில் இருக்கும்.ஆனால் புனித பீட்டர் மற்றும் புனித பால் பாறைத் தீவுகளில் எரிமலைப் பாறைகளுக்குப் பதில் சுண்ணாம்புப் பாறைகளால் ஆன தீவாக இருப்பதுடன் சமதளத் தீவாகவும் இருக்கிறது.

இதே போன்று, ஆர்க்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கேக்கல் கடலடி எரிமலைத் தொடர் பகுதியிலும்,இருநூறு கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைகள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு, கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் நானூற்றி ஐம்பது மற்றும் இருநூறு கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைகள் மற்றும் தீவுகள் இருப்பதன் மூலம், அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கமானது, தவறு என்பதுடன்,கடல் தளமானது, நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

இதே போன்று,கடல் தளத்துடன் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுது,பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது கடல் தளத்தையும் கண்டங்களையும் துளைப்பதால்,கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் எரிமலைத் தொடர்கள் உருவாகுவதாக நம்பப் படுகிறது.

இந்த விளக்கம் உண்மையென்றால்,கடல் தளத்தின் மேலும்,கண்டங்களின் மேலும் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் எல்லாம் ஒன்றுக் கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகி இருக்க வேண்டும்.

இந்த நிலையில், வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில் அருகருகே உருவாகி இருக்கும் ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த ,அனாகிம் எரிமலைத் தொடரும்,ஸ்டிக்கைன் எரிமலைத் தொடரும், வெல்ஸ் கிரே எரிமலைத் தொடரும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கின்றன.

இவ்வாறு, வட அமெரிக்கக் கண்டத்தின் மேல் ஒன்று கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமும், வட அமெரிக்கக் கண்டமும், அட்லாண்டிக் கடல் தளமும், நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இதே போன்று,பசிபிக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் ஹவாய் எரிமலைத் தொடரும் லைன் எரிமலைத் தொடரும் கூட, ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில்,வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கின்றன.

இவ்வாறு பசிபிக் கடல் தரையின் மேலும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமும், கடல் தளமும்,கண்டங்களும்  நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இதே போன்று,கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் படி,கண்டங்கள் எல்லாம் கடல் தளத்துடன் தனித் தனிப் பாறைத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு அந்தப் பாறைத் தட்டுகள் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையே உரசல் ஏற்படும் பொழுது நில அதிர்சிகள் ஏற்படுவதாகவும் நம்பப் படுகிறது.
அதே போன்று,ஒரு பாறைத் தட்டுகளுக்கு அடியில் அடுத்த பாறைத் தட்டானது உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது,அந்தப் பகுதிக்கு மேலே இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் படுவதால் சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது.
இந்தக் கருத்தின் படி,வட அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் கடல் தளத்துடன், வட அமெரிக்கக் கண்டமானது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
அதே போன்று, தெற்கு அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் கடல் தளத்துடன், தென் அமெரிக்கக் கண்டமானது,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த விளக்கம் உண்மையென்றால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தளப் பகுதிகளுக்கு இடையே தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
இந்த நிலையில், கடந்த 1963 ஆம் ஆண்டில் இருந்து 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில் ,உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214 நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் வரைபடம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டனர்.

அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் வட அமெரிக்கக் கண்டத்திற்கும்,அதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும், இடையில் உள்ள கடல் பகுதியில் இருந்து, அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை உரசல் ஏற்பட்டு அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.

ஆனால் அவ்வாறு வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடைப் பட்ட கடல் பகுதியில் இருந்து, அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை, தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள், உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் பதிவாகி இருக்க வில்லை.

இவ்வாறு வட அட்லாண்டிக் மற்றும் தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதிகளுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில், அட்லாண்டிக் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
அதே போன்று,கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன், கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படும் விளக்கமானது அடிப்படை ஆதாரமற்ற விளக்கம் என்பது, உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம் மூலமாகவும் நிரூபணமாகியுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஒன்றாக இணைந்து இருந்ததாகவும்,அத்துடன் அண்டார்க்டிக் கண்டதுடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும்,நம்பப் படுகிறது.
அதன் பிறகு,இந்த இரண்டு கண்டங்களும்,அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து,வட கிழக்கு திசையை நோக்கி,நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு, வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது.
தற்பொழுது, இந்த இரண்டு கண்டங்களும்,ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் ,அமைந்து இருக்கிறது.
எனவே ,இந்த இரண்டு கண்டங்களும் ,இரண்டு தனித் தனியான கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.
அப்படி இந்த இரண்டு கண்டங்களும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரைப் பகுதியில்,தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால் உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்,அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும்,இடையில் தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இதன் மூலம் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தரையானது,தொடர்ச்சியாக இருப்பதுடன்,நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
அதே போன்று,கண்டங்களும் நிலையாக இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
இந்த நிலையில்,கண்டங்களின் எல்லைகளைக் குறிப்பதாகக் கூறி,நாசாவைச் சேர்ந்த புவியியல் வலுனர்கள் ஒரு வரை படத்தையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
அந்த வரை படத்திலும்,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையைத் தனித் தனியாகப் பிரித்துக் காட்டாமல்,’’இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை’’ என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில்,தெற்காசிய சுனாமி குறித்து, நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,வெளியிட்ட முதல் அறிக்கையில்,இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில்,இந்தியக் கண்டத் தட்டு நகர்ந்து சென்றதால்தான்,நில அதிர்ச்சியும்,சுனாமியும் உருவானதாகத் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

ஆனால், அதே நாசா வெளியிட்ட இரண்டாவது அறிக்கையில்,இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில்,ஆஸ்திரேலியக் கண்டத் தட்டு நகர்ந்து சென்றதால்தான்,நில அதிர்ச்சியும்,சுனாமியும் உருவானதாக,முன்னுக்குப் பின் முரணாகத் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

இதன் மூலம், தெற்காசிய சுனாமிக்கு, நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,அடிப்படை ஆதாரமற்ற கற்பனை விளக்கத்தைத் தெரிவித்து இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.


இந்த நிலையில், கடந்த 12.1.2010 அன்று ,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கூட ,USGS என்று அழைக்கப் படும்,அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனர்கள்,அடிப்படை ஆதாரமின்றி கற்பனை விளக்கத்தைத் தெரிவித்து இருப்பதும் ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, வட அமெரிக்கக் கண்டமானது, அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இதே போன்று, தென் அமெரிக்கக் கண்டமானது,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,கடல் தளத்துடன்,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இந்த நிலையில், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் அமைந்து இருக்கும், கரீபியன் தீவுக் கூட்டமானது, எப்படி உருவானது? என்ற கேள்வி எழுந்தது.

சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,பசிபிக் கடல் பகுதியில்,குறிப்பாகக் காலபாகஸ் தீவுக் கூட்டம் இருக்கும் இடத்தில்,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,எரிமலைச் செயல் பாட்டால் உருவானதாகவும்,அதன் பிறகு கரீபியன் தீவுக் கூட்டமானது,ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,நம்புகின்றனர்.



இந்த நிலையில்,அமெரிக்கக் கண்டங்களானது,எதிர்த் திசையில்,தனித் தனியாக மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்ததாகவும்,அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று அமைந்து இருக்கும்,மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது,உருவாகி இருக்க வில்லை என்றும்,அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடைவெளி இருந்ததாகவும்,அந்த இடைவெளிக்குள்,கரீபியன் பாறைத் தட்டானது நுழைந்து விட்டதாகவும்,அதன் பிறகு கடலுக்கு அடியில் இருந்து மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது உயர்ந்ததால்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,நிலத் தொடர்பு ஏற்பட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

இந்தக் கருத்தானது பசிபிக் கடல் மாதிரிஎன்று அழைக்கப் படுகிறது.

இந்தக் கருத்தின் படி, கரீபியன் தீவுக் கூட்டமானது, கிழக்கு திசையை நோக்கி, நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

குறிப்பாகக் கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி, வரிசையாக எரிமலைகள் உருவாகி இருக்கின்றன.

இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டத்துக்கு கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி எரிமலைகள் உருவாகி இருப்பதற்கு,பசிபிக் கடலின் மாதிரிப் படி ஒரு விளக்கம் கூறப் படுகிறது.

அதாவது,கரீபியன் தீவுக் கூட்டமானது,கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த அட்லாண்டிக் கடல் தளமானது,கரீபியன் பாறைத் தட்டுக்கு அடியில் சென்ற பிறகு,வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாக உருவாகி,மேல் நோக்கி உயர்ந்து,கடல் தளத்தைப் பொத்துக் கொண்டு ,கடல் தளத்துக்கு மேலே எரிமலைகளாக உருவானதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

குறிப்பாக அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,பாலம் போன்று தொடர்ச்சியாக இருக்கும் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,உருவாகி இருக்க வில்லை என்றும் அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடை வெளி இருந்ததாகவும்,அப்பொழுது கரீபியன் பாறைத் தட்டானது,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,நுழைந்ததால் தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

ஆனால் தற்பொழுது,மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள,நிகரகுவா நாட்டின் மலைப் பகுதியில்,மிட் கிரட்டேசியஸ் என்று அழைக்கப் படும்,அதாவது ஒன்பது முதல் பனிரெண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,ஆர்னிதோபோட் என்ற இனத்தைச் சேர்ந்த டைனோசரின் எலும்புகளை, கிரிகரி எஸ் ஹோர்னி மற்றும் புருஸ் சிம்மன்சன் ஆகியோர் , 1971 ஆம் ஆண்டில்,கண்டு பிடித்து இருக்கின்றனர்.

தற்பொழுது வாசிங்டன் அருங்காட்சியகத்தில் இருக்கும் அந்த டைனோசரின் எலும்பை, ஆய்வு செய்த.யேல் பலகலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியல் பேராசிரியரான, ஜோன் ஆஸ்ட்ரம். அந்த எலும்பானது, ஆர்னிதோபோட்,என்று அழைக்கப் படும் டைனோசரின் எலும்பு என்பதை உறுதிப் படுத்தி இருக்கிறார்.

இதன் மூலம்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க கண்டங்களுக்கு இடையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது தொடர்ச்சியாக இருந்திருப்பதுடன்,அதன் வழியாக டைனோசர்களின் போக்குவரத்தும் நடை பெற்று இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இதே போன்று,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவில் உள்ள ஆர்கனாஸ் மலையின் மேற்குப் பகுதியில்,கிரேட்டேசியஸ் என்று அழைக்கப் படும் கால கட்டத்தைச் சேர்ந்த,அதாவது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,தாவர உண்ணி டைனோசரின் எலும்புகளை, கியூபா நாட்டின் தேசிய இயற்கை அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல்விலங்கியல் வல்லுனர்களான மானுவேல் இல்டுரால்டி வின்சென்ட் மற்றும் ஜுல்மா காஸ்பரினி ஆகியோர் மேற்கொண்ட கண்டு பிடித்து இருக்கின்றனர்.

இதன் மூலம்,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது தாழ்வாக இருந்ததால்,அமெரிக்கக் கண்டங்களுக்கும்,கரீபியன் தீவுகளுக்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருப்பதுடன்,அதன் வழியாக டைனோசர்களின் போக்குவரத்தும் நடை பெற்று இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடைவெளி இருந்ததாகவும்,அதன் வழியாக கரீபியன் பாறைத் தட்டானது நுழைந்து விட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கங்கள் யாவும் அடிப்படை ஆதாரமற்ற கற்பனைக் கருத்துக்கள் என்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இந்த நிலையில் வேறு சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து இருக்கலாம் என்றும் ஒரு கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.


இந்தக் கருத்தானது ,’அட்லாண்டிக் கடல் மாதிரிஎன்று அழைக்கப் படுகிறது.

ஆனால் பசிபிக் கடல் பகுதியில் இருக்கும் காலபாகஸ் தீவுக் கூட்டம் போன்று அட்லாண்டிக் கடல் பகுதியில்,குறிப்பிடத் தக்க அளவுக்கு எரிமலைத் தீவுக் கூட்டம் எதுவும் இல்லை.எனவே குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டமானது,அட்லாண்டிக் கடல் பகுதியில் எங்கே உருவானது? என்று, ’அட்லாண்டிக் கடல் மாதிரியை நம்பும் புவியியல் வல்லுனர்களால் கூற இயலவில்லை.

எனவே, கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கிய .எரிமலைப் பிளம்புகளானது,காலப் போக்கில்,மறைந்து விட்டிருக்கலாம் என்று, கடல் மாதிரியை நம்பும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

ஆனாலும்,கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி வரிசையாக உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது எப்படி உருவானது? என்று,’அட்லாண்டிக் கடல் மாதிரியை நம்பும் புவியியல் வல்லுனர்களால், விளக்கம் கூற இயல வில்லை.

இந்த நிலையில் இன்னும் சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது, தற்பொழுது இருக்கும் இடத்திலேயே, உருவாகி இருக்கலாம் என்றும் ஒரு புதிய கருத்தை முன் மொழிந்து இருக்கின்றனர்.


ஆக மொத்தம்,கரீபியன் தீவுக் கூட்டமானது,ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும்,புவியியல் வல்லுனர்களுக்கு,உண்மையில் அந்தத் தீவுக் கூட்டமானது, எங்கே உருவாகி,எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று தெரிய வில்லை.

இந்த நிலையில்,கடந்த 12.1.2010 அன்று,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும், USGS என்று அழைக்கப் ,அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனர்கள்,அமெரிக்கா மற்றும் கரீபியன் பாறைத் தட்டுகள் நகர்ந்ததால்,பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால்தான், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டதாக ஒரு தவறான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.

குறிப்பாக, கரீபியன் தீவுக் கூட்டமானது ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக, USGS என்று அழைக்கப் ,அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனர்கள்,நம்புகிறார்கள்,ஆனால் கரீபியன் பாறைத் தட்டானது எங்கே உருவாகி,எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று, USGS மைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியவில்லை.

எனவேதான் ,கரீபியன் பாறைத் தட்டானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று நேரிடையாகக் கூறாமல்,வட அமெரிக்கக் கண்டமானது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் கரீபியன் பாறைத் தட்டானது,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில்,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதகவும்,அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக, USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.


இது எப்படி ஒரு சரியான விளக்கமாக இருக்க முடியும்?

உண்மையில் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில் என்ன நடக்கிறது என்றே , USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியாது என்பதே உண்மை.

அந்த உண்மையை மறைப்பதற்காகவே, USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் பாறைத் தட்டானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாகக் கூறாமல் சுற்றி வளைத்து விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர் என்பதே உண்மை.

இதன் மூலம், ஹைத்தி தீ வில், ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் என்ன காரணம் என்பது, USGS அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியவில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
அத்தியாயம் ஐந்து
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால், நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகின.


இந்த நிலையில், பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால்தான், நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவாகின என்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் சில எரிமலைகள் இருக்கின்றன.
அந்த எரிமலைகள் எல்லாம் அணைந்து போன எரிமலைகள் என்றே நீண்ட காலமாக நம்பப் பட்டது.
இந்த நிலையில்அந்த எரிமலைகள் மேல் பறந்து சென்ற செயற்கைக் கோள்கள் மூலம் அந்த எரிமலைகளின் இயக்கம் கண்காணிக்கப் பட்டது.
குறிப்பாக, அந்த செயற்கைக் கோள்களில் இருந்து தரையை நோக்கி ரேடியோ கதிர்கள் வீசப் பட்டது.
அதன் பிறகு,அந்த ரேடியோ கதிர்களானது ,தரையில் இருக்கும் மேடு பள்ளங்களில் பட்டு திரும்பவும் செயற்கைக் கோளை வந்த பொழுது,கருவிகள் மூலம், தரையில் இருந்த மேடு பள்ளங்கள் பதிவு செய்யப் பட்டது.

அந்தப் படங்களை ஒன்றாக இணைத்த பொழுது,அந்த எரிமலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதை எரிமலை இயல் வல்லுனர்கள் கண்டு பிடித்தனர்.
ஏன் இவ்வாறு அந்த எரிமலைகளைச் சுற்றி ,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு,சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள, மேடு பள்ள வளையங்கள் உருவாகின என்பதற்கு,எரிமலை இயல் வல்லுனர்கள் ஒரு விளக்கத்தையும் தெரிவித்தனர்.
அதாவது,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது,ஒரு எரிமலைக்குள் நுழையும் பொழுது,அந்த எரிமலையானது சில சென்டி மீட்டர் உயர்கிறது.
அப்பொழுது,அந்த எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ,சில சென்டி மீட்டர் உயர்கிறது.
அதன் பிறகு,அந்த எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறும் பொழுது,அந்த எரிமலையானது சில சென்டி மீட்டர் தாழ்வடைகிறது.
இதனால் அந்த எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும்,பல கிலோ சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் இறங்குகிறது.
இவ்வாறு ,எரிமலைகள் சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்கும் பொழுது,அந்த எரிமலையைச் சுற்றியுள்ள தரைப் பகுதியும்,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்குவதால்,எரிமலைகளைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன ,என்று எரிமலை இயல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்தனர்.

இதே போன்று,நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் உருவான இடங்களிலும்,குறிப்பாக , சுனாமிகளை உருவாக்கிய நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவு ஆகி இருக்கிறது.
குறிப்பாக,இத்தாலி நாட்டில்,லா அகுலா நகரில், கடந்த 2009 ஆம் ஆண்டு நில அதிர்ச்சி ஏற்பட்டது.
அப்பொழுது,அந்த நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும்,, பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவு ஆகி இருக்கிறது.
அத்துடன்,அந்தப் பகுதியில்,நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு,ஒரு வாரத்துக்கு முன்பு,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் என்று அழைக்கப் படும்,கதிரியக்கத் தன்மை உடைய வாயு ,கசிந்து இருப்பதையும்,ஜியூவாணி என்ற ஆராய்ச்சியாளர் கண்டு பிடித்தார்.இதே போன்று,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்த இடங்களில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருக்கின்றன.
அதன் அடிப்படையில்,ஜியோவானி ,லா அகூலா நகரில் நில அதிர்ச்சி ஏற்படப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.
அவர் எச்சரித்ததைப் போன்றே ,லா அகூலா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டது.
முக்கியமாக,ரேடான் வாயுவானது, எரிமலைகளில் இருந்து வெளிப் படும் வாயு ஆகும்.
எனவே,பூமிக்கு அடியில் எரிமலை வெடித்தால், லா அகூலா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது, ஆதாரப் பூர்வமாக தெரிய வந்தது.

இதே போன்று ,கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம்,ஜப்பானில் உள்ள ஹோன்சு தீவுப் பகுதியில்,ஏற்பட்ட ,நில அதிர்ச்சியால்,சுனாமி உருவானது.
அப்பொழுது,ஹோன்சு தீவில், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் , பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவு ஆகி இருக்கிறது.
அத்துடன்,அந்த நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ,ஹோன்சு தீவுக்கு மேலே வளி மண்டல மேலடுக்கில்,வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்து இருப்பது,வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருந்தது.
இது குறித்து விளக்கமளித்த,நாசாவைச் சேர்ந்த,டாக்டர்,டிமிட்ரி ஒசனோவ்,அந்தப் பகுதியில்,பூமிக்கு அடியில் இருந்து,ரேடான் வாயு கசிந்து இருக்கலாம் என்றும்,ரேடான் வாயு கதிரியக்கத் தன்மை உடையதால்,அந்த வாயுவானது காற்றில் இருந்த மூலக் கூறுகளில் இருந்து எலக்ட்ரான்களை நீக்கி இருக்கலாம் என்றும்,இதனால் எலக்ட்ரான் மேகங்கள் உருவாகி இருக்கலாம் என்றும், இந்த வினையானது, ஒரு வெப்பம் உமிழும் வினை என்பதால்,வளி மண்டல மேலடுக்கில்,வெப்ப நிலையானது அசாதாரணமாக உயர்ந்து இருக்கலாம் என்று, ,டாக்டர் டிமிட்ரி ஒசனோவ் விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.
இதன் மூலம்,பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே,ஹோன்சு தீவில், நில அதிர்ச்சிகளும்,சுனாமியும் உருவாகி இருப்பது, ஆதரப் பூர்வமாக நிரூபணமாகிறது.



                        ௦-௦--௦-௦

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?