நமது பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.


புதைப் படிவப் புதிர்களுக்கு புதிய விளக்கம்.

புதைப் படிவ ஆதாரங்கள் மூலம் நகரும் கண்டங்கள் கருத்து ஒரு தவறான கருத்து என்பது தெரிய வந்துள்ளது.

ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதைப் படிவங்கள் மூலம் நகரும் கண்டங்கள் விளக்கமானது, ஒரு தவாறன விளக்கம் என்பது தெரிய வந்துள்ளது.
தற்பொழுது, கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதைப் படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு, முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பெருங் கண்டமாக இருந்ததாகவும்,அதன் பிறகு அந்தப் பெருங் கண்டமானது, பல சிறிய கண்டங்களாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், கூறப் படும் விளக்கமானது, தவறான விளக்கம் என்பது பல ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அதே போன்று,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய வளரக் கூடிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதைப் படிவங்களானது,காணப் புவதற்கு,முன் ஒரு காலத்தில் அந்தத் தீவானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்த பிறகு,துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து வந்ததே காரணம் என்றும்,விளக்கம் கூறப் படுகிறது.
இந்த விளக்கத்தைக் கூறிய,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஆல்பிரட் வெக்னர்,ஒத்த கால நிலையில் வாழக் கூடிய வளரக் கூடிய,விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை மாற்றி அமைத்துப் பார்த்ததன் அடிப்படையில்,மேற் கூறிய விளக்கத்தைக் கூறினார்.
குறிப்பாக வெக்னர்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பூமியில் பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு பெருங் கண்டம் இருந்ததாகவும்,அந்தப் பெருங் கண்டத்தைச் சுற்றிலும் ‘பாந்தலாசா’ என்ற கடல் பகுதி இருந்ததாகவும்,கூறினார்.
அதன் பிறகு, பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பெருங் கண்டமானது,பிளவு பட்டு இரண்டாகப் பிரிந்து, வடக்கு தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததால்,வடபகுதியில் லாரேசியா என்ற கண்டமும் தென் பகுதியில் கோண்டுவாணா என்ற கண்டமும் உருவானதாக வெக்னர் கூறினார்.
அதன் பிறகு, லாரேசியக் கண்டமும் இரண்டாகப் பிரிந்து, கிழக்கு மேற்காக நகர்ந்ததால்,யுரேசியக் கண்டமும் வட அமெரிக்கக் கண்டமும் உருவானதாக வெக்னர் கூறினார்.
இவ்வாறு,வட அமெரிக்கக் கண்டமும், யுரேசியக் கண்டமும் பிரிந்ததால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் வட அட்லாண்டிக் பெருங் கடல் உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
அதே போன்று,கோண்டுவாணாக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் இருந்து பிரிந்து, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்த தென் அமெரிக்கக் கண்டமானது,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் வெக்னர் கூறினார்.
அதே போன்று, பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கோண்டுவாணாக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்த ஆப்பிரிக்கக் கண்டமானது, மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால், ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
இவ்வாறு,தென் அமெரிக்கக் கண்டமும் ஆப்பிரிக்கக் கண்டமும் பிரிந்ததால், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் தெற்கு அட்லாண்டிக் பெருங் கடல் உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
அதே போன்று,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒன்றாக இணைந்த நிலையில், அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு தாகவும்,அதன் பிறகு அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாகவும் வெக்னர் கூறினார்.
இதில் குறிப்பாக இந்திய நிலப் பகுதியானது,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,இமய மலைத் தொடர் உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
வெக்னரின் விளக்கத்தின் படி,வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியான அலாஸ்காவின் வட பகுதியும்,ஆசியக் கண்டத்தின் வட பகுதியான சைபீரியாவின் வட பகுதியும்,கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ,கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது.
எனவே ஆர்க்டிக் பகுதியில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய வளரக் கூடிய விலங்குகள் மற்றும் தாவரங்களின் புதைப் படிவங்கள் காணப் பட்டால், அதன் தொன்மையானது,பத்து கோடி ஆண்டுகளுக்கும் மேற்பட்டதாக இருக்க வேண்டும்.
ஆனால்,ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள், குறிப்பாக அலாஸ்காவின் வட பகுதியிலும்,சைபீரியாவின் வட பகுதியிலும்,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் புதைப் படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
எனவே,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் எப்படி வாழ்ந்தன என்ற கேள்விக்கு விடை காண இயலாமல் ஆராய்ச்சியாளர்கள் குழம்பிக் கொண்டு இருக்கின்றனர்.
ஏனென்றால் டைனோசர்களானது, பாலூட்டிகளைப் போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாத ஊர்வன வகை விலங்கினத்தைச் சேர்ந்தது.
தற்பொழுது ஆர்க்டிக் பகுதியில் பாலூட்டி வகை விலங்கினத்தைச் சேர்ந்த முயல்,மான்,நரி,கரடி போன்ற விலங்கினங்களே காணப் படுகிறது.மாறாக ஊர்வன வகை விலங்கினத்தைச் சேர்ந்த முதலை ஆமை மற்றும் பாம்புகள் ஆர்க்டிக் பகுதியில் வசிப்பதில்லை.
முக்கியமாக டைனோசர்களானது, ஊர்வன வகை விலங்கினத்தைச் சேர்ந்தது என்பதால், முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது.ஆனால் ஊர்வன வகை விலங்கினங்களின் முட்டைகள் பொரிய, முப்பது முதல் முப்பத்தி நான்கு சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.
எனவே பனிப் பிரதேசத்தில் டைனோசர்கள் எப்படி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன என்ற விடை தெரியாக் கேள்வி எழுந்திருக்கிறது.
சில சிறிய அளவுள்ள டைனோசர்களின் முட்டைகளானது,அடை காக்கப் பட்டதற்கு அடையாளமாக வட்ட வடிவில் அடுக்கி வைக்கப் பட்டு இருப்பது புதைப் படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஆனாலும் ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள வாத்தலகு டைனோசர்களின் புதைப் படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.அது போன்ற ராட்சத டைனோசர்களால் முட்டைகள் மேல் அமர்ந்து அடை காத்து இருக்க சாத்தியம் இல்லை.
சில ஆராய்ச்சியாளர்கள், டைனோசர்களானது,பனி மான்களைப் போன்று குளிர் கால இடப் பெயர்ச்சி செய்து இருக்கலாம் என்றும்,பனிக் கரடிகளைப் போன்று குளிர் கால அரிதுயிலை மேற்கொண்டு இருக்கலாம் என்றும் நம்பினார்கள்.
இந்த நிலையில்,டைனோசர்களின் முட்டைகள் எவ்வளவு காலத்தில் பொரிந்தன என்பது குறித்து, அமெரிக்காவின்,புளோரிடா மாகாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த,கிரிகோரி எரிக்சன் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
குறிப்பாக அவர்,டைனோசர்களின் முட்டைகளுக்குள் இருந்த கருக்களின் பற்களில் இருந்த ஆண்டு வளையங்களை நுண்ணோக்கி மூலம் கணக்கிட்டார்.அப்பொழுது அந்த டைனோசர்களின் பற்களானது ஆறு மாத கால வளர்ச்சியுடன் இருப்பதை அறிந்தார்.அதன் அடிப்படையில் அவர் டைனோசர்களின் முட்டைகள் பொரிய ஆறு மாத காலம் அல்லது அதற்கும் மேலாக ஆகி இருக்கும் என்று கிரிகோரி எரிக்சன் தெரிவித்து இருக்கிறார்.
எனவே, டைனோசர்களின் முட்டைகளை மற்ற விலங்குகளிடம் இருந்து பாது காக்க டைனோசர்களானது ஒரே இடத்தில் ஆறு மாத காலத்திற்கும் மேலாக இருந்திருக்க வேண்டும் என்று டாக்டர் கிரிகோரி எரிக்சன் தெரிவித்து இருக்கிறார்.
அத்துடன் முட்டைகளில் இருந்து வெளி வந்த பிறகும் டைனோசர்களின் குட்டிகள் வளர, ஒரு ஆண்டுக்கும் மேலாக பெரிய டைனோசர்களின் பாது காப்பு தேவைப் பட்டு இருக்கும் என்றும், அதனால் ஆர்க்டிக் பகுதியில் வாசித்த டைனோசர்களானது, ஆண்டு முழுவதும் ஒரே இடத்தில் வசித்து இருக்கின்றன என்றும், டாக்டர் கிரிகோரி எரிக்சன் தெரிவித்து இருக்கிறார்.
எனவே, சில ஆராய்ச்சியாளர்கள் நம்பியதைப் போன்று டைனோசர்களானது, பனி மான்களைப் போன்று குளிர் கால இடப் பெயர்ச்சியோ அல்லது பனிக் கரடிகளைப் போன்று குளிர் கால அரிதுயிலையோ மேற்கொண்டு இருக்க வில்லை என்பது கிரிகரின் ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.
முக்கியமாக டைனோசர் கூட்டமானது யானைக் கூட்டத்தை விடப் பல மடங்கு அதிகமான தாவரங்களை உண்ணக் கூடியது.
ஆனால்,பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளில் ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து பகலும்,அதே போன்று ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.
அது போன்று, ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால்,சூரிய ஒளியின்றி, தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து உயிர் வாழ்ந்து இருக்க இயலாது.
எனவே ஆர்க்டிக் பகுதியில் யானைக் கூட்டத்தை விடப் பல மடங்கு அதிகமான தாவரங்களை உண்ணக் கூடிய, டைனோசர்களின் கூட்டத்துக்கு உணவளிக்கக் கூடிய, அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி உருவாகின, என்ற கேள்வியும் விடை தெரியாக் கேள்வியாக இருக்கிறது.
எனவே,ஆர்க்டிக் பகுதியில் அமைந்து இருக்கும் தீவில் வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய தாவரங்களின் புதைப் படிவங்கள் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில் அந்த நிலப் பகுதியானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும் அதன் பிறகு துருவப் பகுதியை நோக்கி நகர்ந்து வந்ததே காரணம் என்றும் வெக்னர் கூறிய விளக்கமானது, ஒரு தவறான விளக்கம் என்பது ஆர்க்டிக் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்ட ஏழு கோடி ஆண்டுகள் தொன்மையான டைனோசர்களின் புதைப் படிவங்கள் மூலம், ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.
அதே போன்று, கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதைப் படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு, முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரு பெருங் கண்டமாக இருந்ததாகவும்,அதன் பிறகு அந்தப் பெருங் கண்டமானது, பல சிறிய கண்டங்களாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், கூறப் படும் விளக்கமும் ஒரு தவறான விளக்கம் என்பதும் உறுதியாகிறது.
எனவே,கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதைப் படிவங்களானது,கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இந்த நிலையில்,நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காகக் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் படிவுகளில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, பிளேட்டியோ சாராஸ் என்ற டைனோசரின் எலும்பு புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இதே போன்று, இந்தியப் பெருங் கடல் பகுதியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் கெர்கூலியன் கடல்டிப் பீட பூமியின் மத்தியப் பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் மரங்களின் கருகிய பாகங்கள்,விதை,மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இதன் மூலம் கடல் மட்டமானது,தற்பொழுது இருப்பதைக் காட்டிலும்,இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து, உயர்ந்து இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது.

தற்பொழுது, கடலின் சராசரி ஆழமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது.ஆனால் டைனோசர்களின் காலத்தில்,கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதை விட,இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருக்கிறது.
அதனால், டைனோசர்களின் காலத்தில்,கடலின் பரப்பளவானது குறைவாக இருந்திருக்கிறது.அதனால், டைனோசர்களின் காலத்தில் வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது.
அதனால், டைனோசர்களின் காலத்தில்,துருவப் பகுதிகளில்,அதிக வெப்ப நிலை இருந்திருக்கிறது,
அதனால், டைனோசர்களின் காலத்தில்,துருவப் பகுதிகளில்,பனிப் படலங்களுக்குப் பதிலாகப் பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன.அதில் டைனோசர்கள் வாழ்ந்து இருக்கின்றன.
கடல் மட்டமானது, இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பொழுது,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும்,இடையில் தரை வழித் தொடர்பு இருந்திருக்கிறது.
அதன் வழியாக டைனோசர்களானது தீவுகளுக்கும் தீவுக் கண்டங்களுக்கும் இடம் பெயர்ந்து இருக்கின்றன.
அதன் பிறகு,கடல் மட்டமானது,இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்ததால்,கடலின் பரப்பளவும் அதிகரித்து இருக்கிறது.கடலின் பரப்பளவானது அதிகரித்ததால், வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது,குறைந்ததால்,துருவப் பகுதிகளில், பனிப் படலங்கள் உருவாகின.
இவ்வாறு ஏற்பட்ட,கால நிலை மாற்றத்தால்,டைனோசர் இனம் அழிந்தது.

தற்பொழுது,கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு,தவறான விளக்கம் கூறப் படுகிறது.
தற்பொழுது கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு ,பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதே காரணம் என்று கூறப் படும் விளக்கம் தவறு என்பது புதை படிவ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாகத் தொழிற் சாலைகள் மற்றும் வாகனங்கள் வெளி விடும் புகையில் இருக்கும் கரிய மில வாயுக்கள் வளி மண்டலத்தில் கலப்பதால், பூமியின் வெப்ப நிலை உயர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே, கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று நம்பப் படுகிறது.

இந்த நிலையில், புதை படிவ ஆதாரங்கள் மூலம், கடந்த காலத்தில், ஒரே கால கட்டத்தில், கடல் மட்ட உயர்வும், பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.இதன் மூலம் கடல் மட்ட உயர்வுக்கு கூறப் படும் குளோபல் வார்மிங் விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவளங்கள் சாதாரணமாக பதினைந்து அடி ஆழத்தில் வாழக் கூடியது.கடல் மட்டம் உயர்ந்தால் இந்தப் பவளப் பாறைத் திட்டுகளும் அதற்கேற்ப வளரக் கூடியது.குறிப்பாக அக்ரோ போரா பால்மேட்டா பவளங்களானது இறக்கும் பொழுது அதனால் சுரக்கப் பட்ட சுண்ணாம்புப் பொருட்கள் பவளப் பாறைத் திட்டில் படிந்து விடும் இதனால் அந்தப் பவளப் பாறைத் திட்டு வளரும்.குறிப்பாக அக்ரோபோரா பால்மேட்டா பவளத் திட்டானது ஆண்டுக்கு ஐந்து முதல் பத்து சென்டி மீட்டர் வரை வளரக் கூடியது.

இந்த நிலையில், கடல் மட்டமானது ஆண்டுக்கு பத்து சென்டி மீட்டருக்கும் அதிக வேகத்தில் உயர்ந்தால் அக்ரோ போரா பாலமேட்ட பவளத் திட்டில் உள்ள எல்லா பவளங்களும் இறந்து விடும்.இந்த நிலையில் அந்தப் பவளத் திட்டில் ஆழமான பகுதியில் வளரக் கூடிய மற்ற பவளங்கள் வளரத் தொடங்கும்.

இந்த நிலையில் கரீபியக் கடல் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த அக்ரோபோரா பால்மேட்டா என்று அழைக்கப் படும் பவளங்களின் திட்டுகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில்,கடந்த 26,500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,20,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமானது 120 மீட்டர் ( நானூறு அடி ) வரை தாழ்வாக இருந்து, உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.



இதே போன்று, ஆஸ்திரேலியாக் கண்டத்திற்கு அருகில் உள்ள ‘தி கிரேட் பாரியார் ரீப்’ என்று அழைக்கப் படும் பவளப் பாறைத் திட்டுப் பகுதியில்,கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடந்த பவளப் பாறைத் திட்டுகளை ஆய்வு செய்த ,ரைஸ் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த,பேராசிரியர்,ஆண்ட்ரு ட்ராக்ஸ்லர்,இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்திருப்பதாகவும்,அதன் பிறகு கடல் மட்டம் நானூறு அடி உயர்ந்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் ,கோபன் கேகன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,வட துருவப் பகுதியில்,பனி யானைகள் இறந்தற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

குறிப்பாக அவர்கள்,வட துருவப் பகுதியில்,பனித் தரைக்கு அடியில் புதைந்து கிடந்த தாவரங்களின் மகரந்தங்கள்,விலங்கினங்களின் கழிவுகள் மற்றும் அந்த விலங்குகளின் உடலில் இருந்த செரிக்கப் படாத உணவுப் பொருட்களைச் சேகரித்து ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில்,கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வட துருவப் பகுதியில் அதிக சத்துள்ள பூக்கும் தாவரங்கள் இருந்ததாகவும்,அதன் பிறகு இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனிப் பொழிவு அதிகரித்ததால்,பூக்கும் தாவரங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும்,அதன் பிறகு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மேலும் பனிப் பொழிவு அதிகரித்தால்,பூக்கும் தாவரங்கள் அருகி ,புற்கள் மட்டுமே இருந்ததாகவும்,அதனால் சத்துக் குறைவால் பனி யானைகள் அழிந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இவ்வாறு கடந்த 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி,10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான கால கட்டத்தில்,கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதுடன் பனிப் பொழிவும் ஏற்பட்டு இருப்பதன் மூலம்,பூமி வெப்பமடைந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலப்பதாலேயே கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் விளக்கம் தவறு என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.




தற்பொழுது துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உள்பட மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட,கடல் மட்டமானது அதிக பட்சமாக இருநூற்றி நாற்பது அடிவரையே உயரும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

ஆனால் கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் பவளத் திட்டு ஆய்வில்,கடல் மட்டமானது நானூறு அடிவரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இவ்வாறு கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு தற்பொழுது வேறு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.

அதாவது இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டத்தின் பெரும் பகுதியும் பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,குறிப்பாக சிக்காக்கோ நகரானது மூன்று கிலோ மீட்டர் உயரத்துக்கு பனிப் படலத்தால் மூடப் பட்டு இருந்ததாகவும்,அதனால் கடல் மட்டமானது நானூறு அடி வரை தாழ்வாக இருந்ததாகவும் ,ரைஸ் பல் கலைக் கழகத்தைச் சேர்ந்த ,பேராசிரியர்,ஆண்ட்ரூ டிராக்ஸ்லர் தெரிவித்து இருக்கிறார்.

அதன் பிறகு பூமி வெப்பமடைந்ததால் நிலத்தின் மேல் இருந்த பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலந்ததால் கடல் மட்டமானது நானூறு அடி வரை உயர்ந்ததாக நம்பப் படுகிறது.

இந்த விளக்கம் தவறு,எப்படி என்றால் பூமியின் வெப்ப நிலை உயர்ந்து,அதனால் நிலத்தின் மேல் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் பொழுது,வெப்ப நிலை உயர்வால் கடல் நீரும் ஆவியாகத் தொடங்கும்,அதனால் கடலில் இருக்கும் நீர் ஆவியாகி மேல் நோக்கிச் சென்று நிலத்தின் மேல் மழையாகப் பொழிந்து ஆறுகளில் கலந்து இறுதியில் கடலிலேயே கலந்து விடும்.எனவே பூமியின் வெப்ப நிலை உயர்வதால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாது.

உதாரணமாகத் தற்பொழுது பூமியின் வெப்ப நிலை உயர்ந்தால் துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருகி நீராகிக் கடலில் கலக்கும் அதே வேளையில் ,வெப்ப நிலை உயர்வால் கடலில் இருக்கும் நீர் ஆவியாவதும் அதிகரிக்கும்.எனவே கடல் நீர் ஆவியாகாமல் இருந்தாலே கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படாமல் இருக்கும்.ஆனால் பூமியின் வெப்ப நிலை உயரும் பொழுது கடல் நீர் ஆவியாமல் இருக்கச் சாத்தியம் இல்லை.எனவே பூமியின் வெப்ப நிலை உயர்ந்ததால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது என்று கூறப் படும் விளக்கம் தவறு.

அதே போன்று பூமி குளிர்ந்ததால் நிலத்தின் மேல் பனிப் படலங்கள் உருவானதாகவும்,அதனால் கடல் மட்டம் தாழ்வடைந்ததாகவும் கூறப் படும் விளக்கமும் தவறு.ஏனென்றால் பூமியின் வெப்ப நிலை குறையும் பொழுது,கடல் நீர் ஆவியாகி மேல் நோக்கிச் செல்வதும் குறைந்து விடும்.எனவே ஏற்கனவே நிலத்தின் மேல் இருந்த மேகம் மட்டுமே பனியாக நிலத்தின் மேல் படியும்.எனவே பூமியின் வெப்ப நிலை குறைவதாலும் கூட ,கடல் மட்டத்தில் தாழ்வு ஏற்படச் சாத்தியம் இல்லை.

எனவே, கடல் மட்டம் நானூறு அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததற்கு என்ன காரணம்? என்ற கேள்வி எழுகிறது.அத்துடன் கடல் மட்டம் ஏன் உயர்ந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் உள்ள ‘மாச்சு கிரோ’ நகரில்,உள்ள சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக் வெளியேறிக் கொண்டு இருந்த நீரைச் சேகரித்துப் பகுப் பாய்வு செய்த,டாக்டர் யோசிதா என்ற ஆராய்ச்சியாளர்,அந்த நீரானது பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர் என்பதைக் கண்டு பிடித்துள்ளார்.

இதே போன்று கடலுக்கு அடியில் ஏராளமான சுடு நீர் ஊற்றுக்கள் இருப்பது அறியப் பட்டுள்ளது.எனவே கோடிக் கணக்கான ஆண்டு காலமாகப் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது பிரிந்த நீர்,சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக,வெளி வந்து கடலில் கலந்ததலேயே கடல் மட்டம் உயர்ந்து இருக்கிறது.


நிலவின் மேற்பரப்பில் கண்டு பிடிக்கப் பட்ட பனிப் படலங்கள் எப்படி உருவாகின?

சமீபத்தில் நிலவின் மேற்பரப்பில் நீர் பனிக் கட்டி வடிவில் இருப்பதை இந்திய விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர்.
அந்த நீர் எப்படி உருவனதென்றால்...நிலவின் ஆழமான பகுதியில் இருக்கும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் பாறையான பொழுது அதில் இருந்து பிரிந்த நீரானது,நிலவின் மேற்பரப்புக்கு வந்து குளிர்ந்ததால் பனியாக உருவாகி இருக்கிறது.
இது போன்று பாறைக் குழம்பில் இருந்து உருவாகும் நீரானது பாறைக் குழம்பு நீர் என்றும், மாக்மாட்டிக் வாட்டர் என்றும், அழைக்கப் படுகிறது.
நம் பூமியும், ஆரம்பத்தில் கொதிக்கும் பாறைக் குழம்புக் கோளமாக இருந்திருக்கிறது.அதன் பிறகு மெதுவாகக் குளிர்ந்ததால்,பூமியின் மேலோடு உருவானது.அதன் பிறகு பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது படிப் படியாகக் குளிர்ந்ததால்,பல்வேறு அடுக்குகளில் பாறைத் தட்டுகள் உருவாகின.பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில், பதினாலு சதவீதம் நீர் இருக்கிறது.
இந்த நிலையில்,பாறைக் குழம்பானது,குளிர்ந்து இறுகிப் பாறைத் தட்டாகும் பொழுது,பாறைக் குழம்பில் இருந்து பிரிந்த நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக, பூமிக்கு மேலே திரண்டதால் கடல் உருவானது.
இன்றும் கூட, பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது, குளிர்ந்து கொண்டு இருப்பதால், அதில் இருந்து உருவாகும் நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலந்து கொண்டு இருப்பதால்,கடல் மட்டமானது தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பானது, குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது, அதன் கன அளவானது அதிகரிக்கிறது.அதனால் புவிப் பரப்பின் மேல், கண்டங்கள் புடைத்துக் கொண்டு உருவாகின.
இவ்வாறு கண்டங்களானது, கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்தபொழுது, ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிப் புதையுண்ட கடல் உயிரினங்களே, தற்பொழுது கண்டங்களின் மேலும் மலைகளின் மேலும் புதை படிவங்களாகக் காணப் படுகிறது.

இந்த நிலையில் ,எரிமலைகள் மூலம் வெளிப்படும் வாயுக்களால், பூமியும் மெதுவாகக் குளிர்ந்து கொண்டு இருக்கிறது.

எனவே பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பில் , நீர் உற்பத்தி ஆகுவதும் தொடரும்.எனவே பூமிக்கு அடியில் உற்பத்தி ஆகும் நீரானது, சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக வெளியேறிக் கடலில் கலப் பதும் தொடரும்.

எனவே கடல் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து கொண்டுதான் இருக்கும்.
இதனால் நிலப் பகுதிகள் யாவும், கடலில் மூழ்கும்,அத்துடன் தரையில் வாழும் தாவரங்கள்,மற்றும் விலங்கினங்கள் யாவும் அழியும்.

கடல் பூமிக்குள் இருந்து வந்திருக்கிறது.

கடந்த 2014 ஆண்டு, கடலில் இருக்கும் நீரை விட ,மூன்று மடங்கு அதிகமான நீர், பூமிக்கு அடியில், குறிப்பாக அறுநூற்றி அறுபது கிலோ மீட்டர் ஆழத்தில், ரிங்க்வூடைட் என்று அழைக்கப் படும் பாறையில் கலந்து இருப்பதாக,அமெரிக்காவின், நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, ஸ்டீவ் ஜாக்கப்சென் என்ற புவியியல் வல்லுநர் தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர், நில அதிர்ச்சிகளை ஆய்வு செய்யும் கருவிகள் மூலமாக, பூமிக்குள் ஏற்படும் அதிர்ச்சி அலைகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில், பூமிக்கு அடியில், நீர் பெருமளவில் இருப்பது தெரிய வந்ததாகவும், தெரிவித்து இருக்கிறார்.

இதன் மூலம் பூமிக்கு மேல் இருக்கும் கடலானது , பூமிக்கு அடியில் இருந்தே மேற்பகுதிக்கு வந்திருக்க வேண்டும், என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

இதற்கு முன்பு கடலானது, விண்வெளியில் இருந்து, பூமியில் மேல் விழுந்த லட்சக் கணக்கான பனிப் பாறைகாளால் உருவானது என்று நம்பப் பட்டது.


உண்மையில் பூமி வெப்ப நிலை உயர்ந்து, துருவப் பகுதிகளில் இருக்கும் பனிப் படலங்கள் உருக் நீராகிக் கடலில் கலந்து, கடல் மட்டம் உயர்ந்தால் நல்லதுதான், ஏனென்றால் துருவப் பகுதகளில் இருக்கும் பனிப் படலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் இருக்கும் பனியாறுகள் மொத்தமும் உருகி நீராகிக் கடலில் கலந்தாலும் கூட, அதிக பட்சம் இருநூற்றி நாற்பது அடி வரைதான் கடல் மட்டம் உயரும்.

அனால் உண்மையில் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு இருப்பதற்கு காரணம், பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகிப் பாறையாகும் பொழுது ,பாறைக் குழம்பில் இருந்து பிரியும் நீர், சுடு நீர் ஊற்றுக்கள் வழியாகக் கடலில் கலப்பதே காரணம்.

பூமியின் பெரும்பகுதியும் பாறைக் குழம்பால் ஆகி இருப்பதுடன், பூமியும் குளிர்ந்து கொண்டு இருப்பதால்,பூமிக்கு அடியில் இருந்து சுடு நீர் ஊற்றுக்கள் வழியாக பாறைக் குழம்பு நீரானது தொடர்ந்து வெளியேறும்.எனவே கடல் மட்டமும் தொடர்ந்து உயரும்.அதனால் நிலப் பகுதிகள் யாவும் கடலால் மூழ்கடிக்கப் படும்.

அதனால் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் யாவும் அழியும்.

ஆம், நமது பூமி மூழ்கிக் கொண்டு இருக்கிறது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.