எனது ஆய்வறிக்கை.

தற்பொழுது நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும் ,புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கமானது தவறான விளக்கம் என்பது ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
குறிப்பாகத் தற்பொழுது,கண்டங்கள் எல்லாம் தனித் தனியாகக் கடல் தளங்களுடன்,தனித் தனிப் பாறைத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
அதன் அடிப்படையில்,பாறைத் தட்டுகள் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகப் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
அதே போன்று,கடலுக்கு அடியில்,பாறைத் தட்டுகள் நகர்ந்து, ஒரு பாறைத் தட்டுக்கு அடியில், அடுத்த பாறைத் தட்டானது உரசியபடி நகர்ந்து செல்லும் பொழுது,மேற்பகுதியில் இருக்கும் பாறைத் தட்டானது திடீரென்று மேல் நோக்கி உயர்ந்து மேல் பகுதியில் இருக்கும் கடல் நீரை மேல் நோக்கி தள்ளுவதால் சுனாமிகள் ஏற்படுவதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
ஆனால் இந்த விளக்கங்கள் எல்லாம் அடிப்படை ஆதாரமற்ற தவறான விளக்கங்கள் என்பது,உலக அளவில் லட்சக் கணக்கான நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து வரையப் பட்ட,உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம் மூலம் தெரிய வந்துள்ளது.
அத்துடன் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதாலேயே அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அந்த ஆதாரங்களை ஆய்வு செய்வதற்கு முன்பு புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கங்களை ஆய்வு செய்வது அவசியம்.
குறிப்பாகப் புவியியல் வல்லுனர்கள்,இந்த பூமியில்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து,பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு ஒற்றைப் பெருங்கண்டம் இருந்ததாக புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
அத்துடன் அந்தப் பெருங் கண்டத்தைச் சுற்றி ஆழமான கடல் பகுதி இருந்ததாகவும்,புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
அதன் பிறகு,பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு வந்த பிறகு,குளிர்ந்து இறுகி கணம் அதிகரித்ததாகவும்,அதனால் அந்தப் பாறைக் குழம்பானது,மறுபடியும் பூமிக்கு அடியிலேயே சென்றதாகவும்,புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இவ்வாறு பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்குப் பூமிக்கு அடியில் பாறைக் குழம்பானது ஒரு சக்கரம் போன்று சுழன்றதால்,மேற்பகுதியில் இருந்த பெருங் கண்டமானது, இரண்டாகப் பிளவு பட்டுப் பிரிந்ததாகவும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
அதனால்,பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,லாரேசியா,கோண்டுவானா என இரண்டு பெரிய கண்டங்கள் உருவானதாகவும்,அதில் லாரேசியாக் கண்டமானது,வடபகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று,கோண்டுவானாக் கண்டமானது தென் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் அதாவது பூமத்திய ரேகைப் பகுதியில்,டெதிஸ் என்ற கடல் பகுதி உருவானதாகவும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இந்த நிலையில்,எட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,லாரேசியாக் கண்டமும் இரண்டாகப் பிரிந்ததாகவும்,அதனால் வட அமேரிக்கா மற்றும் யூரேசியா ஆகிய கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில்,வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவானதாகவும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இதே போன்று,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தென் பகுதிக் கோண்டுவானாக் கண்டமும் பல பகுதிகளாக பிரிந்த பிறகு,அந்தக் கண்டங்களானது வடபகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
குறிப்பாகக் கோண்டுவானாக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் பிளவு ஏற்பட்டதால்,தென் அமேரிக்கா,மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் உருவாகி முறையே வடமேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்ததால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில்,தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி உருவானதாகவும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
அதில்,வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்த தென் அமெரிக்கக் கண்டமானது,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான்,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
அதே போன்று,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகக் கூறப் படும்,ஆப்பிரிக்கக் கண்டமானது,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில்,இருந்த நிலப் பகுதியானது புடைத்துக் கொண்டு உயர்ந்ததால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
அதே போன்று ,இந்தியாவும்,ஆஸ்திரேலியாவும்,அண்டார்க்டிக் கண்டத்தில் இருந்து பிரிந்து,வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
அதில் இந்திய நிலப் பகுதியானது,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இமய மலைத் தொடரானது புடைத்துக் கொண்டு உயர்ந்ததாகவும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இன்றும் கூட அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு வந்த பிறகுக் குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி,எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன்,அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் இருக்கும் கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இவ்வாறு கண்டங்கலானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
இந்த நிலையில்,கடந்த,1963 ஆம் ஆண்டு முதல் ,1998 ஆம் ஆண்டு வரையிலான ,35 ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த,3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து,நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள்,ஒரு உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தைத் தயாரித்து வெளியிட்டார்கள்.
அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி,வடக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,கடல் தளத்துடன்,வடக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும்,வட அமெரிக்கக் கண்டத்திற்கும், அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி,வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,கடல் தளத்துடன்,வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும்,தென் அமெரிக்கக் கண்டத்திற்கும்,இடையில்,தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இவ்வாறு,வாடா அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்டையில்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதுடன்,இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளமும்,மற்றும் வட அமெரிக்கா,தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களும்,நிலையாக இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது,ஒன்றாக இணைந்த நிலையில்,அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும்,அதன் பிறகு,அண்டார்க்டிக் கண்டத்தைச் சுற்றிலும் புதிய கடல் தளம் உருவாகி, வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,அதில் வட பகுதியை நோக்கி நகர்ந்த கடல் தளத்துடன்,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும், புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
தற்பொழுது, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும், ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கிறது.
ஆரம்பத்தில் ஒன்றாக இருந்த நிலையில் தற்பொழுது இருப்பதைப் போன்று ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு விலகி இருக்க வேண்டும் என்றால்,இந்த இரண்டு கண்டங்களும்,இரண்டு தனித் தனிக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.
அவ்வாறு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தனித் தனியாக வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில்,தொடர்ச்சியாகப் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.
ஆனால் நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில்,அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில்,இருக்கும் கடல் தளப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.
இவ்வாறு இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் இருக்கும் கடல் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்டையில்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதுடன்,இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கடல் தளமும்,கண்டங்களும்,நிலையாக இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இந்த நிலையில் அதே நாசா அமைப்பினர் கண்டத்தட்டுகளின் இயக்கத்தைக் குறிப்பதாகக் கூறி ஒரு வரைபடத்தையும் வெளியிட்டனர்.
அந்த வரை படத்தில் கூட,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தளப் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை என்று விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.
இந்த நிலையில்,கடந்த 26.12.2004 அன்று தெற்காசியாவையே உலுக்கிய சுனாமிக்கான காரணம் குறித்து,முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களைத் தெரிவித்து இருக்கின்றனர்.
குறிப்பாகக் கடந்த, 10.3.2005 நாசா வெளியிட்ட அறிக்கையில்,இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில்,இந்தியக் கண்டத்தின் கடல் தளமானது திடீரென்று நகர்ந்து சென்றதால்தான்,நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவானது என்று, ,டாக்டர் ரிச்சர்ட் கிராஸ் மற்றும் டாக்டர் பெஞ்சமின் பாங் சோ ஆகியோர் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
ஆனால் மூன்று மாதத்திற்குப் பிறகு,அதாவது கடந்த 27.4.2005  அன்று ,நாசா வெளியிட்ட அறிக்கையில், இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில்,ஆஸ்திரேலியக் கண்டத்தின் கடல் தளமானது, திடீரென்று நகர்ந்து சென்றதால்தான்,நில அதிர்ச்சியும் சுனாமியும் உருவானது என்று ,நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இதன் மூலம்,கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரியாத நிலையிலேயே,அடிப்படை ஆதாரம் இன்றி வெறும் யூகத்தின் அடிப்படையில்,நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும்,நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள்,கற்பனை விளக்கத்தைத் தெரிவித்து இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று கடந்த 12.1.2010 அன்று ,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கூட ,USGS  என்று அழைக்கப் படும்,அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனர்கள்,அடிப்படை ஆதாரமின்றி கற்பனை விளக்கத்தைத் தெரிவித்து இருப்பதும் ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, வட அமெரிக்கக் கண்டமானது, அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இதே போன்று, தென் அமெரிக்கக் கண்டமானது,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும்,கடல் தளத்துடன்,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில், இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் அமைந்து இருக்கும், கரீபியன் தீவுக் கூட்டமானது, எப்படி உருவானது? என்ற கேள்வி எழுந்தது.
சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது,பசிபிக் கடல் பகுதியில்,குறிப்பாகக் காலபாகஸ் தீவுக் கூட்டம் இருக்கும் இடத்தில்,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,எரிமலைச் செயல் பாட்டால்  உருவானதாகவும்,அதன் பிறகு கரீபியன் தீவுக் கூட்டமானது,ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,நம்புகின்றனர்.
இந்த நிலையில்,அமெரிக்கக் கண்டங்களானது,எதிர்த் திசையில்,தனித் தனியாக மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்ததாகவும்,அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று அமைந்து இருக்கும்,மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது,உருவாகி இருக்க வில்லை என்றும்,அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடைவெளி இருந்ததாகவும்,அந்த இடைவெளிக்குள்,கரீபியன் பாறைத் தட்டானது நுழைந்து விட்டதாகவும்,அதன் பிறகு கடலுக்கு அடியில் இருந்து மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது உயர்ந்ததால்,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,நிலத் தொடர்பு ஏற்பட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
‘பசிபிக் கடல் மாதிரி’ என்று அழைக்கப் படும்,இந்தக் கருத்தின் படி, கரீபியன் தீவுக் கூட்டமானது, கிழக்கு திசையை நோக்கி, நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
குறிப்பாகக் கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி, வரிசையாக எரிமலைகள் உருவாகி இருக்கின்றன.
இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டத்துக்கு கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி எரிமலைகள் உருவாகி இருப்பதற்கு,பசிபிக் கடலின் மாதிரிப் படி ஒரு விளக்கம் கூறப் படுகிறது.
அதாவது,கரீபியன் தீவுக் கூட்டமானது,கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த அட்லாண்டிக் கடல் தளமானது,கரீபியன் பாறைத் தட்டுக்கு அடியில் சென்ற பிறகு,வெப்பத்தால் உருகிப் பாறைக் குழம்பாக உருவாகி,மேல் நோக்கி உயர்ந்து,கடல் தளத்தைப் பொத்துக் கொண்டு ,கடல் தளத்துக்கு மேலே எரிமலைகளாக உருவானதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
குறிப்பாக அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,பாலம் போன்று தொடர்ச்சியாக இருக்கும் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,உருவாகி இருக்க வில்லை என்றும் அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு டையில் இடை வெளி இருந்ததாகவும்,அப்பொழுது கரீபியன் பாறைத் தட்டானது,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில்,நுழைந்ததால் தற்பொழுது இருக்கும் இடைதுக்கு வந்ததாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
ஆனால் தற்பொழுது,மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள,நிகரகுவா நாட்டின் மலைப் பகுதியில்,மிட் கிரட்டேசியஸ் என்று அழைக்கப் படும்,அதாவது ஒன்பது முதல் பனிரெண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,ஆர்னிதோபோட் என்ற இனத்தைச் சேர்ந்த டைனோசரின் எலும்புகளை, கிரிகரி எஸ் ஹோர்னி மற்றும் புருஸ் சிம்மன்சன் ஆகியோர் , 1971 ஆம் ஆண்டில்,கண்டு பிடித்து இருக்கின்றனர்.
தற்பொழுது வாசிங்டன் அருங்காட்சியகத்தில் இருக்கும் அந்த டைனோசரின் எலும்பைஆய்வு செய்த.யேல் பலகலைக் கழகத்தைச் சேர்ந்த புவியியல் பேராசிரியரானஜோன் ஆஸ்ட்ரம். அந்த எலும்பானதுஆர்னிதோபோட்,என்று அழைக்கப் படும் டைனோசரின் எலும்பு என்பதை உறுதிப் படுத்தி இருக்கிறார்.

இதன் மூலம்,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்க கண்டங்களுக்கு இடையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது தொடர்ச்சியாக இருந்திருப்பதுடன்,அதன் வழியாக டைனோசர்களின் போக்குவரத்தும் நடை பெற்று இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இதே போன்று,அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவில் உள்ள ஆர்கனாஸ் மலையின் மேற்குப் பகுதியில்,கிரேட்டேசியஸ் என்று அழைக்கப் படும் கால கட்டத்தைச் சேர்ந்த,அதாவது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த,தாவர உண்ணி டைனோசரின் எலும்புகளை, கியூபா நாட்டின் தேசிய இயற்கை அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தொல்விலங்கியல் வல்லுனர்களான மானுவேல் இல்டுரால்டி வின்சென்ட் மற்றும் ஜுல்மா காஸ்பரினி ஆகியோர் மேற்கொண்ட கண்டு பிடித்து இருக்கின்றனர்.
இதன் மூலம்,பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது தாழ்வாக இருந்ததால்,அமெரிக்கக் கண்டங்களுக்கும்,கரீபியன் தீவுகளுக்கும் இடையில் நிலத் தொடர்பு இருந்திருப்பதுடன்,அதன் வழியாக டைனோசர்களின் போக்குவரத்தும் நடை பெற்று இருப்பதும்,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
எனவே ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடைவெளி இருந்ததாகவும்,அதன் வழியாக கரீபியன் பாறைத் தட்டானது நுழைந்து விட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கங்கள் யாவும் அடிப்படை ஆதாரமற்ற கற்பனைக் கருத்துக்கள் என்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இந்த நிலையில் வேறு சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டாமானது,அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து இருக்கலாம் என்றும் ஒரு கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.
இந்தக் கருத்தானது ,’அட்லாண்டிக் கடல் மாதிரி’ என்று அழைக்கப் படுகிறது.
ஆனால் பசிபிக் கடல் பகுதியில் இருக்கும் காலபாகஸ் தீவுக் கூட்டம் போன்று அட்லாண்டிக் கடல் பகுதியில்,குறிப்பிடத் தக்க அளவுக்கு எரிமலைத் தீவுக் கூட்டம் எதுவும் இல்லை.எனவே குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டமானது,அட்லாண்டிக் கடல் பகுதியில் எங்கே உருவானது? என்று, ’அட்லாண்டிக் கடல் மாதிரி’யை நம்பும் புவியியல் வல்லுனர்களால் கூற இயலவில்லை.
எனவே, கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கிய .எரிமலைப் பிளம்புகளானது,காலப் போக்கில்,மறைந்து விட்டிருக்கலாம் என்று, கடல் மாதிரி’யை நம்பும் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.
ஆனாலும்,கரீபியன் தீவுக் கூட்டத்தின் கிழக்குப் பகுதியில்,வடக்கு தெற்கு திசையை நோக்கி வரிசையாக உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது எப்படி உருவானது? என்று,’அட்லாண்டிக் கடல் மாதிரி’யை நம்பும் புவியியல் வல்லுனர்களால், விளக்கம் கூற இயல வில்லை.
இந்த நிலையில் இன்னும் சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது, தற்பொழுது இருக்கும் இடத்திலேயே, உருவாகி இருக்கலாம் என்றும் ஒரு புதிய கருத்தை முன் மொழிந்து இருக்கின்றனர்.
ஆக மொத்தம்,கரீபியன் தீவுக் கூட்டமானது,ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும்,புவியியல் வல்லுனர்களுக்கு,உண்மையில் அந்தத் தீவுக் கூட்டமானது, எங்கே உருவாகி,எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று தெரிய வில்லை.

இந்த நிலையில்,கடந்த 12.1.2010 அன்று,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும், USGS  என்று அழைக்கப் ,அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனர்கள்,அமெரிக்கா மற்றும் கரீபியன் பாறைத் தட்டுகள் நகர்ந்ததால்,பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால்தான்,ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டதாக ஒரு தவறான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர்.
குறிப்பாக, கரீபியன் தீவுக் கூட்டமானது ஒரு பாறைத் தட்டாக நகர்ந்து கொண்டு இருப்பதாக, USGS  என்று அழைக்கப் ,அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த,புவியியல் வல்லுனர்கள்,நம்புகிறார்கள்,ஆனால் கரீபியன் பாறைத் தட்டானது எங்கே உருவாகி,எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று, USGS  மைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியாதாதால்,கரீபியன் பாறைத் தட்டானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று நேரிடையாகக் கூறாமல்,வட அமெரிக்கக் கண்டமானது,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் கரீபியன் பாறைத் தட்டானது,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில்,கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதகவும்,அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக, USGS  அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.
இது எப்படி ஒரு சரியான விளக்கமாக இருக்க முடியும்?
உண்மையில் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியில் என்ன நடக்கிறது என்றே , USGS  அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியாது என்பதே உண்மை.
அந்த உண்மையை மறைப்பதற்காகவே, USGS  அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் பாறைத் தட்டானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாகக் கூறாமல் சுற்றி வளைத்து விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர் என்பதே உண்மை.
இதன் மூலம், ஹைத்தி தீ வில், ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் என்ன காரணம் என்பது, USGS  அமைப்பைச் சேர்ந்த ,புவியியல் வல்லுனர்களுக்குத் தெரியவில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
உண்மையில் கடல் தளமும், கண்டங்களும் நிலையாக இருப்பது,. கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளப் பகுதியானது, தொடர்ச்சியாக இருப்பதன் மூலம்,உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடம் மூலம் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இந்த நிலையில், பூமிக்கு அடியில் எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டதாலேயே நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது,தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.


Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.