நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் விளக்கம் கூறும் தகுதி புவியியல் வல்லுனர்களுக்கு இல்லை.

கடந்த 12.01.2010 அன்று ,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் கடுமையான நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதில்,இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

அந்த நில அதிர்ச்சி ஏன் ஏற்பட்டது என்பதற்கு அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றனர்.

அதாவது ,ஹைத்தி தீவு அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது ஒரு பாறைத் தட்டின் மேல் இருப்பதாகவும்,அந்தப் பாறைத் தட்டானது,வட அமெரிக்கக் கண்டத்தைப் பொருத்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்( the Caribbean plate moving eastward with respect to the North America plate),அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டதால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.
elg1.jpgelg1.jpg
குறிப்பாக புவியியல் வல்லுனர்கள் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்புகின்றனர்.அதே போன்று தென் அமெரிக்கக் கண்டமும் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்புகின்றனர்.

ஆனால் கரீபியன் தீவுக் கூட்டம் அமைந்து இருப்பதாகக் கூறப் படும் கரீபியன் பாறைத் தட்டானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது,என்று இது வரையிலும் யாராலும் ஆதாரத்துடன் விளக்கம் கூற இயலவில்லை.

எனவேதான் கரீபியன் பாறைத் தட்டானது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாகக் கூறாமல் வட அமெரிக்கக் கண்டத்தைப் பொருத்தமட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக அமெரிக்கப் புவியியல் கழகத்தின் புவியியல் வல்லுனர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.

தற்பொழுது புவியியல் வல்லுனர்கள் நம்பும் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி, வட அமெரிக்கக் கண்டமானது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடந்து உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இதே போன்று தென் அமெரிக்கக் கண்டமானது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இந்த நிலையில் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவாகி எப்படி தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது?எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்வி எழுந்தது.


சில புவியியல் வல்லுனர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது ,பசிபிக் கடல் பகுதியில்,குறிப்பாக தற்பொழுது காலபாகஸ் தீவுக் கூட்டம் இருக்கும் இடத்தில் உருவாகி இருக்கலாம் என்று நம்புகின்றனர்.இந்த விளக்கம் 'பசிபிக் மாடல்'  என்று அழைக்கப் படுகிறது.

குறிப்பாக கடல் தளத்திற்கு அடியில் இருந்த எரிமலைப் பிளம்புகள் மேல் நோக்கி உயர்ந்து,கடல் தளத்தைத் துளைத்தால்,கடல் தளத்திற்கு மேலே கரீபியன் தீவுக் கூட்டமாக உருவான பிறகு,கரீபியன் தீவுக் கூட்டதிற்கு அடியில் இருந்த கடல் தளமானது ,ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவனதாகவும்,அதன் பிறகு,கடல் தளத்திற்கு அடியில் இருந்த பாறைக் குழம்பானது ஒரு சக்கரம் போன்று சுழன்றதால் ,கரீபியன் பாறைத் தட்டானது மேற்கு நோக்கி நகர்ந்ததாக நம்புகின்றனர்.

குறிப்பாக எரிமலைத் தீவுகள் கூம்பு வடிவில் இருக்கும் அனால் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவானது எரிமலைகள் இல்லாத தீவாக இருப்பதுடன் சம தளத் தீவாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்த நிலையில் எதிர் புறம் வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் தனித் தனியாக மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த பொழுது இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருந்த இடைவெளியில் கரீபியன் தட்டு ,ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,நுழைந்து விட்டதாகவும்,தற்பொழுது கரீபியன் பாறைத் தட்டானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்புகின்றனர்.

அனால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களும் தற்பொழுது பனாமா நிலத் தொடபால் இணைக்கப் பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் எப்படி கரீபியன் தீவுக் கூட்டம் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.

அனால் கரீபியன் தீவுக் கூட்டமானது ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்த பொழுது பனாமா நிலத் தொடபு உருவாகி இருக்க வில்லை என்றும்,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் பனாமா நிலப் பகுதியானது கடலுக்கு அடியில் இருந்து மேல் நோக்கி உயர்ந்து உருவாகி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போல உருவாகியது என்று புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.அதன் வழியாக அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் விலங்கினங்களின் போக்கு வரத்தும்  நடை பெற்றது என்றும் நம்புகின்றனர்.
இந்த நிலையில் பனாமா நிலப் பகுதியில் உள்ள நிகரகுவா நாட்டு மலைப் பகுதியில் பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வளர்ந்த தாவரங்களின் புதை படிவங்களை பீர் பால் சகானி ஆய்வு மையத்தைச் சேர்ந்த,ஸ்ரீ வத்சவா என்ற தொல் தாவரவியல் வல்லுநர் கண்டு பிடித்தார்.

இதே போன்று கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவிலும் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் எலும்புப் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது,

எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பாலம் போன்று இருந்திருப்பதும் அதன் வழியாக விலங்கினங்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கரீபியன் தீவுக் கூட்டமானது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்ததாகவும்,தற்பொழுது கரீபியன் தீவுக் கூட்டமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ,புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கம் சாத்தியம் இல்லாத விளக்கம்.

இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில் ,வடக்கு தெற்கு திசையை  நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் உருவானதற்கு,கரீபியன் பாறைத் தட்டானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் அட்லாண்டிக் கடல் தளமானது ,கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு அடியில்,சென்ற பிறகு,வெப்பத்தால் உருகி பாறைக் குழம்பாகி மேல் நோக்கி உயர்ந்து,கடல் தளத்தைப் பொத்துக் கொண்டு எரிமலைத் தொடராக உருவாகி இருக்கின்றன என்றும் புவியியலாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

இந்த நிலையில் வேறு சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது ,அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி,மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து இருக்கலாம் என்றும் தற்பொழுது கரீபியன் தீவுக் கூட்டமானது மேற்கு திசையை நோக்கி நகந்து கொண்டு இருக்கிறது என்றும் நம்புகின்றனர்.இந்தக் கருத்து 'அட்லாண்டிக் மாடல்' என்று அழைக்கப் படுகிறது.
ஆனால் பசிபிக் கடல் பகுதியில், கால பாகாஸ் தீவுக் கூட்டம் இருப்பதைப் போன்று இருப்பதைப் போன்று அட்லாண்டிக் கடல் பகுதியில் எரிமலைப் பிளம்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை,

ஆனால் கரீபியன் தீவுக் கூட்டம் உருவான பிறகு அந்த எரிமலைப் பிளம்புகள் மறைந்து இருக்கலாம் என்றும் புவியியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.இந்தக் கருத்தை நம்பும் புவியியலாளர்களால் கரீபியன் தீவுக் கூடத்திற்கு கிழக்குப் பகுதியில் இருக்கும் எரிமலைத் தொடர்கள் எப்படி உருவாகின என்பதற்கு விளக்கம் கூற இயலவில்லை.

இன்னும் சில புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் தீவுக் கூட்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே (in situ model)  உருவாகி இருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.  

ஆனால் உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எப்படி தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது?எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று புவியியல் வல்லுனர்களுக்குத் தெரிய வில்லை.

எனவே கரீபியன் தீவுக் கூட்டம் உண்மையில் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று நேரிடையாகக் கூறினால்,பின்னர் அது தொடர்பாக எழும் கேள்விகளுக்கு விளக்கமும் பதிலும் கூற வேண்டிய இக்கட்டான நிலை ஏற்படும் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காகவே,அமெரிக்க புவியியல் கழகத்தின் புவியியல் வல்லுனர்கள்,கரீபியன் பாறைத் தட்டானது,வட அமெரிக்கக் கண்டதைப் பொருத்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று சுற்றி வளைத்து விளக்கம் கூறி இருக்கின்றனர்.

உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கு விடை கூறினால் மட்டுமே ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் விளக்கம் கூறும் தகுதி அமெரிக்கப் புவியியல் கழகத்தின் புவியியல் வல்லுனர்களுக்கு உண்டு.

அது வரையிலும் ஹைத்தி தீவு நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் விளக்கம் கூறும் தகுதி அமெரிக்கப் புவியியல் கழகத்தின் புவியியல் வல்லுனர்களுக்கு இல்லை.

------------------------------------
கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் புவியியல் வல்லுனர்களின் வினோதமான பதில் .


கேள்வி ; வட அமெரிக்கக் கண்டம் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது?

புவியியல் வல்லுனர்களின் பதில்; வட அமெரிக்கக் கண்டம் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

கேள்வி ; தென் அமெரிக்கக் கண்டம் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது?

புவியியல் வல்லுனர்களின் பதில்; தென் அமெரிக்கக் கண்டம் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

கேள்வி ; கரீபியன் தீவுக் கூட்டம் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது?

புவியியல் வல்லுனர்களின் பதில்; கரீபியன் தீவுக் கூட்டம் வட அமெரிக்கக் கண்டத்தைப் பொருத்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது?

ஹலோ கேட்ட கேள்விக்கு நேரிடையா பதில் சொல்லுங்கள், வட அமெரிக்கக் கண்டம் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது?

 வட அமெரிக்கக் கண்டம் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

அப்படியா? அப்ப, தென் அமெரிக்கக் கண்டம் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது?

தென் அமெரிக்கக் கண்டம் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

அப்படியே அந்த கரீபியன் தீவுக் கூட்டம் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்கிறதையும் நேரிடையா சொல்லிடுங்க பாக்கலாம் ?

கரீபியன் தீவுக் கூட்டமா !கரீபியன் தீவுக் கூட்டம், வட அமெரிக்கக் கண்டத்தைப் பொருத்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது?
------------------------------------

ஒரு ஜோக் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயல வில்லை.
ஏம்பா உன் கிட்ட என்ன வாங்கிட்டு வரச் சொன்னேன்?

வாழப் பழம்,

எவ்வளவு கொடுத்தேன்?

ஒரு ரூபா

ஒரு ரூபாவுக்கு எத்தன பழம்?

ரெண்டு

ஒண்ணு இங்க இருக்கு இன்னொன்னு எங்கே இருக்கு?

அந்த இன்னொனுதான் இது !
-------------------------

உண்மையில் வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பது நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து வரையப் பட்ட வரைபட ஆதாரம் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் முறையே மேற்கு மற்றும் வடமேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப்படுகிறது.

இவ்வாறு கண்டங்களானது கடல் தளங்களுடன் தனித் தனியாக  நகர்ந்து அவற்றின் ஓரப்பகுதிகளுக்கு இடையில்உரசல் ஏற்படுவதால்தான் நிலஅதிர்ச்சிகள் ஏற்படுவதாகப் புவியியல்வல்லுனர்கள் நம்புகின்றனர்.

இந்த நிலையில் உலக அளவில் நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து  வரையப் பட்ட உலக அளவிலான் நில அதிர்ச்சி வரை படத்தில் வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப்பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நிலஅதிர்ச்சிகள் பதிவாகி இருக்கவில்லை.
இதன் அடிப்படையில் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியை வரையறுக்கப்  படாத எல்லைப் பகுதி-undefined boundary என்று புவியியல் வல்லுனர்கள் அழைக்கின்றனர்.


இவ்வாறு உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப்பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நிலஅதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில் , வட  அமெரிக்கா மற்றும் தென்அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதுடன், கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

குறிப்பாக  அண்டார்க்டிகா போன்ற தீவுக் கண்டங்களில் கூட டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு,கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும்,பின்னர் தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.

ஆனால் கண்டங்களானது கடல் தரையைப் பிளந்து கொண்டு நகர்ந்து சென்றதற்கு கடல் தரையில் தடயங்கள் இல்லை.எனவே கடல் தளத்துடன் கண்டங்கள் நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாகப் புவியியலாளர்கள் நம்புகின்ற்றனர்.

கடல் தளம் நகர்ந்து கொண்டு இருப்பதற்கு கண்டங்களுக்கு இடையில் இருக்கும் எரிமலைத் தொடர் நெடுகிலும் புதிதாகக் கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகப்  புவியியலாளர்கள் நம்புகின்றனர்.

இந்த நிலையில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் எண்ணை எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுத கிடைத்த பாறைப் பகுதிகளில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டியோ சாராஸ் என்ற டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

இதே போன்று இந்தியப் பெருங் கடலுக்கு அடியிலும் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும், ஒரு கடலடிப் பீட பூமியில் இருந்து எடுக்கப் பட்ட, ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில், மரங்களின் கருகிய பாகாங்கள்,விதை,மற்றும் மகரந்தத் துகள்கள் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.

எனவே அண்டார்க்டிக்கா போன்ற தீவுக் கண்டங்களில் டைனோசர்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்ததும்,கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்ததுமே காரணம்.

இந்த நிலையில் எரிமலைகளுக்குள் பாறைக் குழம்பு திரண்டு எரிமலையின் உயரம் அதிகரிப்பதாலும்,எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறிய பிறகு எரிமலையின் உயரம் குறைவைதாலும், எரிமலைகளைச் சுற்றியுள்ள தரைப் பகுதியானது உயர்ந்து இறங்கும் பொழுது , எரிமலையைச் சுற்றிலும் வளைய வடிவில் வரப்புகள் வெட்டியதைப் போன்ற மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, இணைய தளங்களில் வெளியிடப் பட்ட தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக அலாஸ்காவில் உள்ள ஆக்மோக் எரிமலையில் இருந்து 1945,1958 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் கரிய நிறத்தில் பாறைக் குழம்பானது வெளிப்பட்டது.
குறிப்பாக அந்த எரிமலையானது 1992-95 ஆண்டுகளில் 18 சென்டி மீட்டர் உயர்ந்தது.அதன் பின்னர் 1997 ஆம் ஆண்டில் சீறியதற்கு முன்பு 1995-96 ஆண்டில் 1-2 சென்டி மீட்டர் தாழ்வடைந்தது.அத்துடன் 1997 சீறியபொழுது 140 சென்டி மீட்டர் தாழ்வடைந்தது.

அதன் பிறகு 1997-ஆம் ஆண்டு முதல் 2003 வரை ஆண்டுக்கு 5 முதல் 15 சென்டி மீட்டர் வரை மறுபடியும் உயர்ந்து இருப்பது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவானது.

ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றி வரப்புகள் போன்ற மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருந்தது தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மூலம் தெரியவந்துள்ளது. 
எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.