இதோ! எனது புத்தகத்தின் முதல் அத்தியாயம்.




ஒரு நாள், நான் பழைய புத்தகக் கடை ஒன்றில், விற்பனைக்காக அடுக்கி வைக்கப் பட்டு இருந்த, பழைய நேஷனல் ஜியாகிரபிக் பத்திரிக்கைகளில் ஒன்றை எடுத்து அசிரத்தையாகப் புரட்டிய பொழுது, பளிச் என்று ஒரு பக்கத்தில் வெளியாகி இருந்த ஒரு படம் என் கவனத்தைக் கவர்ந்தது.

அந்தப் படத்தில் ஒரு மலையின் மேல் இருவர் நின்றபடி மண் வெட்டும் கருவியால் தரையைத் தோண்டிக் கொண்டு இருந்தனர்.
ngpage.jpg
(இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்து இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் போன்று வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் ராக்கி மலைத் தொடர் அமைந்து இருக்கிறது.இந்த மலைத் தொடரின் வடபகுதி .கனடா நாட்டுப் பகுதியில் அமைந்து இருக்கிறது. ராக்கி என்று அழைக்கப் படும் அந்த மலையின்   மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்களை எடுத்துக் கொண்டு இருக்கும் ஆராய்ச்சியாளர்கள்.)

 
 
 
அந்தப் படத்தில் ஒரு மலையின் மேல் இருவர் நின்றபடி மண் வெட்டும் கருவியால் தரையைத் தோண்டிக் கொண்டு இருந்தனர்.

குறிப்பாக அவர்கள் இருவரும் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் வாழ்ந்து மடிந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்களை அகழ்ந்து எடுத்துக் கொண்டு இருப்பதாகவும்,அவர்கள் நின்று கொண்டு இருந்த இடமானது ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருநூற்றி இருபது அடி ஆழத்தில் மூழ்கிக் கிடந்ததாகவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது.

பின்னர் அந்த மலைப் பகுதியானது கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து தற்பொழுது உள்ள உயரத்தை அடைந்ததாகத் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
fossils formation
fossils formation


குறிப்பாக கடல் உயிரினங்களானது திடீரென்று ஏற்படும் நிலச் சரிவில் சிக்கிப் புதையுண்ட பிறகு காலப் போக்கில் காற்றில் உலர்ந்து, வெய்யிலில் காய்ந்து பாறைகளாக மாறும் பொழுது, அதன் நடுவில் புதைபடிவங்களாக உருவாகின்றன. ஒரு புறத்தில் நிலம் உயரும் பொழுதே மறு பகுதியில் நிலச் சரிவு ஏற்படுகிறது.

mydis.jpg
எனவே எனக்கு சட்டென்று அந்த மலையும் மலையைச் சுற்றியுள்ள நிலப் பகுதிகளும் தண்ணீருக்குள் இருந்து உயரும் பந்தைப் போன்று கடலுக்கு அடியில் இருந்து அப்படியே மேல் நோக்கி உயர்ந்திருப்பதாகத் தோன்றியது.
mydis.jpg
mydis.jpg
அப்பொழுதே நான் ஒரு புதிய விஷயத்தைக் கண்டு பிடித்து விட்டதாகவே உணர்ந்தேன்.சந்தோஷத்தில் என் கட்டுப்பாடு எதுவும் இன்றியே மெலிதான சிரிப்பு என் உதட்டில் அரும்பியது.

இருப்பினும் என் கண்டு பிடிப்பை உறுதி செய்து கொள்வதற்காக இணைய தளங்கள் மூலம் மேலும் பல தகவல்களைத் திரட்டி ஆய்வு செய்தேன்.

கண்டங்களிலும் தீவுகளிலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு உண்மையான காரணம் என்ன ?

தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றியுள்ள கடல் தளத்துடன் கண்டத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது கண்டங்கள் சில சமயம் உயர்ந்தும் சில சமயம் தாழ்ந்தும் அதாவது ஒரு பெரிய மரப் பலகையானது ஆற்றில் மிதந்து செல்வதைப் போல பூமியில் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இவ்வாறு கண்டங்கள் பூமியில் உயர்ந்தும் தாழ்ந்தும் நகர்ந்து செல்லும் பொழுது கடல் நீரானது கண்டங்களின் உள் பகுதிக்கு வந்து செல்வதாக நம்பப் படுகிறது.இவ்வாறு கண்டங்களுக்குள் கடல் நீர் வந்து சென்றதால்தால் கண்டங்களின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு காரணம் என்று நம்பப் படுகிறது.

ஆனால் ஏற்கனவே கூறிய படி புதை படிவங்கள் உருவாகுவதற்கு உயிரினங்கள் திடீரென்று புதைக்கப் படவேண்டும்.ஆனால் கண்டத்தின் மேல் இருந்து கடல் நீர் வடிந்து செல்வதால் உயிரினங்கள் புதைக்கப் பட சாத்தியம் இல்லை.

எனவே கண்டங்களின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவது அந்த நிலப் பகுதிகள் மு ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து பின்னர் கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்ததே காரணம்.

எனவே கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருக்கிறதா அல்லது உயர்ந்து கொண்டு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது.

குறிப்பாக இந்தியா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய தென் பகுதிக் கண்டங்கள் எல்லாம் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் தென் துருவப் பகுதியில் அண்டார்க்டிக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு கோண்டுவாணா என்று பெயர் சூட்டப் பட்ட ஒரு பெருங்கண்டமாக இருந்ததாக நம்பப் படுகிறது.

அதன் பிறகு அந்தப் பெருங் கண்டம் பிளவு பட்டுப் பிரிந்ததால் தென் அமெரிக்கா,ஆப்பிரிக்கா,ஆஸ்திரேலியா,மற்றும் இந்தியா ஆகிய கண்டங்கள் உருவாகி வட பகுதியை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடங்களுக்கு வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது.

இதில் இந்திய நிலப் பகுதியானது ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதகவும் அதனால் இந்தியாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் இருந்த கடல் பகுதி மறைந்ததாகவும் நம்பப் படுகிறது.

அது மட்டுமல்லாது இந்தியாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் இருந்த கடல்தரைப் பகுதியானது புடைத்துக் கொண்டு உயர்ந்ததால் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இமய மலை உருவானதாகவும் நம்பப் படுகிறது.

இவ்வாறு கடலுக்கு அடியில் இருந்து இமய மலை உயர்ந்ததால்தான் இமய மலையில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகிறது என்றும் நம்பப் படுகிறது.

முக்கியமாக ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதாவது டைனோசர்கள் அழிந்த காலத்தில் இந்திய நிலப் பகுதியானது ஒரு தீவுக் கண்டமாக இருந்ததாக நம்பப் படுகிறது.
indfo.png
indfo.png
ஆனால் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசியக் கண்டத்தில் வாழ்ந்த பாலூட்டி விலங்கினத்தைச் சேர்ந்த விலங்கின் புதை படிவங்களை இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள நஸ்கல் என்ற கிராமத்தில் இருந்து ஆறரை கோடி ஆண்டுகள் தொன்மையான பாறைப் படிவுகளில் ஜம்மு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜி.வி.ஆர்.பிரசாத் மற்றும் பஞ்சாப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அசோக் சாஹினி என்ற புவியியல் வல்லுனர்கள் கண்டு பிடித்தனர்.
ind65.png

( ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் பாகிஸ்தானும் தீவாக இருந்ததாக நம்பப் படுகிறது  )
ind65.png ( ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் பாகிஸ்தானும் தீவாக இருந்ததாக நம்பப் படுகிறது )
இதன் அடிப்படையில் அவர்கள் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது வடபகுதிக் கண்டங்களில் இருந்து தனித்து இருக்கவில்லை என்று நேச்சர் அறிவியல் பத்திரிக்கைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்து இருக்கின்றனர்.

எனவே ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப் பகுதியானது ஆசியக் கண்டத்துடன் தொடர்பு கொண்டு இருந்திருப்பது ஆந்திராவில் கண்டு பிடிக்கப் பாட்ட ஆசிய வகைப் பாலூட்டி விலங்கினத்தின் புதை படிவத்தின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

இந்த நிலையில் இமய மலை அடிவாரப் பகுதியான சிம்லாவில் உள்ள ஒரு மலைக் குகையில்,ஐந்து கோடியே முப்பத்தி ஐந்து லட்சம் ஆண்டுகள் தொன்மையான திமிங்கிலத்தின் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டது.

சிம்லாவில் உள்ள திமிங்கிலத்தின் புதை படிவம் எப்படி உருவானது? 

ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விலங்கின் புதை படிவங்கள் ஆந்திராவில் காணப் படுவதன் அடிப்படையில் இந்திய நிலப் பகுதியானது தற்பொழுது இருப்பதைப் போலவே ஆசியக் கண்டத்துடன் நிலத் தொடர்பு கொண்டு இருந்தது நிரூபணமாகியது..

இந்த நிலையில் சிம்லாவில் ஐந்து கோடியே முப்பத்தி ஐந்து லட்சம் ஆண்டுகள் தொன்மையான திமிங்கிலத்தின் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம், இந்திய நிலப் பகுதியானது கடலுக்கு அடியில் இருந்து நேராக மேல் நோக்கி உயர்ந்ததால் சிம்லாவில் ஐந்து கோடியே முப்பத்தி ஐந்து லட்சம் ஆண்டுகள் தொன்மையான புதை படிவங்கள் உருவாகி இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகிறது.

எனவே கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் இந்தியாவில் காணப் படுவதற்கு ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தீவாக நகர்ந்து கொண்டு இருந்ததாகவும், பின்னர் ஆசியக் கண்டத்துடன் மோதியதால் கடலுக்கு அடியில் இருந்து நிலப் புடைத்துக் கொண்டு உயர்ந்ததாகவும், அதனால்தான் இந்தியாவின் வடபகுதியில் உள்ள மலைகளில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன என்றெல்லாம் கூறப் படும் விளக்கங்கள் முற்றிலும் தவறு என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே கண்டங்களிலும் மலைகளின் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு கண்டங்கள் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்திருப்பதே காரணம் என்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
ambulocetus49.jpg
( ஆம்புலோசீட்டா-பாகிஸ்தானில் கண்டு பிடிக்கப் பட்ட மூதாதைத் திமிங்கிலத்தின் புதை படிவம். ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையனது  )
ambulocetus49.jpg ( ஆம்புலோசீட்டா-பாகிஸ்தானில் கண்டு பிடிக்கப் பட்ட மூதாதைத் திமிங்கிலத்தின் புதை படிவம். ஐந்து கோடி ஆண்டுகள் தொன்மையனது )
குறிப்பாக இந்தியாவுடன் பாகிஸ்தான் நிலப் பகுதியும் சேர்ந்து இருந்ததாக நம்பப் படுகிறது.

இந்த நிலையில் ஆம்புலோசீட்டஸ் என்று அழைக்கப் படும் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மூதாதை திமிங்கிலத்தின் மூதாதை புதை படிவங்கள் பாக்கிஸ்தானில் கண்டு பிடிக்கப் பட்டது.

இந்த காலத்தில் இந்தியா-பாகிஸ்தான் நிலப் பகுதிகள் தீவுக் கண்டமாக இருந்ததாக நம்பப் படுகிறது.

இந்தப் காலத்தைச் சேர்ந்த திமிங்கிலத்தின் புதை படிவங்கள் பாகிஸ்தானில் கண்டு பிடிக்கப் பட்டதன் மூலம் , நிலப் பகுதிகள் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்ததே, கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டங்களில் காணப் படுவதற்கு காரணம் என்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது.

எனவே கண்டங்களில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு நிலப் பகுதிகளானது கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்ததே காரணம் என்பது ஆதாரபூர்வமாக நிருபணமாகியுள்ளது.

முக்கியமாக புதைப் படிவங்கள் பெரும்பாலும் படிவப் பாறைகளிலேயே காணப் படுகின்றான.இதற்கு காரணம் அடிக்கடி நிலச் சரிவு ஏற்படும் பகுதிகளில் மண்ணுக்கு அடியில்  திடீரென்று உயிருடன் சிக்கிப் புதையுண்ட விலங்கினங்கள் காலப் போக்கில் புதைப் படிவங்களாக மாறுகின்றன. 

எனவே புதை படிவங்கள் உருவாகுவதற்கு நிலச் சரிவு ஏற்படவேண்டும்.ஒரு புறம் நிலம் சரிய வேண்டும் என்றால் அதற்கு மறுபுறம் நிலம் உயர வேண்டும்.
உதாரணமாக தமிழகத்தில் அரியலூரில் கூட கடல் உயிரினங்களின் புதை படிவங்களானது படிவப் பாறைகளில் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
trichyfo.png
trichyfo.png
அந்தப் புதை படிவங்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது.
எனவே அரியலூரில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் படிவப் பாறைகளில் காணப் படுவதன் மூலம், அரியலூர் உள்ளிட்ட தமிழக நிலப் பகுதிகள் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்திற்கு மேலாக அவ்வப் பொழுது உயர்ந்து இருப்பது நிரூபணமாகியுள்ளது.
vindifo.jpg 
(விந்தியமலையில் கண்டு பிடிக்கப் பட்ட கடல் உயிரினங்களின் புதை படிவங்கள்)
vindifo.jpg (விந்தியமலையில் கண்டு பிடிக்கப் பட்ட கடல் உயிரினங்களின் புதை படிவங்கள்)

இது மட்டுமின்றி இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ள விந்திய மலைப் பகுதியில் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கடலுக்கு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

எனவே புதை படிவ ஆதாரங்கள் மூலம் கண்டங்கள் நிலையாக இருப்பதுடன் கண்டங்களிலும் மலைப் பகுதிகளிலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் கண்டங்கள் கடலுக்கு அடியில் இருந்து பின்னர் கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பதே காரணம், என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

கண்டங்களின் மேல் கடல்தளப் பாறைகள்  

இதே போன்று கடல் தளத்தின் மேல் உருவாகும் சிலவகைப் பாறைகள் தீவுகளின் மேலும் கண்டங்களின் மேலும் காணப் படுவதன் அடிப்படையிலும் தீவுகளும் கண்டங்களும் கடலடித் தளமாக இருந்து பின்னர் கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக மத்திய தரைக் கடல் பகுதியில் சைப்ரஸ் தீவு அமைந்து இருக்கிறது.அந்தத் தீவின் மத்தியப் பகுதியில் ட்ரூடோஸ் என்ற மலை உருவாகி இருக்கிறது. அந்த மலைப் பகுதியைச் சுற்றிலும் தலையணைப் பாறைகள் (pillow lava ) என்று அழைக்கப் படும் ஒரு வகைப் பாறைகள் காணப் படுகின்றன..

குறிப்பாக இந்தப் பாறைகளானது பசால்ட் என்று அழைக்கப் படும் கடல் தளப் பாறையால் அதாவது கடப்பாக் கல்லால் ஆனது.
pill.jpg 
( கடலடித் தளத்தின் மேல் உருவாகும் தலையணைப் பாறைகள் )
pill.jpg ( கடலடித் தளத்தின் மேல் உருவாகும் தலையணைப் பாறைகள் )

கடல் தளத்திற்கு அடியில் இருக்கும்  எரிமலையின் வாயில் இருந்து பாறைக் குழம்பு வெளி வரும் பொழுது, அந்தப் பாறைக் குழம்பானது, கடல் நீரால் உடனடியாகக் குளிர்ந்து இறுகுவதால், பானை வடிவில் உருவாகிறது.

இந்த நிலையில், தொடர்ந்து அந்த எரிமலையின் வாயில் இருந்து வரும் பாறைக் குழம்பானது, அந்தப் பானை போன்ற பாறைப் பகுதிக்குள் நுழைந்து அதைப் பெருக்கமடையச் செய்கிறது.

அதாவது ஒரு தலையணை உறைக்குள் பஞ்சைத் திணிப்பது போன்று, அந்தப் பானை வடிவப் பாறைப் பகுதிக்குள், புதிய பாறைக் குழம்பு திணிக்கப் பட்டு உருவாகுவதால், இவ்வகைப் பாறைகள் தலையணைப் பாறைகள் என்று அழைக்கப் படுகின்றன.
cyplocation.jpg
cyplocation.jpg

இவ்வாறு கடலடி எரிமலையால், கடலடித் தளத்தின் மேல் உருவாகும் தலையணைப் பாறைகள், மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும், சைப்ரஸ் தீவின் மத்தியப் பகுதியில் உருவாகி இருக்கும் ட்ரூடோஸ் மலைப் பகுதியில் காணப் படுகிறது.

இவ்வாறு கடலடித் தளத்தின் மேல் உருவாகும் தலையணைப் பாறைகள் மலைப் பகுதிகளில் காணப் படுவதன் மூலம், அந்த மலையும் மலையைச் சுற்றியுள்ள சைப்ரஸ் தீவு நிலப் பகுதியும் கடலடித் தளத்திற்கு அடியில் இருந்து, தற்பொழுது கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
cyp.jpg
cypil 
 ( சைப்ரஸ் தீவில் காணப் படும் தலையனைப் பாறைகள் )
cypil ( சைப்ரஸ் தீவில் காணப் படும் தலையனைப் பாறைகள் )
cyp.jpg
cyp.jpg
pil4.gif
 (சைப்ரஸ் தீவில் தலையணைப் பாறைகள் காணப் படும் இடங்கள். )
pil4.gif (சைப்ரஸ் தீவில் தலையணைப் பாறைகள் காணப் படும் இடங்கள். )
cyprusrocks.jpg
( சைப்ரஸ் தீவில் கடல்தளப் பாறைகள் காணப் படும் இடங்கள். )
cyprusrocks.jpg ( சைப்ரஸ் தீவில் கடல்தளப் பாறைகள் காணப் படும் இடங்கள். )

இதே போன்று கடல் தளத்திற்கு அடியில் இருந்து பாறைக் குழம்பு கடல் பகுதிக்குள் பீய்ச்சியடிக்கும் பொழுதும் பாறைக் குழம்பானது உடனடியாகக் குளிர்விக்கப் படுவதால் பாம்பு போன்ற வடிவில் பாறைகள் உருவாகின்றன.
இவ்வகைப் பாறைகள் பாம்புப் பாறைகள் என்று அழைக்கப் படுகின்றன.

பாம்புப் பாறைகள் மற்ற கடல் தளப் பாறைகளுடன் கலந்து காணப் படுவதால் ஒபியோலைட் காம்ப்ளக்ஸ் என்றும் அழைக்கப் படுகிறது.கிரேக்க மொழியில் ஒபியோ என்றால் பாம்பு என்று பொருள்.எனவே இவ்வகைப் பாறைகள் ஒபியோலைட் என்றும் அழைக்கப் படுகின்றன. சமீபத்தில் சீனாவில் சீனப் பெருஞ்சுவருக்கு அருகில் பாம்புப் பாறைகள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

chinasnake.png
(சீனப் பெருஞ்சுவருக்கு அருகில் கண்டு பிடிக்கப் பட்ட பாம்புப் பாறை)
chinasnake.png (சீனப் பெருஞ்சுவருக்கு அருகில் கண்டு பிடிக்கப் பட்ட பாம்புப் பாறை)

இந்தியாவிலும் கடல் தளப் பாறைகளான, பாம்புப் பாறைகள் டெல்லிக்குத் தெற்கில் உள்ள உலகிலேயே பழமையான மலையான ஆரவல்லி மலைத் தொடரிலும்,நாகலாந்து மலைப் பகுதியிலும் காணப் படுகின்றன.

இதே போன்று பாம்புப் பாறைகள் எரிமலைத் தீவுகளான அந்தமான் தீவுகளிலும் காணப் படுவது குறிப்பிடத் தக்கது.

orisapillow.jpg 
( ஓடிசாவில் தலையணைப் பாறைகள் )
orisapillow.jpg ( ஓடிசாவில் தலையணைப் பாறைகள் )
karnarock.jpg
 ( கர்நாடாகவில் தலையணைப் பாறைகள் )
karnarock.jpg ( கர்நாடாகவில் தலையணைப் பாறைகள் )

 இந்தியாவில் தலையணைப் பாறைகள் ஒடிசாவில் ஜோடா நகருக்கு தெற்கில் 18 கி.மீ தொலைவிலும்,கர்நாடாகாவில், சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஐயமங்களா கிராமத்திலும் காணப் படுகின்றன. கர்நாடாகாவில் கண்டு பிடிக்கப் பட்ட தலையணைப் பாறைகள், முன்னூறு கோடி ஆண்டுகள், தொன்மையான பாறைகள் என மதிப்பிடப் பட்டுள்ளது.

இவ்வாறு இந்திய நிலப் பகுதியின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதுடன், கடலடித் தளத்தின் மேல் உருவாகும் பாம்புப் பாறைகளும், தலையணைப் பாறைகளும், காணப் படுவதன் அடிப்படையிலும், இந்திய நிலப் பகுதியானது கடலடித் தளமாக இருந்திருப்பதும், தற்பொழுது கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பதும், ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே வட அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள ராக்கி மலைப் பகுதியில் ஐம்பது கோடி ஆண்டுகள் தொன்மையான கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு அந்த மலைப் பகுதியானது ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலடித் தளமாக இருத்திருப்பதும் பின்னர் கடல் மட்டத்திற்கு மேலாக மலையாக உயர்ந்து இருப்பதும் நிரூபணமாகிறது.

முக்கியமாக இந்தியாவைப் போலவே வட அமெரிக்கக் கண்டத்திலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்களுடன் கடலடித் தளத்தின் மேல் உருவாகும் தலையணைப் பாறைகளும் காணப் படுவது குறிப்பிடத் தக்கது.
crb.jpg
( வாசிங்டன் பகுதியில் பல லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காணப் படும் கடல்தளப் பாறைப்படிவுகள் )
crb.jpg ( வாசிங்டன் பகுதியில் பல லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காணப் படும் கடல்தளப் பாறைப்படிவுகள் )
குறிப்பாக வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் கடலடி தளப் பாறைப் படிவுகள் பல லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு பரந்து விரிந்து கிடகிறது.

அத்துடன் வட அமெரிக்கக் கண்டத்தில், வாசிங்டன் மாகாணத்தில், ஒலிம்பிக் தீபகற்பப் பகுதியில் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன.
மேலும் வாசிங்டனில் உள்ள வாண்டேஜ் நகரத்தில் தலையணைப் பாறைகளும் காணப் படுகிறது. 
vantage.jpg
 (வாண்டேஜ் நகரப் பகுதியில் உள்ள தலையணைப் பாறை)
vantage.jpg (வாண்டேஜ் நகரப் பகுதியில் உள்ள தலையணைப் பாறை)

எனவே சைப்ரஸ் தீவைப் போலவே, இந்தியக் நிலப் பகுதியைப் போலவே, வட அமெரிக்கக் கண்டமும் கடல் தளத்திற்கு அடியில் இருந்து, தற்பொழுது கடல் மட்டத்திற்கு மேலாக உயர்ந்து இருப்பது, வட அமெரிக்கக் கண்டத்தின் மேல் காணப் படும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் மூலமாகவும்,தலையணைப்  பாறைகள் மூலமாகவும் நிரூபணமாகியுள்ளது.

எனவே வட அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ராக்கி மலையின் மேல், கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, அந்த மலையும் மலையைச் சுற்றியுள்ள நிலப் பகுதிகளும், கடலுக்கு அடியில் இருந்து, தற்பொழுது கடல் மட்டத்திற்கு மேலாக, நேராக உயர்ந்து இருப்பதே காரணம், என்ற எனது கண்டு பிடிப்பு ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
 

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.