சுனாமி ! வரும்.... ஆனால் வராது .

media release



(படம்-1)வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் அட்லாண்டிக் கடல் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்கவில்லை.


நில அதிர்ச்சி வராது... ஆனால் வரும்.



வானிலை அறிக்கை போல் நில அதிர்ச்சி மற்றும் சுனாமி குறித்து அவ்வப் பொழுது வெளியிடப் படும் கணிப்புகள் பொய்யாகின்றன.



இதனால் மக்களிடையே பெரும் பதற்றமும் பீதியும் ஏற்படுகிறது.



ஏன் இவ்வாறு நில அதிர்ச்சியும் சுனாமியும் முன்கூட்டியே கணிக்க இயலாமல் கண்ணா மூச்சி காட்டுகிறது?



தற்பொழுது நில அதிர்ச்சி மற்றும் சுனாமி குறித்து முன் கூட்டியே கணிக்க இயலாமல் இருப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் மன்னிக்க கருத்தியல்வாதிகள் கொண்டு இருக்கும் தவறான கருத்தே காரணம்.



குறிப்பாக கண்டங்கள் எல்லாம் கண்டங்களை விட பெரியதாக இருக்கும் பாறைத் தட்டுகளின் மேல் இருந்த படி மெதுவாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் கண்டத் தட்டுகளின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் விளக்கம் கூறப் படுகிறது.




(படம்-2)வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடையில் கற்பனையாக கோடு வரைந்து இரண்டு தனித் தனிக் கண்டங்களாக காட்டப் பட்டு இருக்கிறது. -அமெரிக்கப் புவியியல் கழகம் வெளியிட்ட படம்

அதே போன்று ஒரு கண்டத் தட்டிற்கு அடியில் அடுத்த கண்டத் தட்டு செல்லும் பொழுது சுனாமி ஏற்படுகிறது என்றும் கருதப் படுகிறது.



ஆனால் உண்மையில் பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் உயர்ந்து இறங்குவதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.



குறிப்பாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு எரிமலைக்குள் நுழையும் பொழுது எரிமலைகள் உயர்கின்றன.அப்பொழுது எரிமலையைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு உள்ள தரைப் பகுதியும் சில சென்டி மீட்டர் உயர்கின்றன.



அதே போன்று எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியேறும் பொழுது எரிமலை சற்று தாழ்வடைகிறது.அப்பொழுது எரிமலையைச் சுற்றிலும் ஏற்கனவே உயர்ந்து இருந்த தரைப் பகுதியும் பல கிலோ மீட்டார் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் கீழ் நோக்கி இறங்குகிறது.



இவ்வாறு எரிமலையை சுற்றி யுள்ள தரைப் பகுதி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்குவதால் எரிமலையைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமுள்ள மேடு பள்ள வளையங்கள் வளையங்கள் உருவாகின்றன.



இவ்வாறு எரிமலையைச் சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்கள் சில சென்டி மீட்டர் உயரமே இருப்பதாலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு அகன்று இருப்பதாலும் தரையில் இருந்து பார்ப்பதற்கு இந்த மேடு பள்ள வளையங்கள் தெரிவதில்லை.



ஆனால் ரேடியோ கதிர் அலைகள் மூலம் தரை மட்ட மாறுபாடுகளை நுட்பமாக பதிவு செய்யும் செயற்கைக் கோள் படங்களில் எரிமலையை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமுள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது பதிவாகி இருக்கின்றன.






அமெரிக்கப் புவியியல் கழகம் வெளியிட்ட படம்(பெரிதாக்கப் பட்டது)(பெரிதாக்கப் பட்டது)


இதே போன்று நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோமீட்டர் சுற்றளவிற்கு சில சென்டி மீட்டர் உயரமுள்ள மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதும் ரேடியோ கதிர் வீச்சு முறையில் எடுக்கப் பட்ட செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கின்றன.



எனவே பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் உயர்ந்து இறங்குவதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகின்றன.



ஆனால் கண்டங்களை சுமந்த படி கண்டத் தட்டுகள் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகள் உரசிக் கொள்வதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்றும் ஒரு கண்டத் தட்டுக்கு அடியில் இன்னொரு கண்டத் தட்டு செல்லும் பொழுது மேற்பகுதியில் இருக்கும் கண்டத் தட்டு உயர்ந்து சுனாமி ஏற்படுகிறது என்று கருத்தியல்வாதிகள் அடிப்படை ஆதாரமின்றி கூறுகின்றனர்.



உதாரணமாக கடந்த 1963 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில் உலகெங்கும் ஏற்பட்ட 2,00,855 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து நாசா அமைப்பினர் வரைபடம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டனர்.(படம்-1)



அந்த வரைபடத்தில் அருகருகே இருக்கும் வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் தனித் தனிப் பாறைத் தட்டுகளின் மேல் இருந்த படி மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக கருத்தியல்வாதிகள் கூறுகிறார்கள்.



ஆராய்ச்சியாளர்கள் கூறுவதைப் போன்று உண்மையில் வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் தனித் தனி பாறைத் தட்டுகளின் மேல் இருந்தபடி மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் உள்ள கடல் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.



ஆனால் நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடைப் பட்ட அட்லாண்டிக் கடல் பகுதியில் தொடர்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை.(படம்-2)



எனவே கண்டங்கள் தனித் தனிப் பாறைத் தட்டுகளின் மேல் இருந்தபடி மெதுவாக நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கருதுவதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை.




(படம் -4)இந்தப் படத்தில் சிவப்பு நிறக் கோடு புதிய கடல் தரை உருவாகி எதிரெதிர் திசை நோக்கி விரிவடைந்து செல்லும் பகுதி என்று குறிப்பிடப் படுகிறது.நீலக் கோடு இரண்டு பாறைத் தட்டு ஒன்றுடன் ஒன்று உரசிக் கொண்டு செல்லும் பகுதி என்று குறிப்பிடப் படுகிறது.மஞ்சள் கோடு இரண்டு கண்டத் தட்டுகள் பூமிக்குள் செல்லும் பகுதி என்று குறிப்பிடப் படுகிறது.ஆனால் வெள்ளைக் கோடிட்ட பகுதி வரையறை செய்யப் படவில்லை என்று குறிப்பிடப் படுகிறது. (படம் பி பி சி )


இந்த நிலையில் எரிமலைகள் உயர்ந்து இறங்கும் பொழுது எரிமலையைச் சுற்றி உருவாகும் மேடு பள்ள வலையங்கள் நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் உருவாகி இருப்பது நுட்பமான தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்யும் செயற்கைக் கோள் ரேடியோ கதிர் வீச்சு படங்களில் பதிவாகி இருக்கின்றன.



எனவே பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் உயர்ந்து இறங்குவதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.





(சுமத்ரா தீவிற்கு அருகில் உள்ள சிமிழு தீவில் 20.02.2008 அன்று 7.4 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டது.அந்த நில அதிர்ச்சிக்கு முன்பு சிமிழு தீவின் மேல் ஜப்பானின் ஆலோஸ் பல்சார் என்ற செயற்கைக் கோள் அக்டோபர் 3,2006 அன்று கடந்து சென்ற பொழுதும், அதே போன்று நில அதிர்ச்சிக்கு பிறகு பிப்ரவரி மாதம் 21.02.2008 அன்று கடந்து சென்ற போதும் எடுக்கப் பட்ட செயற்கைக் கோள் பல்லிடைக் காட்சி தொகுக்கப் பட்டது.இவ்வாறு நில அதிர்ச்சிக்கு முன்பும் பிறகும் தரை மட்ட மாறுபாடுகளைக் குறிக்கும் செயற்கைக் கோள் படங்களை ஒரேபடமாகத் தொகுக்கப் பட்ட பொழுது ,சிமிழு தீவின் மத்தியப் பகுதியில் குறிப்பாக நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் ஐம்பத்தி ஒன்பது சென்டி மீட்டர் உயரத்திற்கு வளையங்கள் வரைந்தது போன்று தரை பகுதியானது உயர்ந்து தாழ்ந்து இருப்பது தெரிய வந்திருக்கிறது.)


எனவே பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு மற்றும் பாறைகள் எப்பொழுது மேல் நோக்கி வருகிறது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டால்தான் நில அதிர்ச்சி மற்றும் சுனாமி குறித்து முன்கூட்டியே அறிய இயலும்.


(படம்-6) அலாஸ்காவில் உள்ள பெலிக் எரிமலையைச் சுற்றி உருவான மேடு பள்ள வளையம்.) பட விளக்கம்; இந்த எரிமலையானது 1814 மற்றும் 1852 ஆம் ஆண்டுகளில் புகையைக் கக்கியது. கடந்த அக்டோபர் 1996 முதல் செப்டம்பர் 1997 ஆண்டு காலகட்டத்தில் பெலிக் எரிமலையின் மேல் பறந்த செயற்கைக் கோள் அனுப்பிய படங்களைத் தொகுத்துப் பார்த்த பொழுது அந்த எரிமலையைச் சுற்றியும் ஆறு வளையங்கள் வரைந்தது போன்று தரைப் பகுதி உயர்ந்து இருந்தது.ஒவ்வொரு வளையமும் 17 சென்டி மீட்டர் (ஆறரை அங்குலம்)உயரத்தைக் குறிக்கிறது.அதன் பிறகு செப்டம்பர் 1997 முதல் செப்டம்பர் 1998 ஆண்டு கால கட்டத்தில் கூடுதாலாக ஒரு வளையம் ஆறு சென்டி மீட்டர் (ஒரு அங்குலம்)உயர்ந்து இருப்பது தெரிய வந்திருக்கிறது.)
விஞ்ஞானி.க.பொன்முடி.

Comments

Popular posts from this blog

பூமியின் புதிர்களை விடுவித்தல்.

நீரில் இருந்து நிலத்திற்கு உயிரினங்கள் வந்ததெப்படி ?

சுனாமிக்கு நாசா சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை.